Jump to content

பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

rejected-theresa-mays-deal-by-230-votes-in-uk-parliament-2.jpg

பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி!

பிரெக்ஸிற் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மேயின் தரப்பு தோல்வியடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பில் 432 பேர் பிரெக்ஸிற்றிற்கு எதிராகவும் 202 பேர் பிரெக்ஸிற்றிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

இதன்மூலம் மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக முடிவுசெய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஆதரவு தெரிவித்தனர். பிரிரித்தானியாவின் இந்த வெளியேற்ற முடிவே பிரெக்ஸிற் எனக் குறிப்பிடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான செயற்பாடு 2019 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் திகதிக்குள் நிறைவுசெய்யப்பட வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான விதிகள் வகுக்கப்படவில்லையென கூறப்படுகிறது.

இதனிடையே பிரெக்ஸிற்றை அமுல்படுத்தத் தேவையான விதிகளை விரைந்து வகுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மே அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தோல்வியடைந்தால், அது மன்னிக்க முடியாத நம்பிக்கை மீறல் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே இன்றைய பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் பிரதமர் மேயின் தரப்பு படுதோல்வியடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான காலம் முடிவடைய இன்னும் 10 வாரங்களே உள்ளதால் தெரேசா மே அரசாங்கத்திற்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

rejected-theresa-mays-deal-by-230-votes-rejected-theresa-mays-deal-by-230-votes-in-uk-parliament.jpg

http://athavannews.com/பிரெக்ஸிட்-வாக்கெடுப்பி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம மந்திரி தெரசா மே யின் பிரக்சிற் உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டது-

January 15, 2019

UK-PM.jpg?resize=736%2C544

பிரதம மந்திரி தெரசா மே இன் பிரக்சிற் உடன்படிக்கை 230 வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு இது  வரலாற்று தோல்வி மிகப்பெரிய தோல்வி என சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா  வெளியேறுவதற்கான விதிகளை அமைக்கும் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதா அன்றி  நிராகரிப்பதா, என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் 432 வாக்குகள் வாக்களித்தனர்.  இந்த வரலாற்றுத் தோல்வியை அடுத்து தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின்  நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  அல்லது அரசாங்கம் பாராளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனக் கொரியுள்ளார்.

 

http://globaltamilnews.net/2019/110065/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரெக்சிட் இப்ப என்ன நடக்கும்?...அம்மையாரின் ஆட்சி கவிழ்ந்துடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரதி said:

பிரெக்சிட் இப்ப என்ன நடக்கும்?...அம்மையாரின் ஆட்சி கவிழ்ந்துடுமா?

காவடி எடுத்தால் எப்பிடியெண்டாலும் ஆடித்தான் இறக்குவினம்...😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பிரெக்சிட் இப்ப என்ன நடக்கும்?...அம்மையாரின் ஆட்சி கவிழ்ந்துடுமா?

 

51 minutes ago, குமாரசாமி said:

காவடி எடுத்தால் எப்பிடியெண்டாலும் ஆடித்தான் இறக்குவினம்...😄

நாளுக்கு நாள் மாறும் பிரித்தானிய அரசியலில் இது பழைய செய்தி.

1. போன வருட இறுதியில், அம்மையாருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் அவரது கட்சியினுள் நடந்தது. அது வெல்லாததால், அவரது தலைமைப் பதவிக்கு எதிர்ப்பு, கட்சியினுள், அதன் விதிகள் படி, இன்னும் ஒரு வருடத்துக்கு வராது.

2. அவரது ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தம், பிரித்தானியா சார்பில் பலவீனமானது என பாராளுமன்று நேற்று நிராகரித்தது. அதையே நீங்கள் பேசினீர்கள்.

3. இன்று, அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என பிரதான எதிர்க்கட்சியான தொழில் கட்சி கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் மாலை 7 மணிக்கு, தோல்வி அடைந்தது.

ஆகவே அம்மையாருக்கு உடனடியாக பதவிக்கு பிரச்சனை இல்லை. ஆனால்  பாவம்... இந்த பிரச்சனையினை தலையில் கட்டி விட்டு கழண்டு  கொண்ட டேவிட் கமரோனை தான் பிழை சொல்ல வேண்டும்.

இரண்டு வழிகள்:

இது நாட்டினைப் பாதிக்கும் ஆயத்தமில்லா யுத்தம். யுத்த காலத்தில் சகல கட்சிகளுடன் சேர்ந்து தேசிய அரசு அமைவது போல, அதே தீவிரத்துடன், தனியே நின்று பேசாது, கூட்டாக ஐரோப்பிய யூனியன் உடன் பேச வேண்டும்.

அல்லது 

மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டும்.

என்ன செய்வார்கள் என இரண்டு ஒரு நாளில் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்த பிரச்சனையினை தலையில் கட்டி விட்டு கழண்டு  கொண்ட டேவிட் கமரோனை தான் பிழை சொல்ல வேண்டும்.

உந்த கழட்டி விட்ட சமாச்சாரத்திலை எனக்கு படத்திலை இருக்கிறவரைத்தான் ரொம்ப பிடிக்கும். நிண்டு இழுத்துப்பாத்தார் சரிவரேல்லை....கொழுவுப்படுற மாதிரி கொழுவி நைசாய் காய் வெட்டீட்டார்...😄

gettyimages-494428704.jpg?itok=ZCOtThd5

2 hours ago, Nathamuni said:

மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டும்.

மீண்டும் மக்களிட்டை போனால் அம்மையார் வீட்டை போவார் எண்டு இஞ்சை கதைக்கினம். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.