Jump to content

பேசும் ஆடைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேசும் ஆடைகள்

இந்திய கதைசொல்லும் மரபில், மாய யதார்த்தத்தின் உச்சம் என விக்கிரமாதித்தன் கதையைச் சொல்லலாம். வேதாளம் கேட்கிற கதைக்கெல்லாம் பதில் சொல்லி வேதாளத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த பின்னர், அதனோடு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் விசித்திரங்களை அறியப் பயணப்படுவான். அப்படி ஒரு கதையில், பேசாமடந்தை என்கிற ஒரு வார்த்தைகூடப் பேசாத பேரழகியைjf பேசவைக்கப் போவான்.

அவளைப் பேசவைக்க, வேதாளத்தை ஒவ்வொரு பொருளாக ஏவிவிட்டு பொருட்கள் பேசுவதுபோல் செய்வான். முதலில் இருவருக்கும் இடையேயான திரை பேசும். அவள் திரையை அறுத்து தரையில் இட்டு பேசவிடுவாள். இருட்டில் அமர்ந்திருக்கும் அவளைப் பார்க்க விளக்குத் திரியைப் பேசவைப்பான். அவள் விளக்கைத் தூண்டி விடுவாள். கடைசியில் அவள் அணிந்திருக்கும் மேலாடையைப் பேச வைப்பாள். அவள் மேலாடையையும்... சரி விடுங்கள். அதன்பின்னால் என்ன ஆகியிருக்கும் என்று உங்களுக்கே தெரியும். ஆனால் ஆடைகள் பேசுமா? பேச்சு என்றால் மேடைப்பேச்சோ, குசலம் விசாரிக்கிற பேச்சோ அல்ல? தகவல் தொடர்பு. ஆடைகளோடு தொழில்நுட்பத்தின் உதவியோடு நாம் தொடர்புகொள்ள முடியுமா? இந்தத் தேவைக்கு ஒரு காரணம் இருக்கிறது.

இன்றைக்கு நாம் wearbles என்றழைக்கப்படும் உடலில் அணியும் மின்னணு உபகரணங்கள் அனைத்துமே தனியாக அணிய வேண்டியவை. இவ்வொன்றையும் தனித்தனியே அணிந்துகொள்வது என்பது சற்றே கடுப்படிக்கும் செயல். மேலும், வெகு சில சாதனங்களைத் தவிர மீதியெல்லாம் தண்ணீருக்குள் போனால் பிராணனை விட்டுவிட்டும். அதனால் வெறுமனே துணிக்குள் மின்னணு உபகரணங்களை வைத்துத் தைத்தல் என்பது வேலைக்கு ஆகாது.

ஆடைகளில் இழையோடு இழையாய், நூலோடு நூலாய் மின்னணு உபகரணங்கள் இருந்து, அவை நீர் பட்டாலும் ஒன்று ஆகாது என்று இருந்தால் எப்படி இருக்கும்.

அப்படிப்பட்ட ஆடைகள் சாத்தியமே என்று நிரூபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். கண்ணாடி இழைகளைத் துணிகளின் ஊடே கொடுத்து நெய்துவிடுவது. கண்ணாடி இழை என்கிற அந்தத் தொழில்நுட்பம் நம்மைச் சுற்றி மிகப்பெரும் வலையாகப் படர்ந்திருக்கிறது. தரைக்கடியில் பதிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் முதல், இன்றைய அதிவேக ஃபைபர்நெட் இணைய இணைப்புகள் என்று எல்லாம் கண்ணாடி இழைகள்தான். முழு அகப் பிரதிபலிப்பு (Total internal reflection) என்கிற மிக மிகச் சுவாரசியமான ஒரு இயற்பியல் கோட்பாடு மூலம் அவை செயல்படுகின்றன.

1.jpg

கம்பி வழித் தகவல் பரிமாற்றத்துடன் கண்ணாடி இழை வழித் தகவல் பரிமாற்றத்தை ஒப்பிட்டால், பின்னதில் பல வசதிகள் உண்டு. மிக முக்கியமானது வேகம். ஒளியின் திசைவேகமான நொடிக்கு மூன்று லட்சம் கி.மீ. என்பது அதன் உச்ச வரம்பு. போதுமே அதற்கு மேல் என்ன வேகம் வேண்டிக்கிடக்கிறது. உண்மையில், இணையம் என்றவுடன் செயற்கைக்கோள்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், உலகின் பெரும்பான்மை இணையத் தகவல் தொடர்பு கடலடி கண்ணாடி இழைக் கம்பிகளின் வழியேதான் நடைபெறுகிறது. கடலடியில் இவற்றைப் பதிக்க, பழுது நீக்க என தனிக் கப்பல்களே உண்டு.

இந்தக் கண்ணாடி இழைக் கம்பிகளை அப்படியே நூல் நூற்பதுபோலத் தயாரித்துவிட முடியாது. அதன் தயாரிப்பு முறை சற்றே வித்தியாசமானது. ஒரு விரல் உள்ளே போகக்கூடிய அளவு கண்ணாடிக் குழாய்களை முதலில் தயாரிப்பார்கள். இதற்குப் ப்ரீஃபார்ம் (preform) என்று பெயர். இந்தப் ப்ரீஃபார்மை நெட்டுக்குத்தாகத் தொங்கவிட்டு, முனையில் இருந்து ஒரு சாண் தள்ளி, அப்படியே நெருப்பைக் காட்டி நெகிழவைப்பார்கள். ஒரு சாண் கண்ணாடியில் எடை நெகிழ்ந்த பகுதியில் இருக்கும் கண்ணாடியை அப்படியே மெல்லிய கண்ணாடி இழையாக இழுக்கும். மீதமிருக்கும் குழாயையும் இப்படி வெப்பத்தால் நெகிழ்த்தி இழையாக்கிவிடுவார்கள். இப்படித்தான் கண்ணாடி இழைகள் தயாரிக்கப்படுகின்றன. வெறும் கண்ணாடியில் ஆனதால், இவை நீர் புகாதவையாக இருக்கின்றன.

2.jpg

இந்தப் ப்ரீஃபார்மில் விரல் புகும் அளவு இடம் இருக்கும்போதே மிக மெல்லிய தாமிரக் கம்பிகளையும், நுண்ணிய எல்.ஈ.டி. விளக்குகள் மற்றும் ஒளியை உணரக்கூடிய கருவிகள் (light detectors) ஆகியவற்றைப் பதித்து இழையாக மாற்றும்போது கண்ணாடிக்குள் பொதித்துவிட முடியும். இந்த இழையைத்தான் விஞ்ஞானிகள் சோதனை முறையில் தயாரித்து வெற்றியடைந்திருக்கிறார்கள்.

இந்த இழைகளை விசைத்தறியில் கொடுத்து ஆடை இழைகளோடு நெய்வதற்கும் வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படித் தயாரித்த ஒரு ஆடையை மீன் தொட்டியில் இருக்கும் நீரில் போட்டு, இழைக்குள் இருக்கும் ஒளி உணரும் கருவிக்கு சமிக்ஞைகள் அனுப்பியிருக்கிறார்கள். தண்ணீருக்குள் இருந்தாலும் கருவி தரமாக வேலை செய்திருக்கிறது. பத்து முறை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தெடுத்த பின்பும் கச்சிதமாக வேலை செய்திருக்கிறது. நம்மூரின் அடித்துத் துவைக்கும் முறைக்கு ஒத்துவருமா என்று தனியாகச் சோதனை நடத்த வேண்டும்.

இதன்மூலம் உடலின் வெப்பநிலை, கொஞ்சம் முயன்றால் ரத்தச் சர்க்கரை அளவு ஆகியவற்றை ஒளி மூலமாகக் கண்காணித்து தகவல்கள் அனுப்புமாறு செய்ய முடியும். சங்கேத சமிக்ஞைகளை அனுப்புவதற்காக, ராணுவ வீரர்களின் உடையில் இந்தக் கருவிகளைப் பொருத்தி அனுப்பி தகவல்களைப் பெற முடியும். செய்முறை சாத்தியமானால், பயன்பாடுகள் பலவிதம். இந்தத் தொழில்நுட்பம் வெகு விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

 

https://www.dinamani.com/junction/aachariyamoottum-ariviyal/2018/aug/25/பேசும்-ஆடைகள்-2987417.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல தகவல்...... வரட்டும் ஒன்று வாங்கத்தான் இருக்கு......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, suvy said:

இது ஒரு நல்ல தகவல்...... வரட்டும் ஒன்று வாங்கத்தான் இருக்கு......!  😁

வாங்கி போட்டு படம் ஒன்று எடுத்துக்காட்டவும்:27_sunglasses: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாங்கி போட்டு படம் ஒன்று எடுத்துக்காட்டவும்:27_sunglasses: 

படம் என்ன படம் தனி , 24 மணித்தியாலமும் நீங்கள் ஆடையுடன் பேசிக்கொண்டிருப்பதற்கு வசதிகளும் செய்து தரப்படும்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

படம் என்ன படம் தனி , 24 மணித்தியாலமும் நீங்கள் ஆடையுடன் பேசிக்கொண்டிருப்பதற்கு வசதிகளும் செய்து தரப்படும்......!  😁

அது வேறா ம்ம் இப்பெல்லாம் கல்யாணம் கட்டுனவுடன் கணவன் பேசுவதில்லையாம் அந்த ஆடையுடனாவது பேசிக்கொள்ளலாமே அடிக்காது துன்புறுத்தாது திட்டாது கோவித்துக்கொள்ளாது  சொன்ன சொல்லுக்கு பதில் மட்டுமாவது சொல்லும் போல:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

இது ஒரு நல்ல தகவல்...... வரட்டும் ஒன்று வாங்கத்தான் இருக்கு......!  😁

உங்கினேக்கை கண்டால் XL  சைஸ்சிலை ஒண்டு வாங்கி பார்சல் பண்ணி அனுப்பிவிடவும்....காசு உங்கை வரேக்கை தல்லாம் :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.