Jump to content

கத்தரிக்காய் மிளகு கறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிக்காய் மிளகு கறி ஒரு சுவையான டிஷ்.  சூடான ரைஸ் உடன் பரிமாறவும்.

Brinjals

<img class="alignnone size-full wp-image-16470" itemprop="image" src="https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals.jpg" alt="Brinjals" width="553" height="400" itemprop="image" srcset="https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals.jpg 553w, https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals-300x217.jpg 300w, https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals-40x30.jpg 40w" sizes="(max-width: 553px) 100vw, 553px" title="Brinjals">

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – அரை கப் (நறுக்கியது)

தேங்காய் எண்ணெய் – இரண்டு தேகரண்டி

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

பூண்டு – இரண்டு பல்

மஞ்சள் தூள் – சிறிதளவு

தேங்காய் பால் – முக்கால் டம்ளர்

கரிவேபில்லை – சிறிதளவு

அரைக்க:

பூண்டு – நான்கு பல்

மிளகு – ஒன்று கால் டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

முன்றையும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை

கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், பூண்டு, கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின், அரைத்த விழுது சேர்த்து கிளறி சிம்மில் வைத்து எட்டு நிமிடங்களுக்கு நன்றாக வேகவிடவும்.

பிறகு, தேங்காய் பால் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து கிரேவி பதம்வந்ததும் கரிவேபில்லை போட்டு இறக்கவும்.

https://www.awesomecuisine.com/recipes/22996/kathirikai-milagu-curry-in-tamil.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியும் ,இந்த கத்தரிக்காய் கறிக்கு கூட இன்னும் நாலு கறி சேர்த்து வைத்து சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.......!   😁

எனக்கு கத்தரிக்காய் அதிகம் பிடிக்காது. வீட்டில் கத்தரி , வெண்டி சமைத்திருந்தால் மனிசி என்மீது  கோபத்தில் இருக்கென்று அர்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Brinjal-Vishnavi-F1-200x200-0.jpg

முள்ளு கத்தரிதான் நம்மட பாரம்பரிய நாட்டுரகம் ..  சுவையும் கூட .. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

எனக்கு தெரியும் ,இந்த கத்தரிக்காய் கறிக்கு கூட இன்னும் நாலு கறி சேர்த்து வைத்து சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.......!   😁

எனக்கு கத்தரிக்காய் அதிகம் பிடிக்காது. வீட்டில் கத்தரி , வெண்டி சமைத்திருந்தால் மனிசி என்மீது  கோபத்தில் இருக்கென்று அர்த்தம்.

கத்தரிக்காய் கறியை விரும்பாத முதல் ஆளை இப்பதான் பார்க்கின்றேன்.
சுவி.... கத்தரிக்காய் பால் கறியோ, கத்தரிக்காய் பொரித்த கறியோ, கத்தரிக்காய் பொரியலோ... 
எந்த வடிவத்தில் வந்தாலும், அதன் சுவையே தனி.
உங்கள் வீட்டில், கத்தரிக்காய் சமைக்கத் தெரியவில்லை என்று நினைக்கின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

Brinjal-Vishnavi-F1-200x200-0.jpg

முள்ளு கத்தரிதான் நம்மட பாரம்பரிய நாட்டுரகம் ..  சுவையும் கூட .. 😊

இது எப்பவாலும் இருந்திட்டு தான்... தமிழ் கடைக்கு வரும். 
அப்போ... 2 கிலோ அளவில் வாங்கி ஆசை தீர  சமைத்துக் கொள்வோம். 
சாதுவாக பொரித்து  கறி  வைக்க, நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

எனக்கு தெரியும் ,இந்த கத்தரிக்காய் கறிக்கு கூட இன்னும் நாலு கறி சேர்த்து வைத்து சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.......!   😁

எனக்கு கத்தரிக்காய் அதிகம் பிடிக்காது. வீட்டில் கத்தரி , வெண்டி சமைத்திருந்தால் மனிசி என்மீது  கோபத்தில் இருக்கென்று அர்த்தம்.

எனக்கும் பெரிசாய் பிடிக்காது....அதோடை  கத்தரிக்காயிலை கிரந்தியும் எக்கச்சக்கம்...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

கத்தரிக்காய் கறியை விரும்பாத முதல் ஆளை இப்பதான் பார்க்கின்றேன்.
சுவி.... கத்தரிக்காய் பால் கறியோ, கத்தரிக்காய் பொரித்த கறியோ, கத்தரிக்காய் பொரியலோ... 
எந்த வடிவத்தில் வந்தாலும், அதன் சுவையே தனி.
உங்கள் வீட்டில், கத்தரிக்காய் சமைக்கத் தெரியவில்லை என்று நினைக்கின்றேன். :grin:

நீங்கள் தப்பாய் புரிந்து கொண்டீர்கள் யுவர் ஆனர். அதிகம் பிடிக்காது . ஆனால் சாப்பிடுவதுண்டு. வெண்பொங்கலும் கத்தரி பால்கறியும் பிடிக்கும் . நல்லெண்ணையில் பொரித்த கத்தரிக்காயும் பிட்டும் பிடிக்கும். பச்சையான வெண்டிக்காயும் சாப்பிடுவேன்.மற்றும்படி எனக்கு கத்தரி,வெண்டி  குழம்பு வைத்தால் அதை அப்படியே முதலில் விழுங்கி விடுவேன். (மட்டுவில் அம்மன் கோயிலில் ஸ்பெஷலே கத்தரிக்காய் பால்கறியும்  வெண்பொங்கலும்தான்) .........!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் தமிழர் எல்லாம் ஜேர்மன், ஏனைய ஐரோப்பிய நாடுகள், பலர் இங்கிலாந்தில் எந்த மொழி பேசினார்களோ - அந்த மொழியில் என ஊகிக்கிறேன். ஆனால் இவர்களுக்கு மொழி ஒரு பெரிய தடை என்கிறது அந்த பதிவு. இந்தியாவில் ஒருத்தரை சண்டை பிடிக்கும் பகுதியில் கிளீனர் என அழைத்துப்போய் - சண்டையே பிடிக்க வைத்துள்ளார்களாம்.
    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா? பிற்சேர்க்கை ஒலிப்பதிவை கேட்டேன், இதில் சிலாகிக்கபடுவது கிட்டதட்ட முழுவதும் ரஸ்யா போனவர்கள் பற்றியே. எனிலும் உக்ரேனுக்கும் இப்படி போவதாக இரெண்டு இடத்தில் சொல்லவும் படுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.