Jump to content

சென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலை; 6 பேர் கைது: 3 சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு வலைவீச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளன. இதில் ஒரு சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

புளியந்தோப்பில் ரவுடி கொலை:

 

சென்னை ஓட்டேரி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (22) . குற்றச்செயலகளில் ஈடுபட்டு வந்தவர் வழிப்பறி வழக்கில் டிபி சத்திரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையிலிருந்த இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்தார்.  நேற்று மாலை தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 2-வது தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் சூதாடிக் கொண்டிருந்தார்.

அப்போது சூதாட்டத்தில் குமரனுக்கும் மற்றவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி குமரனை சக நண்பர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்குதலிலிருந்து தப்பிக்க குமரன் சாலையில் ஓடியுள்ளார்.

ஆனால் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் குமரனைத் துரத்திய கும்பல் அவரை மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கி, வெட்டிவிட்டுத் தப்பியது. ரத்த வெள்ளத்தில் வீழ்ந்த குமரன் அங்கேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீஸார் குமரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குமரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஹைதர் (எ) அப்புவுக்கும் (25) முன்விரோதம் இருந்து வந்தது. இருவரும் சூதாட்டம் ஆடிய போது ஏற்பட்ட தகராறில், ஹைதர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குமரனைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புளியந்தோப்பு போலீஸார் ஹைதர் (எ)அப்பு, அபினேஷ், தேவேந்திரன், நரேந்திரன், பிரவீன், பவித்ரன் ஆகிய 6 பேரைக் கைது செய்துள்ளனர்.

ஆவடியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை:

ஆவடி நந்தவனம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(46). ஆட்டோ ஓட்டுநரான இவர் தனது அண்ணன், தங்கை குடும்பத்தாருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவரது அண்ணன் மகன் தேவராஜ், தங்கை மகன் முரளி இருவரும் வீட்டில் உள்ள மின்மோட்டாரைப் பார்த்துள்ளனர்.

அதில் மின்மாற்றியை யாரோ மாற்றி வைத்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து மதுபோதையில் இருந்த அவர்கள் இருவரும், ஆட்டோ பணி முடிந்து வீட்டுக்கு வந்த ஆறுமுகத்திடம் இதுகுறித்துக் கேட்டுள்ளனர். அண்ணன் மகன், தங்கை மகன் என்கிற உரிமையில் அவர்களை ஆறுமுகம் சத்தம் போட்டுள்ளார்.

மதுபோதையிலிருந்த அவர்கள் ஆறுமுகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளனர். கட்டையாலும், கடப்பாரையாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு ஆறுமுகத்தைச் சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு போலீஸுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆறுமுகத்திடம் தகராறு செய்து தாக்கிய அண்ணன் மகன் முரளி, தங்கை மகன் தேவராஜ் இருவரையும் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா நகர் (மேற்கு) முதியவர் கொலை:

அண்ணாநகர் மேற்கு விரிவு கலெக்டர் நகர் முதல் தெருவில் வசித்தவர் ஏசுராஜன் (70). இவரது மனைவி கலா (65). ஏசுராஜன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். இடையில் கடந்த ஓராண்டுக்கு முன் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக பேச்சுவார்த்தை இல்லாமல் தனியாக இருந்தார்.

ஏசுராஜன் மகன் அருள்ராஜ். இவரது மனைவி அல்பேன்ஸ் ரூபி. இவர்களுக்கு 2½ வருடங்களுக்கு முன் திருமணமாகி அதே தெருவில் வசித்து வந்தனர். மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதால் ஏசுராஜனுக்கு மகன் அருள்ராஜ் வீட்டிலிருந்து உணவு வருவது வழக்கம்.

அவரது தேவைகளை, துணிகளைத் துவைப்பது போன்றவற்றையும் மருமகளே கவனித்து வந்துள்ளார். இதனால் மனைவி கலாவுக்கு மருமகள் அல்போன்ஸ் ரூபியின்மேல் கோபம் இருந்து வந்தது. இதனால் அவர் தவறான தகவலைப் பரப்பியுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணி அளவில் கலாவின் உறவினர் கோபால் ஏசுராஜைப் பார்க்க வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்றிரவு வழக்கம்போல் மருமகள் ரூபி மாமனார் ஏசுராஜனுக்கு இரவு உணவு கொண்டு செல்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற போது ஏசுராஜன் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஏசுராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏசுராஜனைக் கொலை செய்தது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவி, கலாவின் உறவினர் கோபால், மகன் மற்றும் மருமகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் குற்றவாளி கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரும்பாக்கத்தில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை:

அரும்பாக்கத்தில் ரவுடி ஒருவர் முன் பகை காரணமாக நடுசாலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கான சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றினர்.

சூளைமேட்டைச் சேர்ந்தவர் குமரேசன் (30). இவர் மீது சேத்துப்பட்டு மற்றும் சூளைமேடு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளன. சமீபத்தில் பள்ளிக்கரணையில் கொலை வழக்கு ஒன்றிலும் சம்பந்தப்பட்டுள்ளார். இவர் கஞ்சா வியாபாரியாகவும் இருந்துள்ளார். இதே பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் மாவா வெங்கடேசன் குரூப்.

ஆரம்பத்தில் மாவா வெங்கடேசன் குரூப்புடன் இருந்த குமரேசன் பின்னர் கஞ்சா, மாவா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் பிரிந்தார். இதில் கடந்த 2017-ம் ஆண்டு குமரேசன் தாக்கப்பட்டு வெட்டு விழுந்தது. போலீஸ் பிரச்சினை காரணமாக மாவா வெங்கடேசன் குரூப் பெரும்பாக்கத்துக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டது.

இந்நிலையில் கடந்த  ஆண்டு பள்ளிக்கரணையில் யுவராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குமரேசன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்குக்காக  பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு அரும்பாக்கம் திரும்பினார் குமரேசன். அப்போது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு குமரேசன் கூட்டாளிகளுடன் வெளியே வந்தார்.

அவருக்காகக் காத்திருந்த ஒரு கும்பல் கத்தியுடன் அவர்களை விரட்டியது. இதைப் பார்த்த குமரேசன் தப்பி ஓடினார். ஆனால் அந்தக் கும்பல் விரட்டிச் சென்று அவரைச் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே குமரேசன் உயிரிழந்தார். சாலையில் நடந்த கொலையைக் கண்ட பொதுமக்கள் அலறி ஓடினர்.

இந்தக் காட்சிகள் அருகிலிருந்த ஒரு கடையில் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார் என விசாரணை  நடத்தி வருகின்றனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து சகாயராஜ் என்பவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பில் மற்றொரு ரவுடி இதேபோன்று விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், ஜெ.ஜெ.நகர் முதியவர் ஏசுராஜ், ஆவடி ஆறுமுகம் என சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்தது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://tamil.thehindu.com/tamilnadu/article26050851.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.