Jump to content

தமிழ் சிறி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்!!


Recommended Posts

  • Replies 50
  • Created
  • Last Reply

வாழ்த்துகள் தமிழ்சிறி. 

வளமான கல்விச் செல்வம் உங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்க உறுதுணையாக இருந்த நீங்கள் மட்டுமல்ல உங்கள் பிள்ளைகளும் வாழ்வில் முக்கியமான ஒரு படியைத் தாண்டியுள்ளீர்கள். நீண்ட தேடல்களின் பின்னர் நேற்றுத்தான் எனது மூத்த மகளுக்கு எந்தத் துறையில் உயர் கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்ற தெரிவுகளை அவளுடன் ஆலோசித்து முடிவு செய்தோம். செல்லவேண்டிய பாதை நீண்டதாகவும் கடினமானதாகவும் இருப்பதாக உணர முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2019 at 4:53 AM, கலைஞன் said:

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் தமிழ்சிறி!

ஆமா, இதற்கு எத்தனை பெல்ட்டுகள் தேவைப்பட்டன? பழைய, புதிய, அறுந்த, அறாத எல்லா Belt பட்டிகளுடனும் நின்று (உங்கள் தோளில் இருபக்கமும் மாலையாக போடலாம்) படம் ஒன்று எடுத்து போடுங்கள் தமிழ்சிறி பார்ப்போம்.

நானும்   சிறியும்

இங்கே  பகிரங்கமாக  எழுதியிருக்கின்றோம்

தவறுகள்  திருத்தப்பட தண்டனை கொடுக்க  தயங்கியதில்லை  என.

எங்களது  வாழ்வில்

எங்கள்  பிள்ளைகளின்  எதிர்காலம்  சார்ந்து

எம்மை  வருத்தி  தேவையேற்படும்  போது தண்டித்தே  இருக்கின்றோம்

அதன் பலாபலனை  எமது  வாழ்வில்  கண்டும்  வருகின்றோம்

எமது  பிள்ளைகள் வளர்ந்து  பெரிய  படிப்புக்களை கடந்த  பின்

எமது  கண்டிப்பான  வளர்ப்பு சரி  என்றும்

அதன்படி  தமது பிள்ளைகளையும்  நாமே  வளர்க்கணும்  என்றும்  சொல்கிறார்கள்

நாங்கள்  நல்ல  தகப்பனா  இல்லையா  என்பதை  எமது பிள்ளைகளைத்தவிர  எவருமறியார்

27 வயது  தாண்டியும்  அவர்கள்  எம்முடன் இருக்கவே  விரும்புகிறார்கள்  இருக்கிறார்கள்

எனது  தகப்பனார் எனக்குச்சொன்னது

தகப்பனின் பாசத்தை  பிள்ளைகள்  அறிந்துவிடக்டாது  என்று.

 

Link to comment
Share on other sites

புலம்பெயர் நாடு ஒன்றிக்கு  வந்து எல்லா சவால்களுக்கும் மத்தியிலும் பிள்ளைகளை படிப்பித்த பெற்றோருக்கும் சிறப்பாக படித்த பிள்ளைகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2019 at 5:23 PM, Paanch said:

தமிழ் சிறி அவர்களின் மகன் பட்டப் படிப்பில் வைத்தியருக்கான பட்டம்பெற்றுத் தற்போது வைத்தியராகச் சேவையாற்றத் தொடங்கியுள்ளார். அவரது மகள் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் (Mercedes Benz) பொறியியலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அங்கு தேர்ந்து எடுப்பதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அவர் அனைவரையும் விடக் கூடுதலான புள்ளிகளையும் பெற்று முதலாவதாக வந்து சிறப்புப் பாராட்டையும் பெற்றுள்ளார்.

இவர்கள் மேலும் உயர்வடைந்து எங்கள் மண்ணின் பெருமையையும் உயர்வடையச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்.!!   

பாஞ்ச்  அண்ணா...  இப்படி ஒரு, வாழ்த்துத் திரியை ஆரம்பிப்பார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. 👈
ஆனால்.. அவருக்கு, அந்த உரிமை உள்ளது. ஜேர்மனியில்..  எனக்கும்  அவருக்குமான நட்பு, 
முப்பத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு,  ஆரம்பித்தது.

Benno Rath   என்ற ஒரு ஜேர்மன்  நண்பர்  மூலம்  தான், பாஞ்ச் அண்ணா கிடைத்தார் என்னும் போது.
பெருமைப் பாடுகின்றேன்.

எனக்கு... திருமண எழுத்து நடந்த போது. அவரும்  ஒரு சாட்சி  கையெழுத்து வைத்ததில் இருந்து..
முதல் மகன், இரண்டாவது, மகள், மூன்றாவது மகள் பிறந்த போதெல்லாம்...
பிள்ளைகளை  தூக்கிக் கொண்டு, முதல் முதலாக  பாஞ்ச்  அண்ணாவின் வீட்டிற்குதான்  செல்வோம்.

அதே போல்... அவர்கள் வளர்த்து, கார் லைசென்ஸ் எடுத்த போது  கூட,
அவர்கள் தனியே...  முதல்  கார் ஓடி, பாஞ்ச்  அண்ணாவின் வீட்டிற்கு தான்... சென்றார்கள்.
அப்படி எல்லாம் செய்யும் போது...  பாஞ்ச்  அண்ணாவின் மனைவி, பிள்ளைகள் தரும் உற்சாகம், எமக்கு புத்துணர்வை  ஊட்டும்  மகிழ்ச்சியான தருணங்கள். ❤️

டிஸ்கி:  நாளைக்கு...   பின்னேரம் நாலு மணிக்கு பாஞ்ச்  அண்ணா குடுத்பத்தினர்  வீட்டிற்கு வருகிறார்கள். :grin:

Link to comment
Share on other sites

10 hours ago, இணையவன் said:

 பின்னர் நேற்றுத்தான் எனது மூத்த மகளுக்கு எந்தத் துறையில் உயர் கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்ற தெரிவுகளை அவளுடன் ஆலோசித்து முடிவு செய்தோம். செல்லவேண்டிய பாதை நீண்டதாகவும் கடினமானதாகவும் இருப்பதாக உணர முடிகிறது. 

காலம் எவ்வளவு வேகமாக செல்கின்றது இணையவன். உங்கள் மக்களை சின்னஞ் சிறு சிறுமியாக நேற்றுத் தான் பார்த்த மாதிரி ஞாபகம். அதுக்குள் உயர் கல்வி படிக்கும் அளவுக்கு காலம் வேகமாக நகர்ந்து விட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்துக்கள் சிறி அண்ணா.  உங்கள் பிள்ளைகளுக்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள். 

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

நானும்   சிறியும்

இங்கே  பகிரங்கமாக  எழுதியிருக்கின்றோம்

தவறுகள்  திருத்தப்பட தண்டனை கொடுக்க  தயங்கியதில்லை  என.

எங்களது  வாழ்வில்

எங்கள்  பிள்ளைகளின்  எதிர்காலம்  சார்ந்து

எம்மை  வருத்தி  தேவையேற்படும்  போது தண்டித்தே  இருக்கின்றோம்

அதன் பலாபலனை  எமது  வாழ்வில்  கண்டும்  வருகின்றோம்

எமது  பிள்ளைகள் வளர்ந்து  பெரிய  படிப்புக்களை கடந்த  பின்

எமது  கண்டிப்பான  வளர்ப்பு சரி  என்றும்

அதன்படி  தமது பிள்ளைகளையும்  நாமே  வளர்க்கணும்  என்றும்  சொல்கிறார்கள்

நாங்கள்  நல்ல  தகப்பனா  இல்லையா  என்பதை  எமது பிள்ளைகளைத்தவிர  எவருமறியார்

27 வயது  தாண்டியும்  அவர்கள்  எம்முடன் இருக்கவே  விரும்புகிறார்கள்  இருக்கிறார்கள்

எனது  தகப்பனார் எனக்குச்சொன்னது

தகப்பனின் பாசத்தை  பிள்ளைகள்  அறிந்துவிடக்டாது  என்று.

 

விசுகு அண்ணா,

எனது பாட்டனாருக்கும் எனது அப்பாவுக்குமான உறவின் நுட்பங்களை ஓரளவேனும் எனது அறிவுக்கு எட்டியபடி அறிந்துள்ளேன். அதேபோல் எனது பெற்றோரைப்போல் வேறு யாரும் என்னை இந்த அளவில் உருவாக்கியிருக்க முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடனான எனது பெற்றோரின் அணுகுமுறை எனது பாட்டனை விட மிக வித்தியாசமானது. என்னை ஒரு தடவையேனும் அடித்ததில்லை. நாம் இலங்கையில் பிரிந்து 6 வருடங்களின் பின்னர் பிரான்சில் ஒன்றுசேர்ந்ததோது எமக்குள் நண்பனுக்கும் மகனுக்கும் இடைப்பட்ட ஒரு உறவுமுறையே ஏற்பட்டது. எந்த ஒரு நிலையுலும் நான் அவரை எனது தந்தைக்குரிய இடத்திலிருந்து விலகாமல் மிகவும் மரியாதையாகவே நடந்து கொண்டேன்.

இருந்தாலும் எமது உறவு முறையிலும் வழிகாட்டலிலும் சில குறைபாடுகள் இருப்பதாகவே தோன்றியது. எனது பிள்ளைகள் பிறக்கும் முன்னரே எனது அனுபவத்திலிருந்து எனது பிள்ளைகளுடன் எனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், எதை எடுத்துக் கொள்வது எதைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதுண்டு. அதேபோல் இப்போது எனது பிள்ளைகளுடனான எனது அணுகுமுறை எனக்கும் எனது தந்தைக்குமான உறவைவிட வித்தியாசமானது. எனது மகள் என்னில் எனக்குப் புரியாத சில குறைகளைக் காணலாம். அவற்றைத் தனது எதிர்கால வாழ்வில் நிச்சயம் நிவர்த்தி செய்வாள். 

இன்று சரியாக இருப்பது நாளை நிறைவற்றதாக இருக்கலாம். அதற்காக இன்று செய்தது எப்போதுமே சரி என்ற பிடிவாதம் எம்முடனே அழிந்து போகும். அடுத்த சமுதாயம் இன்றைய அனுபவங்களிலிருந்து தெளிவான முடிவுகளை எடுக்கலாம். அவையும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கப்படும். இதுதான் மானிட வளர்ச்சி.

இந்தப் பரிணாம வளர்ச்சியானது சமுதாய முன்னேற்றத்துக்கு மட்டுமல்லாது விஞ்ஞானம் அரசியல் சமயம் கல்வி போன்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2019 at 5:30 PM, suvy said:

 பொறுப்பாக தமது கடமையை உணர்ந்த பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.......!  😁

அப்ப... தாய்  தகப்பன்... தக்காளி தொக்கா.. சுவி. :grin:

 

On 1/16/2019 at 5:41 PM, nunavilan said:

பிள்ளைகளின் கடும் உழைப்புக்கு கிடைத்த பரிசை அவர்கள் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த பெற்றோரை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்??

மிக்க, நன்றி... நுணாவிலான். 😊

On 1/16/2019 at 5:47 PM, suvy said:

 சும்மா சும்மா  தொடர்ந்து  தொடர்ந்து பெற்றோரை பாராட்டினால் பிறகு தமீழ் சிறி இங்கு   தத்துவம் சொல்லக் கிளம்பிடுவார். உங்களால் தாங்க முடியுமா......!  😁

 

On 1/16/2019 at 6:04 PM, suvy said:

Résultat de recherche d'images pour "lizard on the wall moving gif"

அது பாவம் தன்பாட்டில் வேலில போகுது. விடுங்கள்...... நாங்கள் வேட்டி  வேற கட்டியிருக்கிறம்......!   😊

எதுக்கும் கெதியா இடத்தை காலி பண்ணுவம்....!

Bildergebnis für வà¯à®³à¯à®³à®¿à®à¯à®à®¿à®´à®®à¯

வெள்ளிக்கிழமை,   சும்மா...படுத்துக்  கிடந்த  சிங்கத்தை,  சீண்டி  விட்டமைக்காக..
சுவியும், நுணாவிலானும்... இந்தக் காணொளியையும்,  தத்துவத்தையும்  பார்த்தே ஆக வேண்டும். :grin:

நான் வசிக்கும்...  வீட்டில் இருந்து, முப்பது கிலோ மீற்றர்  சுற்றாடலில்...
உலகத்தில்... பிரபல்யமான  மூன்று பெரிய ஜேர்மன்  கார்  நிறுவனங்கள் அமைத்துள்ள நிலையில்,
ஒரு பிள்ளையை ஆவது...  அதற்குள் நுழைத்து விட வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது.

பிள்ளைகளின் பாடசாலை படிப்பு முற்றுப் பெறும்  நிலையில்... 
மகனை...  Porche  கார் தயாரிக்கும், தொழிற்சாலையில் விண்ணப்பிக்க வைத்து, அனுமதியும்  வந்து விட்டது.
அதே.. நேரம், அவன் மருத்துவ கல்லூரிக்கும் விண்ணப்பித்து இருந்தான். அந்த அனுமதியும் வந்து விட்ட  நிலையில் ...
மனைவி....   அவன் மருத்துவம்  படிக்கட்டும் என்று, சொல்லி,  ஆறரை  வருட படிப்பு முடிந்தது.

மகளுக்கும்.... வைத்தியராக, அதுகும் ... குழந்தைகள் வைத்தியராக வர விருப்பம் இருந்தது.
நான்... பெண் பிள்ளைகளுக்கு, டாக்குத்தர்  வேலை சரி வராது.
கன  வருசம் படிக்க வேணும்,  இரவு, பகல். விடுமுறை நாட்கள் எல்லாம் வேலை வரும் என்று, மனதை மாற்றி ...  விட்டேன்.
இப்போ...  எனக்கும் சந்தோசம்,  அவளுக்கும் சந்தோசம். 😊

 

அவவின்  வேலையின் ஒரு பகுதியை...  காணொளியில் பார்க்கலாம்.
அதாவது .. நீங்கள் கடைக்குப்  போகும் போது,  கடை வாசலில் உங்கள் வாகனத்தை  நிறுத்தி,  
நீங்கள் இறங்கி ... நீங்கள் சென்ற வாகனத்தை,  உங்கள் கைத்தொலை பேசி மூலம்,
அதனை.. வாகன தரிப்பிடத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

அதே போல்....  நீங்கள் பொருட்கள் வாங்கிய பின், குறிப்பிட்ட இடத்துக்கு...
உங்கள் வாகனத்தை, உங்கள் கைத் தொலைபேசியில் இருந்தே வரவழைக்க முடியும்.

பிற் குறிப்பு:  இது இன்னும்... நடைமுறைக்கு வர, சில வருடங்கள் எடுக்கும். அதற்கான முற்கட்ட முயற்சிகளில், பலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அதில்... எனது மகளும், ஒருவர்.
இந்த விடயத்தில்... தொழிற்சாலை இரகசியங்கள் கட்டுக் கோப்பானவை என்பதால்...
இணையங்களில் வந்த, காணொளியை பார்த்து, ரசியுங்கள். 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

டிஸ்கி:  நாளைக்கு...   பின்னேரம் நாலு மணிக்கு பாஞ்ச்  அண்ணா குடுத்பத்தினர்  வீட்டிற்கு வருகிறார்கள். :grin:

பிறகு யார் அவரை வீட்டை கூட்டிக்கொண்டுபோய் விடுறது????:grin:

சும்மா பகிடிக்கு கேட்டனான்.....கோபிக்கப்படாது.:cool:

Link to comment
Share on other sites

உங்களுக்கும் உங்கள் பிள்ளைச்செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்சிறி😍. கடின உழைப்பின் அறுவடை பொங்கல் விருந்தாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். 

Link to comment
Share on other sites

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தமிழ் சிறீக்கும் மனைவிக்கும் ஆழுமைமிகு பிள்ளைகளுக்கும் பாராட்டுகளும்  நல் வாழ்த்துக்களும்

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

பிறகு யார் அவரை வீட்டை கூட்டிக்கொண்டுபோய் விடுறது????:grin:

சாமியாருக்கு மப்பு, வயது, மறதி எல்லாம் கூடுதுபோல் தெரிகிறது. நாங்கள் சிறியரின் வீட்டுக்குப் போவதற்கு தெரிந்தெடுத்தநாள் சனிக்கிழமை.... வெள்ளிக்கிழமை அல்ல..... !!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். தொழிற்துறைகளில் மென்மேலும் பல  சாதனைகள் படைத்து வாழ வாழ்த்துகின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, இணையவன் said:

விசுகு அண்ணா,

எனது பாட்டனாருக்கும் எனது அப்பாவுக்குமான உறவின் நுட்பங்களை ஓரளவேனும் எனது அறிவுக்கு எட்டியபடி அறிந்துள்ளேன். அதேபோல் எனது பெற்றோரைப்போல் வேறு யாரும் என்னை இந்த அளவில் உருவாக்கியிருக்க முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடனான எனது பெற்றோரின் அணுகுமுறை எனது பாட்டனை விட மிக வித்தியாசமானது. என்னை ஒரு தடவையேனும் அடித்ததில்லை. நாம் இலங்கையில் பிரிந்து 6 வருடங்களின் பின்னர் பிரான்சில் ஒன்றுசேர்ந்ததோது எமக்குள் நண்பனுக்கும் மகனுக்கும் இடைப்பட்ட ஒரு உறவுமுறையே ஏற்பட்டது. எந்த ஒரு நிலையுலும் நான் அவரை எனது தந்தைக்குரிய இடத்திலிருந்து விலகாமல் மிகவும் மரியாதையாகவே நடந்து கொண்டேன்.

இருந்தாலும் எமது உறவு முறையிலும் வழிகாட்டலிலும் சில குறைபாடுகள் இருப்பதாகவே தோன்றியது. எனது பிள்ளைகள் பிறக்கும் முன்னரே எனது அனுபவத்திலிருந்து எனது பிள்ளைகளுடன் எனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், எதை எடுத்துக் கொள்வது எதைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதுண்டு. அதேபோல் இப்போது எனது பிள்ளைகளுடனான எனது அணுகுமுறை எனக்கும் எனது தந்தைக்குமான உறவைவிட வித்தியாசமானது. எனது மகள் என்னில் எனக்குப் புரியாத சில குறைகளைக் காணலாம். அவற்றைத் தனது எதிர்கால வாழ்வில் நிச்சயம் நிவர்த்தி செய்வாள். 

இன்று சரியாக இருப்பது நாளை நிறைவற்றதாக இருக்கலாம். அதற்காக இன்று செய்தது எப்போதுமே சரி என்ற பிடிவாதம் எம்முடனே அழிந்து போகும். அடுத்த சமுதாயம் இன்றைய அனுபவங்களிலிருந்து தெளிவான முடிவுகளை எடுக்கலாம். அவையும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கப்படும். இதுதான் மானிட வளர்ச்சி.

இந்தப் பரிணாம வளர்ச்சியானது சமுதாய முன்னேற்றத்துக்கு மட்டுமல்லாது விஞ்ஞானம் அரசியல் சமயம் கல்வி போன்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும். 

உங்களது  கருத்து சார்ந்து மாற்றுக்கருத்தில்லை  எனக்கு.

  என்னைப்பொறுத்தவரை

அடியாத மாடு  பணியாது

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

பரிமான  வளர்ச்சி  என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட அனுபவங்களையும்

பெறு  பேறுகளையும்  தருகிறது

கண்டிப்பாக  வளர்க்கப்பட்ட  இடங்களிலும்  குறைகள்  உள்ளன

நீங்கள்  எழுதியது போல மறு  பக்கமும்குறைகள்  உள்ளன

இவை  இரண்டையும்  கடந்து 

அனுபவத்தினூடாக உணர்ந்து தான் வாழ்வை  செப்பனிடவேண்டும்

உங்களுக்குத்தெரியும்

பிரான்சில்  பிள்ளைகளை  பெற்றோர்  தண்டிப்பதிலிருந்த   இறுக்கமான சட்டத்தை  தளர்த்த  இருக்கிறார்கள்

காரணம் அனுபவம்

விளைச்சல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நுணாவிலானுக்கும் உந்த விளையாட்டெல்லாம் முதலே தெரியும். மற்றவர்களுக்கும் தெரியட்டும் என்றுதான்,  இப்படி ஒரு தூண்டில் போட்டால்தான்  மீன்  வந்து மாட்டும் என்று சும்மா எறிந்து விட்டனாங்கள் . அது சரியா வேலை செய்திட்டுது .இல்லையா நுணா என்ன பேசாமல் இருக்கிறீங்கள்.........!  😁

மீண்டும் பொறுப்பான பிள்ளைகளுக்கும் பின்னால் நின்று ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.....!  🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணா குடுமபத்தினருக்கு வாழ்த்துக்கள், பிள்ளைகளுக்கு கண்டிப்பும் அரவணைப்பும் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறி அண்ணா குடும்பத்தினருக்கும்,பிள்ளைகளுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனங்கனிந்த வாழ்த்துக்கள் தமிழ்சிறி தம்பதியினருக்கும்,பிள்ளைகளுக்கும்...வாழ்க்கையில் மெம் மேலும் உயர கடவுள் ஆசிர்வதிக்கட்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2019 at 6:17 PM, பெருமாள் said:

பொறுப்பாக தமது கடமையை உணர்ந்த பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.......!

வாழ்த்துக்களுக்கு... நன்றி பெருமாள்.

On 1/16/2019 at 7:07 PM, குமாரசாமி said:

தாய் தந்தையருக்கும் பிள்ளைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி, குமாராசாமி அண்ணா.

On 1/16/2019 at 7:33 PM, Nellaiyan said:

வாழ்த்துக்கள் தமிழ் சிறி

வாழ்த்துக்களுக்கு... நன்றி நெல்லையான்  அண்ணா.
 

 

On 1/16/2019 at 7:47 PM, Kavallur Kanmani said:

பொறுப்புடன் படித்து சிறப்புடன் தொழில் பெற்றிருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அவர்களை நற்பிரசைகளாக வளர்த்து வாழக் கற்றுக்கொடுத்த தமிழ்சிறி தம்பதிகளுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள். 

மிக்க, நன்றி கண்மணி அக்கா.
சில காலங்களுக்கு  முன்... உங்கள் மகளும்  பட்டப்  படிப்பை முடித்த போது...
நீங்கள், எழுதிய எழுத்துக்கள்... எனது மனதில், இன்றும்... நினைவில் வந்து போகும் அளவில் மறக்க முடியாதவை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி குடும்பத்தினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சிறி அண்ணா👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.