Jump to content

குறுக்கெழுத்துப் போட்டி


Recommended Posts

குறுக்கெழுத்துப் போட்டி இல - 28

kurukku28nz8.jpg

இடமிருந்து வலம்

1 - தயிரில் இருந்து கிடைப்பது

3- இது கறுத்தால் மழை வரும்

6- தந்தம் உள்ள மிருகம்

8- தேய்ந்த நிலவு

10- இந்தியாவை கலக்கிய கொள்ளைக்காரி

12-இது படியாத கை என அரசியல்வாதிகள் கூறுவர்

13- சேறு

15- அணுக்களால் ஆனது குழம்பியுள்ளது

17-சமையலறை ஆயுதம்

21- இதைப்போல் அண்ணன் தம்பி உதவாதாம்

22- இளைஞர் யுவதிகளின் நாள்

மேலிருந்து கீழ்

2- இதுவும் ஒரு அளவையாகும்.

4- இது கொடுத்தால் நண்பனும் பகைவனாவான்

5- மணப்பெண் அணிவது

7- செல்லப்பிராணி தலைகீழாகவுள்ளது

8- உருக்கிச் செய்வது தலைகீழாகவுள்ளது

9-இது பிறாந்தால் நியாயம் பிறக்குமாம் தலைகீழாகவுள்ளது.

11- மாடு குதிரை என்பவற்றுக்கு அடிப்பது.

13-கிரகம்

14-திக்கு

15- விதியை இதனால் வெல்லலாமாம்

16-இடையூறு

18-இன்னொருவர் குழந்தையை எடுத்து வளர்ப்பது குழம்பியுள்ளது

19- குழம்பியுள்ளது

20- சாலை போட உதவுவது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 76
  • Created
  • Last Reply

வணக்(கம்) நிலா அக்கா..(வந்துட்டோமல) :rolleyes: ..இன்னைக்கு தான் இதை பார்த்தனான் அல்லோ..யாருமே விளையாடல்ல போல ஆனபடியா நான் விளையாட வந்துட்டன் அல்லோ..எப்படி பந்துகளை முகம் கொடுக்க போறன் எண்டு பார்போமா.. :)

ஆனா ஒன்னு.."அம்பயர்" எனக்கு தான் ஆதரவு வழங்கனும் உது எப்படி இருக்கு...சரி மைதானத்தில இறங்கிறன் என்ன..

இடமிருந்து வலம்

1 - தயிரில் இருந்து கிடைப்பது - மோர் (எண்டு நினைக்கிறன் சரியோ தெரியா)

3- இது கறுத்தால் மழை வரும் - மேகம் (மேகம் கறுக்குது எண்டு "ஜோ" அக்கா பாட்டு பாடினவா அல்லோ) :wub:

6- தந்தம் உள்ள மிருகம் - யானை..(ஓ..எனக்கு யானை எண்டா பயம்)

8- தேய்ந்த நிலவு - பிறை (நிலா அக்கா நீங்களும் தேய்வியளோ)..

10- இந்தியாவை கலக்கிய கொள்ளைக்காரி - பூலான் (யாரோ நல்ல வேகமா பந்த போட்டுவிட்டீனம்).. :D

12-இது படியாத கை என அரசியல்வாதிகள் கூறுவர் - கறை (எண்ட கையும் அப்படின்னா நம்புவியளோ??)..

13- சேறு - சகதி (அடித்து போட்டன் "சிக்சர்").. :)

15- அணுக்களால் ஆனது குழம்பியுள்ளது - கனிமம் (மறுபடி யாரோ வேகமா பந்த போட்டுவிட்டீனம்)..

17-சமையலறை ஆயுதம் - கத்தி (பலருக்கு ஆயுதம் என்ன)..

21- இதைப்போல் அண்ணன் தம்பி உதவாதாம் - அடி (உப்படி சொல்லி சொல்லி தான் எண்ட அம்மா அடிக்கிறவா)

22- இளைஞர் யுவதிகளின் நாள் - காதலர் தினம் (தாத்தா,பாட்டிமாரும் கொண்டாடலாம் அல்லோ).. :)

ஒரு மாதிரி முதல் 25 "ஓவரை" சமாளித்து போட்டன் அடுத்த 25 "ஓவர்" இருக்கு என்ன..

மேலிருந்து கீழ்

2- இதுவும் ஒரு அளவையாகும். - யார் (சுழற்பந்து வீச்சாளர் வந்துட்டாங்க போல)..

4- இது கொடுத்தால் நண்பனும் பகைவனாவான் - கடன் (அடித்து போட்டன் "சிக்சர்") :)

5- மணப்பெண் அணிவது - கூறை (ஏன் சுடிதார் அணிய கூடாதா)..

7- செல்லப்பிராணி தலைகீழாகவுள்ளது - பூனை (மியாவ்..மியாவ்)

8- உருக்கிச் செய்வது தலைகீழாகவுள்ளது - கம்பி (மறுபடி எங்கன்ட அணியில ஒருத்தர் ஆட்டமிழந்து விட்டார்) :D

9-இது பிறாந்தால் நியாயம் பிறக்குமாம் தலைகீழாகவுள்ளது. - கலகம் (எங்கன்ட நாரதர் மாமா)..

11- மாடு குதிரை என்பவற்றுக்கு அடிப்பது. - லாடம் (அவைக்கு நோகாதா??)..

13-கிரகம் - சனி (ஏழரை சனி எனக்கு முடிந்து போச்சு)

14-திக்கு - திசை..

15- விதியை இதனால் வெல்லலாமாம் - மதி (எனக்கு இல்ல எண்டு நீங்க சொல்லுறது கேட்குது)..

16-இடையூறு - கலி (மறுபடி எங்கன்ட அணியில ஒருவர் ஆட்டமிழந்து விட்டார்)..

18-இன்னொருவர் குழந்தையை எடுத்து வளர்ப்பது குழம்பியுள்ளது - தத்து

19- குழம்பியுள்ளது - அம்மா (என்னை குழப்பிட்டியள்)..

20- சாலை போட உதவுவது - தார் (கடசி பந்தில "சிக்சர்" ஆக்கும்).. :(

மட்டுபடுத்தபட்ட 50 "ஒவர்களின்" நிறைவில் எமது அணி அப்படி இப்படி விளையாடி இருக்கிறது..எனவே எனி மத்தியஸ்தர் வந்து வெற்றி தோல்வியை பற்றி சொல்லுங்கோ என்ன..(சிறபாட்டகாரருக்கு பரிசு இருந்தா அதை எனக்கு தாங்கோ சொல்லிட்டன்).. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.