Jump to content

பன்னங்கண்டி பிரதேசத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணி துப்பரவு பணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பன்னங்கண்டி பிரதேசத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணி துப்பரவு பணி

January 12, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_3755.jpg?resize=800%2C600

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் இன்று காலை அங்கஜன் இராமநாதனை தலமையாக கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட பொது இடங்கள் இவ்வாறு துப்பரவு செய்யப்பட்டன. கிளிநொச்சி யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து இளைஞர் யுவதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகம், பாடசாலை கட்டடங்களிற்கு வர்ணம் பூசுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.

இதேவேளை நாளை தென்னிலங்கையிலிருந்து நாமல் ராஜாபக்ச தலமையிலான குழுவினர் குறித்த பகுதிக்து வருகை தந்து குறித்த பாடசாலை கட்டடத்திற்கு வர்ணம் பூசி மாணவர்களிற்கு கையளிக்கப்படவுள்ளதுடன், பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களும் கையளிக்கப்பட உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்துள்ளனர். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் குறித்த ஏற்பாடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

IMG_3754.jpg?resize=800%2C600  IMG_3762.jpg?resize=800%2C600

 

 

http://globaltamilnews.net/2019/109727/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.