Jump to content

புலம்பெயர்ந்த தமிழர் பற்றி கிழப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

புலம்பெயர்ந்த தமிழர் தொடர்பாகப் பரப்பப்படும் புரளிகளை நம்ப வேண்டாம். - வ.ஐ.ச.ஜெயபாலன் 
---------------------------------------------------------------------------------

”மீண்டும் வன்முறையை ஏற்படுத்த. பாதாளக் குழுவினரின் ஆதரவைப் பெற புலம் பெயர் தமிழர்கள் முயற்ச்சி” என புதிய புரளி ஒன்று கிளப்பப் படுகிரது. நான் அறிந்தவரைக்கும் இது உள்நோக்கமுள்ள பொய்ப் பிரசாரமாகும். 
.
இது உண்மையான கதையல்ல. புலம் பெயர் தமிழ் சக்திகளில் பெரும்பாலானவர்கள் சர்வதேச நாடுகளில் முக்கிய பொறுப்புகளிலும் அரசியல் தலைமைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் சர்வதேச வரண்முறைகளுக்குக் கட்டுப்பட்டு செயல்பட முழு உரிமையும் கொண்டுள்ளவர்கள்..

அவர்கள்ளில் பலர் பாலத்தீனிய அகதிகள்போல போர்குற்றங்களால் நேரடியாகப் பாதிக்கபட்டவர்கள் என்பதனையும் அதனால் வெளியேறியவர்கள் என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள். . அவர்கள் போர்குற்ற விசாரணை தொடர்பாகவோ தங்கள் பாரம்பரிய தாயக மண்ணின் சுதந்திரமும் ஜனநாயகமும் உள்ள எதிர்காலம்தொடர்பாகவோ தாம் வாழும் நாடுகளது சடங்களையும் சர்வதேச சட்டங்களையும் மீறாமல் செயல்படுவதற்க்கு உரிமை உள்ளவர்கள். அவர்கள் தங்களது பாரம்பரிய தாயகத்தில் கொண்டுள்ள பற்றை காட்டும் ஆர்வத்தைக் கொச்சைப் படுத்த வேண்டாம்.
.

மெளனித்த ஆயுதங்களை மீண்டும் ஒலிக்க வைப்பதல்ல புலம் பெயர்ந்த தமிழர்களின் நோக்கம். சர்வதேச சமூகத்தின் பொறுப்பு மிக்க பிரசைகளாக தங்கள் தங்கள் நாடுகளையும் இந்தியாவையும் மவுனம் கலைய வைக்கிற செயல்பாடுகளிலேயே ஈடுபடுகிரார்கள். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை எட்டுவதே பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழர்களது நோக்கமாக உள்ளது. நான் அறிந்த வகையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளதும் இந்தியாவினதும் அழுத்தத்தை அதிகரிப்பதன்மூலமே வடகிழக்கு தமிழ் மக்களின் சுய நிணய உரிமை என்கிற தங்கள் இலக்கை அடைய முனைகிறார்கள். வடகிழக்கு தமிழர்களோடும் தலைவர்களோடும் அவர்கள் விமர்சன ரீதியான உறவை வளர்த்து வருகிறார்கள். எதிர்காலத்தில் இலங்கை தமிழர் அரசியலில் அவர்கள் செல்வாக்கு அதிகரிக்கவே செய்யும். அவர்கள் எப்பவும் தாய் மண்ணில் வாழும் நாடாளு மன்ற சக்திகளின்

அவர்களது நோக்கம் வடகிழக்கில் உள்ல பாரம்பரிய தமிழர் பிரதேசங்களின் இணைப்பும் சுய நிர்ணய உரிமையுமாகும். நான் ஆரம்பத்தில் இருந்தே 
புலம் பெயர் தமிழர் மத்தியில் முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசங்கள் தமிழரின் சுய நிர்ணய உரிமைஎல்லைக்குள் ஒருபோதும் வராது என்பதை அழுத்திச் சொல்லி வருகிறேன். இன்று பெரும்பாண்மை புலம்பெயர்ந்த தமிழ் சமூகமும் அதனை ஏற்றுக் கொள்கிறது. இலங்கை முஸ்லிம்கள் விரும்பினால் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஏர்பாடுகளோடு இணைந்து செயபடுவதையே இலங்கை தமிழர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் விரும்புகிறார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது.

புலம் பெயர் தமிழ் அமைப்புகளும் தாய் மணில் செயல்படும் நாடாளுமன்ற அமைப்புகளூடாகவே பெரும்பாலும் செயல்படுகிறார்கள். முஸ்லிம் சிங்கள பகுதிகள் தவிர்ந்த இணைந்த வடகிழக்கு தமிழ் மாகாணத்துக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வையே கொண்டுவரவே 
பெரும்பாலான தமிழர்களும் புலம்பெயர்ந்த விரும்புகிறார்கள்.

சுமூகமான தீர்வை கொண்டுவர இயலாத பட்சத்திலும் புலம்பெயர் தமிழருக்கும் இலங்கை தமிழருக்கும் வன்முறையில் ஈடுபடும் அவசியமோ நோக்கமோ இருப்பதாகத் தெரியவில்லை. சுமூகத் தீர்வை எட்டமுடியாவிடின் தாங்கள் வாழும் சர்வதேச நாடுகளதும் இந்தியாவதும் ஆதரவுடன் முஸ்லிம் நாடான கொசோவோ பாதையையே அவர்கள் தெரிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.

அவர்கள் சர்வதேச மத்தியஸ்த தீர்வை நாடும் நோக்கத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் சில்லறை வன்முறைகளில் ஈடுபடுகிற அவசியத்திலும் நோக்கத்தில் இருக்கவில்லை என்பதை அறிவேன். எல்லா நிலையிலும் முஸ்லிம் பிரதேசங்கள்மீது தமிழர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதையே நான் உறுதியாக உரத்துக் கூறி வருகிறேன்.எனவே பரப்பப்படும்

தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம்.

.

https://www.madawalaenews.com/2019/01/hhh_60.html

 

 

Link to comment
Share on other sites

https://www.madawalaenews.com/2019/01/hhh_60.html

 

அட மடவெலவுக்கோ பதில் எழுதிக்கொண்டு இருக்கின்றீர்கள் கவிஞர். பச்சை இனவாதிகளுக்கெல்லாம் பதில் எழுதிக்கொண்டு இருக்க தேவை இல்லை.நேரமும் சக்தியும் தான் வீண்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.