Jump to content

தமிழக பகுதி கால்வாயையும் முடித்து கொடுக்க சாய்பாபா உறுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக பகுதி கால்வாயையும் முடித்து கொடுக்க சாய்பாபா உறுதி *

சென்னை மக்களுக்கு புத்தாண்டு பரிசு!

புட்டபர்த்தி : தெலுங்கு கங்கை திட்டத்தில் தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி வரையிலான 29 கி.மீ., கால்வாய் அமைத்துக் கொடுக்க சாய்பாபா உறுதி கொடுத்துள்ளார்.புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், நேற்று நடந்த தமிழ் வருட பிறப்பு விழாவில் சாய்பாபா பேசினார். அப்போது, இத்தகவலை தெரிவித்தார்.

தெலுங்கு கங்கை திட்டத்தில், ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணை முதல், தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வரை ரூ.200 கோடி மதிப்பில், ஏற்கனவே சத்யசாய் மத்திய டிரஸ்ட் மூலம் கால்வாய் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீரோ பாயின்ட் முதல், சென்னை மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் பூண்டி, ரெட்ஹில்ஸ் ஏரி வரை தண்ணீர் வந்து சேரும் வழியில் தற்போது 40 சதவீத இழப்பு ஏற்படுகிறது.கடந்த ஜனவரி 26ம் தேதி சென்னை சிட்டிசன் கான்க்ளேவ் சார்பில், கால்வாய் அமைத்துக் கொடுத்ததற்கு சத்ய சாய்பாபாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் உள்பட 2 முதல்வர்கள், 2 கவர்னர்கள் மற்றும் 3 மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, தெலுங்கு கங்கை திட்டத்தில் மீதமுள்ள துõரத்தை முடித்துக் கொடுத்து, சேதாரமின்றி தண்ணீர் வந்து சேர உதவும்படி சாய்பாபாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று புட்டபர்த்தியில் நடந்த தமிழ் வருட பிறப்பு விழாவில் தமிழக சத்ய சாய்பாபா டிரஸ்ட் கன்வீனர் ஜி.கே.ராமன் பேசும்போது, "ஜீரோ பாயின்ட் முதல் பாண்டி வரையிலான கால்வாயை சாய்பாபா சீரமைத்து சென்னை மக்களுக்கு உதவவேண்டும்' என்றார்.இதன்பின் பேசிய சாய்பாபா கூறியது:

சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், தெலுங்கு கங்கை திட்டத்தை "எல் அண்டு டி' நிறுவனம் மூலம் நிறைவேற்றிக் கொடுத்தேன். இப்போது தமிழக பகுதியையும் முடித்துக் கொடுக்க உறுதி பூண்டுள்ளேன். விரைவில் இன்ஜினியர்களை அனுப்பி திட்டத்தை துவக்க ஏற்பாடு செய்வேன்.

இதற்கு ரூ.50 கோடி செலவாகும். சென்னை மக்கள் குடி தண்ணீர் பிரச்னையை தீர்க்க எவ்வளவு கோடி செலவானாலும் கொடுப்பேன். இனி தண்ணீருக்காக யாரையும் எதிர்பார்க்க வேண்டாம். கடவுளை வேண்டினால் போதும். இன்று புது வருடம் பிறக்கிறது. இந்த புது வருடத்தின் பெயர் சர்வஜித். சர்வஜித் என்றால் வெற்றி என்று அர்த்தம். விவசாயம், கல்வி என்று அனைத்து துறைகளிலும் மக்கள் வெற்றி பெற வேண்டும். இந்த ஆண்டு வெற்றி வருடம். தெலுங்கு கங்கை திட்டத்தையும் வெற்றிகரமாக முடிப்பேன். குடிதண்ணீருக்காக அரசுகள் சண்டை போடுகின்றன. குடிதண்ணீர் கடவுளுடையது. யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அது யாருடைய சொத்தும் அல்ல. கடவுளின் சொத்து. அதனால் கடவுள் நிறைவேற்றி வைக்கிறார். சத்ய மூர்த்தி சாகர் (பூண்டி) கொடுக்காத தண்ணீரை சாய்பாபா கொடுப்பார். இனி சத்யமூர்த்தி சாகர் முழுமையாக நிறைந்து வழியும். சென்னை மக்களுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். சென்னை பிற மாநிலங்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் பெறும்.

நேற்று தமிழக மக்களுக்கு புத்தாண்டு. இன்று மலையாளிகளுக்கு புது வருடம். இந்நாளில் எல்லா வெற்றியையும் பெற்று சந்தோஷம், அமைதி, இறையருள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

நிரம்பி வழிந்த "குல்வந்த்' ஹாலில் மக்கள் கரகோஷத்துக்கு இடையே சாய்பாபா இவ்வாறு பேசினார்.

முன்னதாக, சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் மற்றும் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன், இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

மூலம் - தினமலர்

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி, சுவாமியார்கள் இப்படி பொது சேவைகள் செய்து, பொதுமக்களின் அவலங்களைப் போக்க முன்வருதல் வரவேற்கத்தக்கது. :unsure:

Link to comment
Share on other sites

சாய்பாபா தனது சக்தி மூலம் கர்நாடக தமிழக பிரச்சனைகளை தீர்த்து தமிழகத்திற்கு எப்போதோ தண்ணீரைக் கொண்டு வந்திருக்கலாம். இப்படி 'சொந்தப்' பணத்தைச் செலவழித்து தண்ணி காட்டியிருக்கத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

சாய்பாபா தனது சக்தி மூலம் கர்நாடக தமிழக பிரச்சனைகளை தீர்த்து தமிழகத்திற்கு எப்போதோ தண்ணீரைக் கொண்டு வந்திருக்கலாம். இப்படி 'சொந்தப்' பணத்தைச் செலவழித்து தண்ணி காட்டியிருக்கத் தேவையில்லை.

இது கலிகாலமுங்கோ

Link to comment
Share on other sites

செய்தாலும் ஒன்டு சொல்றிங்க செய்யாட்டியும் ஒன்டு சொல்றிங்க.. தமிழன்ட இந்து பழக்கத்த முதல விட்டு தொலைங்கப்பா...எத்தனையோ கோடி மதிப்புள்ள இந்த திட்டங்கள செயல் படுத்தும் போது அத பாரட்டா விட்டாலும் நொட்டு நொடுக்கு சொல்லாதிங்க...

Link to comment
Share on other sites

செய்தாலும் ஒன்டு சொல்றிங்க செய்யாட்டியும் ஒன்டு சொல்றிங்க.. தமிழன்ட இந்து பழக்கத்த முதல விட்டு தொலைங்கப்பா...எத்தனையோ கோடி மதிப்புள்ள இந்த திட்டங்கள செயல் படுத்தும் போது அத பாரட்டா விட்டாலும் நொட்டு நொடுக்கு சொல்லாதிங்க...

ஆகா சுண்டு டென்சன் ஆகிட்டார்,எங்கிருந்து தான் வாறார் என்று தெறியவில்லை பட் கரெக்டா வந்து த்னது உரையை ஆற்றிவிட்டு போறார்

சுண்டு சாய்பாபா ஆள் லீசா அது தான் டென்சன்

:lol::lol:

Link to comment
Share on other sites

சாய்பாபா தனது சக்தி மூலம் கர்நாடக தமிழக பிரச்சனைகளை தீர்த்து தமிழகத்திற்கு எப்போதோ தண்ணீரைக் கொண்டு வந்திருக்கலாம். இப்படி 'சொந்தப்' பணத்தைச் செலவழித்து தண்ணி காட்டியிருக்கத் தேவையில்லை.

நல்லது நடந்தால் பாராட்டுங்கள்.. பாரட்ட மனமில்லையென்றால் மெளனமாயிருங்கள்.

சகோதரர்களே..

:lol:

Link to comment
Share on other sites

மக்கள் கொடுத்த பணத்தில் மேர்ஸிடஸ் கார்கள், பங்களாக்கள், உல்லாச வாழ்க்கை போன்ற செலவுகள் போக மீதியில் கொஞ்சம் விளம்பரத்துக்காக செய்கிறார் - மற்றைய சாமியார்களுக்கு போட்டியாக. பாராட்டு எதற்கு ?

பணம் செலவழிக்காமல் ஈழத் தமிழர் பிரச்சனையையும் தீர்க்க முடியுமா என்று இவரிடம் கேளுங்கள்.

Link to comment
Share on other sites

தூங்காமல் கொள்லாமல் உழைத்த காசு பாருங்கோ. மதத்தை வித்து உழைத்த காசு. பாவவிமோசனத்துக்கு கொஞ்ஞம் கொடுக்கிறார்.

Link to comment
Share on other sites

please,,,,,

நல்லது நடந்தால் பாராட்டுங்கள்.. :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் முழுக்க சுரண்டின பிச்சை காசுகள்.. இப்படியாவது புண்ணியம் தேடுவோம் என்றுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் கொடுத்த பணத்தில் மேர்ஸிடஸ் கார்கள், பங்களாக்கள், உல்லாச வாழ்க்கை போன்ற செலவுகள் போக மீதியில் கொஞ்சம் விளம்பரத்துக்காக செய்கிறார் - மற்றைய சாமியார்களுக்கு போட்டியாக. பாராட்டு எதற்கு ?

பணம் செலவழிக்காமல் ஈழத் தமிழர் பிரச்சனையையும் தீர்க்க முடியுமா என்று இவரிடம் கேளுங்கள்.

லீசான்

பணத்தைக் கொடுக்கின்றவனே கவலைப்படவில்லை. உமக்கு முத்திய கதைகள் தேவையா? பாபா எப்படி வாழ்ந்தாலும் உங்களுக்கு என்ன? அது பணங்கொடுப்பவர்கள், கொண்டுள்ள உரிமை. ஏதோ நீர் மூட்டை தூக்கி உழைத்த பணத்தில் தான் அவர் வாழ்வது போலக் கதைக்கின்றீர்.

திரேசாவைப் பற்றிப் பெருமையாகக் கதைத்தால் அது விளம்பரமா? அவருக்கு எங்கிருந்து இத்தனை பணம் வந்தது? அவர் வாழ்ந்த வாழ்க்கை குறித்து யாராவது சந்தேகப்பட்டார்களா?

உங்களால் ஒரு மண்ணும் புடுங்கத் தெரியாது. ஆனால் செய்கின்றவர்களில் புரணி காண்பதில் அப்படி ஒரு இன்பம். ஏன் நீங்கள் அடித்த கடன்அட்டையில் மக்களுக்கு கொடுத்து உதவுவது தானே?

பணத்துக்கு கடவுளை விற்பார்கள். வேணுமென்றால் அவர்களிடம் போய்க் கை ஏந்திக் கொண்டு நில்லுங்கள். இப்படிப்பட்டவர்கள் தானே உங்களின் மதவியாபாரத்துக்கு தடையாக நிற்கின்றார்கள். அது தான் உடனே சுள் என்று கோபம் வருகின்றது போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லீசான்

பணத்தைக் கொடுக்கின்றவனே கவலைப்படவில்லை. உமக்கு முத்திய கதைகள் தேவையா? பாபா எப்படி வாழ்ந்தாலும் உங்களுக்கு என்ன? அது பணங்கொடுப்பவர்கள், கொண்டுள்ள உரிமை. ஏதோ நீர் மூட்டை தூக்கி உழைத்த பணத்தில் தான் அவர் வாழ்வது போலக் கதைக்கின்றீர்.

திரேசாவைப் பற்றிப் பெருமையாகக் கதைத்தால் அது விளம்பரமா? அவருக்கு எங்கிருந்து இத்தனை பணம் வந்தது? அவர் வாழ்ந்த வாழ்க்கை குறித்து யாராவது சந்தேகப்பட்டார்களா?

உங்களால் ஒரு மண்ணும் புடுங்கத் தெரியாது. ஆனால் செய்கின்றவர்களில் புரணி காண்பதில் அப்படி ஒரு இன்பம். ஏன் நீங்கள் அடித்த கடன்அட்டையில் மக்களுக்கு கொடுத்து உதவுவது தானே?

பணத்துக்கு கடவுளை விற்பார்கள். வேணுமென்றால் அவர்களிடம் போய்க் கை ஏந்திக் கொண்டு நில்லுங்கள். இப்படிப்பட்டவர்கள் தானே உங்களின் மதவியாபாரத்துக்கு தடையாக நிற்கின்றார்கள். அது தான் உடனே சுள் என்று கோபம் வருகின்றது போல.

சிகரட் குடிப்பதால் கான்சர் வருகிறது. இதனால் சிகரட் கொம்பனிகள் கான்சர் ரிசேச் இற்கு (ஆராட்சி) பெருமளவு பணத்தை தருகின்றன. மனச்சாட்சிக்கக இதை அவை செய்கின்றன (ethics).

மக்டொனால்ட் உணவு உண்பதால் உடல் நலம் கெடுகின்றது. இதனால் அவை விளையாட்டுத் துறைக்கு பல உதவிகள் செய்கின்றன .

இந்தியா முழுவதும் மூட நம்பிக்கையை விதைத்து அதை கோடி கோடியாக அறுவடை செய்யும் பாபா போன்ற பாதகர்கள் அந்த மூட நம்பிக்கையிலிருந்து மக்களை விடுவிக்க என்ன செய்தார்கள்?. இன்னும் இன்னும் தங்களது பிசினசை பெருக்கும் வழிதான் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பண்டிதர்

இங்கே லீசன் என்பவர் கதைத்த விதம் ஒரு குரோதம் கொண்ட, ஒரு கருத்தாக இருந்தமையால் தான் பதிலளித்தேன். ஏற்கனவே தமிழ்நாடு வந்து போன சம்பவத்திலும், அது குறித்து இவர் இவ்வாறன வன்புணர்ச்சியோடு கருத்தெழுதியிருந்தார்.

இப்போது கூட, சாய்பாபா தமிழ்நாட்டு கால்வாய்த் திட்டத்துக்கு உதவுவது என்பது கூட, ஒரு நல்ல விடயம் தானே. அவர்் உதவாமல் இருந்திருந்தால் இப்படி திட்டியிருப்பாரா? ஆக,பாபா உதவுகின்றார் என்பது இவருக்கு இடைஞ்சலாக இருக்கின்றது என்பது தானே அர்த்தம்.

நிற்க, அவர் வளர்ப்பது மூட நம்பிக்கையா இல்லையா என்று முடிவெடுக்கின்ற உரிமை உங்களிடம் கிடையாது. சொல்லப் போனால் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியும், ஜனாதிபதியுமாகிய அப்துல்கலாம் கூட, இந்திய அனைத்து தலைவர்களும் கூட அவரிடம் ஆசி பெற்றிருக்கின்றனர். அது அவர் கொண்டிருந்த சக்தி என்பதல்ல.

மக்களை ஒரு வழிப்படுத்துகின்ற சக்தி அது. திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிக் கதவு திறந்தார் என்றோ, அல்லது யேசுநாதர் அப்பத்தைத் தருவித்தார் என்பதல்ல முக்கியம். மக்களின் மனங்களில் உள்ள குறைகளையும், சோகங்களையும் போக்க வழி செய்கின்றனர் என்பதே முக்கியம். அது ஏமாற்றுவேலையாகக் கூட இருக்கலாம்.

உங்களின் வீட்டில் ஒரு சோகம் நடக்கின்றது. 2, 3 நாள் அழுவீர்கள். ஆனால், அதற்காக வருடம் முழுக்க அழுவீர்களா? இல்லையே. அவ்வாறு தான் மனிதனின் 70 வருட சராசரி வாழ்க்கையில் சோகங்கள் துன்பங்கள், விரக்திகள் ஏற்படுகின்ற போது, நிச்சயம் அவனின் மனதுக்கு சாந்தி தருபவன இவ்வாறன ஒன்றே.

மனிதனின் வாழ்க்கையில் சோகம், துக்கம், விரக்தி, வெறுப்பு என்று வருகின்ற சந்தர்ப்பங்கள் இருக்கின்ற வரை மதம் என்பதோ, மதப்பற்று என்பதோ என்றுமே மாறப்போவதில்லை. இன்றைக்கு புலத்தில் இருந்து சுகமாக வாழ்வதால் நாங்கள் கடவுள் பொய் என்றும், நாத்திகம் கதைத்தும் உலாவுகின்றோம். ஆனால், இதே நாங்கள் குண்டுமழையின் மத்தியில் வாழ்ந்திருந்தால் எதிரி குண்டு தலையில் போடக் கூடாது என்று கந்தபுராணத்தையும், பைபிளையும் நிமிடத்துக்கு ஒரு தடவை படித்தும், அதைத் தலையில் மீதும் வைத்தும் படுத்திருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு புலத்தில் இருந்து சுகமாக வாழ்வதால் நாங்கள் கடவுள் பொய் என்றும், நாத்திகம் கதைத்தும் உலாவுகின்றோம்.

புலத்தில் எங்களைவிட சுகமாக வாழும் மேற்கத்தையர் எங்களைவிட (தாயகத்திலும் சரி புலத்திலும் சரி) அபரிமிதமான கடவுள்பக்தி கொண்டிருக்கின்றனர். பாப்பரசரை தரிசிக்க பல மில்லியன் கணக்கான மக்கள் கூடுகிறார்கள். ஆனால் அவர்கள் மூடநம்பிக்கைகளற்ற விதத்திலேயே சமயத்தைப் பின்பற்றுகிறார்கள்.

அளவாகப்பாவித்தால் மது கூட எமது கவலைகளைப் போக்கவல்லது. அதற்காக மது அருந்துவதை ஊக்குவிக்கலாமா?

நிற்க, அவர் வளர்ப்பது மூட நம்பிக்கையா இல்லையா என்று முடிவெடுக்கின்ற உரிமை உங்களிடம் கிடையாது.

நானும் விரும்பினால் சாயிபாபாவின் மதத்தைப் பின்பற்றமுடியும் என்றால் எனக்கு அதை விமர்சிக்கவும் தகுதியுண்டு தானே?

இனி, சிந்திக்கின்ற ஒவ்வொரு மக்களும் இதே கேள்வியைக் கேட்கத் தொடங்கியிருப்பது கண்கூடு. மக்களின் கல்வியறிவு மட்டம் உயர உயர இதேபோல கேள்விகேட்பவர்களின் விகிதமும் அதிகரிக்கும். ஒருநாள் சாயிபாபாவின் கண்மூடித்தனமான பக்தர்கள் கண்காணாத அளவிலான சிறுபான்மையினராக மட்டும் இருப்பர்.

சாயிபாபா ஒரு சிறந்த ஞானியாக இருக்கலாம். ஆனால் அவர் காலத்திற்கேற்ப தமது போதனை வழிமுறைகளை மாற்றாதவரை இதே போன்ற விமர்சனங்கள் எழுவது தவிர்க்கமுடியாது.

Link to comment
Share on other sites

...

திரேசாவைப் பற்றிப் பெருமையாகக் கதைத்தால் அது விளம்பரமா? அவருக்கு எங்கிருந்து இத்தனை பணம் வந்தது? அவர் வாழ்ந்த வாழ்க்கை குறித்து யாராவது சந்தேகப்பட்டார்களா?

...

அன்னை திரேசாவை நான் பெரிதும் மதிக்கிறேன். அவர்தான் உண்மையான ஆன்மீகவாதி. அன்னை திரேசாவுடன் சாய்பாபாவை எந்த ஒரு விடயத்திலும் ஒப்பிட முடியாது.

மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் ஒருவர் நல்லகாரியம் ஒன்றை செய்துவிட்டால், எல்லாவற்றையும் மறந்து அவரை தலையில் தூக்கிவைத்து கொண்ணாட முடியுமா ?

இது மக்களின் பணம், இதை மக்களுக்காகவே செலவழிக்கிறேன் என்று அவர் ஒரு வார்தை கூறியிருக்கலாமே ?

அப்துல் கலாமுக்கு மட்டும் அவர் அருள்புரியவில்லை, இந்திய முதன்மை அரசியல்வாதிகளுக்கும் கேடிகளுக்கும் புட்டபார்த்திதான் புகலிடம்.

Link to comment
Share on other sites

அன்னை திரேசாவை நான் பெரிதும் மதிக்கிறேன். அவர்தான் உண்மையான ஆன்மீகவாதி. அன்னை திரேசாவுடன் சாய்பாபாவை எந்த ஒரு விடயத்திலும் ஒப்பிட முடியாது.

மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் ஒருவர் நல்லகாரியம் ஒன்றை செய்துவிட்டால், எல்லாவற்றையும் மறந்து அவரை தலையில் தூக்கிவைத்து கொண்ணாட முடியுமா ?

இது மக்களின் பணம், இதை மக்களுக்காகவே செலவழிக்கிறேன் என்று அவர் ஒரு வார்தை கூறியிருக்கலாமே ?

அப்துல் கலாமுக்கு மட்டும் அவர் அருள்புரியவில்லை, இந்திய முதன்மை அரசியல்வாதிகளுக்கும் கேடிகளுக்கும் புட்டபார்த்திதான் புகலிடம்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா .........அட விடுங்கப்பா .......ஆக வேண்டிய காரியங்களை பார்ப்போம்[/color]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை திரேசாவை ஏன் மதிக்கிறீர்கள்? சாயிபாபாவை ஏன் வெறுக்கிறீர்கள்? எல்லோரும் நல்லதைத்தானே செய்கிறார்கள். அன்னை திரேசா பைபிளையும் ஆதாம் ஏவாள் கதைகளையும் ஏற்றுக் கொண்டவர். மனித குலத்தின் ரட்சிப்புக்கு இயேசுக் கிறிஸ்துதைத் தவிர வேறு வழியே இல்லலையென்று நம்பியவர். சாயிபாபா எல்லா மதங்களிலும் உண்மையும் நன்மையுமுண்டு, நான் கடவுள் அதுபோல் நீங்களெல்லோரும் கடவுள்களே, என்னை எனக்குத் தெரியும் நீங்களும் உங்களை முயற்சியினால் புரிந்து கொள்ளுங்கள் என்று ஒரு அத்வைத வேதாந்த நிiயில் நின்று அதே வேளை சித்தாந்தக் கருத்துகளுக்கும் மதிப்பளித்து பலருக்கும் மன அமைதி கிடைக்க உழைக்கிறார். அவரது பிரசாந்தி நிலையத்தில் சில்லறை சேர்ப்பதற்காக ஒரு சிறு உண்டியல்தானும் இல்லை. யாராவது அன்பளிப்பு வழங்கவேண்டுமென்றால்கூட எங்கே கொடுப்பதென்று தெரியாது. இது நான் நேரில் கண்ட உண்மை. இத்தனைக்கும் நான் அவரை வணங்க அங்கு போகவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை. சும்மா புதினம் பார்க்கப்போனன். தற்போதுள்ள மனவருத்தமான விடயமென்னவென்றால் பலர் சமயங்களை அல்லது சமயாதிகளைக் கண்ணைமூடிக்கொண்டு பின்பற்றுவது போன்றே மேலும் பலர் பகுத்தறிவு வாதத்தையும் எவ்வித ஆராய்வோ புத்திஜீவித்தனமோ இன்றிப் பின்பற்றுகிறாகள். மொத்தத்தில் எல்லாமே முட்டாள்களின் விடயமாகவே போய்விட்டது. ஒன்றுக்கொன்று இரண்டும் எதுவிதத்திலும் குறைந்ததில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் ஒரு பிரச்சனையா .........அட விடுங்கப்பா .......ஆக வேண்டிய காரியங்களை பார்ப்போம்

அட ஆமா ... அதுவும் சரிதான் :D :D

Link to comment
Share on other sites

உங்களால் ஒரு மண்ணும் புடுங்கத் தெரியாது. ஆனால் செய்கின்றவர்களில் புரணி காண்பதில் அப்படி ஒரு இன்பம். ஏன் நீங்கள் அடித்த கடன்அட்டையில் மக்களுக்கு கொடுத்து உதவுவது தானே?

புரியவில்லை, இதற்கு என்ன விளக்கம் என்று ஒற்றன் சொல்வாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் சாய்பாபா கடவுளோ, மனிதரோ அல்லது எமாற்றுகிறாரோ இல்லையோ என்பதை விட, மக்களுக்கு குறிப்பாக அந்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெழுங்கு நதித்திட்டத்தின் மூலம் பலருக்கு குடிப்பதற்கு குடி நீர் கிடைக்க வழி செய்தவர். தமிழகப்பகுதிக்கும் உதவி செய்ய முயல்வதினால் அவர் பாராட்டப்பட வேண்டியவர்.

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரையில் சாய்பாபா கடவுளோ, மனிதரோ அல்லது எமாற்றுகிறாரோ இல்லையோ என்பதை விட, மக்களுக்கு குறிப்பாக அந்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெழுங்கு நதித்திட்டத்தின் மூலம் பலருக்கு குடிப்பதற்கு குடி நீர் கிடைக்க வழி செய்தவர். தமிழகப்பகுதிக்கும் உதவி செய்ய முயல்வதினால் அவர் பாராட்டப்பட வேண்டியவர்.

ஓ நல்லா பாராட்டுவீங்க தானே பர்சுகுள்ள படம் இருக்குது எனக்கு தெறியாது தானே

:angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு அக்கா எமக்கு பிடிக்காதவர்கள் ஆனாலும் நல்ல காரியம் செய்தால் நாம் பாராட்ட தான் வேண்டும்

Link to comment
Share on other sites

ஜம்மு அக்கா எமக்கு பிடிக்காதவர்கள் ஆனாலும் நல்ல காரியம் செய்தால் நாம் பாராட்ட தான் வேண்டும்

நேவர் தங்கா நாளைக்கு மகிந்த நல்லகாரியம் செய்தாலும் இதுகள் அதையும் புகழ்ந்து கொண்டிருக்குங்கள் நம்மன்ட சனம் தான் வீணா அழியும் சோ தங்கா நாம் யாரையும் வாழ்த்தும் போதும் குறிப்பறிந்து வாழ்த்த வேண்டும்

:D

Link to comment
Share on other sites

தன்நம்மிக்கை இழந்தபோது, சாயிபாபா(சாத்தான்) கடவுள் ஆகிறான். அரசியல்வாதி என்றால் தங்க மோதிரம், ஏழை என்றால் திருனூறு கொடுக்கும் பித்தல்லாட்க்காரன். கோடி பெரியார் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இருக்கும்வரைக்கும் பாபா உமக்கு நேரம் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.