Jump to content

சுமந்திரனை எதிர்த்தல் எனும் போதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை எதிர்த்தல் எனும் போதை

Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 10 வியாழக்கிழமை, மு.ப. 10:53

  இலங்கை அரசியலை ஓரளவுக்குக் கவனித்து வருபவர்கள் அனைவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் வெறுக்கப்படுகின்ற டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கிடைக்காத மீடிறனில், சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த எதிர்ப்புகள், தேவையான நேரங்களில் கேலிகளாகவும் 
வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.   

இரண்டாயிரத்துப் பதினைந்தாம் (2015) ஆண்டு, இலங்கை அரசியலில் பாரிய மாற்றமொன்று ஏற்படுவதற்கு முன்பும், சுமந்திரன் இந்த எதிர்ப்பும் கேலியும் இருந்தது. ஆரம்ப காலத்தில், “தேசியப் பட்டியல் எம்.பி” என்று, அவரைக் கேலி செய்த காலமிருந்தது. ஆனால், இப்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதைத் தான் பார்க்க முடிகிறது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, ஏராளமான விமர்சனங்களை முன்வைக்க முடியும். அதன் ஆரம்பம் முதல் இப்போது வரை, அக்கூட்டமைப்பு மீதான விமர்சனங்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட விமர்சனங்களில் குறிப்பிடத்தக்க விமர்சனங்களை, அதன் பேச்சாளரும் அதன் இரண்டாம் நிலைத் தலைவர் போன்று செயற்படுகின்ற சுமந்திரன் மீதும் முன்வைக்க முடியும். இப்பத்தியாளர் உள்ளிட்ட தமிழ்ப் பத்தியாளர்கள் பலரால், அப்படிப்பட்ட காத்திரமான விமர்சனங்கள், இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன; இனிமேலும் முன்வைக்கப்படும்; முன்வைக்கப்பட வேண்டும்.   

ஆனால், சமூக வலைத்தளங்களிலும் ஒரு சில ஊடகங்களிலும் காணப்படும் சுமந்திரன் மீதான எதிர்ப்பு, பல நேரங்களில் எரிச்சலையும் சில நேரங்களில் நெற்றியையும் உள்ளங்கையையும் இணைக்கும் சேவையையும் செய்கின்றன. பேஸ்புக்கில் இருக்கின்ற கணிசமான தமிழ் இயங்குநிலைப் பயனர்கள், கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அல்லது தங்களைத் தாங்களே காண்பித்துக் கொள்கிறார்கள் என்ற அடிப்படையில், இதுவொன்றும் வியப்பான ஒரு விடயமும் கிடையாது. தேர்தலுக்கு அண்மையான காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான எதிர்ப்பு, பாரிய அளவில் வெளிப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கும். எனவே, இந்த எதிர்ப்பும் கேலியும், ஓரளவுக்குப் புரிந்துகொள்ளப்படக் கூடியன. என்றாலும், எரிச்சல் உணர்வைத் தடுத்துவிட முடியாது.  

இப்படி, சுமந்திரனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் திட்டித் தீர்ப்பவர்களுக்கு, பளையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம், வெறும் வாயில் மெல்லுவோருக்கு, அவல் கிடைத்த போன்று தான் அமைந்திருந்தது.   

சுமந்திரனின் பெயரைக் குறிப்பிடாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் எனத் தெரிவித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) வெளியான பத்திரிகையொன்றில் வெளியான “செய்தி” தான், இச்சர்ச்சைகளுக்குக் காரணமாக அமைந்தது. கஞ்சா வைத்திருந்தோரைக் கைதுசெய்வதற்குப் பொலிஸார் முயன்றபோது, பொலிஸாரை அவர்கள் தாக்கினர் எனவும், அதைத் தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவித்த அந்தச் “செய்தி”, அவர்களை விடுவிக்குமாறு, பொலிஸ் உயரதிகாரி மீது, குறித்த முக்கியஸ்தர், “குரைத்தார்” என்றும் குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர், அந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டிருந்தது. அதேபோல், வடக்கு மாகாணத்தில் போதைப்பொருட்களை இல்லாது செய்யும் பொலிஸாரின் நடவடிக்கைகளில், தமிழ் அரசியல்வாதிகளின் தலையீடு காணப்படுகிறது எனவும், அது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விசனமடைந்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.   

ஏற்கெனவே காணப்படும் எதிர்ப்பு மனநிலைக்குத் தூபமிட்ட இச்செய்தியைத் தொடர்ந்து, சமூக ஊடக வலையமைப்புகளில் கேலிகளும் விமர்சனங்களும் எழுந்திருந்தன. அதேபோல், செய்தி இணையத்தளங்களில் பல கதைகள் கட்டப்பட்டிருந்தன. இத்தனைக்கும், சுமந்திரனின் பெயர், அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், அப்பெயர் எப்படியோ கசிந்திருந்தது. நகைச்சுவைகள் கொடிகட்டிப் பறந்தன.   

இந்த எதிர்ப்புகளும் கேலிகளும், ஒருவரை மாத்திரம் இலக்குவைத்திருந்தன: சுமந்திரன். ஆனால், இந்தக் கேலிகளுக்கு நடுவில், நான்கு தமிழ் இளைஞர்கள், கஞ்சா கடத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டார்கள் என்பது மறக்கப்பட்டது. அந்த நான்கு பேரும், குற்றவாளிகள் போன்றே, இக்கருத்துகள் அமைந்தன.   

ஆனால், வெளியிடப்பட்ட அந்தச் “செய்தி”யில், ஏராளமான ஓட்டைகள் காணப்பட்டிருந்தன. அந்தச் “செய்தி”யின், தொனி, ஒரு வகையான இனவாத நெடியைக் கொண்டிருந்ததாகக் காணக்கூடியதாக இருந்தது. அதிலும் குறிப்பாக, “இப்படித் தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறார்களாம்” என்று, பொலிஸ் அதிகாரி ஒருவர் சொன்னதாகக் கூறப்பட்ட கருத்து, அண்மைக்கால அரசமைப்பு நெருக்கடியின் போது, கூட்டமைப்பின் செயற்பாடுகளால் எரிச்சலடைந்த ஒருவரின் கருத்தென்பது தெளிவு. அதேபோல், சம்பந்தமேயில்லாமல், கிளிநொச்சியைப் பற்றி விவரிப்பதற்கு, “தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்டையாக அமைந்த பகுதி” என்று கூறப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்துக்குமிடையில் எச்சம்பந்தமும் இல்லையென்பதைப் பற்றிக் கவனஞ்செலுத்தியிருக்கவில்லை. அதேபோல், குறித்த தகவல் தொடர்பாக, சுமந்திரன் உள்ளிட்ட எவருடனும் நேரடியாகத் தொடர்புகொண்டு, அச்சம்பவம் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கவும் இல்லை.   

இவற்றுக்கு மேலதிகமாக, வடக்கில் மேற்கொள்ளப்படும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழ் அரசியல்வாதிகள் இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு, மிகப் பாரதூரமானது. பொதுவான அக்குற்றச்சாட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே இலக்குவைத்தது என்பதில் எச்சந்தேகமுமில்லை. ஆனால், அதற்கான ஆதாரமாக எதையும் சமர்ப்பித்திருக்கவில்லை. பொதுவாகக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கும் கஞ்சா கடத்தல்களுக்குமிடையில் தொடர்புகள் இல்லையென்பது தெளிவு. எனவே, மேற்படி விமர்சனம், அடிப்படை ஆதாரங்களற்ற ஒரு விமர்சனம்.   

இப்படி, குறித்த “செய்தி” தொடர்பில் இத்தனை கேள்விகள் காணப்படும் நிலையில், அவற்றைப் பற்றிய எந்தவொரு கவனமோ, சட்டையோ இன்றி, சுமந்திரன் மீதான அவதூறுக்காக அந்தச் “செய்தி”யைப் பயன்படுத்துகின்ற மனநிலை, ஆபத்தானது. ஏனெனில், சுமந்திரனோடு சேர்ந்து, தமிழ் இளைஞர்கள் நால்வரும், அவதூறைச் சுமந்துகொண்டிருந்தார்கள். ஆனால், தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்புகள் என்று சொல்கின்ற குறித்த தரப்புகள், அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கவில்லை.   

சுமந்திரன் மீதான கண்மூடித்தனமான இந்த எதிர்ப்பு, ஒரு கட்டத்தில், யதார்த்தங்களையும் நன்மைகளையும் பற்றிக் கவலைப்படாமல் செல்வதற்கு இடமுண்டு. ஒரு கட்டத்தில், தமிழீழம் பெற்றுத் தருவதாகச் சுமந்திரன் சொன்னால், “இல்லையில்லை. தமிழீழம் கூடாது. ஒற்றையாட்சி தான் வேண்டும்” என்று கேட்கவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.   

சுமந்திரனை நியாயப்படுத்துவது போல் இப்பத்தி தென்பட்டாலும் கூட, அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்கள் அவசியமற்றவை என்பது, இப்பத்தியின் கரு கிடையாது. சுமந்திரன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்கள் அவசியமானவை. ஆனால், உண்மைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட விமர்சனங்களாக அவை இருக்க வேண்டும். நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ, அரசியல் தீர்வு தொடக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கதைக்கக்கூடிய ஒரே ஆளாக, சுமந்திரன் தான் இருக்கிறார். அரசியலிலிருந்து சுமந்திரன் ஓய்வுபெற்று, தற்போது 85 வயதாகியுள்ள சம்பந்தன் ஐயா காலமாகிவிட்டால், இப்பணிகளை யார் செய்வர்? அடுத்த தலைமை யார்?   

மாற்றுத் தலைமைகளாகத் தங்களை அடையாளப்படுத்தியுள்ள சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் என்று எவருமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் சுமந்திரனதும் முயற்சிகள் தவறென்றால், அவற்றுக்கு மாற்றான, யதார்த்தமான திட்டமாக எதை வைத்திருக்கிறார்கள் என இதுவரை வெளிப்படுத்தியிருக்கவில்லை. கூட்டமைப்பை எதிர்ப்பது மாத்திரம் தான், அவர்களது ஒரே அரசியல் நோக்காகக் காணப்படுகிறது போன்று தென்படுகிறது. இந்நிலையில், சுமந்திரன் மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பு, எதைச் சாதிக்கப் போகிறது?     

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுமந்திரனை-எதிர்த்தல்-எனும்-போதை/91-227776

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா கடத்தலுக்கு பிறகு எதிர்பார்த்த ஒரு கட்டுரை இந்த கட்டுரை என்ன இதைவிட சுமத்திரன் காந்தியத்தை கடைப்பிடிப்பவர் வாழ்வில் என்று நிறுவி ஒரு கட்டுரை வந்தாலும் ஆச்சரியபடுவதுக்கில்லை ஆனால் இந்த திரி சூடாகும். 

Link to comment
Share on other sites

இன்று மேற்குலகையும் இந்தியாவையும் அனுசரித்து கருமமாற்றுவதைத்தவிர வேறு மார்கங்கள் இல்லாத நிலையில் சுமந்திரனின் கடைசிப் நாடாளுமன்றப் பேச்சு இராஜதந்திர அடிப்படையில் வரவேன்க்கபடவேண்டியது. இறுதி யுத்தத்தை மேற்குலகம் இனக்கொலையென ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயல் என்பதை மறுக்கவில்லை. மேற்குலகு புலிகள் மீது போர்குற்றம் தொடர்பாக குற்றம் சாட்டியுள்ளது. இராஜதந்திர ரீதியாக படைகள் புலிகள் மீதான குற்றச்சாட்டை சமன்படுத்தாமல் வேறுபடுத்துவதற்க்கு மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல் போர்குற்றங்கள்  போன்ற சொற்களை தெரிந்து பயன்படுத்துவது அவசியம் என சுமந்திரனிடம் கேட்டுக்கொள்கிறேன். அவருடைய பேச்சு இராஜததிர ரீதியாக இன்றைய நிலையில்  விமர்சனங்களுடன் வரவேற்க்க வேண்டியது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2019 at 8:54 AM, கிருபன் said:

 

 

கவிஞரே கடந்த பத்து ஆண்டுகளில் மேற்குலகையும் கிந்தியாவையும் ஆதரித்து சம் சும் கும்பல் தமிழருக்கு பெற்றுக்கொடுத்ததென்ன என்பதையும்  சொல்லிவிட்டு போங்களேன்? ஒரு மாநில அரசுக்கான அதிகாரத்தையேனும் பெற முடிந்ததா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.