Jump to content

தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது

January 20, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_3166.jpg?resize=800%2C389

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் இன்று நடைபெற்றது.

யாழ். கோவில் வீதியிலுள்ள விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுமென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

IMG_3163.jpg?resize=594%2C800

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை யாரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்கான மதிப்பு இருக்கும்.

எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தால் எத்தகைய மேதாவியாக இருந்தாலும் மக்களிடம் எடுபடமாட்டார்கள்

Link to comment
Share on other sites

கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கம் இல்லை – விக்னேஸ்வரன்

by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள்

cm-300x200.jpgதமிழ்த் தேசியக் கூட்டணியை பிளவுபடுத்தும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்.னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதிதாக உருவாக்கிய தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“எந்தக் கட்சிகளையும் பிளவு படுத்துவது எமது நோக்கமல்ல. தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பை உடைக்க நான் கட்சி தொடங்கவில்லை.

தமிழ் அரசுக் கட்சிக்கு தொந்தரவு கொடுக்காமலேயே நான் செயற்பட்டு வருகிறேன்.

தமிழ் மக்கள் கூட்டணியில் எப்போதும் ஜனநாயகம் இருக்கும் . எனது கட்சியில் உள்ளவர்கள், கட்சியின் செயலாளர் ஆகிய என்னை,  கட்சியில் இருந்து விலகுமாறு கேட்டால் கூட, நான் கட்சியை விட்டு சென்று விடுவேன்.

நிர்வாக உறுப்பினர்களை நான்தான் நியமித்துள்ளேன். என்னை வேண்டாம் என்றால் கூட, நான் கட்சியை விட்டுச் செல்வேன். அந்தளவுக்கு ஜனநாயக யாப்பினையே நாம் தயாரித்துள்ளோம்.

நாங்கள் கொள்கை ரீதியாகச் செல்பவர்கள். எம்முடன் சேர வருபவர்கள வந்தால் அவர்களை அடையாளம் கண்டு சேர்த்துக் கொள்வோம்.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பலர் எமது ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்கள் எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.

ஆனால் செயலாளர் ஆகிய நான் மட்டும் தேர்தலில் போட்டியிடுவேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைக்க வேண்டிய அவசியமில்லை. கூட்டமைப்பின் கொள்கைகள் என்ன என கூறினால், அவர்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு கொடுப்பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ள புளொட்டை எமது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. புளொட் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளது.

கூட்டமைப்பில் இருந்து ஏற்கனவே விலகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ் போன்ற கட்சிகளை எம்முடன் இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் விபரம் வருமாறு-

wicky-tmk.jpgwicky-tmk.jpg

http://www.puthinappalakai.net/2019/01/20/news/35945

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

நிர்வாக உறுப்பினர்களை நான்தான் நியமித்துள்ளேன். என்னை வேண்டாம் என்றால் கூட, நான் கட்சியை விட்டுச் செல்வேன். அந்தளவுக்கு ஜனநாயக யாப்பினையே நாம் தயாரித்துள்ளோம்.

நாங்கள் கொள்கை ரீதியாகச் செல்பவர்கள். எம்முடன் சேர வருபவர்கள வந்தால் அவர்களை அடையாளம் கண்டு சேர்த்துக் கொள்வோம்.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பலர் எமது ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்கள் எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.

ஆனால் செயலாளர் ஆகிய நான் மட்டும் தேர்தலில் போட்டியிடுவேன்.

 

7 hours ago, nunavilan said:

தமிழ் மக்கள் கூட்டணியில் எப்போதும் ஜனநாயகம் இருக்கும் .

வாழ்க ஜனநாயகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

 

வாழ்க ஜனநாயகம் 

ஆனாலும் விக்கி ஐயா உண்மையை வெளியே சொல்கின்றார்.
சம்பந்தர் ஐயா தானே முடிவெடுத்துவிட்டு எல்லாம் ஜனநாயகம் என்கின்றார் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

 

வாழ்க ஜனநாயகம் 

தமிழ்மக்கள் விடயத்தில் சம்பந்தனையும் சுமந்திரனையும் மீறி யாரும் எதுவும் எங்கும் செய்துவிட முடியாது.( நிலம் உரிமைகள் பறிபோவதை தவிர)

அது ஜனநாயகமா?

அல்லது அவர்கள் ஏகப்பிரதிநிதிகளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

 

வாழ்க ஜனநாயகம் 

விக்கி ஐயா   அவரது  உரையில்  தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
முதலாவது நியமனங்கள் மட்டுமே தன்னால் எடுக்கப்படும்
அடுத்த வருடம் பொதுக்குழுவினால் தேர்தல் மூலம் நியமனங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அது வரை கட்சி இயங்கினால்  நாங்களும் அதைப்பார்க்கலாம்

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

தமிழ்மக்கள் விடயத்தில் சம்பந்தனையும் சுமந்திரனையும் மீறி யாரும் எதுவும் எங்கும் செய்துவிட முடியாது.( நிலம் உரிமைகள் பறிபோவதை தவிர)

அது ஜனநாயகமா?

அல்லது அவர்கள் ஏகப்பிரதிநிதிகளா?

பல சந்தர்ப்பங்களில் நீங்கள் நியாயமானதும் ஆழமாக சிந்திக்க வைப்பதுமான கேள்விகளை முன்வைக்கிறீர்கள். நன்றி.

இந்த கேள்வியும் அத்தகையதே.

விடுதலைப்புலிகள் இடைக்கால நிருவாகம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் ஈ.பி.டி.பி. போன்ற அமைப்புகள் தாமும் இடைக்கால நிருவாகத்தில் பங்குபற்ற உரிமை கோரினார்கள். விடுதலை புலிகளோ தாமே பெருமளவு தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற அமைப்பு என்ற வகையிலும் இடைக்கால நிருவாகத்தை நடத்தும் பலம் கொண்டவர்கள் என்ற வகையிலும் தம்மை மட்டுமே மக்களின் ஒரே பிரதிநிதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரினார்கள். ரணில் விக்கரமசிங்க அரசு அதை ஒரு வெள்ளிக்கிழமை ஏற்று கொண்டது. திங்கட்கிழமை சந்திரிக்கா அந்த அரசை அகற்றினார். உண்மையில் விடுதலைப் புலிகள் தவிர மற்றவர்கள் இவ்வாறான நிருவாகத்தில் இடம் பெற்று இருந்தால் அவர்கள் பல்வேறு பக்கத்தாலும் இழுத்தடித்து எதையுமே செய்ய விட்டு இருக்க மாட்டார்கள்.

இன்று மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற அமைப்பாக சம்பந்தர் தலைமையிலான கட்சி இருக்கிறது. அந்த கட்சியின் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் வேண்டிய அரசியல், இராஜதந்திர பலமும் தொடர்புகளும் கொண்டவராக சுமேந்திரனே இருக்கிறார். ஒப்பீட்டளவில் சிறிதரனோ, யோகேசுவரனோ, சாந்தியோ, மாவையோ அல்லது சித்தார்த்தனோ இந்த விதமான அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகளையும் பலத்தையும் கொண்டவர்களாக இல்லை. இவர்களுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்துடன் தான் எதையும் செய்ய வேண்டும் என்றால் இவர்களும் பல்வேறு பக்கத்தாலும் இழுத்தடித்து எதையுமே செய்ய விட மாட்டார்கள். 

இவ்விடத்தில் சிங்கப்பூரின் லீ குவான் யுவை நினைவு கூருவது பொருந்தும். சிங்கப்பூரை கட்டி எழுப்ப உண்மையான ஜனநாயகம் பாதகமானது என அவர் உணர்ந்து இருந்தார். ஆனால் உலகம் ஜனநாயகத்தை எதிர்பார்க்கிறது. ஆகவே ஒரு போலியான ஜனநாயக நாடாக சிங்கப்பூரை உருவாக்கினார். எதிர்க்கட்சியில் தப்பி தவறி எவரும் இடம்பெற்றால், அவர்களின் பொட்டுகேடுகளை கண்டு பிடித்து அவர்களை தனித் தீவில் ஆண்டுக்கணக்காக சிறையில் வைத்தார். சிங்கபூர் இன்று அமெரிக்காவிலும் பார்க்க தனிநபர் பொருளாதரத்தில் சிறந்து விளங்குகிறது. 

Maccari-Cicero.jpg

ஆகவே உண்மையான ஜனநாயகம்  எங்கள் மக்களுக்கும் பாதகமானது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார முதிர்ச்சி அடைந்த நாடுகளுக்கு ஜனநாயகம் பொருத்தமாக இருக்கிறது. மேலும் இந்த நாடுகளின் அரசியல் வரலாறும் ஆட்சி முறையும்  ரோமன் ஜனநாயக முறையில் இருந்து படிப்படியாக நூற்றாண்டு காலமாக வளர்ச்சி அடைந்து வந்து இருக்கிறது. எங்கள் மக்களுக்கு ஐரோப்பியரால் பொருந்தாத திணிப்பாக இந்த ஜனநாயக ஆட்சி முறை திணிக்கப்பட்டு இருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு நேர்காணலில் கூறியது போல எங்கள் மக்களுக்கு ஏதோ ஒரு வகையான மக்கள் ஆட்சி தேவை. ஆனால் அது ரோமன் ஆட்சி முறையில் இருந்து வந்த இன்றைய ஜனநாயக முறையாக தான் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமானதல்ல.

Link to comment
Share on other sites

On 1/20/2019 at 10:45 PM, வாத்தியார் said:
On 1/20/2019 at 10:45 PM, வாத்தியார் said:

இவர்களை யாரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்கான மதிப்பு 

 

புலம்பெயர்ந்த மக்கள் கணக்கில் எடுத்தால் மட்டும் போதும்.

யாழ் மக்கள் கணக்கில் எடுக்க தேவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் விடையத்தில் புலம்பெயர்தமிழர்கள் கூடிய விரைவில் தீர்க்கமான முடிவை எடுக்கும் நேரம் வெகுவிரைவில் வரும் என நான் நம்புகிறேன்.

இதேபோல தாயகத்தின் எமது உறவுகள் எதிர்காலத்திலும் போவார்களாகவிருந்தால். புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்கள்பாட்டைப்பார்த்துக்கொண்டு செல்வதைத்தவிர வேறுவழியில்லை.

Link to comment
Share on other sites

இலங்கை நாட்டுக்கே எடுத்துக் காட்டாக இருக்கட்டும்
 
17500.jpg
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு நேற்று முன்தினம் 20ஆம் திகதி கூடியது.
 
புதிய கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் என்ற வகையிலும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொறுப்பு வாய்ந்த பதவிகளை அறிவிக்கப்படுகின்ற கூட்டம் என்பதாலும் அதன் மீதான பார்வை அந்தக் கட்சி தொடர்பான கணிப்பை அளவிடுவதற்கு உதவுகின்றது.
 
இந்த வகையில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியில் ஒரு சிலர் அதிகாரம் செலுத்துகின்ற சிலர் உரிமைத்தன்மை அறவே இல்லை எனலாம்.
 
இது அந்தக் கட்சி தமிழ் மக்களுக்கு நல்லதொரு அரசியல் தலைமையைத் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.தவிர, நேற்று முன்தினம் நடந்த மத்திய குழுக்கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாப்புகளும் உப விதிகளும் கட்சியின் கட்டமைப்பும் மிகத் தெளிவாக குறித்துரைக்கப்பட்டுள்ளமை மிகவும் முக்கியமான விடயமாகும்.
 
இவற்றுக்கு மேலாக, ஆலோசனைக் குழுவில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிபந்தனையானது வழங்கப்படுகின்ற ஆலோசனைகள் சுயநலம் கடந்து தமிழ் மக்களின் நலனை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த ஏற்பாடாகும்.
 
ஆலோசனைக் குழுவில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்றால், அவர்களின் ஆலோசனை எப்படியாக இருக்கும் என்பதை நாம் கூறி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்காது.
 
எனவே ஆலோசனைக் குழுவுக்கான நிபந்தனை மிகவும் பொருத்தமானது. இவையாவற்றுக்கும் மேலாக, ஜனநாயகப்பாதையில் அடித்தளத்தில் இருந்து மேல் நோக்கியதாக கட்சிப் பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறும் என்ற கட்சி யாப்பு; கட்சியின் அடிமட்டத் தொண்டனும் கட்சியின் கட்டமைப்பில் பங்கேற்கின்ற ஜனநாயக உரிமையை வழங்குவதாகும்.
 
இவைதான் என்றால் இல்லை, கட்சி நினைத்தால், என்னையும் வெளியேற்ற முடியும் என்று ஒரு கட்சியின் நிறுவுநர் அறிவிக்கின்ற அளவில் அந்தக் கட்சியின் யாப்புகளும் உப விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன எனும்போது,
 
உண்மையிலேயே தமிழ் மக்கள் கூட்டணி சொந்த நலன்; குடும்ப நலன்; ஒரு பகுதியினரின் அதிகாரம் என்ற எல்லைகள் கடந்து ஒரு அரசியல் கட்சி என்றால் அது எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாட்டுக்கே எடுத்துக் காட்டுகின்ற கட்சியாக நிர்மாணிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
 
கூடவே தமிழ் மக்களுக்கு ஒரு சரியான அரசியல் தலைமை முகிழ்த்துள்ளது என்ப தையும் இது உறுதி செய்கிறது.
 
எதுவாயினும் நீதியரசர் விக்னேஸ்வரன் அமைத்துத் தந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் வளர்ச்சி என்பது தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. 
 
Link to comment
Share on other sites

12 minutes ago, Elugnajiru said:

 

இதேபோல தாயகத்தின் எமது உறவுகள் எதிர்காலத்திலும் போவார்களாகவிருந்தால். புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்கள்பாட்டைப்பார்த்துக்கொண்டு செல்வதைத்தவிர வேறுவழியில்லை.

நீங்கள் யதார்த்தத்தைப் பேசுகிறீர்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, thulasie said:

நீங்கள் யதார்த்தத்தைப் பேசுகிறீர்கள்.

இப்பவும் புலம் பெயர்ந்தவர்களால் அரசியலில் ஆட்டம் காண வைக்க முடியல மாறாக உதவிகளை மட்டும் செய்ய முடிகிறது 

Link to comment
Share on other sites

23 hours ago, nunavilan said:
உண்மையிலேயே தமிழ் மக்கள் கூட்டணி சொந்த நலன்; குடும்ப நலன்; ஒரு பகுதியினரின் அதிகாரம் என்ற எல்லைகள் கடந்து ஒரு அரசியல் கட்சி என்றால் அது எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாட்டுக்கே எடுத்துக் காட்டுகின்ற கட்சியாக நிர்மாணிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
 
கூடவே தமிழ் மக்களுக்கு ஒரு சரியான அரசியல் தலைமை முகிழ்த்துள்ளது என்ப தையும் இது உறுதி செய்கிறது.
 
எதுவாயினும் நீதியரசர் விக்னேஸ்வரன் அமைத்துத் தந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் வளர்ச்சி என்பது தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. 

புதிய கட்சியை தாபிப்பது, நிலைபெறச் செய்வதென்பது இலகுவான விடயமல்ல.

விக்னேஸ்வரன் அவர்கள் தனது வலுவுக்கு அப்பாற்பட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளார். எனினும் இருக்கும் சூழ்நிலையில், அரசியல் பாதையில் இதைத் தவிர அவருக்கு வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை.

அவரது கட்சி நிர்வாகிகள் பலர் பெரிதும் அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து இணைக்கப்படுபவர்கள் கருணா உட்பட பெரும்பாலான கிழக்கு மாகாண அரசியல்வாதிகளைப் போன்று பிரதேசவாத வெறியர்களை இணைக்காமல் இருப்பது நலமானது.

வடக்கு மாகாணத்தில் சாதிவெறியர்களை, சுயநலப் பெருச்சாளிகளை இணைக்காமல் இருப்பது நலமானது. 

Link to comment
Share on other sites

On 1/22/2019 at 4:43 AM, வாத்தியார் said:

விக்கி ஐயா   அவரது  உரையில்  தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
முதலாவது நியமனங்கள் மட்டுமே தன்னால் எடுக்கப்படும்
அடுத்த வருடம் பொதுக்குழுவினால் தேர்தல் மூலம் நியமனங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அது வரை கட்சி இயங்கினால்  நாங்களும் அதைப்பார்க்கலாம்

அரைகுறையா வாசிப்பவர்களுக்கு இதெல்லாம் விளங்காது!

Link to comment
Share on other sites

On 1/21/2019 at 11:13 PM, வாத்தியார் said:

விக்கி ஐயா   அவரது  உரையில்  தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
முதலாவது நியமனங்கள் மட்டுமே தன்னால் எடுக்கப்படும்
அடுத்த வருடம் பொதுக்குழுவினால் தேர்தல் மூலம் நியமனங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அது வரை கட்சி இயங்கினால்  நாங்களும் அதைப்பார்க்கலாம்


அதுவரை கட்சி  இயங்கினால்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, thulasie said:


அதுவரை கட்சி  இயங்கினால்தானே.

பொதுவானவர் போல் கருத்துக்களை பரிமாறும் நீங்கள்!!!!!

ஏன் விக்கியரை ஏற்க மறுக்கின்றீர்கள்?

அவரும் வரட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும், சுமந்திரனும்.... 
வெந்த புண்ணில்..... வேல், பாய்ச்சிய மாதிரி...
கிழக்கு.. மாகாணத்தை  முஸ்லீம்களிடம்  கொடுத்து,
வடக்கு... மாகாணத்தை, சிங்களவரிடம் கொடுக்க திட்டம் வைத்துள்ளார்கள், என்ற சந்தேகம் உள்ளது. 

ரணிலுக்கு... குத்தி, முறிஞ்ச   சுமந்திரன்.
அவரின்,  அரசியல் ஆசான்...  சம்பந்தனின்   குசியான  எதிர்க்கட்சி பதவியை, பறி கொடுக்க விட்டது சரியல்ல.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பொதுவானவர் போல் கருத்துக்களை பரிமாறும் நீங்கள்!!!!!

ஏன் விக்கியரை ஏற்க மறுக்கின்றீர்கள்?

அவரும் வரட்டும். 

வேண்டப்பட்டவரின் பிரச்சார திறமை, எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறனற்று கேட்டதை அப்படியே ஏற்று நம்பும் தன்மை. சிலர் காரணமில்லாமல் சிலரை எதிரிகாளாக நினைப்பதும், பரப்புவதும் உண்டு. இன்று இது பாெதுவான தன்மையாகிவிட்டது.

Link to comment
Share on other sites

14 hours ago, குமாரசாமி said:

பொதுவானவர் போல் கருத்துக்களை பரிமாறும் நீங்கள்!!!!!

ஏன் விக்கியரை ஏற்க மறுக்கின்றீர்கள்?

அவரும் வரட்டும். 

விக்கியார், அரசியலில் தத்துக் குட்டி.

அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதை பதவியில் இருக்கும்போது, வெளிப்படையாகவே மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள சட்டாம்பியளுக்கும் நீதியரசருக்கும் வித்தியாசம் இருக்குதானே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, thulasie said:

விக்கியார், அரசியலில் தத்துக் குட்டி.

அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதை பதவியில் இருக்கும்போது, வெளிப்படையாகவே மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

 

சுமந்திரன்/சம்பந்தம்  ஆக்களெல்லாம் எல்லாம் தெரிஞ்சு முத்தினபடியே  ஆகாயத்திலையிருந்து குதிச்சவையாக்கும் :cool:

Link to comment
Share on other sites

15 hours ago, thulasie said:

அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதை பதவியில் இருக்கும்போது, வெளிப்படையாகவே மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

ம்ம். விக்கியருக்கு ,
திருடத் தெரியாது,
கொள்ளையடிக்கத் தெரியாது,
ஒன்றை சொல்லி இன்னொன்றை செய்யத் தெரியாது,
காசை நீட்டுபவர்களிடம் வாலை ஆட்டி நம்பினவர்களுக்கு துரோகம் செய்யத் தெரியாது,
ஏமாத்தத் தெரியாது,
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது,
தமிழர்களை கொலை செய்பவர்களை பாதுகாக்கத் தெரியாது,
இப்பிடி அவருக்கு மோசமான காரியங்கள் செய்ய நிறையத் தெரியாது
என்பதை பதவியில் இருக்கும்போது, வெளிப்படையாகவே மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

ம்ம். விக்கியருக்கு ,
திருடத் தெரியாது,
கொள்ளையடிக்கத் தெரியாது,
ஒன்றை சொல்லி இன்னொன்றை செய்யத் தெரியாது,
காசை நீட்டுபவர்களிடம் வாலை ஆட்டி நம்பினவர்களுக்கு துரோகம் செய்யத் தெரியாது,
ஏமாத்தத் தெரியாது,
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது,
தமிழர்களை கொலை செய்பவர்களை பாதுகாக்கத் தெரியாது,
இப்பிடி அவருக்கு மோசமான காரியங்கள் செய்ய நிறையத் தெரியாது
என்பதை பதவியில் இருக்கும்போது, வெளிப்படையாகவே மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

உங்களது உத்தம புருஷரின் bank balance நிச்சயமாக மக்களுக்கு வெளிப்படையாக தெரியாது என்பதையும் உங்கள்  பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அதுவரை கட்சி  இயங்கினால்தானே.

அப்ப ஏன் இவ்வளவு பதட்டம்?! 

Quote

உங்களது உத்தம புருஷரின் bank balance நிச்சயமாக மக்களுக்கு வெளிப்படையாக தெரியாது என்பதையும் உங்கள்  பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சம்பந்தன் ஐயா, சுமந்திரன் ஐயா, மாவை ஐயாக்களின்ர சொத்துபத்து, வங்கி இருப்பு விபரங்களயும் வெளியிடுங்கோ!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.