Jump to content

ரஜினி அஜித்தின் அதிகார வர்க்கம் சிதைக்கப்பட்ட சிகை .. !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம்: சிதைக்கப்பட்ட "சிகை"

1547124482-3737.jpg

நடிகர் கதிர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது  சிகை. இந்த படம்  இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால்  பேட்ட , விஸ்வாசம் என தமிழ்  சினிமாவையே ஆட்டிப்படைக்கும் இரு பெரும் ஜாம்பவான்கள் மோதிக்கொண்டுள்ள இந்த பொங்கலில் தெரிந்தே தேவையில்லாமல் வந்து மாட்டிக்கொண்டது சிகை.

சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மக்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவது உறுதி. அப்படி நல்ல வித்தியாசமான கதையம்சம் கொண்டிருந்தும் அதிகாரவர்க்கத்தால் ஏழை நீதிக்காக வாதாடுவது போன்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது கதிரின் சிகை படத்திற்கு.
 
தியேட்டர் சிக்கல்கள், பட வியாபாரம் என பல விசயங்களை கடந்து படத்தை வாங்கக்கூட யாரும்  முன்வரவில்லை என்பதே உண்மை. அப்படியான ஒரு நிலைக்கு தான் சிகை படம் தள்ளப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன "பரியேறும் பெருமாள்" என்ற படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருந்த கதிருக்கு தற்போது யாரும் கைகொடுக்க முன்வரவில்லை. மாறாக உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ? கொஞ்சம் பொறுத்திருந்து படத்தை ரிலீஸ் செய்தால் என்ன என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள் .
 
இதில் சோகம் என்னவென்றால் சிகை படம் வியாபாரமாகாததால் நேரடியான ஜீ5  செயலியில் வெளிவந்துள்ளது. இருந்தும் வருத்தத்தில் இருக்கும் நடிகர் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தை மக்கள் 29 ரூபாய் செலவழித்து பார்ப்பதற்கு யோசிக்கமாட்டார்கள் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.


https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/rajini-ajith-deceased-sigai-119011000039_1.html

 

 

 

Link to comment
Share on other sites

சிறந்த திரைப்படம் என்று சொல்கிறார்கள். இங்கேயும்  இன்னும் வெளியாகாததால் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. கதிர் சிறந்த நடிகர்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஐபி ரீவியில் (IPTV) வந்திருப்பதால் பார்க்க முடிந்தது. விசர் படம் மட்டுமல்ல, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும்/ திருநங்கைகளுக்கும், பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதரவாக படம் எடுக்கின்றோம் என்ற பெயரில் அவர்களை கிரிமினலாக காட்டும் இன்னொரு படம்.  கதையும் மோசம், அதை விட திரைக்கதை மிக மோசம்.

தனக்கு பிடித்த ஆண் நண்பன் இன்னொரு பெண்ணுடன் உடலுறவு செய்ய விரும்புவதைக் (அப் பெண் திருநங்கை யை பார்த்து பொட்டை என்று அழைக்க கூடிய ஒரு பாலியல் தொழிலாளி)  கண்டவுடன் பெண்மை மிக்க கதிர் அந்த நண்பனையும் அந்த பெண்ணையும் அடித்து கொலை செய்து விடுவார் (அதுவும் தவறுதலாகாவாம்) ..பிறகு தப்பித்தும் விடுவாராம்...

கதிரின் பாத்திரம் திருநங்கையா அல்லது ஓரினச் சேர்க்கையாளரா என்பதில் கூட குழப்பம். சிறு வயதில் இருந்தே பழகும் உற்ற நண்பனுக்கு கூட அவர் பற்றி தெரியாதாம். பாலியல் தொழிலாளர்களை கூட கல்லூரி மாணவிகளாக அல்லது வேறு வேலைக்கு போகின்றவர்களாகவும்  ஆனால் மேலதிக பண தேவைகளுக்காக பாலியல் தொழில் செய்கின்றவர்களாக காட்டுகின்றனர்.

இப்படியான அரை குறை படங்கள் சமூகம் இவர்கள் மேல் வைத்திருக்கும் மோசமான பார்வையை மேலும் மோசமாக்க தான் உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிழலி said:

ஐபி ரீவியில் (IPTV) வந்திருப்பதால் பார்க்க முடிந்தது. விசர் படம் மட்டுமல்ல, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும்/ திருநங்கைகளுக்கும், பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதரவாக படம் எடுக்கின்றோம் என்ற பெயரில் அவர்களை கிரிமினலாக காட்டும் இன்னொரு படம்.  கதையும் மோசம், அதை விட திரைக்கதை மிக மோசம்.

தனக்கு பிடித்த ஆண் நண்பன் இன்னொரு பெண்ணுடன் உடலுறவு செய்ய விரும்புவதைக் (அப் பெண் திருநங்கை யை பார்த்து பொட்டை என்று அழைக்க கூடிய ஒரு பாலியல் தொழிலாளி)  கண்டவுடன் பெண்மை மிக்க கதிர் அந்த நண்பனையும் அந்த பெண்ணையும் அடித்து கொலை செய்து விடுவார் (அதுவும் தவறுதலாகாவாம்) ..பிறகு தப்பித்தும் விடுவாராம்...

கதிரின் பாத்திரம் திருநங்கையா அல்லது ஓரினச் சேர்க்கையாளரா என்பதில் கூட குழப்பம். சிறு வயதில் இருந்தே பழகும் உற்ற நண்பனுக்கு கூட அவர் பற்றி தெரியாதாம். பாலியல் தொழிலாளர்களை கூட கல்லூரி மாணவிகளாக அல்லது வேறு வேலைக்கு போகின்றவர்களாகவும்  ஆனால் மேலதிக பண தேவைகளுக்காக பாலியல் தொழில் செய்கின்றவர்களாக காட்டுகின்றனர்.

இப்படியான அரை குறை படங்கள் சமூகம் இவர்கள் மேல் வைத்திருக்கும் மோசமான பார்வையை மேலும் மோசமாக்க தான் உதவும்.

கதிரின் படம் என்பதால் பார்க்கலாம் என்றிருந்தேன், நல்லகாலம் உங்களின் விமர்சனத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பாடா, பார்க்கத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

16 minutes ago, ragunathan said:

கதிரின் படம் என்பதால் பார்க்கலாம் என்றிருந்தேன், நல்லகாலம் உங்களின் விமர்சனத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பாடா, பார்க்கத் தேவையில்லை.

என் இரண்டு நண்பர்கள் இப் படத்தை பார்த்து விட்டு நல்ல படம் என்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை

நீங்களும் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

இப் படத்தை தயாரித்தவர் கதிரின் அப்பா...படம் ஆரம்பித்து இடைவேளை வரும் வரையில் கதிரை காட்ட மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.