Jump to content

தமிழ் சிறி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்!!


Recommended Posts

  • Replies 50
  • Created
  • Last Reply

வாழ்த்துகள் தமிழ்சிறி. 

வளமான கல்விச் செல்வம் உங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்க உறுதுணையாக இருந்த நீங்கள் மட்டுமல்ல உங்கள் பிள்ளைகளும் வாழ்வில் முக்கியமான ஒரு படியைத் தாண்டியுள்ளீர்கள். நீண்ட தேடல்களின் பின்னர் நேற்றுத்தான் எனது மூத்த மகளுக்கு எந்தத் துறையில் உயர் கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்ற தெரிவுகளை அவளுடன் ஆலோசித்து முடிவு செய்தோம். செல்லவேண்டிய பாதை நீண்டதாகவும் கடினமானதாகவும் இருப்பதாக உணர முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2019 at 4:53 AM, கலைஞன் said:

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் தமிழ்சிறி!

ஆமா, இதற்கு எத்தனை பெல்ட்டுகள் தேவைப்பட்டன? பழைய, புதிய, அறுந்த, அறாத எல்லா Belt பட்டிகளுடனும் நின்று (உங்கள் தோளில் இருபக்கமும் மாலையாக போடலாம்) படம் ஒன்று எடுத்து போடுங்கள் தமிழ்சிறி பார்ப்போம்.

நானும்   சிறியும்

இங்கே  பகிரங்கமாக  எழுதியிருக்கின்றோம்

தவறுகள்  திருத்தப்பட தண்டனை கொடுக்க  தயங்கியதில்லை  என.

எங்களது  வாழ்வில்

எங்கள்  பிள்ளைகளின்  எதிர்காலம்  சார்ந்து

எம்மை  வருத்தி  தேவையேற்படும்  போது தண்டித்தே  இருக்கின்றோம்

அதன் பலாபலனை  எமது  வாழ்வில்  கண்டும்  வருகின்றோம்

எமது  பிள்ளைகள் வளர்ந்து  பெரிய  படிப்புக்களை கடந்த  பின்

எமது  கண்டிப்பான  வளர்ப்பு சரி  என்றும்

அதன்படி  தமது பிள்ளைகளையும்  நாமே  வளர்க்கணும்  என்றும்  சொல்கிறார்கள்

நாங்கள்  நல்ல  தகப்பனா  இல்லையா  என்பதை  எமது பிள்ளைகளைத்தவிர  எவருமறியார்

27 வயது  தாண்டியும்  அவர்கள்  எம்முடன் இருக்கவே  விரும்புகிறார்கள்  இருக்கிறார்கள்

எனது  தகப்பனார் எனக்குச்சொன்னது

தகப்பனின் பாசத்தை  பிள்ளைகள்  அறிந்துவிடக்டாது  என்று.

 

Link to comment
Share on other sites

புலம்பெயர் நாடு ஒன்றிக்கு  வந்து எல்லா சவால்களுக்கும் மத்தியிலும் பிள்ளைகளை படிப்பித்த பெற்றோருக்கும் சிறப்பாக படித்த பிள்ளைகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2019 at 5:23 PM, Paanch said:

தமிழ் சிறி அவர்களின் மகன் பட்டப் படிப்பில் வைத்தியருக்கான பட்டம்பெற்றுத் தற்போது வைத்தியராகச் சேவையாற்றத் தொடங்கியுள்ளார். அவரது மகள் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் (Mercedes Benz) பொறியியலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அங்கு தேர்ந்து எடுப்பதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அவர் அனைவரையும் விடக் கூடுதலான புள்ளிகளையும் பெற்று முதலாவதாக வந்து சிறப்புப் பாராட்டையும் பெற்றுள்ளார்.

இவர்கள் மேலும் உயர்வடைந்து எங்கள் மண்ணின் பெருமையையும் உயர்வடையச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்.!!   

பாஞ்ச்  அண்ணா...  இப்படி ஒரு, வாழ்த்துத் திரியை ஆரம்பிப்பார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. 👈
ஆனால்.. அவருக்கு, அந்த உரிமை உள்ளது. ஜேர்மனியில்..  எனக்கும்  அவருக்குமான நட்பு, 
முப்பத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு,  ஆரம்பித்தது.

Benno Rath   என்ற ஒரு ஜேர்மன்  நண்பர்  மூலம்  தான், பாஞ்ச் அண்ணா கிடைத்தார் என்னும் போது.
பெருமைப் பாடுகின்றேன்.

எனக்கு... திருமண எழுத்து நடந்த போது. அவரும்  ஒரு சாட்சி  கையெழுத்து வைத்ததில் இருந்து..
முதல் மகன், இரண்டாவது, மகள், மூன்றாவது மகள் பிறந்த போதெல்லாம்...
பிள்ளைகளை  தூக்கிக் கொண்டு, முதல் முதலாக  பாஞ்ச்  அண்ணாவின் வீட்டிற்குதான்  செல்வோம்.

அதே போல்... அவர்கள் வளர்த்து, கார் லைசென்ஸ் எடுத்த போது  கூட,
அவர்கள் தனியே...  முதல்  கார் ஓடி, பாஞ்ச்  அண்ணாவின் வீட்டிற்கு தான்... சென்றார்கள்.
அப்படி எல்லாம் செய்யும் போது...  பாஞ்ச்  அண்ணாவின் மனைவி, பிள்ளைகள் தரும் உற்சாகம், எமக்கு புத்துணர்வை  ஊட்டும்  மகிழ்ச்சியான தருணங்கள். ❤️

டிஸ்கி:  நாளைக்கு...   பின்னேரம் நாலு மணிக்கு பாஞ்ச்  அண்ணா குடுத்பத்தினர்  வீட்டிற்கு வருகிறார்கள். :grin:

Link to comment
Share on other sites

10 hours ago, இணையவன் said:

 பின்னர் நேற்றுத்தான் எனது மூத்த மகளுக்கு எந்தத் துறையில் உயர் கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்ற தெரிவுகளை அவளுடன் ஆலோசித்து முடிவு செய்தோம். செல்லவேண்டிய பாதை நீண்டதாகவும் கடினமானதாகவும் இருப்பதாக உணர முடிகிறது. 

காலம் எவ்வளவு வேகமாக செல்கின்றது இணையவன். உங்கள் மக்களை சின்னஞ் சிறு சிறுமியாக நேற்றுத் தான் பார்த்த மாதிரி ஞாபகம். அதுக்குள் உயர் கல்வி படிக்கும் அளவுக்கு காலம் வேகமாக நகர்ந்து விட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்துக்கள் சிறி அண்ணா.  உங்கள் பிள்ளைகளுக்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள். 

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

நானும்   சிறியும்

இங்கே  பகிரங்கமாக  எழுதியிருக்கின்றோம்

தவறுகள்  திருத்தப்பட தண்டனை கொடுக்க  தயங்கியதில்லை  என.

எங்களது  வாழ்வில்

எங்கள்  பிள்ளைகளின்  எதிர்காலம்  சார்ந்து

எம்மை  வருத்தி  தேவையேற்படும்  போது தண்டித்தே  இருக்கின்றோம்

அதன் பலாபலனை  எமது  வாழ்வில்  கண்டும்  வருகின்றோம்

எமது  பிள்ளைகள் வளர்ந்து  பெரிய  படிப்புக்களை கடந்த  பின்

எமது  கண்டிப்பான  வளர்ப்பு சரி  என்றும்

அதன்படி  தமது பிள்ளைகளையும்  நாமே  வளர்க்கணும்  என்றும்  சொல்கிறார்கள்

நாங்கள்  நல்ல  தகப்பனா  இல்லையா  என்பதை  எமது பிள்ளைகளைத்தவிர  எவருமறியார்

27 வயது  தாண்டியும்  அவர்கள்  எம்முடன் இருக்கவே  விரும்புகிறார்கள்  இருக்கிறார்கள்

எனது  தகப்பனார் எனக்குச்சொன்னது

தகப்பனின் பாசத்தை  பிள்ளைகள்  அறிந்துவிடக்டாது  என்று.

 

விசுகு அண்ணா,

எனது பாட்டனாருக்கும் எனது அப்பாவுக்குமான உறவின் நுட்பங்களை ஓரளவேனும் எனது அறிவுக்கு எட்டியபடி அறிந்துள்ளேன். அதேபோல் எனது பெற்றோரைப்போல் வேறு யாரும் என்னை இந்த அளவில் உருவாக்கியிருக்க முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடனான எனது பெற்றோரின் அணுகுமுறை எனது பாட்டனை விட மிக வித்தியாசமானது. என்னை ஒரு தடவையேனும் அடித்ததில்லை. நாம் இலங்கையில் பிரிந்து 6 வருடங்களின் பின்னர் பிரான்சில் ஒன்றுசேர்ந்ததோது எமக்குள் நண்பனுக்கும் மகனுக்கும் இடைப்பட்ட ஒரு உறவுமுறையே ஏற்பட்டது. எந்த ஒரு நிலையுலும் நான் அவரை எனது தந்தைக்குரிய இடத்திலிருந்து விலகாமல் மிகவும் மரியாதையாகவே நடந்து கொண்டேன்.

இருந்தாலும் எமது உறவு முறையிலும் வழிகாட்டலிலும் சில குறைபாடுகள் இருப்பதாகவே தோன்றியது. எனது பிள்ளைகள் பிறக்கும் முன்னரே எனது அனுபவத்திலிருந்து எனது பிள்ளைகளுடன் எனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், எதை எடுத்துக் கொள்வது எதைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதுண்டு. அதேபோல் இப்போது எனது பிள்ளைகளுடனான எனது அணுகுமுறை எனக்கும் எனது தந்தைக்குமான உறவைவிட வித்தியாசமானது. எனது மகள் என்னில் எனக்குப் புரியாத சில குறைகளைக் காணலாம். அவற்றைத் தனது எதிர்கால வாழ்வில் நிச்சயம் நிவர்த்தி செய்வாள். 

இன்று சரியாக இருப்பது நாளை நிறைவற்றதாக இருக்கலாம். அதற்காக இன்று செய்தது எப்போதுமே சரி என்ற பிடிவாதம் எம்முடனே அழிந்து போகும். அடுத்த சமுதாயம் இன்றைய அனுபவங்களிலிருந்து தெளிவான முடிவுகளை எடுக்கலாம். அவையும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கப்படும். இதுதான் மானிட வளர்ச்சி.

இந்தப் பரிணாம வளர்ச்சியானது சமுதாய முன்னேற்றத்துக்கு மட்டுமல்லாது விஞ்ஞானம் அரசியல் சமயம் கல்வி போன்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2019 at 5:30 PM, suvy said:

 பொறுப்பாக தமது கடமையை உணர்ந்த பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.......!  😁

அப்ப... தாய்  தகப்பன்... தக்காளி தொக்கா.. சுவி. :grin:

 

On 1/16/2019 at 5:41 PM, nunavilan said:

பிள்ளைகளின் கடும் உழைப்புக்கு கிடைத்த பரிசை அவர்கள் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த பெற்றோரை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்??

மிக்க, நன்றி... நுணாவிலான். 😊

On 1/16/2019 at 5:47 PM, suvy said:

 சும்மா சும்மா  தொடர்ந்து  தொடர்ந்து பெற்றோரை பாராட்டினால் பிறகு தமீழ் சிறி இங்கு   தத்துவம் சொல்லக் கிளம்பிடுவார். உங்களால் தாங்க முடியுமா......!  😁

 

On 1/16/2019 at 6:04 PM, suvy said:

Résultat de recherche d'images pour "lizard on the wall moving gif"

அது பாவம் தன்பாட்டில் வேலில போகுது. விடுங்கள்...... நாங்கள் வேட்டி  வேற கட்டியிருக்கிறம்......!   😊

எதுக்கும் கெதியா இடத்தை காலி பண்ணுவம்....!

Bildergebnis für வà¯à®³à¯à®³à®¿à®à¯à®à®¿à®´à®®à¯

வெள்ளிக்கிழமை,   சும்மா...படுத்துக்  கிடந்த  சிங்கத்தை,  சீண்டி  விட்டமைக்காக..
சுவியும், நுணாவிலானும்... இந்தக் காணொளியையும்,  தத்துவத்தையும்  பார்த்தே ஆக வேண்டும். :grin:

நான் வசிக்கும்...  வீட்டில் இருந்து, முப்பது கிலோ மீற்றர்  சுற்றாடலில்...
உலகத்தில்... பிரபல்யமான  மூன்று பெரிய ஜேர்மன்  கார்  நிறுவனங்கள் அமைத்துள்ள நிலையில்,
ஒரு பிள்ளையை ஆவது...  அதற்குள் நுழைத்து விட வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது.

பிள்ளைகளின் பாடசாலை படிப்பு முற்றுப் பெறும்  நிலையில்... 
மகனை...  Porche  கார் தயாரிக்கும், தொழிற்சாலையில் விண்ணப்பிக்க வைத்து, அனுமதியும்  வந்து விட்டது.
அதே.. நேரம், அவன் மருத்துவ கல்லூரிக்கும் விண்ணப்பித்து இருந்தான். அந்த அனுமதியும் வந்து விட்ட  நிலையில் ...
மனைவி....   அவன் மருத்துவம்  படிக்கட்டும் என்று, சொல்லி,  ஆறரை  வருட படிப்பு முடிந்தது.

மகளுக்கும்.... வைத்தியராக, அதுகும் ... குழந்தைகள் வைத்தியராக வர விருப்பம் இருந்தது.
நான்... பெண் பிள்ளைகளுக்கு, டாக்குத்தர்  வேலை சரி வராது.
கன  வருசம் படிக்க வேணும்,  இரவு, பகல். விடுமுறை நாட்கள் எல்லாம் வேலை வரும் என்று, மனதை மாற்றி ...  விட்டேன்.
இப்போ...  எனக்கும் சந்தோசம்,  அவளுக்கும் சந்தோசம். 😊

 

அவவின்  வேலையின் ஒரு பகுதியை...  காணொளியில் பார்க்கலாம்.
அதாவது .. நீங்கள் கடைக்குப்  போகும் போது,  கடை வாசலில் உங்கள் வாகனத்தை  நிறுத்தி,  
நீங்கள் இறங்கி ... நீங்கள் சென்ற வாகனத்தை,  உங்கள் கைத்தொலை பேசி மூலம்,
அதனை.. வாகன தரிப்பிடத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

அதே போல்....  நீங்கள் பொருட்கள் வாங்கிய பின், குறிப்பிட்ட இடத்துக்கு...
உங்கள் வாகனத்தை, உங்கள் கைத் தொலைபேசியில் இருந்தே வரவழைக்க முடியும்.

பிற் குறிப்பு:  இது இன்னும்... நடைமுறைக்கு வர, சில வருடங்கள் எடுக்கும். அதற்கான முற்கட்ட முயற்சிகளில், பலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அதில்... எனது மகளும், ஒருவர்.
இந்த விடயத்தில்... தொழிற்சாலை இரகசியங்கள் கட்டுக் கோப்பானவை என்பதால்...
இணையங்களில் வந்த, காணொளியை பார்த்து, ரசியுங்கள். 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

டிஸ்கி:  நாளைக்கு...   பின்னேரம் நாலு மணிக்கு பாஞ்ச்  அண்ணா குடுத்பத்தினர்  வீட்டிற்கு வருகிறார்கள். :grin:

பிறகு யார் அவரை வீட்டை கூட்டிக்கொண்டுபோய் விடுறது????:grin:

சும்மா பகிடிக்கு கேட்டனான்.....கோபிக்கப்படாது.:cool:

Link to comment
Share on other sites

உங்களுக்கும் உங்கள் பிள்ளைச்செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்சிறி😍. கடின உழைப்பின் அறுவடை பொங்கல் விருந்தாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். 

Link to comment
Share on other sites

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தமிழ் சிறீக்கும் மனைவிக்கும் ஆழுமைமிகு பிள்ளைகளுக்கும் பாராட்டுகளும்  நல் வாழ்த்துக்களும்

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

பிறகு யார் அவரை வீட்டை கூட்டிக்கொண்டுபோய் விடுறது????:grin:

சாமியாருக்கு மப்பு, வயது, மறதி எல்லாம் கூடுதுபோல் தெரிகிறது. நாங்கள் சிறியரின் வீட்டுக்குப் போவதற்கு தெரிந்தெடுத்தநாள் சனிக்கிழமை.... வெள்ளிக்கிழமை அல்ல..... !!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். தொழிற்துறைகளில் மென்மேலும் பல  சாதனைகள் படைத்து வாழ வாழ்த்துகின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, இணையவன் said:

விசுகு அண்ணா,

எனது பாட்டனாருக்கும் எனது அப்பாவுக்குமான உறவின் நுட்பங்களை ஓரளவேனும் எனது அறிவுக்கு எட்டியபடி அறிந்துள்ளேன். அதேபோல் எனது பெற்றோரைப்போல் வேறு யாரும் என்னை இந்த அளவில் உருவாக்கியிருக்க முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடனான எனது பெற்றோரின் அணுகுமுறை எனது பாட்டனை விட மிக வித்தியாசமானது. என்னை ஒரு தடவையேனும் அடித்ததில்லை. நாம் இலங்கையில் பிரிந்து 6 வருடங்களின் பின்னர் பிரான்சில் ஒன்றுசேர்ந்ததோது எமக்குள் நண்பனுக்கும் மகனுக்கும் இடைப்பட்ட ஒரு உறவுமுறையே ஏற்பட்டது. எந்த ஒரு நிலையுலும் நான் அவரை எனது தந்தைக்குரிய இடத்திலிருந்து விலகாமல் மிகவும் மரியாதையாகவே நடந்து கொண்டேன்.

இருந்தாலும் எமது உறவு முறையிலும் வழிகாட்டலிலும் சில குறைபாடுகள் இருப்பதாகவே தோன்றியது. எனது பிள்ளைகள் பிறக்கும் முன்னரே எனது அனுபவத்திலிருந்து எனது பிள்ளைகளுடன் எனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், எதை எடுத்துக் கொள்வது எதைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதுண்டு. அதேபோல் இப்போது எனது பிள்ளைகளுடனான எனது அணுகுமுறை எனக்கும் எனது தந்தைக்குமான உறவைவிட வித்தியாசமானது. எனது மகள் என்னில் எனக்குப் புரியாத சில குறைகளைக் காணலாம். அவற்றைத் தனது எதிர்கால வாழ்வில் நிச்சயம் நிவர்த்தி செய்வாள். 

இன்று சரியாக இருப்பது நாளை நிறைவற்றதாக இருக்கலாம். அதற்காக இன்று செய்தது எப்போதுமே சரி என்ற பிடிவாதம் எம்முடனே அழிந்து போகும். அடுத்த சமுதாயம் இன்றைய அனுபவங்களிலிருந்து தெளிவான முடிவுகளை எடுக்கலாம். அவையும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கப்படும். இதுதான் மானிட வளர்ச்சி.

இந்தப் பரிணாம வளர்ச்சியானது சமுதாய முன்னேற்றத்துக்கு மட்டுமல்லாது விஞ்ஞானம் அரசியல் சமயம் கல்வி போன்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும். 

உங்களது  கருத்து சார்ந்து மாற்றுக்கருத்தில்லை  எனக்கு.

  என்னைப்பொறுத்தவரை

அடியாத மாடு  பணியாது

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

பரிமான  வளர்ச்சி  என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட அனுபவங்களையும்

பெறு  பேறுகளையும்  தருகிறது

கண்டிப்பாக  வளர்க்கப்பட்ட  இடங்களிலும்  குறைகள்  உள்ளன

நீங்கள்  எழுதியது போல மறு  பக்கமும்குறைகள்  உள்ளன

இவை  இரண்டையும்  கடந்து 

அனுபவத்தினூடாக உணர்ந்து தான் வாழ்வை  செப்பனிடவேண்டும்

உங்களுக்குத்தெரியும்

பிரான்சில்  பிள்ளைகளை  பெற்றோர்  தண்டிப்பதிலிருந்த   இறுக்கமான சட்டத்தை  தளர்த்த  இருக்கிறார்கள்

காரணம் அனுபவம்

விளைச்சல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நுணாவிலானுக்கும் உந்த விளையாட்டெல்லாம் முதலே தெரியும். மற்றவர்களுக்கும் தெரியட்டும் என்றுதான்,  இப்படி ஒரு தூண்டில் போட்டால்தான்  மீன்  வந்து மாட்டும் என்று சும்மா எறிந்து விட்டனாங்கள் . அது சரியா வேலை செய்திட்டுது .இல்லையா நுணா என்ன பேசாமல் இருக்கிறீங்கள்.........!  😁

மீண்டும் பொறுப்பான பிள்ளைகளுக்கும் பின்னால் நின்று ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.....!  🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணா குடுமபத்தினருக்கு வாழ்த்துக்கள், பிள்ளைகளுக்கு கண்டிப்பும் அரவணைப்பும் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறி அண்ணா குடும்பத்தினருக்கும்,பிள்ளைகளுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனங்கனிந்த வாழ்த்துக்கள் தமிழ்சிறி தம்பதியினருக்கும்,பிள்ளைகளுக்கும்...வாழ்க்கையில் மெம் மேலும் உயர கடவுள் ஆசிர்வதிக்கட்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2019 at 6:17 PM, பெருமாள் said:

பொறுப்பாக தமது கடமையை உணர்ந்த பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.......!

வாழ்த்துக்களுக்கு... நன்றி பெருமாள்.

On 1/16/2019 at 7:07 PM, குமாரசாமி said:

தாய் தந்தையருக்கும் பிள்ளைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி, குமாராசாமி அண்ணா.

On 1/16/2019 at 7:33 PM, Nellaiyan said:

வாழ்த்துக்கள் தமிழ் சிறி

வாழ்த்துக்களுக்கு... நன்றி நெல்லையான்  அண்ணா.
 

 

On 1/16/2019 at 7:47 PM, Kavallur Kanmani said:

பொறுப்புடன் படித்து சிறப்புடன் தொழில் பெற்றிருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அவர்களை நற்பிரசைகளாக வளர்த்து வாழக் கற்றுக்கொடுத்த தமிழ்சிறி தம்பதிகளுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள். 

மிக்க, நன்றி கண்மணி அக்கா.
சில காலங்களுக்கு  முன்... உங்கள் மகளும்  பட்டப்  படிப்பை முடித்த போது...
நீங்கள், எழுதிய எழுத்துக்கள்... எனது மனதில், இன்றும்... நினைவில் வந்து போகும் அளவில் மறக்க முடியாதவை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி குடும்பத்தினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சிறி அண்ணா👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.