Jump to content

மகாராஷ்டிராவில் பள்ளிகள், கல்லூரிகள் அருகே நடன பார்கள் நடத்த இருந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
dace bar maharashtraபடத்தின் காப்புரிமை Getty Images

மகாராஷ்டிராவில் நடன பார்கள் நடத்த உரிமம் பெற அம்மாநில அரசு விதித்த கடுமையான விதிகளை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் பார் அரைகளில் ஆபாச நடன தடை மற்றும் (அங்கு) பணிபுரியும் பெண்கள் மரியாதை பாதுகாப்பு சட்டம், 2016-இன் சில சரத்துகளில் மாற்றம் செய்து, பார்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 11:30 மணி வரை செயல்படலாம் என நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மாநில அரசின் எந்தெந்த விதிகள் நீக்கப்பட்டுள்ளன?

வழிபாட்டு தளங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருக்கும் இடங்களில் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் நடன பார்கள் நடத்த மாநில அரசு தடை விதித்திருந்தது. உச்சநீதிமன்றம் இந்த விதியை ரத்து செய்துள்ளது.

மாநில அரசின் விதிகளின்படி, நடன பார்களில் பணிபுரியும் பெண்களுக்கு அங்கு வரும் வாடிக்கையாளர்கள் டிப்ஸ் வழங்க இருந்த தடையையும் நீதிமன்றம் விலக்கியுள்ளது.

அதே போல நடன பார்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது.

நடன பார்களில் சிசிடிவி கேமராக்கள் வைப்பது கட்டாயம் என்ற மாநில அரசின் விதியை, நீக்கியுள்ள நீதிமன்றம், தனியுரிமை பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது.

dace bar maharashtra supreme courtபடத்தின் காப்புரிமை Getty Images

எந்தெந்த விதிகள் தொடரும்?

  • ஆபாச நடனங்கள் கூடாது.
  • நடன பார்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே ஊதிய ஒப்பந்தம் இருக்க வேண்டும்.
  • பார்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 11:30 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.
  • நடன பார்களில் நடனமாடும் பெண்கள் மீது ரூபாய் தாள்களை தூவுவது அனுமதிக்கப்படாது.
dace bar maharashtraபடத்தின் காப்புரிமை Getty Images

வழக்கின் பின்னணி என்ன?

2015ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு, அம்மாநிலத்தில் நடன பார்கள் நடத்த தடை விதித்து சட்டம் இயற்றியது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ஆர். ஆர். பாட்டில், நடன பார்களால் இணைய தலைமுறையினர் ஆபத்தான நிலைக்கு செல்வதாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எனவே இந்த நடன பார்களால் மகாராஷ்டிராவில் இருக்கும் பெண்கள் அவதிப்படுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த முடிவு அம்மாநிலத்தில் பலராலும் வரவேற்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த முடிவினை எதிர்த்து நடன பார்களின் உரிமையாளர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதையடுத்து மாநில அரசு விதித்த தடை தவறானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இருப்பினும், புதிய சட்டத்தை இயற்றிய மாநில அரசு, நடன பார்கள் மீது விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து செயல்படுத்தி வந்தது. அதனை எதிர்த்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் அந்த தடை சட்டத்துக்கு எதிரானது என்று நீதிமன்றம் கூறி, உரிமையாளர்களிடம் உரிமத்தை திருப்பி தருமாறு உத்தரவிட்டது.

பள்ளி, கல்லூரி dace bar maharashtraபடத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், அரசின் கடுமையான விதிகளால் நடன பார்களின் உரிமையாளர்கள் உரிமம் பெறுவது கடினமாக இருந்தது.

மகாராஷ்டிரா அரசின் வழக்கறிஞர் கூறுவது என்ன?

மாநில அரசால் இயற்றப்பட்ட நடன பார்கள் நடத்த தடை விதிக்கும் 'மகாராஷ்டிரா நடனமாடும் இடங்கள் மற்றும் பார்கள் சட்டம், 2014' நீக்கப்படவில்லை. அதில் இருக்கும் சில விதிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. அதனால், இந்த தீர்ப்பை மகாராஷ்டிரா அரசு வரவேற்கிறது என்று வழக்கறிஞர் நிஷாந்த் கடனேஷ்வர்கர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாநில அரசின் விதிகளை முறையாக பின்பற்றி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்படும்.

பார் உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

மும்பையை சேர்ந்த பார் உரிமையாளரான விகாஸ் சாவந்த் கூறுகையில், "ஐந்தரை மணி நேரம் மட்டுமே பார்கள் திறக்கப்பட வேண்டும் என்று கூறுவது வருத்தமளிப்பதாக உள்ளது. முன்பெல்லாம் அதிகாலை ஒன்றரை மணி வரை பார்களை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், மீண்டும் எங்கள் தொழிலை தொடங்கலாம் என்பதில் மகிழ்ச்சி. இதன் பிறகு தொழில் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். சட்டப்படி உரிமம் இருக்கிறது. மற்ற தொழில்களை முன்னேற விடுவது போல, எங்கள் தொழிலிலும் அரசு முன்னேற விட வேண்டும்" என்று கூறினார்.

சமூக ஆர்வலர்கள் கூறுவது என்ன?

நடன பார்களில் பணிபுரியும் பெண்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக ஆர்வலரான வர்ஷா கலே உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறார். "பாரில் பணிபுரிபவர்கள் சொல்ல முடியாத அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள். பல மைனர் பெண்களும் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். பல பெண்கள் இதனால் தெருக்களில் அலைந்து சிலர் பிச்சை எடுக்கவும் செய்தனர். சிலர் இறந்துவிட்டனர்." என்று தெரிவித்தார்.

"முன்பு படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழலில் இருந்த பெண்கள், இந்த தொழில் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் சம்பாதித்து மற்றவர்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். நடன பார்கள் சுமார் 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு பணிபுரிந்த பல பெண்கள் அத்தொழிலை விடுத்து மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் ஆகியுள்ளனர்" என்று கலே தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-46906835

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.