Jump to content

சவூதி அரேபிய பெண் ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு கனடா தஞ்சமளித்தது…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி அரேபிய பெண் ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு கனடா தஞ்சமளித்தது…

January 12, 2019

Rahaf-al-Qunun.jpg?resize=800%2C452

தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று பாங்கொக் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சவூதி அரேபிய பெண்ணான 18 வயதான ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு கனடா தஞ்சமளித்துள்ளது. கடந்த வாரயிறுதியில், தாய்லாந்தின் பாங்கொக்கை சென்றடைந்த றஹாப் தனது குடும்பத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது எனத் தெரிவித்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்கு அகதி அந்தஸ்துக் கோரத் திட்டமிட்ட போது தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், றஹாபின் அகதி அந்தஸ்துக் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு கனடா தஞ்சமளித்துள்ளது.

உலக அளவில் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக நிலைப்பாடு எடுப்பதில் கனடா உறுதியாக உள்ளது எனவும் அந்தவகையில்  ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தங்களிடம் கேட்டுக்கொண்டதற்கமைய தாங்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

குவைத்துக்குச் சென்றிருந்த போது, தனது குடும்பத்திடமிருந்து தப்பியோடிய இப்பெண் தனது குடும்பத்திடமிருந்து உடல், உள சித்திரவதைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/109718/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிற்கும், சவூதிக்கும் இப்ப ஆகாதாம்

Link to comment
Share on other sites

கனடாவின் அமைச்சர்  ரஹாப்பை விமான நிலையத்தில் வரவேற்கும் அளவுக்கு சவூதிக்கு கனடா கடுப்பேற்றி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ஏற்பதாக காட்டி, பிரிட்டன், அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியாவில் குடியமரலாம் என்கிறது ஒரு தகவல். காரணம் கொலைப்பயம்.

Link to comment
Share on other sites

வகாபிக்கள் விடவா போகிறார்கள்? புனிய யுத்தம் என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! 

Link to comment
Share on other sites

Photo Credit: Global News
 

சவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை

 
Photo Credit: Global News
Photo Credit: Global News

தாய்லாந்தில் தற்காலிக புகலிடம் கொண்டிருந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்த இளம் பெண் றஹாப் மொகாமட் அல்-கியூனன் இன்று காலை ரொறோண்டோ விமான நிலையத்தில் வந்திறங்கியிருக்கிறார். அவரை விமான நிலையத்தில் சென்று பூங்கொத்துடன் வரவேற்றிருக்கிறார் கனடாவின் வெளி விவகார மந்திரி. “நீண்ட பயணத்தால் அவள் களைத்துப் போயிருக்கிறாள், இப்போதைக்கு எதுவும் பேச முடியாது” என மந்திரி மிகவும் அன்போடு அரவணைத்து அழைத்துப் போவதைப் பார்க்கப் பரவசமாகவிருந்தது. (நாவுறு தீவில் தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட குழந்தை அகதிகள் இக் கண் கொள்ளாக் காட்சியைப் பார்த்துப் பரவசப்பட வசதிகளுண்டோ தெரியவில்லை, அது வேறு விடயம்). “தான் சுகமாகவும் மிக, மிக மகிழ்ச்சியாகவும் தனது புதிய வாழ்விடத்தில் இருக்கிறாள் என்பதைக் கனடியர்களுக்குத் தெரிவிப்பதாக” மந்திரி ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவித்தார்.

றஹாப் கனடாவில் தஞ்சம் கோருவதையோ அல்லது கனடா அவருக்குப் புகலிடம் அளிப்பதையோ நான் மறுக்கவில்லை. ஒரு தமிழனாகவோ அல்லது கனடியனாகவோ அம் மறுப்பு ஒரு தார்மீக நிலைப்பாடெனக் கொள்ளவும் முடியாது. ஆனால் இவ்வளவு ‘படம் காட்டலுடன்’ செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு விடயமல்ல இது.

லிபரல் கட்சி அரசு உலக அரங்கில் பல சமூக மாற்றங்களைத் துணிச்சலுடன் முன்னெடுத்து வருவது வரவேற்கப்படவேண்டியதொன்று. சிரிய அகதிகளைக் கொண்டு வந்ததிலும் சரி, ட்ரம்ப் பின் அகதிகளை வரவேற்றதிலும் சரி, ஆபிரிக்காவில் பெண்கள் கருத்தடை செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற முன்னெடுப்பிற்காக பல மில்லியன் டொலர்களைச் செலவு செய்வதிலும் சரி, கனடிய சுதேசிகளிடம் குடியேறி மூதாதையர் சார்பில் மன்னிப்புக் கேட்டதிலும் சரி, இருபாற் சமநிலை குறித்த நிலைப்பாடுகளிலும் சரி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தில் எனக்கு மிக்க மதிப்புண்டு. ஆனாலும் ஏறத்தாழ இவ்வெல்லா நிலைப்பாடுகளிலும் அவர் நிறவேற்றிய நடவடிக்கைகள் முன்னுரிமை (priority) பெறும் தகமை கொண்டவை அல்ல என்பது எனது வாதம். றஹாப் விடயமும் அப்படித்தான்.

லெபனானிலும், ஜோர்தானிலும் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த சிரிய அகதிகளை விசேட விமானங்களில் ஏற்றி வரும்போது, அவர்களை ‘வழியனுப்பிய’ பல ஆபிரிக்க அகதிகள் “நாங்களும் அகதிகள் தான்” என்ற பதாகைகளுடன் எலும்பும் தோலுகளுமாக ஏக்கப் பார்வைகளுடன் நின்ற அவர்கள் இன்னும் அங்கேயே, அப்படியே தான் நிற்கின்றார்கள். ராஜபக்ச குடும்பத்தினால் பலவந்தமாக அனுப்பப்பட்டு ஆழ் கடல்களில் இறந்தது பாதி இழந்தது மீதியென்று நாவுறு தீவு, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இன்னும் பெயர் தெரியாத் தீவுகளில் எல்லாம் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் அகதிகளின் பின்னணியில் றஹாப் விடயம் முன்னுரிமை பெற முடியாது.

சவூதி அரேபியாவின் கொடுங்கோலாட்சி பற்றிப் புதிய வகுப்புகள் இங்கே தேவையில்லை. ஊடகவியலாளர் ஜமால் கஷ்ஹோகியின் கொலை நமக்கெல்லாம் ஒரு பாடம். றஹாப் விடயம் சவூதி அரசுடனானது இல்லை. அது ஒரு குடும்ப விவகாரம். கனடிய அரசுதான் அதை இப்போது அரச விவகாரமாக்கியிருக்கிறது. அவுஸ்திரேலிய அரசும் இப் பெண்ணுக்குப் புகலிடம் தருவதற்கு ஆயத்தம் செய்திருந்தது. அதற்கு முன்னர் உரிய விசாரணைகள் முற்றுப்பெற வேண்டுமென்று அது கோரியிருந்தது என்கிறார்கள். “A Saudi teen who was granted asylum in Canada after fleeing from her allegedly abusive family has arrived in Toronto” என்று தான் ஊடகங்கள் சொல்கின்றன. இருந்தும் றஹாப் அல்-க்யூனனை ஒரு அகதியாக கனடா ஏற்றுக்கொள்ளும் என்பதைப் பிரதமர் உறுதி செய்து விட்டார்.

தனது தந்தையார் தன்னைத் துஷ்பிரயோகம் செய்தவர்; கட்டாயப் படுத்திக் கல்யாணம் செய்து வைக்க முற்பட்டவர் என்ற குற்றச்சாட்டுகளுடன் – குவைத் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது அப்படியே பாங்கொக் நகருக்குச் சென்று தன்னைத் தானே ஹோட்டல் அறையொன்றினுள் பூட்டிக் கொண்டு சமூக வலைத் தளங்களின் மூலம் செய்தி அனுப்பியதோடு – ஆரம்பித்தது றஹாப்பின் கதை.  (இதைவிட மோசமான கதைகளுடன் கொட்டில்களுக்குள்கூடத் தம்மைப் பூட்டிக்கொள்ள முடியாது நிறையச் சிறுமிகள் அவதிப்படுவது எல்லாம் சமூக வலைகளில் அகப்படுவதில்லை). இப்போது கனடிய அரச வரவேற்புடன் முதலாவது அத்தியாயம் நிறைவு பெற்றிருக்கிறது.

“That is something that we are pleased to do because Canada is a country that understands how important it is to stand up for human rights, to stand up for women’s rights around the world,” என்கிறார் எமது பிரதமர்.  Around the world, not in Canada, உண்மைதான்.

கதையின் இனி வரும் அத்தியாயாங்கள் எப்படி இருக்கப் போகிறதோ தெரியாது. ஏற்கெனவே கனடிய – சவூதி அரேபிய உறவுகள் நல்லாக இல்லை. இப்படியான ஒரு நாட்டுடன் எந்த உறவுமே அவசியமில்லை. ஆனால் நமது பிரதமருக்கு வெனிசுவேலா போன்ற பஞ்சப் பிராணிகள் தாம் பிரதம எதிரிகள்.

றஹாப் தனது மதத்தையும் துறந்திருக்கிறாராம். இதைக் கனடிய இஸ்லாமிய சமூகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது அடுத்த விடயம். இந்த ‘honour killing’ விடயங்கள் கனடிய மண்ணிலேயே நடைபெற்ற வரலாறுகள் உண்டு. றஹாப்பின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியதும் கனடாவின் கடமை.

பொதுத் தேர்தல் வரவிருக்கும் இந்த நேரத்தில் இத்தனை ‘தாரை தப்பட்டைகளுடன்’ செங்கம்பளம் விரிக்காத குறையாக ஒரு அகதியை வரவேற்குமளவுக்கு நமது பிரதமரும், வெளிவிவகார மந்திரியும் இருக்கிறார்கள் என்றால் நமது தென்நாட்டில் ஏன் இவர்கள் அவமானப்படுகிறார்கள் என்று….

இன்னும் நிறைய றஹாப்புகள் தாய்லாந்தை நோக்கிப் படையெடுக்கும் போது (இரண்டாவது அத்தியாயத்தில்)  தொடரும்.

http://marumoli.com/சவூதி-அகதியும்-கனடிய-அரச/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.