Jump to content

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: இரண்டாம் – மூன்றாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: இரண்டாம் – மூன்றாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்

download-21-720x450.jpg

ஆண்டின் முதலாவது கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

107 ஆண்டுகள் பழமையான கிரண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட இத்தொடர், இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை, பதினான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இது ஆண்டின் முதல் கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் என்பதால், இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகளும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

சரி தற்போது இத்தொடரின் இரண்டாம் சுற்று மற்றும் மூன்றாம் சுற்று போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்…

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியொன்றில், ஒஸ்திரியாவின் டோமினிக் தியேம், அவுஸ்ரேலியாவின் அலெக்ஸி பாப்பிரைன்  உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இப்போட்டியில், முதலிரண்டு செட்டுகளையும் 7-5, 6-4 என்ற செட் கணக்குகளில் அலெக்ஸி பாப்பிரைன் கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில், 2-0 என அலெக்ஸி பாப்பிரைன் முன்னிலை பெற்றிருந்த போது, டோமினிக் தியேம், வலி காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

இதனால் அலெக்ஸி பாப்பிரைன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

……………..

இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியொன்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவுடன்  மோதினார்.

இரசிகர்களின் உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என ஜோகோவிச், கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் சோங்கா, ஜோகோவிச்சுக்கு சற்று நெருக்கடி கொடுத்தார். எனினும் அந்த நெருக்கடிகளை திறம்பட சமாளித்த ஜோகோவிச், செட்டை 7-5 என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில், ஆக்ரோஷம் கலந்த நிதானத்துடன் விளையாடிய ஜோகோவிச், செட்டை 6-4 என கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார.

…………..

மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்வும், பிரான்ஸின் ஜெரமி சார்டியும்  மோதினர்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது, இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்திருந்தது.

இதில் முதல் செட்டே டை பிரேக் வரை நகர்ந்தது. இந்த செட்டில் ஆக்ரோஷமாக விளையாடிய அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் 7-6 என செட்டை கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அதே ஆக்ரோஷத்தை தொடர்ந்த, அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், இந்த செட்டையும் 6-4 என கைப்பற்றினார்.

இதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெரமி சார்டி, மூன்றாவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

நான்காவது செட்டில், இருவருக்கும் கடுமையான போட்டி நிலவ, இந்த செட் டை பிரேக் வரை நீண்டது. இதில் 7-6 என ஜெரமி சார்டி, செட்டை வெற்றிக்கொண்டார்.

இருவரும் தலா இரண்டு செட்டுகளை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கு ஐந்தாவது செட், இரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது.

எனினும், இப்போட்டியில் ஜெரமி சார்டியை எழுச்சிபெற விடாமல், சிறப்பாக விளையாடிய அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், இறுதி செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு நுழைந்தார்.

……………..

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியொன்றில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், அமெரிக்காவின் சோபியா கெனின்னைஎதிர்கொண்டார்.

இப்போட்டியில், முதல் செட்டை சிமோனா ஹெலப், 6-3 என கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், சிமோனா ஹெலப்புக்கு சோபியா கெனின் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட் டை பிரேக் வரை நகர்ந்தது. இதில் கடுமையாக போராடி 7-6 என சோபியா கென், கைப்பற்றினார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.
இதில் சிறப்பாக விளையாடிய சிமோனா ஹெலப், 6-4 என செட்டைக் கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

…………

இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியொன்றில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சும், பிரான்ஸின் அலிஸ் கோர்னெட்டும் மோதினர்.

இப்போட்டியில், வீனஸ் முதல் செட்டை 6-3 என கைப்பற்ற, இரண்டாவது செட்டை 6-4 என அலிஸ் கோர்னெட் கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில், ஆக்ரோஷமாக விளையாடிய வீனஸ் வில்லியம்ஸ் 6-0 என எளிதாக செட்டைக் கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
………….

மற்றொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியொன்றில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும். கனடாவின் யூஜென்னி பவுச்சர்ட்டும்  பலப்பரீட்சை நடத்தினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், செரீனா வில்லியம்ஸ் முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பவுச்சர்ட், செரீனாவிற்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அந்த எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கிய செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது செட்டையும் 6-2 என எளிதாக கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

……………………
அடுத்ததாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்சை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், 6-2 என முதல் செட்டை எளிதாக கைப்பற்றிய ரோஜர் பெடரர், இரண்டாவது செட்டில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டார்.

எனினும், அந்த தடுமாற்றத்தை பெரிதும் பொருட்படுத்தாத பெடரர், செட்டை 7-5 என கைப்பற்றினார்.

அதன்பிறகு, மூன்றாவது செட்டில் சிறப்பாக விளையாடிய ரோஜர் பெடரர், 6-2 என செட்டைக் கைப்பற்றி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

……………

இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டியொன்றில், கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் ஸிட்ஸிபாஸ், ஜோர்ஜியாவின் நிக்கோலஸ் பஷிலாஸ்விலியுடன் மோதினார்.

இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என ஸ்டெபனோஸ் ஸிட்ஸிபாஸ் கைப்பற்ற, இரண்டாவது செட்டை 6-3 என நிக்கோலஸ் பஷிலாஸ்விலி கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இதனையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில், ஸ்டெபனோஸ் ஸிட்ஸிபாஸிற்கு பஷிலாஸ்விலி கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட் டை பிரேக் வரை நகர்ந்தது.

எனினும் நெருக்கடிகளை திறம்பட சமாளித்த ஸ்டெபனோஸ் ஸிட்ஸிபாஸ், செட்டை 7-6 என கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற நான்காவது செட்டிலும் சிறப்பாக விளையாடிய ஸ்டெபனோஸ் ஸிட்ஸிபாஸ், 6-4 என செட்டைக் கைப்பற்றி நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

 

http://athavannews.com/அவுஸ்ரேலிய-பகிரங்க-டென்-13/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.