Jump to content

பொங்கல் தமிழ் தேச பண்பாட்டு அடையாளம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்?

pongal-dk-invitation.jpg

திருவிழாக்கள் தேசிய இனங்களின் பண்பாட்டுச் சின்னம். பண்பாடானது மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை. அது மொழியாக, அறிவியலாக, தொழிலாக, கலையாக, விழாவாக வெளிப்படுகிறது. அவ்வகையில் பொங்கல் திருநாள் தமிழ்த் தேசிய திருநாள்.

பண்பாட்டு அடையாளங்கள் அந்த தேசிய இனங்களின் வரலாற்றைக் குறிப்பது. அவ்வகையில் பொங்கலை தமிழர் திருநாள் என்று குறிக்காமல் திராவிடர் திருநாள் என்று குறிப்பது மிகப்பெரிய திரிபு வேலை

பொங்கல் திருநாள் மட்டுமே தமிழனின் உழைப்பையும், அறிவையும் உலகிற்கு உணர்த்தும் தமிழ்த்தேசிய திருநாள். தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வாழ்வியல் திருநாள். இரவும், பகலும் உழைத்து வயலில் செழித்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் உழவர் திருநாள். உழைப்புக்கும், உழைப்புக் கருவிகளுக்கும் நன்றி செலுத்தும் உழைப்புத் திருநாள்.

சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவம் கூறும் ஏர்த்தொழில் திருவிழா. பொங்கலன்று வீடுகளைப் புதுப்பித்து, புத்தாடை உடுத்தி அணிகலன்கள் அணிந்து, புதுப்பானையில் இஞ்சி, மஞ்சள் கட்டி பொங்கல் வைத்து கதிரவனுக்கு நன்றி தெரிவித்து, உழவு மாடுகளுக்கு உணவு அளித்து கொண்டாடப்படுகிறது.

தமிழர் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பிரித்து மருதத்தில் என்று உழவு செய்யத் தொடங்கினானோ அன்றே தொடங்கியது இந்தத் திருவிழா. இதில் எங்கே புகுந்தது திராவிடம்?

திராவிடம் என்கிற சொல் உருவம் கொள்வதற்கு முன்பாகவே தமிழர்களால் உருவம் கொடுத்து பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுத் தொழிலுக்கும், வண்டி இழுக்கவும் பயன்படும் எருது ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரப்பா, மொகஞ்சதரோ தமிழர்களின் சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளச் சின்னமாக இருப்பதே இதற்குச் சான்று.

தமது நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களை பச்சையாகவோ நெருப்பில் சுட்டோ சாப்பிட்டு வந்த காலத்தில் நெய்யும் பாலும் தேனும் கலந்து சுவையாகவும், இஞ்சி ஏலம் சுக்கு பட்டை சேர்த்து நோய் வராது தடுக்கும் உணவாகவும் உண்டுவந்த பெருமை தமிழனையே சேரும்.

மருத்துவ அறிவையும், உடல்நல உணர்ச்சியையும் ஒருங்கே காட்டும் சமையல் நூல்களை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழன் இயற்றியுள்ளான்.

"கந்தக கருத்தும் மடைநூல் செய்தியும் " என்று 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணிமேகலை இதைத் தெளிவாக்குகிறது (மடை - சோறு)

"வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி" என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தொல்காப்பியமும்,

"பழஞ்சோற்றுப் புக வருத்தி " என்று புறநானூறும்,

"பூவும் புகையும் பொங்கலுஞ் சொறிந்து" என்று சிலப்பதிகாரமும் கூறுகின்றன.

வேளாண்மை தொடங்கிய காலத்திலிருந்து பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலானது ஆயிரமாயிரம் ஆண்டுகாலப் பழமையும் பெருமையும் உடையது .

பொங்கல் விழாவன்று உடுத்தும் புத்தாடை நெசவுத் தொழிலையும், பானை குயவுத் தொழிலையும் கதிரவ வணக்கம் வானியல் அறிவையும், வீடுகள் புதுப்பிக்கப்படுவது பொறியியல் கலையையும் எடுத்தியம்புகிறது.

"பருத்திப் பெண்டிர் பனுவலென்ன" என்கிற புறநானூற்றுப் பாடல் வரிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பருத்தி ஆடைகளை நெய்து தமிழன் உடுத்தி உள்ளான் என்பதை பறைசாற்றுகிறது .
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுட்ட செங்கற்களால் சுவர் எழுப்பி கதிரடித்து கிடைத்த வைக்கோலால் கூரை வேய்ந்து வாழ்ந்திருக்கிறான் .

"சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் சொடுங்கும் கடிமனை" என்கிற சிலப்பதிகாரம் தமிழனின் பொறியியல் அறிவை விளக்குகிறது

கதிரவன் வணக்கம் என்பது கடவுளுக்கு நன்றி செலுத்துவதாக அது தமிழனின் வானியல் ஆய்வை வெளிப்படுத்துவது. நெற்பயிர்கள் மட்டுமின்றி இயற்கை பயிர்கள் செழித்து வளர கதிரவன் பயன்படுகிறது என்ற உண்மை தெரிந்தவன் தமிழன்.

"விசும்பின் துளி வீழும் அல்லாமல் பசும்புல் தலை காண்பது அறிவு" என்கிறது வள்ளுவம்.

செந்நிறம் உடைய கோளுக்கு செவ்வாய் என்றும், கரிய நிறமுடைய கோளுக்கு காரி (சனி) என்றும், பெரிய அகன்ற கோளுக்கு வியாழன் என்றும் பெயரிட்டவன் தமிழன்.

இத்தகைய தமிழனின் அறிவை, பண்பாட்டை, வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ள பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்ற பெயரால் இந்துத்துவ விழாவாக மாற்றிக் கொண்டிருக்கிறது பார்ப்பனக் கும்பல் .

நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் மகர சங்கராந்தியாக கொண்டாடி வருகிறார்களே தவிர, பொங்கல் விழாவாகக் கொண்டாடுவதில்லை.

"பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்" என்று பெரியார் முன்மொழிந்த ஒரே திருவிழா இது மட்டும் தான்.

அப்படி இருக்க தமிழனின் திருவிழாவை திராவிடர் திருநாள் என்று திராவிடர் கழகம் சொல்வது தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றை, பண்பாட்டை அழிப்பதற்கு ஒப்பான வேலையைச் செய்வதாகும்.

- செந்நிலா

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36463-2019-01-14-09-38-02

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.