Jump to content

Recommended Posts

வழக்கம் போல நல்ல கதை / திரைக்கதை, சிறந்த நடிப்பு இவற்றை மட்டுமே எதிர்பார்த்து ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா உள்ளடங்கலான நட்சத்திரங்களின் அணிவகுப்பிலும், பீட்ஸா (Pizza), இறைவி போன்ற வித்தியாசமான திரைப்படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் உருவான 'பேட்ட' திரைப்படத்தைக் காணச்சென்றேன்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் பரபரப்பான, மின்னல் வெட்டினால் போன்ற அறிமுகக் காட்சியுடன் ஆரம்பித்த திரைப்படம், ரஜினியின் வழமையான heroism, style, நகைச்சுவை நிறைந்த கலகலப்பான காட்சிகள், ஆடல் பாடல்களுடன் தொடர்ந்தது. இடைவேளைக்குச் சற்று முன்னான சண்டைக்காட்சி வரை இது தான் கதை என நாம் ஒன்றை ஊகிக்கும்போது, அக்காட்சியில் கதையின் போக்கு இன்னொரு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்துவந்த ஒரு flashback மற்றும் சில உணர்வுபூர்வமான (sentimental) காட்சிகளால் சிறிது தொய்வு போன்ற உணர்வைக் கொடுத்தாலும் படத்தின் மையக்கருவை இக்காட்சிகள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டின. பின்னர் வந்த திருப்பங்களும், ரஜினியின் styleம், actionம் நிறைந்த விறுவிறுப்பான காட்சிகள் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி போன்றோரின் திரைப் பிரசன்னத்துடன் மேலும் களைகட்டின.

ஹாஸ்டல் வார்டனாக ரஜினி அறிமுகமான காட்சியில் மாணவர்களை கட்டுக்குள் கொண்டுவரும் அந்த authority அவரது வார்த்தைகளிலும், உடல் மொழியிலும் நன்றாகவே வெளிப்படுத்தப்பட்டு, நமக்கும் படம் மீதான ஈர்ப்பை உருவாக்கியது. மேலும், அவரது முத்திரையான ஸ்டைல் மற்றும் நகைச்சுவை தொட்டுக்கொள்வதற்கு ஊறுகாய் போலில்லாமல், மாறாக கறியுடன் சேர்ந்த கறிவேப்பிலை போல ஆங்காங்கே அழகாக அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தது. ஸ்டைல் மன்னனாக மட்டுமன்றி ஓர் இயல்பான நடிகனாகப் பல காட்சிகளில் அவர் தன்னை நிரூபித்துள்ளார். இதற்கு சிம்ரனுடனான மற்றும் தான் அக்கறை எடுக்கும் மாணவனுடனான காட்சிகளும், பின்னர் வந்த விஜய் சேதுபதியுடனான சில உணர்வுபூர்வமான காட்சிகளும் சான்று. ரஜினி 'கற்ற வித்தை எல்லாம் மொத்தமாக' கொட்டுவது 'பேட்ட'யில் என உறுதியாகக் கூறலாம். இளமையான ரஜினியாகவும் இத்திரைப்படத்தில் கண்டோம்; எனினும் முதிர்ந்த ஹாஸ்டல் வார்டன் ரஜினி தான் மனதைக் கவர்கிறார். ❤️

வில்லனாக வரும் விஜய் சேதுபதியின் நடிப்புக்குத் தீனி போடும் படமல்ல இது. எனினும் ரஜினியுடன் அவர் திரையைப் பகிர்ந்துகொள்ளும் தருணங்கள், பல ஆண்டுகளுக்கு ஒரு முறை இரு கிரகங்களை ஒன்றாய் வானில் பார்க்கும் பரவசம். வைத்த கண் வாங்காமல் பார்த்தேன்; மற்றபடி அவருக்குத் தரப்பட்ட வேலையை நிறைவாகச் செய்துள்ளார். ஆர்ப்பாட்டமில்லாத வில்லனாக நவாஸுதீன் சித்திக் செய்யும் குள்ளநரித்தனங்கள் அவர் மீதான வெறுப்பைத் தூண்டினாலும் இறுதியில் முதுமையில் நலிந்து சற்றே பரிதாபப்படத் தான் வைக்கிறார்.

இன்னமும் தோற்றத்தில் 90களில் இருந்தது போலவே இருக்கும் சிம்ரன் ரஜினியுடன் தோன்றும் காட்சிகள் கவிதையான தருணங்கள். இவரைப் போலவே சில காட்சிகளில் வந்தாலும் சசிகுமார், பாபி சிம்ஹா, முனிஸ்கான், இயக்குனர் உதிரிப்பூக்கள் மகேந்திரன், ஆடுகளம் நரேன், மாளவிகா மோஹனன் ஆகியோரும் மனதில் நிறைந்தனர். திரிஷாவுக்கு சொல்லும்படியான காட்சிகள் இல்லை; நமக்கும் அதைப்பற்றி கவலை இல்லை. ஏன் அவருக்குமே இல்லை தானே! (உங்களுக்கு ஏமாற்றமாக இருந்தால் '96'ஐ பார்த்து நிம்மதியடையவும்!) 🤣

அனிருத்தின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்துக்கேற்ப பரபரப்பையும், பயங்கரத்தையும், ஆங்காங்கே விழாக் கொண்டாட்டம் போன்ற குதூகல உணர்வையும் தருகின்றது. பாடல்கள் காட்சியாக்கப்பட்ட விதம் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். ரஜினி ரசிகர்களுக்கு 'மரண மாஸ்' பாடல் மரண மாஸாக இருந்தாலும், எனக்குத் துள்ளவைக்கும் 'உல்லாலா' பாடல் 'கில்லி' பட 'கொக்கரக் கொக்கரக்கோ' பாடற் காட்சியின் உணர்வைத் தருகிறது.  'இளமை திரும்புதே' பாடலில் ரஜினியின் மென்மையான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 'ஜித்து தீம்' விஜய் சேதுபதியின் வில்லத்தனமான காட்சிகளுக்குக் கட்டியம் கூறுகின்றது. 🎶

படத்தின் குறைகளாக வழமை போல நாம் முறையிடும் சண்டைக்காட்சிகள் தான். ரஜினி ஆர்மியை (ரசிகர்களை) குஷிப்படுத்த அவர் One-Man-Army ஆகவே இருக்க வேண்டிய நிலை (படத்தின் பிற்பாதியில் வரும் சில காட்சிகள் விதிவிலக்கு). (இந்தக் குறை ரஜினியின் 'ஸ்ரீ ராகவேந்திரா' திரைப்படத்தில் மட்டுமே இல்லை!) மேலும் சில குறைகளை ரஜினியின் பிரசன்னமும் (presentation) , விறுவிறுப்பான காட்சிகளும் மறக்கடிக்கச் செய்தன.

அப்ப படம் எப்படி?; ரஜினி ரசிகர்களின் ''பாட்ஷா'வுக்கு இணையான ஒரு தலைவர் படம் நீண்ட காலமாக இல்லையே' என்ற குறையை 'பேட்ட' மூலம் கார்த்திக் சுப்புராஜ் நிறைவு செய்திருக்கிறார் என்றே கூற வேண்டும். ரஜினி படங்களின் விதிமுறைகளைப் புரிந்துகொண்ட ஏனையோருக்கும் இது சிறந்த ஒரு பொழுதுபோக்கான திரைப்படமாகும்; நட்சத்திரப் பட்டாளத்துக்காகவே ஒரு முறை பார்க்கலாம். 👏👏👏👍

'பேட்ட' - இது ரஜினியின் கோட்டை / வேட்டை! 

 😃😁😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.