Jump to content

ஜனாதிபதித் தேர்தல் உடனடிச் சாத்தியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் உடனடிச் சாத்தியமா?

கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 11 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:34 

image_0989331658.jpgஇலங்கை அரசியலில், 52 நாள்கள் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்த பின்னர், தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.  

முறைப்படி மாகாணசபைத் தேர்தல்கள் தான், முதலில் நடத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஆறு மாகாணசபைகளின் பதவிக்கால‍ங்கள்  ஏற்கெனவே முடிந்து விட்டன. ஆனாலும், உடனடியாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் திட்டத்தில், அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை.   

முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இழுத்தடித்தது. இப்போது, மஹிந்தவின் நிழலில் உள்ள பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ள சுதந்திரக் கட்சி, மாகாணசபைத் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது.  

ஆனால், தற்போதைய ஆளும்கட்சியான ஐ.தே.க, மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தும் திட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் முதலில் எதிர்பார்ப்பது ஜனாதிபதித் தேர்தலைத் தான். முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அதற்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் போன்றவற்றை நடத்தலாம் என்றும், ஐ.தே.கவினர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.  

இந்தநிலையில், ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று, கடந்த ஒன்பதாம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஜனாதிபதி ஒருவர், தான் பதவியேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், எந்த நேரத்திலும், முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு, அரசமைப்பு அனுமதித்துள்ளது. ஜனாதிபதி சிறிசேன விரும்பியோ விரும்பாமலோ, இந்த ஆண்டு இறுதிக்குள், ஜனாதிபதித் தேர்தலை நடத்தித் தான் ஆகவேண்டும். 

அவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரி எட்டாம் திகதியுடன் காலாவதியாகி விடும். அதிலிருந்து 30 நாள்களுக்கு முன்னதாக, தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, இந்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவது உறுதி. அது முன்கூட்டியே நடத்தப்படுமா, இல்லையா என்பதே இப்போதுள்ள கேள்வி.  

ஜனாதிபதி சிறிசேன, தெளிவான முடிவுகளை எடுக்கும் ஒருவரல்ல. அதை அவர், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னர், பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். எனவே, அவர் முன்கூட்டியே தேர்தலை நடத்துவாரா, இல்லையா என்பதில் தெளிவான எதிர்வுகூறலை முன்வைக்க முடியாது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பை மீறிவிட்டார் என்பதை, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உறுதி செய்து விட்டது என்றும், அரசமைப்பை மீறிய அவர், இனிமேல் ஜனாதிபதியாக இருப்பதற்குத் தகுதியில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம போன்ற மஹிந்த தரப்பில் உள்ளவர்களே கூறுகின்றனர். ஐ.தே.கவும், ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தயாரா என்று சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.  

முறைப்படி பார்த்தால், வரும் நவம்பர், டிசெம்பரிலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்த வேண்டிய காலப்பகுதியாகும். அதற்கு முன்னதாக, ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படுமாயின், அதற்கு ஒரேயொரு சந்தர்ப்பம் தான் இருக்கிறது.  

ஜனாதிபதி சிறிசேன, மீண்டும் இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிட முடிவு செய்தால் மாத்திரமே அது சாத்தியப்படும். இதுவரையில், இரண்டாவது பதவிக்காலத்துக்காகப் போட்டியிடுவது பற்றி, ஜனாதிபதியிடம் இருந்து தெளிவான சமிக்ஞை எதுவும் வெளியாகவில்லை. இந்த விடயத்தில் அவர் குழப்பமான அறிவிப்புகளையே வெளியிட்டு வந்திருக்கிறார்.  

ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில், மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறிவந்தார். எனினும், காலப்போக்கில் அவர் அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதை தவிர்த்து வந்திருக்கிறார். அதுமாத்திரமன்றி, இரண்டாவது பதவிக்காலத்துக்காக, பொதுவேட்பாளராக ஐ.தே.க தன்னை முன்னிறுத்தப் போவதில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, ரணில் விக்கிரமசிங்கவுடனான கூட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முடிவையும் அவர் எடுத்திருந்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தான் என்று, அடித்துச் சொல்லுகின்றனர்; அதை அவர் தடுக்க முனையவில்லை.இவையெல்லாம், மீண்டும் போட்டியிடும் முனைப்பில் தான் அவர் இருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகின்றன.  

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் போதுவேட்பாளராக களமிறக்க மஹிந்த ராஜபக்‌ஷ இணங்கிய பின்னரே, கடந்த ஒக்டோபர் 26 ஆட்சிக்கவிழ்ப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், ஒரு பேச்சு உள்ளது.  

கடந்தவாரம் ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ அளித்திருந்த செவ்வியில், “அடுத்த ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளீர்களா?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இல்லையில்லை. அதுபற்றி முடிவு செய்வதற்கான நேரம் இன்னமும் வரவில்லை. நேரம் வரும் போதே, வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்போம்” என்று கூறியிருந்தார்.  

இப்போதைய நிலையில், மைத்திரிபால சிறிசேனவோ, மஹிந்த ராஜபக்‌ஷவோ உண்மைகளை வெளியிடும் நிலையில் இல்லை. கடந்த சில மாதங்களில் அவர்கள் வெளியிட்ட தகவல்களே அதற்குச் சான்று. ஊடகங்களையும் கட்சிகளையும் நாட்டு மக்களையும் பல சந்தர்ப்பங்களில் திசை திருப்ப முனைந்திருக்கிறார்கள்.  

எனவே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயத்திலோ, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் விடயத்திலோ, இவர்கள் இருவருமே முன்கூட்டியே எந்த இரகசியத்தையும் கசிய விடமாட்டார்கள்.  

தம்மை ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயார்படுத்திக் கொண்டு, ஐ.தே.கவுக்கு அதற்கான அவகாசத்தைக் கொடுக்காத வகையில், திடீர் தேர்தல் அறிவிப்பை வெளியிடவே மைத்திரி, மஹிந்த கூட்டு விருப்பப்படும்.  அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவே பொதுவேட்பாளராக போட்டியிடுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள தயாசிறி ஜெயசேகர வெளியிட்டுள்ள கருத்துக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளியிட்டுள்ள கருத்தும் இங்கு கவனிக்க வைக்கிறது.  

அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த ராஜபக்‌ஷவே தீர்மானிப்பார் என்றும், அதனை வேறெவரும் முடிவு செய்ய முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார். அதைவிட, மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுவார் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மொட்டு சின்னத்துக்குள் அடங்கிப்போகும் நிலையை அந்தக் கட்சியினர் விரும்பவில்லை.  

அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தும் முடிவை மஹிந்த ராஜபக்‌ஷ எடுத்தால், பொதுஜன பெரமுனவுக்குள்ளேயும் குழப்பம் வெடிக்கும் நிலை காணப்படுகிறது. குமார வெல்கம போன்றவர்கள், மைத்திரிபால சிறிசேனவைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.  

மஹிந்த ராஜபக்‌ஷ இரண்டு விடயங்களை கருத்தில் கொண்டே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது பற்றித் தீர்மானிப்பார்.  

முதலாவது, வெற்றிபெறக் கூடிய வாய்ப்பு. மைத்திரிபால சிறிசேனவுக்கு செல்வாக்கு சரிந்துள்ள சூழலில் அவரை போட்டியில் நிறுத்தி, தனது கட்சியின் பெயரைப் பாழடிக்க, அவர் தயாராக இருக்கிறாரா என்ற கேள்வி இருக்கிறது. மைத்திரிபால சிறிசேனவைப் பொதுவேட்பாளராக நிறுத்தி தோல்வி கண்டால், அது மஹிந்த தரப்பின் தோல்வியாகவே அடையாளப்படுத்தப்படும். அது, பொதுஜன பெரமுனவுக்கும் இழப்பாக அமையும்.  

இரண்டாவதாக, தனது சொல்லுக்குக் கட்டுப்படும் ஒருவரையே, வேட்பாளராக நிறுத்த முனைவார் மஹிந்த ராஜபக்‌ஷ.  

கோட்டாபய ராஜபக்‌ஷ விடயத்தில் அவருக்கு சில குழப்பங்கள் இருந்தாலும், அவரையோ பசில் ராஜபக்‌ஷவையோ, வேட்பாளராக நிறுத்துவதில் பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் அமெரிக்க குடியுரிமையை துறப்பதில் பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, மைத்திரிபால சிறிசேன இப்போதைக்கு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தலையாட்டும் ஒருவராக மாறியிருக்கிறார்.

ஆனாலும், அவரை எந்தளவுக்கு அவர் நம்புவார் என்பது கேள்வி. ஆனாலும், சில அரசியல் நெளிவுசுழிவுகளைக் கருத்தில் கொண்டு, மைத்திரிபாலவை பொதுவேட்பாளராக நிறுத்த மஹிந்த ராஜபக்‌ஷ முன்வரக் கூடும்.  

மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற வேண்டுமானால், அதற்கு சிறுபான்மையினரின் ஆதரவு தேவை. இந்தநிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு எதிரான ஒரு நகர்வாகத் தான், வடக்குக்கு தமிழரையும் கிழக்குக்கு முஸ்லிமையும் ஆளுநராக நியமித்திருக்கிறார். இது ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.  

எவ்வாறாயினும், மைத்திரிபால சிறிசேன தனக்கான வெற்றிவாய்ப்பை உறுதி செய்யாமல், முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்த முனைவார் என்று எதிர்பார்க்கவும் முடியாது.  
ஏனென்றால் அவர் தனது பதவிக்காலம் முழுவதற்கும் பதவியில் இருப்பேன் என்பதை ஏற்கெனவே வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதித்-தேர்தல்-உடனடிச்-சாத்தியமா/91-227839

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.