Jump to content

நான் எவரையும் குற்றம் சுமத்தவில்லை ; பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென நினைப்பவள் - ஒஸ்லோ பிரதி மேயர் கம்ஷாயினி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் எவரையும் குற்றம் சுமத்தவில்லை ; பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென நினைப்பவள் - ஒஸ்லோ பிரதி மேயர் கம்ஷாயினி

 

என்னைப் பெறுத்தவரையில் எந்தவொரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென்றுதான் நான் நினைப்பது. அந்தவகையிலேயே நான் அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லையென நோர்வேயின் ஒஸ்லோ மாநாகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் தெரிவித்தார்.

osma.jpg

இதேவேளை, நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள் , சங்கங்கள் உள்ளன அங்கும் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டுமென்றே கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் தலைமைத்துவம் குறித்த பல கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இந்நிலையில், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நோர்வேயின் ஒஸ்லோ மாநகரின் பிரதி மேயர் கம்ஷாயினி குணரட்ணம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இலங்கைக்கு பல தடவை வந்து சென்றுள்ளேன். நான் விடுமுறையில் முதல் காலங்களில் இலங்கைக்கு வந்துள்ளேன். குறிப்பாக பெற்றோருடன் தான் வந்துள்ளோன். நான் நீண்ட நாட்களாக செய்வதற்கு விரும்பி வந்த விடயம் தற்போதைய விஜயமாக தான் இருக்கும்.

“பெண்களும் செய்யலாம்” என்ற ஒரு தலைமைத்துவ பயிற்சிப்பட்டறையை நோர்வேயிலுள்ள தொழிலாளர் கட்சி அங்குள்ள நோர்வேயின் பீப்பிள்ஸ் எயிட் உடன் இணைந்து அங்கு மேற்கொண்டு வருகின்றனர். இது பல நாட்களில் பெண்களுக்கு ஒரு தலைமைத்துவப் பண்புகளை கொடுத்துள்ளது. 

அந்த வகையில் இலங்கையின் கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் பெண்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு, அவர்கள் கூறும் விடயங்களை ஆராய்ந்து, அதேசமயம் நோர்வே நாடு எவ்வாறு கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் வறுமையான நாடாக இருந்து இன்று எவ்வளவு தூரம் முன்னுக்கு வந்துள்ளது என்ற விடயத்தை பகிர்ந்து கொள்வதற்கு நான் இலங்கைக்கு வந்துள்ளேன்.

இவ்வாறு இலங்கைக்கு வருகைதந்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமை எனக்கு மிகவும் சந்தோசமாகவுள்ளது.இதைவிட மேலும் செய்யவும் நான் விரும்புகின்றேன்.

கேள்வி- தமீழழ விடுதலைப்புலிகள் பெண்களுக்கு சரியானதொரு வகிபாகத்தை வழங்கவில்லையென்று தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தீர்கள். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள் ?  

பதில் - என்னைப் பெறுத்தவரையில் எந்தவொரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென்றுதான் நான் நினைப்பது.  நான் நோர்வேயின் ஒஸ்லோ மாநாகர சபையில் கூட அங்கும் இருபாலாருக்கும் சமவுரிமை இருக்கவேண்டுமென்று தான் விரும்புகின்றேன். 

இதுவரைக்கும் அங்கும் சமவுரிமை 50 க்கு 50 வீதம் கிடைக்கவில்லை. அதற்காக நான் கஷ்டப்பட்டு முயற்சிகள் எடுத்து வருகின்றேன். அதேபோல் நோர்வே பாராளுமன்றிலும் ஆண், பெண்கள் 50 க்கு 50 வீதம் இருக்கவேண்டுமென்றே விரும்புகின்றேன். எங்குபோனாலும் ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் தற்போதைய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ள வந்துள்ளவர்கள் அனைவரும் ஆண்களாகவே உள்ளனர்.

அந்தவகையிலேயே நான் அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை. நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள் , சங்கங்கள் உள்ளன அங்கும் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டுமென்றே கேட்டுக்கொள்கின்றேன்.

கேள்வி- தமிழீழ விடுதலைப்புலிகள் பெண்களுக்கு சரியானதொரு இடத்தை வழங்கவில்லையென்பதை நீங்கள் சரியென்று நினைக்கின்றீர்களா?

பதில் - நான் அவ்வாறு சொல்லவில்லையே. நான் கூறியது எல்லா மட்டங்களிலும் அநேகமான பெண்கள் உள்ளனர். வளர்ச்சியடைந்து செல்லும் போது அதிகமான பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று தான் தெரிவித்தனான். அதுவும் நான் பாராட்டுத் தெரிவித்ததன் பின்னர்தான் நான் அதையும் தெரிவித்திருந்தேன். குறை சொல்வதற்காக நான் எதையும் சொல்லவில்லை நாங்கள் தமிழர்களை மேலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டியிருந்தேன்.

கேள்வி - விடுதலைப்புலிகள் பெண்களுக்கு சரியானதொரு இடத்தை வழங்கியிருந்தனரா வழங்கியிருக்கவில்லையா ?

பதில் - இடம்கொடுத்துள்ளனர். ஆனால் மேலும் தலைவிகள் வரலாம். 

கேள்வி - உங்களை தொடர்புபடுத்தி சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்றனவே ? 

பதில் - நான் நினைக்கின்றேன் ஒரு விடயத்தை ஒரு கோணத்தில் இருந்து பார்க்க முடியாது. அனைத்து கோணங்களிலிருந்தும் பார்க்க வேண்டும்.  அனைவருக்கும் கருத்துக்கூறும் உரிமையுண்டு.

 

http://www.virakesari.lk/article/47901

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கேள்வி - விடுதலைப்புலிகள் பெண்களுக்கு சரியானதொரு இடத்தை வழங்கியிருந்தனரா வழங்கியிருக்கவில்லையா ?

பதில் - இடம்கொடுத்துள்ளனர். ஆனால் மேலும் தலைவிகள் வரலாம். 

தமிழினி à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஆயிரம் தலைவர்களுக்கு ஈடாக வந்த தலைவி. கடைசியில் என்ன செய்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

oslo-720x450.png

விடுதலைப் புலிகளை குறைகூறும் அருகதை எனக்கில்லை: ஒஸ்லோ பிரதி மேயர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரை குறை கூறுவதற்கான தேவையோ அல்லது அதற்கான அருகதையோ தனக்கில்லை என, நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் பிரதி மேயர் கம்சாயினி குணரத்னம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்பு புலிகள் பெண்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்ற ஒஸ்லோ பிரதி மேயரின் கருத்து கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

இந்நிலையில், அது தொடர்பில் ஆதவன் செய்திச் சேவை சார்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு அவர் பிரத்தியேகமாக பதில் வழங்குகையிலேயே குறிப்பிட்டார்.

எந்தவொரு இடத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குரல் கொடுப்பவர் என்ற வகையில் ஒரு உதாரணமாகவே விடுதலை புலிகளை சுட்டிக்காட்டியதாகவும், அவர்களை குறை கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் சமூகம் ஒரு குடும்பம். எனவே தங்களுக்குள் பிழைகளை சுட்டிக்காட்டுவது ஒருவரை குறை கூறுவதற்காக அன்றி, தம்மை முன்னேற்றிக் கொள்வதற்காகவே என்றும் தெரிவித்தார்.

http://athavannews.com/விடுதலைப்-புலிகளை-குறைகூ/

Link to comment
Share on other sites

பிரதி  மேஜர்!! ... நாட்டில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள், மேற்குலகில்  .. கவுன்ஸிலர்மார், கவுன்ஸில் மேஜர்மார் என்றால் ஏதோ பெரிய அரசியல் பதவி என்று!? ... என் போன்ற நாலு வேலை இல்லாததுகள், இங்குள்ள கட்சிகளின் பின் திரியும்போது, ஓர் கதிரை ஆசை வரும், எங்களை திருப்திப்படுத்த, இந்தா இந்த வட்டாரத்தில் நில், என்பார்கள், நின்று வீடு வீடாக  சென்று பிரச்சாரம் என்ன துண்டுப்பிரசுரங்கள் போடுவோம், மக்களும் மத்தியில், தாம் இருக்கும் சூழ்நிலைக்கேற்ப வாக்களிப்பார்கள், வென்றால் கவுன்ஸிலர்!!!  சுழற்சி முறையில், கவுன்ஸிலரான காலத்துக்கேற்ப மேஜர், உதவி மேஜர் பதவி! 

மேஜர், உதவி மேஜர் பதவி .. அந்த கவுன்ஸிலுக்கு உட்பட்ட பகுதிக்குள் நடைபெறும் நிகழ்வுகளில் ... வைரவருக்கு மாலை போட்டு போர்த்தது போல்,  கழுத்தில் அணியும் ஆபரணம், பதவி இருக்கும் மட்டும், அணிய விட்டு ... நாடா வெட்டவும், விளக்கு கொழுத்தவும் மட்டும் பயன்படும் ஓர் காட்சிப்பொருள்! ..  ... வா, போ ... வந்தோ, போயே தீர வேண்டும்!

Cllr Kareema Marikar, Mayor of Harrow

... நாமோ ... நம் நாட்டுகளுக்குப் போய் அடிக்கிற றவுசுகளுக்கு அளவில்லை!!!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686
    • தப்பியோடியதற்காக கொடுக்கப்பட்டமேலதிக தண்டனையா? முட்டாள் பயலுக, எங்கே ஓடித்தப்ப நினைத்திருப்பார்கள்?
    • கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை! ”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த  முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய  அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக “ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அரசியல்வாதிகளின் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என சஞ்சய மஹவத்த குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378630
    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.