Jump to content

ஒரே நேர்க்கோட்டில்... அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தà¯à®°à¯à®à¯à®à®°à¯à®à¯ நிலà¯:

இந்தியா முழுதும், ஒரே நேர்க்கோட்டில்... அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்!

சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்.

எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது.

கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

பஞ்சபூத ஸ்தலம்:

நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்

ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில்

காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்

ஆயிரம் ஆண்டுகள் பழைமை: சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேதார்நாத்: இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

ஆயிரம் மைல்கள்: கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.

தீர்க்கரேகை நிலை:

1) கேதார்நாத் - கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)

2) காலேஷ்வரம் - காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)

3) ஸ்ரீ காலஹஸ்தி - ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)

4) காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)

5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)

6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)

7) சிதம்பரம் - நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)

😎 ராமேஸ்வரம் - ராமநாத கோயில் (9.2881, 79.3174)

கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/2016/kedarnath-rameswaram-ancient-siva-temples-on-straight-line/articlecontent-pf69355-011892.html

Link to comment
Share on other sites

சூரியன் பூமிய சுத்தல பூமி தான் சூரியன சுத்துது...

எப்படி கண்டு பிடிச்சோம் பாத்திங்களா...

முட்டா பய...

முடியுமா நம்ம கிட்ட, ஊருக்குள்ள நாங்களே பல பேருக்கு யோசன சொல்றவங்க... யாருகிட்ட...

Link to comment
Share on other sites

சுவாரஸ்யமான தகவல். விண்ணியலும் கணிதவியலும் கொண்டு இவ்வாறாக ஆலயங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிர்மாணித்துள்ளமை பெருமை.கலந்த வியப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் எல்லாம் கிட்டத்தட்ட நேர் கோட்டுக்கு வருமெல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகுலேஸ்வரம், கேதீச்சரம், முன்னேஸ்வரம் கிட்டதட்ட நேர்கோடு தானே?

Link to comment
Share on other sites

22 minutes ago, ஏராளன் said:

நகுலேஸ்வரம், கேதீச்சரம், முன்னேஸ்வரம் கிட்டதட்ட நேர்கோடு தானே?

இம் மூன்று தலங்களின் தீர்க்காம்சமும் 79 க்கும 80 க்கும் இடையில்தான் வருகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே கோட்டை அப்பிடியே மேல நீட்டினா இமயமலையிலை இருக்கிற கைலாசத்தை தொடும். சைவர்களின் நம்பிக்கையின்படி கைலாசமலை  முக்கியமானதாகும். இங்குதான் சிவன்  தோன்றியதாக  சைவசமயத்தவர்கள் நம்புகிறார்கள். மேலும் ஆராய்ந்து பார்த்தால் கோட்டின் தெற்கு திசையில் தான் பண்டைய காலத்தின் குமரிக்கண்டம் இருந்தது. அங்கும் பல சிவாலயங்கள் அதே கோட்டில் அமையுமாறு கட்டப்பட்டு பின்னர் அழிந்திருக்கலாம். இன்று கைலாச மலை சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபேத் நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது. அது இந்தியாவில் உள்ளதாக பலர் நம்புவது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vanangaamudi said:

 இங்குதான் சிவன்  தோன்றியதாக  சைவசமயத்தவர்கள் நம்புகிறார்கள். 

??

சிவலோகத்தில் இருந்து பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து உயிர்களுக்கும் அருள் புரியும் சிவபெருமானும் பார்வதி தேவியும் இவுலகத்தின் மிக உயர்ந்த மலையாகிய கைலாய மலையில் வீ ற்றிருந்தே பூலோகத்தில் வாழும் எமக்கும் ஏனைய உயிர்களுக்கும் அருள் புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. சிவனுக்கு தொண்டாற்றும், சிவகணங்களும், முனிவர்களும், சிவலோகத்தில் அவரது பாதாரவிந்தங்களில் வாழும் பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

22 hours ago, Nathamuni said:

??

சிவலோகத்தில் இருந்து பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து உயிர்களுக்கும் அருள் புரியும் சிவபெருமானும் பார்வதி தேவியும் இவுலகத்தின் மிக உயர்ந்த மலையாகிய கைலாய மலையில் வீ ற்றிருந்தே பூலோகத்தில் வாழும் எமக்கும் ஏனைய உயிர்களுக்கும் அருள் புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. சிவனுக்கு தொண்டாற்றும், சிவகணங்களும், முனிவர்களும், சிவலோகத்தில் அவரது பாதாரவிந்தங்களில் வாழும் பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளார்கள்.

 

சிவனுக்கு நாம் ஏன் தொண்டாற்ற வேண்டும். மனிதன் மனிதனாக மற்றயவர்களுக்கு  தீங்கு இழைக்காமல் முடிந்தால் மற்றயவர்களுக்கு உதவி செய்து  சட்டங்களை மதித்து இவ்வுலகில் சந்தோசமாக வாழ்ந்தாலே போதுமானது தானே.தனக்கு தொண்டாற்றியர்களுக்கு மட்டும் help பண்ணுவானாயின் சிவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் என்ன வித்தியாசம். 

Link to comment
Share on other sites

கட்டுரையில் குறிப்பிட்ட நேர்கோடு இதுதானா ?

tamilnadu-temple.png

 

On 1/19/2019 at 5:04 AM, சண்டமாருதன் said:

இம் மூன்று தலங்களின் தீர்க்காம்சமும் 79 க்கும 80 க்கும் இடையில்தான் வருகின்றது. 

79 இற்கும் 80 இற்கும் இடையிலான தூரம் கிட்டத்தட்ட 80 கிலோமீற்றர்கள்.

இந்த 3 தலங்களும் கிட்டத்தட்ட நேர்கோடுதான்.

Link to comment
Share on other sites

On 1/19/2019 at 2:57 AM, vanangaamudi said:

அதே கோட்டை அப்பிடியே மேல நீட்டினா இமயமலையிலை இருக்கிற கைலாசத்தை தொடும். சைவர்களின் நம்பிக்கையின்படி கைலாசமலை  முக்கியமானதாகும். இங்குதான் சிவன்  தோன்றியதாக  சைவசமயத்தவர்கள் நம்புகிறார்கள். மேலும் ஆராய்ந்து பார்த்தால் கோட்டின் தெற்கு திசையில் தான் பண்டைய காலத்தின் குமரிக்கண்டம் இருந்தது. அங்கும் பல சிவாலயங்கள் அதே கோட்டில் அமையுமாறு கட்டப்பட்டு பின்னர் அழிந்திருக்கலாம். இன்று கைலாச மலை சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபேத் நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது. அது இந்தியாவில் உள்ளதாக பலர் நம்புவது தவறு.

தமிழர்களுக்கான அதிராகம் மிக்க அரசும் அதன் கையில் தொல்லியல் ஆய்வும் வந்தால் எமது நம்பிக்கைகள் சார்ந்த ஏராளமான விசயங்கள் தலைகீழாக மாறும். தமிழர்களுக்கான ஒரு வரலாற்று வழித்தடம் ஆய்வு அடிப்படையில் ஏற்படும். அதுவரை நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிவதை வைத்து சிந்திக்கவேண்டியதுதான். நம்பிக்கைகள் ஏதோ ஒரு இடத்தில் உண்மைத் தன்மையை அடையும். அது எந்த இடம் என்பது தெரியவில்லை. 

தற்போதுள்ள இந்த ஆலயங்கள் ஒரு குறிப்பிட்ட அரசாட்சிக் காலத்தில் அதாவது சேரசோழ பாண்டியர் போன்ற மன்னர்கள் காலத்தில் தோன்றியிருக்க வாய்பில்லை மாறாக அதற்கு முற்பட்ட காலங்களில் கட்டடக் கலையில் படிப்படியாக அறிவை வளர்த்த சமூகம் இருந்திருக்கவேண்டும். உயரமான கோபுரங்களை கட்டுவதற்கு ஒரு தேவையும் இருந்திருக்கவேண்டும். கோபுரங்கள் அடிப்படையில் கடவுள் சமயங்களுக்காக கட்டப்பட்டதா இல்லை பின்னர் வந்த மன்னர் சமூகம் அதை கோயில்களாக மாற்றியதா என்பது சந்தேகத்துக்குரியது. கடல்நீர் உட்புகுதல், நீரால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தற்காக்கவே இவைகள் தோன்றிருக்கலாம். விதைதானியங்களை கோபுர உச்சியில் சேமித்துக் காப்பாற்றுவதே இதில் பிரதான கூறாக இருந்திருக்கலாம். மேலும் இன்று கடலால் மூழ்கடிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட சமூகமே உயரமான கட்டடங்களை உருவாக்குவதற்கும் உயரமான மலைகளை நோக்கி நகர்ந்ததாகவும் இருக்கலாம். இச் சமூகத்தை வழிநடத்தியதில் தென்னாடுடைய சிவன் பிரதானமானவராக இருக்கலாம். 

நாகரநாகரீகம் தென்னகத்தில் இருந்து மொகஞ்சதாரோ கரப்பா நோக்கி நகர்ந்ததா இல்லை அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்ததா என்பதை கீழடி போன்ற பல இடங்களை தோண்டினால் தான் புரியும், ஆனால் விடமாட்டார்கள். எல்லாவற்றையும் இழுத்து மூடி ஆர்வமுள்ள தொல்லியல் ஆய்வாளர்களை இடமாற்றம் பணிமாற்றம் செய்வதிலேயே இந்திய அரசு முனைப்புடன் செயற்படுகின்றது. 

சங்ககால மதுரை தற்போதையை மதுரை அல்ல மாறாக  கீழடி என்பதுதான் சிலப்பதிகாரத்து இலக்கிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுவது. மேலும் காவிரிப் பும்பட்டிணம் புலம்பெயர் மக்கள் கூடிவாழ்ந்த இடம் என்பது என்னுமொரு பாடல். அவை வணிக ரீதியாக வாழ்ந்த மக்களாக இல்லை கடல் நீர் புகுந்த இடங்களில் இருந்து பெயர்ந்து வந்த மக்களா என்பது ஆய்வுக்குரியது.

புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்

 

 

 

 

Link to comment
Share on other sites

திரு பாலகிருஷ்ணன் அவர்களின் அருமையான பேச்சு அருமையானது. 

4 hours ago, சண்டமாருதன் said:

நாகரநாகரீகம் தென்னகத்தில் இருந்து மொகஞ்சதாரோ கரப்பா நோக்கி நகர்ந்ததா இல்லை அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்ததா என்பதை கீழடி போன்ற பல இடங்களை தோண்டினால் தான் புரியும், ஆனால் விடமாட்டார்கள். எல்லாவற்றையும் இழுத்து மூடி ஆர்வமுள்ள தொல்லியல் ஆய்வாளர்களை இடமாற்றம் பணிமாற்றம் செய்வதிலேயே இந்திய அரசு முனைப்புடன் செயற்படுகின்றது. 

 

மத்திய அரசு மட்டுமல்ல பொதுமக்களும் இதற்குப் பொறுப்பானவர்கள். நாம் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளது. அதற்கான ஆர்வம் மக்களிடமிருந்து வர வேண்டும். பொய்யான கதைகளிலும் மூட நம்பிக்கையிலும் மூழ்கியிருக்கும் சமுதாயம் எந்த ஒரு விடயத்தையும் ஆய்ந்து உண்மையை அறிந்துகொள்ள முற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.