Jump to content

ஒற்றையாட்சியை மீண்டும் உறுதிப்படுத்தினார் ரணில்- வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்


Recommended Posts

ஒற்றையாட்சியை மீண்டும் உறுதிப்படுத்தினார் ரணில்- வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்

றிக்கைகளை சேகரித்து சுமந்திரன் வீட்டில் வைத்திருக்க முடியும் என்று கிண்டலாகக் கூறியது ஜே.வி.பி
main photo
புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டது என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவில்லை என்றும் சமஸ்டி ஆட்சி முறை இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகளைத் தயாரிக்கும் நிபுணர்குழுவிடம் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் கையளித்த அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார். ஏலவே நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் ஒன்பதாவது சரத்தில் உள்ள பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை, புதிய அரசியல் யாப்பில் தொடர்ந்தும் இருக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். 
 
புதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கை இரண்டாகப் பிளவுபடப் போகின்றது எனப் பிரச்சாரம் செய்ய முடியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்சவைப் பார்த்துக் கூறினார்.

 

அதேவேளை, புதிய அரசியல் யாப்புக்கான நிபுணர்குழு அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டபோதும் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

மாறாக நிபுணர்குழுவிடம் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் கையளித்த அறிக்கை மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க்வினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வு புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனது உரையின் எந்தவொரு இடத்திலும் கூறவில்லை.

மாறாக அரசியல் கட்சிகள். பொது அமைப்புகள் கையளித்துள்ள அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள நல்ல விடயங்களை மாத்திரம் புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனையில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி. உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா, புதிய அரசியல் யாப்புக்கான வரைபை சமர்பித்து எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்.

எதுவும் நடக்கப்போதில்லை எனவும், வேண்டுமானால் சுமந்திரன் இந்த அறிக்கைகளை சேகரித்து தனது வீட்டில் வைத்திருக்க முடியும் என்றும் அனுரகுமார திஸாநாயக்கா கிண்டலாகக் கூறினார்.

புதிய அரசியல் யாப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதேவேளை, புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகளில் ஒற்றையாட்சி முறை நீ்க்கப்பட்டு ஒருமித்த நாடு என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் அந்த ஒருமித்த நாட்டுக்குள் சமஸ்டி ஆட்சி முறை இருப்பதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறி வருகின்றார்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக நடத்தப்பட்ட விளக்கமளிக்கும் கூட்டத்திலும் சுமந்திரன் அவ்வாறு கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஒற்றையாட்சி மாறாது எனவும் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி முறை எதுவுமே இல்லையெனவும் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பகிரங்கமாவே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=690&fbclid=IwAR2skP87SB9C9ksapCbJMH_aHk8pPrueNry3BJSHgR_J7RjxE70O7aOE-Dg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.