Jump to content

இந்தி பேசத் தெரியாவிடில் ஏன்  இங்கே வந்தாய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இந்திய குடிவரவு அதிகாரிகளுக்கு, திமிர், அராஜகம் அதிகம்.

27 வயதான தமிழக மாணவர் ஆபிரகாம், அமெரிக்காவில் தனது Phd கல்வியினை முடித்துக் கொண்டு நியூயோர்க்கில் இருந்து மும்பை ஊடாக சென்னை செல்ல, மும்பையில் வந்து இறங்கி இருக்கிறார்.

33ம் இலக்க கவுண்டரில், லைனில் நின்று இருக்கிறார்.

அவருக்கு முன்னால் நின்றிருந்த வெள்ளையர் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசி கிளியர் பண்ணிய அதிகாரி இவருடன் இந்தியில் பேசினார். இந்தி தெரியாது என்று சொல்லி ஆங்கிலத்தில் பேசமுயன்ற போது,  இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா. அப்படீன்னா தமிழ்நாட்டுக்குப் போயிரு என்று திமிராக பேசிய மும்பை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரி கிளியர் பண்ண மறுத்தார்.

நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த பயணி, உயர் அதிகாரிகளிடம் முறையீடு செய்தார். உயர் அதிகாரிகள் அந்த அதிகாரியிடம் பேசிய போது அவர் அதே போலவே சொல்லி தனது கடமையினை செய்யவில்லை. ஆகவே வேறு கவுண்ட ருக்கு அனுப்பி அவரை கிளியர் பண்ணி அனுப்பி வைத்திருக்கிறார்கள் உயர் அதிகாரிகள்.

விசயம் அத்துடன் முடியும் என்று பார்த்தால் ஆபிரகாம், சோசியல் மீடியா பக்கமாக போய், ட்விட்டர் மூலமாக சம்பவத்தினை பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும், ராகுல் காந்திக்கும், ஸ்டாலினுக்கும் அனுப்பி வைக்க, விசயம் இந்தியா முழுக்க பரவியத்துடன், இன்று இந்திய பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

சோசியல் மீடியா பவர் குறித்து அறியாத, தன் மொழி வெறியரான, சம்பந்தப் பட்ட அதிகாரி பதவியில் இருந்து இடை நிறுத்தப் பட்டுள்ளதுடன் போலீஸ் விசாரணைக்கும் உத்தரவு  இடப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், மும்பை இருக்கும் மகாராஷ்ட்டிரா மாநிலத்தின் மொழி மராத்தி. 

Mumbai Airport officials asks TN student to return to Tamil Nadu if not speak in Hindi

மும்பை: இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா. அப்படீன்னா தமிழ்நாட்டுக்குப் போயிரு என்று திமிராக பேசிய மும்பை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் அதிகாரியின் இந்த அடாவடி செயல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சசி தரூர் உள்ளிட்டோருக்கு டிவிட்டரில் டேக் செய்து புகார் கூறியுள்ளார்.

மாணவரிடம் திமிராகப் பேசி அவமரியாதை செய்த அந்த அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த அவரது பெயர் ஆப்ரகாம் சாமுவேல். பிஎச்டி ஆய்வு மாணவர். இன்று அதிகாலை 1 மணியளவில் நியூயார்க் செல்வதற்காக விமானத்தைப் பிடிக்க மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார் சாமுவேல். அங்கு குடியுரிமைப் பிரிவில் இமிகிரேஷனுக்காக அணுகியபோது அங்கிருந்த அதிகாரி இந்தியில் பேசியுள்ளார். ஆனால் தனக்கு ஆங்கிலம், தமிழ் மட்டுமே தெரியும் என்று கூறி ஆங்கிலத்தில் பேசியுள்ளார் சாமுவேல். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத அந்த அதிகாரி இந்தியிலேயே பேசியுள்ளார். சாமுவேல் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தபோது இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா. அப்படின்னா தமிழ்நாட்டுக்கே போயிரு என்று கூறி இமிகிரேஷன் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவர் சாமுவேல் குடியுரிமைப் பிரிவு உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினார். இதையடுத்து விரைந்து வந்த உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரியை கேட்டபோது அவர்களிடமும் இந்தி தெரியாவிட்டால் தமிழ்நாட்டுக்குப் போகுமாறு திரும்பவும் திமிராக பேசியுள்ளார் அந்த அதிகாரி. இதையடுத்து உயர் அதிகாரிகள் சாமுவேலுக்கு வேறு அதிகாரி மூலம் இமிகிரேஷன் கொடுத்து அவரை அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். [என்ன 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்!] சாமுவேல் உடனடியாக விமானத்தை பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் பிரச்சினை செய்யாமல், புகார் ஏதும் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். ஆனால் டிவிட்டரில் போட்டு அந்த அதிகாரியைக் கிழித்தெடுத்து விட்டார்.

மும்பை விமான நிலையத்தின் 33வது கவுண்டரில் இருந்த அதிகாரி எனக்கு இந்தி தெரியாத காரணத்தால் இமிகிரேஷன் கொடுக்க மறுத்தார். அவர் குறித்து புகார் கூறியுள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.

நான் உடனடியாக விமானம் ஏற வேண்டியிருந்ததால் புகார் ஏதும் தரவில்லை. இல்லாவிட்டால் அங்கேயே தங்கியிருந்து அந்த அதிகாரியை ஒரு வழி செய்திருப்பேன். இவரைப் போன்ற முட்டாள்கள் எப்படி இந்திய அரசில் பணியாற்றுகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. இவர் ஒரு அவமானம்.

ஒரு இந்தியரின் அடிப்படை உரிமையான இமிகிரேஷனை தர மறுத்துள்ள அந்த அதிகாரி குறித்து குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எது அவரது வேலை என்பதை அவருக்குப் புரிய வைக்க வேண்டும்

நான் ஒரு இந்தியன். நான் இந்தி பேசுவதில்லை. அவ்வளவுதான். தங்களது சொந்த, அழகிய மொழியைப் பேசும் இந்தியர்களை அவமதிக்காதீர்கள்.

நான் அவரிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினேன். தமிழில் கூட பேசவில்லை. எனக்கு இந்தி தெரியாது என்று கூறியதை குற்றமாக கருதிய அவர் அந்தப் பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத முட்டாள் என்றுதான் கூற வேண்டும். அதே அதிகாரி, ஆங்கிலத்தில் பேசிய வெளிநாட்டுக்காரரை கிளியர் செய்து என் கண் முன்பாகவே அனுப்பி வைத்தார்.

இந்தி தெரியாத ஒரே காரணத்திற்காக எந்த இந்தியருக்கும் இமிகிரேஷன் மறுக்கப்படக் கூடாது. இதுபோன்ற அராஜகமான அதிகாரியால் நாட்டுக்கே அவமானம். இதுவே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்.

உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியபோது அவர்கள் வந்து அந்த அதிகாரியிடம் விசாரித்தபோது, அவர்களிடமும் அவர் அவதூறாகவே பேசினார். இதுதொடர்பான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தால் உண்மை தெரிய வரும். என்னிடம் தகவல் கேட்டால் தருவதற்கு நானும் தயாராக உள்ளேன்.

தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு அங்கம்தான் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். உரிய அதிகாரிகள் இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இதுபோன்ற காரணங்களால்தான் எந்த தேசிய கட்சியும், தமிழகத்தில் காலூன்ற முடியாமல் உள்ளது. அந்த அதிகாரி என்னிடம் இந்தி பேசுமாறு மட்டும் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, தமிழ் இமிகிரேஷன் கவுண்டர் இருந்தால் அங்கு போகுமாறும் அவதூறாகப் பேசினார்.

Read more at: https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-airport-officials-asks-tn-student-return-tamil-nadu-if-speak-in-hindi-338609.html?utm_source=vuukle&utm_medium=talk_of_town

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நான் இந்தியாவின் எதிர்ப்பாளரும் அல்ல, தமிழ் வெறியனும் அல்ல" - ஆபிரகாம் சாமுவேல் பிரத்யேக பேட்டி

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ்
  •  
"மும்பை விமான நிலையத்தில் நடந்தது என்ன?" - ஆபிரகாம் சாமுவேல் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமை Twitter/ Getty Images

"முயன்று பார்த்து தோற்றுவிட்ட இந்தி திணிப்பை மத்தியிலுள்ள அரசுகள் மீண்டும், மீண்டும் செய்தால் அது நாட்டில் பிளவுகளையே ஏற்படுத்தும்" என்று இந்தி மொழி தெரியாததால் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்ற ஒப்புதல் மறுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஆபிரகாம் சாமுவேல் பிபிசி தமிழுடனான பிரத்யேக பேட்டியின்போது தெரிவித்தார்.

 

கடந்த ஜனவரி 8ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த ஆபிரகாம் சாமுவேல் என்ற இளைஞர், "எனக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும், இந்தி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காக மும்பை சர்வதேச விமான நிலையத்தில் எனக்கு குடியேற்ற ஒப்புதல் வழங்குவதற்கு அதிகாரி ஒருவர் மறுப்புத் தெரிவித்துவிட்டார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்டோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த தொடர் ட்விட்டுகளுக்கு ஆதரவாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்ததோடு, இது போன்று தாங்கள் சந்தித்த சம்பவங்களை நினைவுகூர்ந்தது வைரலானது.

 

அதே சூழ்நிலையில், ஆபிரகாம் சாமுவேல் வேண்டுமென்றே இது போன்று பிரச்சனையை கிளப்புவதாகவும், அவரை யாரோ இயக்குவதாகவும், அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் டேக் செய்வதற்கு என்ன காரணம் போன்ற கேள்விகளை பலர் சமூக ஊடங்கங்களில் எழுப்பி வருகின்றனர்.

எனவே, மும்பை விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து அறிவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முனைவர் பட்ட ஆய்வு செய்துவரும் ஆபிரகாம் சாமுவேலை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

"நினைத்துக்கூட பார்க்கவில்லை"

"அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். ஒரு மாத விடுப்பில் தமிழகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக சென்னை வழியாக மும்பை விமான நிலையத்திற்கு சென்றேன். இந்தியாவின் எல்லையிலிருந்து நான் வெளியேறும் கடைசி விமான நிலையம் என்பதால் குடியேற்ற ஒப்புதல் சோதனைக்காக வழக்கம்போல் வரிசையில் நின்றிருந்தேன்" என்று கூறிய ஆபிரகாம், “அதன் பிறகு நடந்ததை ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்கிறார்.

"33வது கவுண்டருக்கு சென்றதும், அங்கிருந்த குடியேற்றத்துறை அதிகாரி என்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை பார்த்துவிட்டு தொடர்ந்து இந்தியில் பேசியபடி இருந்தார். அவர் பேசியதில் எனக்கு ஒரு வார்த்தைக்கூட புரியாததால், நிதானமாக 'சார் எனக்கு இந்தி தெரியாது; தமிழ், ஆங்கிலம்தான் தெரியும்' என்று கூறியவுடனேயே 'என்னது இந்தி தெரியாதா? நீ அப்போ தமிழ்நாட்டுக்கே போக வேண்டியதுதானே? என்னால் உனக்கு ஒப்புதல் கொடுக்க முடியாது. தமிழ் தெரிஞ்ச அதிகாரி இருக்குற கவுண்டருக்கு போயிக்கோ' என்று நக்கலாக கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று ஆபிரகாம் விவரிக்கிறார்.

"மும்பை விமான நிலையத்தில் நடந்தது என்ன?" - ஆபிரகாம் சாமுவேல் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமை Getty Images

தனது விமானத்துக்கு நேரமானதால் அப்போது தனக்கு ஏற்பட்ட கோபமும், விரக்தியும் கலந்த மனநிலையை கட்டுப்படுத்தி கொண்டதாக கூறும் ஆபிரகாம், தனக்கு முன்பாக வெளிநாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அதே அதிகாரி ஆங்கிலத்தில் உரையாடி பரிசோதனை செய்தததை எண்ணி மொழி ரீதியிலான பாகுபாட்டை உணர்ந்ததாக கூறுகிறார்.

"அருகிலிருந்த 32வது கவுண்டருக்கு சென்றபோது அங்கிருந்த அதிகாரி ஆங்கிலத்தில் உரையாடி அடுத்த 2-3 நிமிடங்களில் எனக்கு ஒப்புதல் வழங்கிவிட்டார். அதற்கடுத்து உடனடியாக விமான நிலையத்துக்குளேயே இருந்த குடியேற்றத்துறை அலுவலக அதிகாரிகளிடம் நடந்ததை கூற, அந்த குறிப்பிட்ட அதிகாரியை நேரிலேயே வரவழைத்துவிட்டனர்.

அப்போதும்கூட தனது தவறுக்கு மன்னிப்பு கேட்காத அவர், தொடர்ந்து முன்பு கூறியவற்றை அப்படியே திரும்ப திரும்ப கூற, பதற்றமடைந்த அதிகாரிகள், உயரதிகாரிகளை நேரில் அழைக்க, 'அவர் இன்று நீண்டநேரமாக பணிபுரிவதால் ஏற்பட்ட களைப்பின் காரணமாக இப்படி செய்திருப்பார்' என்று கூறி என்னை சமாதானப்படுத்த பார்த்தனர். அதை ஏற்றுக்கொள்ள மறுத்த நான் விமான புறப்பாட்டுக்கு நேரமானதால் அங்கிருந்து சென்றுவிட்டேன்" என்கிறார்.

"சீமானை கூட டேக் செய்திருப்பேன்"

நான் தமிழகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், இந்தியன் என்று கூறிக்கொள்வதிலும் பெருமையடைவதாக கூறும் ஆபிரகாம், "இந்தியாவின் அரசமைப்பு சட்டம் எனக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மறுத்ததாலும், மனதை புண்படுத்தியதுடன் எனது நேரத்தை வீணடித்ததற்காகவும், இதுபோன்ற நிலை மற்றொரு இந்தியல்லாத மொழியை தாய்மொழியாக கொண்டவருக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த விவகாரத்தை ட்விட்டருக்கு எடுத்து சென்றேன்" என்று கூறுகிறார்.

குறிப்பிட்ட அரசியல் கட்சி மற்றும் தலைவர்களை மட்டும் டேக் செய்ததால் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, "நான் ஒரு சாதாரண ட்விட்டர் பயன்பாட்டாளர். ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் பிரதமர் நரேந்திர மோதி, வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தமிழ் மொழி சார்ந்த விவகாரங்களில் காலங்காலமாக குரல் கொடுத்து வரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி போன்றோரை அந்த பரபரப்பான சமயத்தில் டேக் செய்தேன். பொறுமையாக இருந்திருந்தால் சீமானை கூட டேக் செய்திருப்பேன்." என்றார்.

ஆபிரகாம் சாமுவேல்படத்தின் காப்புரிமை TWITTER Image caption ஆபிரகாம் சாமுவேல்

அதுமட்டுமின்றி, தனக்கும் எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும், அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறுகிறார்.

"லண்டன், பாரீசில் தமிழிலில் பேசுகிறார்கள்"

"நான் பலமுறை லண்டன், பாரிஸ் நகரங்களின் விமான நிலையங்களுக்கு செல்லும்போது, அங்கிருக்கும் அதிகாரிகள் தமிழில் இயல்பாக உரையாடுகிறார்கள். அந்த நிலையில், இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும் தமிழகத்தில் பேசப்படும் மொழிக்கு அதே நாட்டிலேயே இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை.

"மும்பை விமான நிலையத்தில் நடந்தது என்ன?" - ஆபிரகாம் சாமுவேல் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமை Getty Images

ஆங்கிலம் தெரிந்த எனக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் தமிழ் போன்ற தாய்மொழிகளை மட்டுமே தெரிந்தவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று நினைத்துப்பார்த்ததன் காரணமாகவே முற்றிலும் தவறாக நடந்து கொண்ட குடியேற்றத்துறை அதிகாரி மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதற்காக நான் மும்பை விமான நிலையத்தின் குடியேற்றத்துறை அலுவலகத்துக்கு முறைப்படி மின்னஞ்சல் அனுப்பியுள்ளளேன்.

அந்த அதிகாரியை நான் மன ரீதியாக மன்னித்துவிட்டேன் என்றாலும், இந்த சம்பவம் இது போன்று மொழியை திணிக்கும் அதிகாரிகளுக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து போராடி வருகிறேன்" என்று விவரிக்கிறார்.

"இந்தியாவின் எதிர்பாளரும் அல்ல, தமிழ் வெறியனும் அல்ல"

ஒரு தமிழனாக இருப்பதில் எந்த அளவிற்கு பெருமை அடைகிறேனோ அதே அளவுக்கு இந்தியனாக இருப்பதிலும் பெருமையடைகிறேன். ஆபிரகாம் சாமுவேல், .

"வெளிநாட்டில் வசித்துக்கொண்டு இந்தியாவில் நான் பிரச்சனையை கிளப்புவதாக சிலர் கூறி வருகின்றனர். முன்னதாக பிரிட்டனிலும், தற்போது அமெரிக்காவிலும் கல்வி பயின்ற நான் இந்த நாடுகளில் நிரந்தரமாக வசிப்பதற்கு ஒருபோதும் விரும்பியதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தமிழகத்திற்கு திரும்பி அங்கு சொந்தமாக ஸ்டாட்அப் நிறுவனம் தொடங்குவதற்கே திட்டமிட்டுள்ளேன்" என்று ஆபிரகாம் சாமுவேல் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், "இந்தியா அடிப்படையில் பல்வேறு மொழிகளையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. நான் இந்தியாவின் எதிர்பாளரும் அல்ல, தமிழ் வெறியனும் அல்ல. ஆனால், ஏற்கனவே முயன்று பார்த்து தோற்றுவிட்ட இந்தி திணிப்பை மத்தியிலுள்ள அரசுகள் மீண்டும், மீண்டும் செய்தால் அது நாட்டில் பிளவுகளையே ஏற்படுத்தும். அதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. ஒரு தமிழனாக இருப்பதில் எந்த அளவிற்கு பெருமை அடைகிறேனோ அதே அளவுக்கு இந்தியனாக இருப்பதிலும் பெருமையடைகிறேன்" என்று கூறினார்.

சமூகத்தில் ஊடகத்தில் வலுக்கும் ஆதரவு

ஆபிரகாம் சாமுவேலுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, மேற்குவங்கத்தை சேர்ந்த மொழியியல் உரிமை செயற்பாட்டாளரான கார்கா சாட்டர்ஜி, "தமிழகத்தை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு இந்தி தெரியாது என்ற காரணத்தில் மும்பை விமான நிலையத்திலுள்ள இந்தி மொழிவெறி கொண்ட அதிகாரி குடியேற்ற அனுமதி வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். நானும் இதே போன்றதொரு சூழ்நிலையை கொல்கத்தா விமான நிலையத்தில் எதிர்கொண்டபோது அந்த அதிகாரிக்கு தக்க பதிலடி கொடுத்தேன்" என்று காணொளியுடன் கூடிய பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

"இதேபோன்றதொரு சூழ்நிலையை கடந்தாண்டு இறுதியில் சென்னை விமான நிலையத்திலேயே எனக்கு ஏற்பட்டது. அப்போது, எனக்கு ஏன் இந்தி தெரியாது என்று கேள்வியெழுப்பிய விமான நிலைய அதிகாரி, எனக்கு மிரட்டலும் விடுத்தார்" என்று வினோத் பாபு என்பவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிவதற்காக மும்பை சர்வதேச விமான நிலைய குடியேற்றத்துறை அலுவலகத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, பதிலளிப்பதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

https://www.bbc.com/tamil/india-46848482

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்ல போனால் தமிழ்நாட்டிலிருப்பவர்கள் வெளிநாடு வந்தால் கூட ஹிந்தி அவர்களுக்கு பேச வருவதில்லை ஆனால் சிங்களவர்கள் இலகுவாகவ்வும் நம்ம ஈழத்தமிழர்களும் கற்றுக்கொள்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உண்மையை சொல்ல போனால் தமிழ்நாட்டிலிருப்பவர்கள் வெளிநாடு வந்தால் கூட ஹிந்தி அவர்களுக்கு பேச வருவதில்லை ஆனால் சிங்களவர்கள் இலகுவாகவ்வும் நம்ம ஈழத்தமிழர்களும் கற்றுக்கொள்கிறார்கள் 

ஹிந்திப் படங்கள் இலங்கையில் வருடக் கணக்காக ஓடி இருக்கு. அன்றைய ஷர்மிளா தாகூர் ,வைஜந்திமாலாவில்  இருந்து  இன்று ஐஸ்வர்யா ராய் வரை  சொல்லும்  வசன கவிதைகளை அப்படியே புரிந்து கொள்ள ஹிந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்படி நமக்கு பைசா பிரயோசனமில்லை ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2019 at 10:53 PM, suvy said:

ஹிந்திப் படங்கள் இலங்கையில் வருடக் கணக்காக ஓடி இருக்கு. அன்றைய ஷர்மிளா தாகூர் ,வைஜந்திமாலாவில்  இருந்து  இன்று ஐஸ்வர்யா ராய் வரை  சொல்லும்  வசன கவிதைகளை அப்படியே புரிந்து கொள்ள ஹிந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்படி நமக்கு பைசா பிரயோசனமில்லை ......!   😁

இப்ப வரைக்கும் கிந்திப்படங்கள் திரையில் ஓடுகிறது சிங்கள மக்கள் பார்க்கிறார்கள் அப்படியே சிங்கள தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிறது  இலங்கையில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.