Jump to content

ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் :

January 19, 2019

Zakir-Naiks-family_SECVPF.jpg?zoom=3&res

தலைமறைவாக உள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமுலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.

பங்களாதேசின் டாக்காவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக மீது குற்றம் சாட்டப்பட்டு அவரை கண்காணிக்குமாறு பங்களாதேஸ் அரசு இந்திய அரசினை கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் சோதனை Nமுற்கொள்ளப்பட்டு அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.

மேலும் தற்போது மலேசியாவில் உள்ள ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டு போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கறுப்பு பண பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புடைய மும்பை மற்றும் புனேவில் உள்ள ஜாகிர் நாயக் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களை முடக்கி அமுலாக்கத்துறை இன்று உத்தரவிட்டது

 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.