Jump to content

சமயோசித செயற்பாட்டின் அவசியமும் அவசரமும் – பி.மாணிக்கவாசகம்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமயோசித செயற்பாட்டின் அவசியமும் அவசரமும் – பி.மாணிக்கவாசகம்…

January 11, 2019

mahi-maithri.png?zoom=3&resize=335%2C232

குழப்பத்திற்குள் குழப்பம். அந்த அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்து குழம்பிப் போக முடியாது. அதில் இருந்து மீள்வது எப்படி என்பதுதான் கேள்வி.

ஒக்டோபர் 26 இல் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடி என்பது முதலாவது குழப்பம். ஐம்பத்திரண்டு நாட்கள் நீடித்த அந்தக் குழப்பத்திற்கு, அக்டோபர் 26 ஆம் திகதிக்கு முந்திய அரசியல் நிலைமையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காய் நகர்த்தல்களை மேற்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் ஒரு முடிவேற்பட்டது.

இரண்டு பிரதமர்கள், இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற இரட்டை நிலையில், நாட்டில் அரசாங்கமே இல்லை என்ற விநோதமானதோர் அரசியல் நிலைமை உருவாகியிருந்தது. இது அக்டோபர் 26 நெருக்கடி தந்த அலங்கோலமானதோர் அவல நிலை.
இந்த அரசியல் குழப்ப நிலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பது இப்போது உரிமை கோரலுடன் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகிய ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து, ஐக்கிய மக்கள் சுதந்திரன முன்னணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமாகிய மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டது என்பதை அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க, திலங்க சுமதிபால, லக்ஸ்மன் வசந்த பெரேரா ஆகியோர் இணைந்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் திட்டத்தை வகுத்ததாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தங்களுடைய திட்டம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டினால் தவிடுபொடியாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ள டிலான் பெரேரா, கூட்டமைப்பின் இந்தச் செயற்பாட்டினால் தமிழ் மக்களுக்கு எந்த நல்லதும் கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய கூற்றில் அரசியல் ரீதியான ஆதங்கம், சீற்றம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக்கே சாபமிடும் ஓர் உணர்வும் வெளிப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார பலத்தைப் பிரயோகித்து அரங்கேற்றிய அக்டோபர் 26 அரசியல் மாற்றம் என்பது, அரச தரப்பினரால்,; அதி உயர் அதிகார பலத்தைக் கொண்ட ஒருவரினால் அரங்கேற்றப்பட்ட அரசியல் சதி முயற்சியாகும்.

முழு நாட்டையும் மோசமான நெருக்கடிக்குள் தள்ளி, அரசாங்கமே இல்லாத நிலைமைக்கு ஆளாக்கிய அந்த சதித்திட்டத்தை, தாங்களே உருவாக்கியதாக டிலான் பெரேரா மார்தட்டியுள்ளார். அந்தத் திட்டத்தைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவருடைய கூற்றில், டிலான் பெரேராவைச் சேர்ந்தவர்களுடைய ஆற்றாமையும், அவர்கள் சந்தித்த அரசியல் தோல்வியும்கூட ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக வெளிவந்திருக்கின்றது.

அரசியலில் அதிகாரத்தையும், சுயலாபத்தையும் அடைவதே தங்களுடைய நோக்கம் என்பதை அவர் எந்தவிதக் கூச்சமுமின்றி வெளிப்படுத்தியிருக்கின்றார். அவருடைய கூற்று இந்த நாட்டின் பேரினவாத அரசியல் தலைமைகளின் நாட்டுப்பற்றற்ற, மக்கள் மீ:து அபிமானமற்ற வக்கரித்துப் போயுள்ள அரசியல் கொள்கையையும் செயற்பாடுகளையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

அக்டோபர் 26 இல் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடி நீதிமன்றத்தின் ஊடாகத் தணிக்கப்படடு, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், நிலைமை திருப்தி அடையத்தக்க வகையில் சீரடையவில்லை. அவருடைய பொறுப்பில் நாடாளுமன்றத் தலைமையைக் கொண்டுள்ள அரசாங்கத்தை சீராகச் செயற்பட அனுமதிக்கக் கூடாது என்ற அணுகுமுறையுடன் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
நடவடிக்கைகள் இரண்டாவது குழப்பமாகக் காணப்படுகின்றது.

நீறுபூத்த நெருப்பின் நிலை

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் செயற்பாடுகளை விரும்பாமல், அவற்றுக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னால் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடி உச்சகட்டத்தை எட்டி இருந்தபோது, நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் 225 பிரதிநிதிகளும் ஒப்புதல் அளித்தாலும்கூட, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று சூளுரைத்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து, நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் விடுத்தது, அரசியலமைப்புச் சட்டங்களுக்கு முரணானவை என நீதிமன்றம் அவருக்கு எதிராக அளித்துள்ள தீர்ப்பு, அதிகார ரீதியிலான அவருடைய நிலைப்பாட்டைத் தகர்த்தெறிந்துவிட்டது. இதனையடுத்து, வேறு வழியின்றி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்.

ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க மீதான அவருடைய அரசியல் ரீதியான கோபமும், காழ்ப்புணர்வும் நீங்கவில்லை. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகிய மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் அணிசேர்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பலமுள்ள ஓர் அரசியல் எதிர்சக்தியை உருவாக்குவதே இந்த முயற்சியின் அடிப்படை நோக்கமாகும். மறுபக்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நல்ல முறையில் ஆட்சி புரிய முடியாத வகையில் பல்வேறு தடைளை ஏற்படுத்துவதிலும் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.

அமைச்சுக்களைப் பங்கிடுவதில் பாகுபாடு காட்டியுள்ள அதேவேளை, அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் எவரும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான போக்குடையவர்களாக இருக்கக் கூடாது என்பதிலும் அவர் கூர்மையாகச் செயற்பட்டு வருகின்hறார்.

இதனால் பெயரளவில் மட்டுமே அரசாங்கத்தைச் செயற்படுத்த முடியும் என்ற நிலைமைக்கு ரணில் விக்கிரமசிங்க தள்ளப்பட்டுள்ளார். முக்கியமான செயற்பாடுகள் கடமைகள், நிறைவேற்றுப் பொறுப்புக்கள் என்பவற்றை, தன்னுடைய நேரடி கண்காணிப்பில் கொண்டு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிNசுன, ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் நிறைவேறிவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதையும் காண முடிகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் சட்டவாட்சி அதிகார தத்துவத்தை உடைய பிரதமரும் அரசியலில் கீரியும் பாம்பும் போன்ற பகைமை சார்ந்த ஆட்சிப் போக்கில் அரசாங்கத்தை எத்தனை நாட்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பது கேள்விக்கு உரியது. ஏட்டிக்குப் போட்டியான இந்த அரசியல் முரண்பாட்டு நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மக்கள் நன்மை அடைய முடியாது. அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் இயலாத காரியமாகவே இருக்கும். இது ஒரு மோசமான குழப்ப நிலை.

நாடு சீரான ஆட்சியின் மூலம் வழிநடத்தப்பட வேண்டுமானால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், சட்டவாட்சி அதிகாரத்தைக் கொண்ட நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பான பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டும். இணக்க அரசியல் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் கொண்டவர்களாக இருக்க வேண்டியது முக்கியம்.

கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும்கூட, நாட்டை நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டும். மக்களுக்கு விசுவாசமாகவும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு நல்லாட்சி புரிய வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் கூடிய செயல் மனப்பாங்கு இருத்தல் வேண்டும். இத்தகைய இணைந்த நிலைப்பாடும் செயற்திறன் மிக்க ஆட்சியைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற அரசியல் ரீதியான ஆர்வமும் இல்லையென்றால் நாடு முன்னேற முடியாது. நல்லாட்சி நிலவவும் மாட்டாது.

அக்டோபர் 26 நெருக்கடியின் பின்னர் நாட்டு நிலைமை சீரடைந்துள்ளதாகத் தோற்றிய போதிலும், நல்லாட்சி நிலவுவதற்கு உரிய அரசியல் உறுதிப்பாடு இன்னும் உருவாகவில்லை. எந்த வேளையிலும் முரண்பாடுகள் வெடித்து வெளிக்கிளம்பலாம் என்ற நீறு பூத்த நெருப்பாகவே அரசியல் நிலைமைகள் காணப்படுகின்றன.

புதிய அரசியலமைப்புக்கான மீள் முயற்சி

இந்த நிலையில், பொதுத் தேர்தல் ஒன்றின் மூலமே உறுதிப்பாடற்ற அரசியல் நிலைமைக்கு முடிவு காண முடியும் என்றே பலரும் நம்புகின்றார்கள். பெரும்பாலான அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்களின் மத்தியிலும்கூட இந்தக் கருத்தே மேலோங்கியிருக்கின்றது.

ஆனால், பொதுத் தேர்தல் நடத்துவதற்குரிய காலம் இன்னும் கனியவில்லை. ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த கூட்டு அரசு, ஆட்சிப் பொறுப்பை ஏற்று நான்கரை வருடங்கள் ஆகும் வரையில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை மீறி தேர்தல் நடத்த முடியாது. அரசியல் நெருக்கடியின்போது நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு இதனை இடித்துரைத்திருக்கின்றது.

அதேவேளை, இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையில் நிலுவையில் உள்ள மாகாணசபைக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும், அரசியல் உறுதிப்பாட்டை நிறுவுவதற்கு அது உதவப் போவதில்லை. பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தலின் மூலமே நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசியல் உறுதிப்பாட்டை உருவாக்க முடியும்.

எனவே, இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாகப் பரிணமித்துள்ள ஒரு சூழலில் தேர்தலை முன்னிறுத்தி அரசியல் தலைவர்களும், அரச தலைவர்களும் செயற்படுவார்கள் – செயற்படுகின்றார்கள் என்பதே யதார்த்தம். இந்த நிலையில், மோசமானதோர் அரசியல் நெருக்கடியின் பின்னர், மக்கள் நலன்களில் ஆட்சியாளர்களும், அரசியல் தலைவர்களும் கூடிய கவனம் செலுத்திச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

தேர்தலை முன்னிறுத்திச் செயற்படும் போது – அது, தங்களது சுய அரசியல் இலாபத்தை முதன்மைப்படுத்தியதாகவே இருக்கும். அப்போது, எதிரணியினரைத் தோற்கடிப்பதையே அரசியல்வாதிகள் பொதுவான இலக்காகக் கொண்டிருப்பார்கள். அதேவேளை, முரண்பாடுகள் முதன்மை பெற்றுள்ள அரசியல் சூழலில் எதிரணியினரை மக்களிடமிருந்து எந்த அளவுக்கு விலக்கி வைக்க முடியுமோ அந்த அளவுக்கு அவர்களை விலக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளே தீவிரம் பெற்றிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால், நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் தொல்லைகளில் இருந்து மீள்வது எப்படி என்பது அரசாங்கத்திற்கு பெரிய தலை இடியாக உள்ளது. எனவே, அரசியல் பேதங்களைக் கடந்து பொதுவான ஓர் இலக்கை நோக்கி பொதுவான ஒரு வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆயினும், அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இப்போதைய அரசியல் நிலைமை சாதகமான சூழலாக அமையவில்லை.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம், முக்கியமான மாற்றங்களையும், நன்மைகளையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுபதற்குரிய நடவடிக்கைகளிலும் ஒரு பக்கம் கவனம் செலுத்தப்படுகின்றது. இதற்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது.

ஆனால் ஒன்றையொன்று கடித்துக் குதறும் அளவுக்கு, முரண்பாடான அரசியல் உணர்வுகள் மேலோங்கியுள்ள அரசியல் சூழலில் அந்தத் தேவை நிறைவேறும் என்று கூறுவதற்கில்லை. அரசியல் கட்சிகள் அனைத்தும் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து விடயங்களை விவாதிப்பதற்கும், நாட்டின் பொதுவான நலன்களைக் கருத்;திற்கொண்டு விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்கும் தற்போதைய அரசியல் சூழலில் தயாராக முடியும் என்று நம்புவதற்கில்லை.

உணர்வு ரீதியாக அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் வேறுபட்டிருக்கின்ற நிலைமைக்கு அப்பால், பொது இலக்காகிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு உளப்பூர்வமாக அரசியல் கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

சமயோசித போக்கும், இராஜதந்திரமும் அவசியம்

தேசிய அளவிலான, இரண்டு பேரின அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து 2015 ஆம் ஆண்டு அமைத்த அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தேவை முக்கியமாகக் கருதப்பட்டது. தேர்தல் முறையில் மாற்றம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார உரித்துக்களை மட்டுப்படுத்தி, பிரதமரின் கரத்தைப் பலப்படுத்துவது ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக பேரின அரசியல் கட்சிகள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆர்வம் கொண்டிருந்தன.

ஆனால் இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளித்து ஒத்துழைத்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு 2015 ஆம் ஆண்டு முன்வந்திருந்த கூட்டமைப்பு, நிபந்தனையற்ற ஆதரவையே வழங்கியிருந்தது. ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், அதற்குப் பதிலாக அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு நிபந்தனையாக முன்வைத்திருக்கவில்லை.

ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு முன்னின்று செயற்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க, பொது வேட்பாளராகக் களம் இறங்குவதற்கு உடன்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன ஆகியோர், அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அரசியல் ரீதியான அவசியத்தை உணர்ந்திருந்தனர். எனவேதான், இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இணங்கியிருந்தனர்.

ஆனால் இரு கட்சிகளும் இணைந்து உருவாக்கியிருந்த நல்லாட்சி அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் அழைக்கப்பட்ட அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, மோசமானதோர் அரசியல் நெருக்கடியின் பின்னர், ஏட்டிக்குப் போட்டியான ஒரு நிலைமையில், நிர்ப்பந்தமான ஒரு சூழலில் தனித்து ஆட்சி அமைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி முன்வருமா என்பது கேள்விக்குறியே.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்காக, தாங்கள் திட்டமிட்டு முன்னெடுத்திருந்த அக்டோபர் 26 ஆட்சி மாற்றத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முறியடித்ததன் காரணமாக, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கமாட்டாது. அதற்குத் தாங்கள் ஒத்துழைக்கப் போவதில்லை. அதற்கு எதிர்;ப்பு தெரிவிப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளமை தமிழர் தரப்பு அரசியலில் முக்கியமாகக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் அவசரமான அரசியல் தேவையாகும். யுத்தம் முடிவுக்கு வந்து, பத்து வருடங்களாகின்ற நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளனர். யுத்தம் மூள்வதற்கு மூலகாரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினைக்கு, நிரந்தரமானதோர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்டகால அரசியல் அபிலாசையாகும். ஆனால் இத்தகைய அரசியல் அவசரமும், முக்கியமும் சிங்கள மக்களுக்குக் கிடையாது. அதேபோன்று பேரின அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அந்த அரசியல் தேவை இல்லையென்றே கூற வேண்டும்.

இதன் காரணமாகவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன மட்டுமல்லாமல், ஜேவிபி போன்ற கட்சிகளும்கூட புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஆர்வமற்றவையாகவும், எதிர்ப்புணர்வு கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இந்த நிலையில்; தற்போதைய உறுதியற்ற அரசியல் சூழலையும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையற்ற பலவீனமான நிலைமையையும் கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மூலம் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர முடியும் என்று கூறுவதற்கில்லை.

உறுதியற்ற அரசியல் நிலைமையையும், எதிர்ப்பு அலைகளையும், தேவையான அரசியல் பலமில்லாத நிலையையும் கொண்டு, தேர்தல் சூழல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது கடினம். ஆயினும் அத்தகைய அரசியல் வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகின்ற வகையில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதையும் காண முடிகின்றது.

அரசியல் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும் என்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார். அவருடைய கருத்து மறுப்புக்குரியதல்ல. எனினும் கால நேர அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையிலேயே நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும். செயற்படவும் முடியும்.

சாதகமற்ற சூழலில் சமயோசிதமாகவும், இராஜதந்திர ரீதியிலும் நிலைமைகளைக் கையாள்வது அவசியம். நிலைமைகளை சாதகமாகப் பயன்படுத்துவதற்கு, செயற்திறனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதும் அவசியம். அத்தகைய செயற்பாடுகளின் ஊடாகவே குழப்பகரமானதோர் அரசியல் சூழலில் நிலைமைகளைச் சீர் செய்து இலக்குகளை நோக்கிப் பணிக்க முடியும்.

 

 

http://globaltamilnews.net/2019/109575/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.