Jump to content

#10YearChallenge: நாம் ஏன் இந்த சேலஞ்சை தவிர்க்க வேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிபிசி இந்தி சேவை டெல்லி
  •  
பேஸ்புக்

பேஸ்புக் அல்லது ட்விட்டரில் நீங்கள் இருந்தால் #10YearChallenge எவ்வளவு வைரலாக பரவியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரோ தற்போது மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கலாம். பிரச்சனை இல்லை.

முதலில் இந்த போக்கில் எந்த தீங்கும் இல்லாத மாதிரிதான் இருந்தது. ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னால் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும்.

ஏதேனும் தொழில் யோசனையின் ஒரு பகுதியா இது? ஒரு தரவு வங்கி தயாரிப்பதற்காக, உங்கள் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வேண்டுமென்றே கேட்கிறார்களா? இதற்கு பின் ஏதேனும் சதித்திட்டம் இருக்கிறதா? இதில் இருந்து நாம் தள்ளி இருக்க வேண்டுமா?

பேஸ்புக் கூறுவது என்ன?

பேஸ்புக்படத்தின் காப்புரிமை Getty Images

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடுவதற்கு முன்னால், இதுகுறித்து பேஸ்புக் என்ன கூறியுள்ளது என்று பார்க்கலாம். "இது பயன்பாட்டாளர் ஒருவரால் தொடங்கப்பட்ட மீம். தானாகவே வைரலாகி உள்ளது. இந்த ட்ரென்டை பேஸ்புக் தொடங்கவில்லை" என்கிறது.

"ஏற்கனவே இருக்கும் புகைப்படத்தை வைத்துதான் மீம்கள் செய்யப்படுகின்றன. பேஸ்புக் இதனை எந்த வகையிலும் பயன்படுத்தவில்லை. ஆனால், பேஸ்புக் பயனாளர்கள், முகம் அடையாளப்படுத்தும் தன்மை என்று அறியப்படும் பேஷியல் ரெகக்னிஷன் வசதியை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்."

பேஸ்புக் தெளிவாக கூறியிருக்கிறது. ஆனால், #10YearChallenge குறித்து மட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த மாதிரியான விளையாட்டுகள் அல்லது மீம்கள் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கின்றன. இவற்றின் திட்டம் தரவுகளை சேகரிப்பது.

இந்த சவால் ஒரு டைம் பாஸோ அல்லது கேளிக்கையோ இல்லை, இதிலிருந்து விலகி இருப்பதே நல்லது.

இது நாம் அச்சப்பட வேண்டிய விஷயமா?

பேஸ்புக்படத்தின் காப்புரிமை Getty Images

இதனால் ஏதும் தீங்கு ஏற்படுமா என்று சைபர் சட்ட வல்லுநர் பவன் டக்கலை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. ஆம், சைபர் கிரிமினல்கள் இதனை தவறாக பயன்படுத்தலாம்" என்று அவர் தெரிவித்தார்.

10 ஆண்டுகள் பழைய புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்வதால் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், "இந்த புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இதுவரை ஏதுமில்லை. ஆனால், இவ்வளவு நாட்களாக கிடைத்திராத பழைய புகைப்படம் இப்போது கிடைத்துள்ளது. மக்கள் அவர்களாகவே கொடுக்கின்றனர்" என்றார்.

"இந்த புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் பகிரப்படும்போது, அவற்றை மார்ஃப் செய்து மாற்றலாம், உங்களை இலக்காக ஆக்க முடியும்."

ஆனால், பேஸ்புக் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? "பேஷியல் ரெகக்னிஷன் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை வைத்து 10 ஆண்டுகளில் எந்த அளவிற்கு வடிவம் மாறியுள்ளது என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்" என்கிறார் டக்கல்

பழைய புகைப்படங்கள் ஏன் ஆபத்தானவை?

பேஸ்புக்படத்தின் காப்புரிமை Getty Images

இந்த புகைப்படங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது தானே? ஏற்கனவே பேஸ்புக்கில் இருக்கும் புகைப்படம், தற்போது இதனால் என்ன ஆபத்து?

"குறிப்பிட்ட புகைப்படம் பேஸ்புக்கில் ஏற்கனவே இருப்பது உண்மைதான். ஆனால், அது எங்கேயோ இருந்தது. இந்த சவாலை ஏற்று உங்கள் புதிய புகைப்படத்தோடு, பழைய புகைப்படத்தை வைக்கிறீர்கள்."

"இதுபோன்று செய்யும்போது, இதுவரை சமூக வலைதளங்களில் இல்லாத புதிய தரவுகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதனை சைபர் கிரிமினல்கள் தவறாக பயன்படுத்த முடியும்."

"எனவே, இது மாதிரியான சவால்களை தவிர்ப்பது அவசியம். ஏனென்றால், நீங்கள் உங்கள் புகைப்படத்தை பகிரும்போது, நிறுவனங்களுக்கு உங்களது பழைய மற்றும் முக்கியமான தகவல்களை தருகிறீர்கள். மேலும், எந்த அளவிற்கு அவற்றை தவறாக பயன்படுத்த முடியும் என்பதை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது" என்றார் அவர்.

எந்தெந்த நிறுவனங்கள் இதன் மீது ஒரு கண் வைத்திருக்கின்றன?

டக்கல் மாதிரியான நிபுணர்களின் எச்சரிக்கை ஒருபுறமிருந்தாலும், இது ஒரு சாதாராண படம் தானே. இதை வைத்து நிறுவனங்கள் எவ்வாறு பலனடையமுடியும் மேலும் இதை எப்படி அவர்கள் பயன்படுத்தக்கூடும் என பலருக்கும் சந்தேகம் எழக்கூடும்.

உலக அளவில் பிரசித்திப் பெற்ற நாளிதழான வயர்ட் இது குறித்து சொல்வதென்ன?

யாராவது உங்களது பேஸ்புக் படங்களை பேஷியல் ரெக்ககனைஷன் அல்காரிதத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினால் அது தவறாகுமா?

(பேஷியல் ரெக்ககனைஷன் என்பது கணிதமுறைப்படி உங்களின் முக அமைப்பை கணக்கிட்டு தரவுகளை சேகரித்து வைக்கும் ஒரு முறையாகும்.)

தொழில்நுட்பம் என வரும்போது நீங்கள் என்ன தரவுகளை உற்பத்தி செய்கிறீர்கள் மற்றும் அந்த தரவுகள் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியம்.

இம்மாதிரியான சவால்களில் இருந்து உங்களின் முகம் உங்களின் வயது சார்ந்து எப்படி மாறியுள்ளது என்ற தகவல்களை அவர்களின் விளம்பரத்துக்கு பயன்படுத்தமுடியும்.

பேஸ்புக்படத்தின் காப்புரிமை Getty Images

அடுத்தது என்ன?

வயர்ட் நிறுவனத்தின் கருத்துப்படி, இந்த முக ஆதாரங்கள் எந்தவொரு தருணத்திலும் காப்பீடுக்கான மதிப்பீடு மற்றும் உடல் நலன் சார்ந்த சேவைகளில் பயன்படுத்த முடியும். நீங்கள் உங்களின் வயதை ஒப்பிடும்போது விரைவாக முதுமை அடைகிறீர்கள் எனில் நீங்கள் காப்பீடு நிறுவனங்களுக்கு நல்ல நுகர்வோர் கிடையாது.

பேஸ்புக்படத்தின் காப்புரிமை Getty Images

2016-ம் ஆண்டு அமேசான் நிறுவனம் முக அமைப்பை கண்டுபிடிக்கும் சேவைகளை துவக்கியது பின்னர், அமெரிக்க அரசு நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. இந்த தொழில்நுட்பம் தனி நபர் தகவல்கள் குறித்த கவலைகளை அதிகரித்ததை இந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

காவல்துறைக்கோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துக்கு இந்த தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், அவர்களுக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தரவுகள் மட்டும் கிடைப்பதில்லை, குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களின் தகவல்களும் அவர்களின் கைகளுக்குச் செல்கின்றன என்ற அச்சகமும் இன்னமும் இருக்கிறது

https://www.bbc.com/tamil/india-46908869

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.