Jump to content

தாய்மொழியின் சமத்துவமும், அயல்மொழியின் ஆதிக்கமும்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-5


Recommended Posts

தாய்மொழியின் சமத்துவமும், அயல்மொழியின் ஆதிக்கமும்!

மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-5

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

"காக்கா எல்லா நாட்டுலயும் கா கா -ன்னுதான் கத்துது! எல்லா நாட்டுலயும் குயில் கூகூ-ன்னுதான் கூவுது; எல்லாக் காட்டு யானையும் ஒரே மாதிரித்தான் பிளிறுது; இந்த மனிதன் மட்டும் ஊரூருக்கு வேற வேற மொழி பேசறானே! அதெப்படிப்பா?", என்றபடியே வந்தார் நண்பர்.

"மொழிகளின் இயற்கை குறித்துச் சொல்றேன்னு சொன்னது உண்மைதான்! அதுக்காக என்ன வைச்சு செய்யதுன்னு முடிவு பண்ணிட்டியாப்பா!", என்றேன் சற்று பயத்துடன்.

"அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்ல! மொழிகளின் இயற்கை-ன்னு நீ சொல்லப் போறல்ல! அது எப்பிடியிருக்கும்-னு யோசிச்சேன்! அவ்வளவுதான்!", என்றார் சற்றே கூச்சத்துடன்.

மொழியே மனித இனத்தின் சாதனைகளில் மிக உயர்ந்தது!

"ஆமாப்பா! யோசிச்சுப் பாத்தா மனித இனத்தின் சாதனைகளிலேயே மிக உயர்ந்தது மொழிதான்-னு தோணுது! அறிவு நூற்களின் வளர்ச்சி, ஆட்சிமுறை, சமுதாய வாழ்வு, கலை, சமயம், நாகரிகம், சட்டம், ஒழுங்கு, தகவல் தொடர்பு-ன்னு எதுவுமே மொழின்னு ஒண்ணு இல்லேன்னா இல்ல!", என்றேன் என்னையறியாமலேயே!

"மெய்யாலுமே உண்மைதான்!", என்றார் நண்பர்.

மொழியே மனித இனத்தின் வேர்!

"காலத்தை வென்று, வள்ளுவனும், கம்பனும், இளங்கோவும் பாரதியும் இன்றும் நம்முடன் வாழ்வதன் காரணம் அவர்தம் பாடல் மொழிகள் அல்லவா! நாகரித்துடன் நாகரிகமாக வளர்வதும் மொழி! நாகரிகத்தை வளர்ப்பதும் மொழி! தலைமுறை கடந்து தலைமுறை, ஊழி கடந்து ஊழி, மனிதனின் அனுபவத்தையும், அறிவையும், உணர்வையும் எடுத்துச் செல்லும் ஒப்பற்ற ஆற்றல் கொண்ட ஊடகம்  மொழி! காலம், இடம் கடந்து இயற்கையை மனிதன் வெற்றிகொள்ள உதவும் கருவியும் மொழியே!", என்ற நான், தொடர்ந்து,

"மனிதஇன வாழ்வின் அலைகடற்பரப்பு நாகரிகம் என்றால், அதன் ஆழ்கடற்பரப்பு மொழியாகும்! அரசன்-ஆண்டி, முதலாளி-தொழிலாளி, புலவன்-தற்குறி, பணக்காரன்-ஏழை உள்ளிட்ட அனைத்து மட்டங்களையும் ஊடுருவி, ஆழமாக நிலைத்த வேர்ப்பண்பு தாய்மொழிக்கு மட்டுமே உண்டு!", என்றேன்.

அந்நிய ஆரியமொழியின் ஆட்சியில் சீரழிந்த இந்தியா!

"இந்தியாவின் மற்ற மொழிகளெல்லாம் அந்தந்த மாநில மக்களுக்கான தாய்மொழியாக மட்டுமே இருக்க, அனைத்து மொழிகளும் 'தேவபாடை அல்லது கடவுள்மொழி' என்று ஏற்றுக்கொள்ளும் சமற்கிருதம் போன்ற உயர்ந்த மொழியைக் கொண்டுள்ள நாடு உலகில் எங்காவது இருக்கிறதா?", என்று கேட்டார் நண்பர்.

"தத்தம் தாய்மொழிகளை ஆரிய அந்நியர்கள் 'பிசாசு மொழி, நீசமொழி' என்று தூற்றுவதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு, அந்நிய மொழியான ஆரியத்தை 'தேவபாடை அல்லது கடவுள் மொழி' என்று தூக்கித் தலையில் வைத்துக் கூத்தாடும் மக்கள் வாழும் இந்தியாவைப் போன்ற கேவலமான நாடு உலகில் எங்காவது இருக்கா? என்று கேட்பதுதான் மிகவும் பொருத்தமான கேள்வியாக இருக்கும்", என்றேன் நான்.

அந்நிய மொழிகளின் ஆட்சியில் சீரழிந்த உலகநாடுகள்!

"உன்னைப் பொருத்தவரை அப்படியே வைத்துக்கொள்!  இந்தியாவின் சமற்கிருத மொழிக்கு இணையான மொழி வேறு நாடுகளில் உண்டா இல்லையா என்பதற்கு விடை தேவை", என்றார் நண்பர்.

"நண்பரே! மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்ளும்! உமது வினாவுக்கான விடை 'உண்டு!' என்னும் ஒற்றைச் சொல்தான். நம்ப நாட்டு மக்கள்தான் தத்தம் தாய்மொழிகளைப் புறம்தள்ளிட்டு, சமற்கிருதத்தைத் தூக்கிக் கொண்டாடினார்கள் என்றால், முற்கால ஐரோப்பியர்கள்கூட அவரவர் தாய்மொழிகளைக் கீழே போட்டுவிட்டு, கிரேக்கம்-லத்தீன் மொழிகளைத்தான் கொண்டாடினார்கள்; Middle-East நாடுகளோ, ஹீப்ரு-அரபி மொழிகளின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடந்தார்கள்!", என்றேன் நான்.

"சமற்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, அரபி மொழிகள் அனைத்தும் Classical Languages எனப்படும் செம்மொழிகள் என்பதால் அத்தகைய உயர்நிலை பெற்றிருக்கலாமோ?", என்று நெத்தியடியாக வினவினார் நண்பர்.

"நீ சொல்வதை ஏற்றுக்கொண்டால், கட்டமைப்பிலும், செறிவிலும் உலகின் அனைத்து செம்மொழிகளிலும் மூத்த மேம்பட்ட தொன்மைச் செம்மொழி தமிழ் அத்தகைய உயர்நிலை அடையவில்லை! சுயமரியாதையைத் தொலைத்துவிட்ட தமிழர்களின் முகத்துக்கு நேராகவே தமிழ்மொழியை 'நீசபாஷை' என்று கீழ்த்தரமாகப் பேசும் ஆணவமிக்க ஆரியர்கள், இப்போதும்கூட, தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எனவே, உனது கருதுகோள்(hypothesis) தவறு", என்றேன் நான்.

"அப்படியானால், சமற்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, அரபி மொழிகள் உயர்நிலை அடைந்தது எப்படி?", என்று குறுக்குக் கேள்வியைப் பாய்ச்சினார் நண்பர்.

"சரியான கேள்வி! நீ சொல்லும் மொழிகள் அனைத்தும் சமய, தத்துவ மொழிகள். யூதர் - கிறித்துவர்-களின் மறை-வேத மொழி ஹீப்ரு. இஸ்லாமியர்களின் மறை-வேத மொழி அரபி. கிரேக்கம், லத்தீன் தத்துவ மொழிகள். இம்மொழிகள் அனைத்தும் சமய, தத்துவ மொழிகள் என்பதனால் மட்டும் உயர்நிலை அடைந்தன என்பது மட்டும் உண்மையல்ல! அதைத் தாண்டி, அவை அயல்மொழிகள் என்பதால்தான் ஆட்சியாளர்களும், மேட்டுக்குடியினரும் தூக்கிப் பிடித்தனர் என்பதே உண்மையான காரணம்!", என்றேன் நான்.

மண்ணின் மைந்தர்களை அடிமைப்படுத்தவே அயல்மொழி ஆட்சி!

"ஏன் ஆட்சியாளர்கள் என்றும் அயல்மொழிகளைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்? ஒரே குழப்பமாய் இருக்கிறதே!", என்று அங்கலாய்த்தார் நண்பர்.

"சமயம், இனம், நாடு போன்றவற்றில் உயர்வு-தாழ்வு உருவாக்க முடிந்த ஆட்சியாளர்களாலும், மேட்டுக்குடியினராலும், தாய்மொழியில் உயர்வு-தாழ்வு உருவாக்க முடியாது! ஒரே தாய்மொழி பேசும் பண்டிதரையும், ஆட்டோக்காரரையும் எடுத்துக்கொள்வோம். நிரம்பப் படித்த பண்டிதரை, எழுத்தறிவு இல்லாத ஆட்டோக்காரன் தனது பேச்சுத் திறமையால் மடக்கிவிடுவதை நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்க்க முடியும்!" என்ற என்னை இடைமறித்த நண்பர்,

"எழுத்தறிவில்லாத ஆட்டோக்காரனுக்கு எப்படிப் பேச்சுத் திறமை வந்திருக்க முடியும்?", என்றார்.

தாய்மொழியின் சக்தி!

"அதுதான் தாய்மொழியின் சக்தி! பிறமொழி அறிவு, ஆசிரியர் மூலமாகவோ, அல்லது அம்மொழி பேசுபவர்கள் மூலமாகவோ பெரும் முயற்சிசெய்து மட்டுமே பெறக்கூடியது; ஒரு முயற்சியுமில்லாமல் சரளமாகத் தாய்மொழியில் பேசுகின்றது மூன்று வயதுகூட நிரம்பாத குழந்தை! மூன்று வயது நிறைவடைந்த பிறகே எழுத்தறிவு பெறப் பள்ளிக்கூடம் செல்கிறது அக்குழந்தை!    எனவே, எழுத்தறிவே இல்லாத ஒரு ஆட்டோக்காரன் பேச்சுத்திறமையில் வல்லவனாக இருப்பது தாய்மொழியில் சாத்தியமே! ஆட்சியாளர்கள் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே கற்பிக்கப்படும் அயல்மொழி மூலம் ஆட்சி செய்தால் இதுபோன்ற சூழ்நிலைகளை முற்றிலும் தவிர்த்துவிடலாமல்லவா? உலகெங்கிலும், ஆளும் வகுப்பினர், உயர்குடியினர், புரோகிதர் உள்ளிட்ட ஆதிக்க சக்திகள் அயல்மொழியின் மூலமே ஆட்சி செய்வதன் உள்நோக்கம் இப்போது புரிகிறதா?", என்றேன் நான்.

ஆங்கிலேயனும் ஒரு காலத்தில் வேற்றுமொழி அடிமை!

"உண்மைதான்! நாம்பதான் ஊர்-பெயர், இறைவன்-பெயர், மனிதன்-பெயர் அனைத்திற்கும் சமற்கிருதப் பெயர் வைத்துக் கொண்டாடும் கிறுக்குப் புடிச்சி அலையறோம்! வெள்ளக்காரன் தாய்மொழியான இங்கிலீசை எவ்வளவு கெட்டியாப் புடிச்சிருக்கான் பார்! அவன்ட்டேருந்து நாம பாடம் கத்துக்கணும்!", என்றார் நண்பர்.

"நீ நினைக்கிறதில் பாதிதான் உண்மை! சமற்கிருதப் பெயர்களை நம்பமேலத் திணிச்சது தமிழ் மன்னர்களைக் கைக்குள் போட்டுக்கொண்ட ஆரியர்களும், தமிழினத் துரோகிகளுமே(Quislings). தமிழனைப் போலவே, ஆங்கிலேயனும் ஒரு காலத்துல வேற்றுமொழி அடிமையா இருந்திருக்கான்! 250  ஆண்டுகளாத்தான் ஆங்கிலேயன் முழிச்சுக்கிட்டு இருக்கான்", என்றவனை இடைமறித்து,

"அடப்பாவி! வெள்ளக்காரங்கூட நம்பளைப்போல வீணாப்போன கூட்டந்தானா! யாரும் இதப்பத்திப் பெருசா பேசலையே?!", என்று தன் ஐயத்தை வெளிப்படுத்தினார் நண்பர்.

கி.பி,1362-ல்தான் ஆங்கிலேய மக்களவையில் ஆங்கிலத்தில் உரையாட அனுமதிக்கும் சட்டம் நிறைவேறியது!

"சந்தேகப்படவேண்டாம்! வேற்றுமொழியான சமற்கிருதம் தமிழ்நாட்டின் சமயத்திலும், ஆட்சியிலும் கோலோச்சியதைப்போல்,  'Anglo-Norman French'  என்னும் வேற்றுமொழியே கி.பி.1066-லிருந்து இங்கிலாந்து நாட்டின் ஆட்சிமொழியாக, பாராளுமன்றத்தின் சட்ட மொழியாகப் பல்லாண்டுகள் கோலோச்சியது.  பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாட அனுமதி இல்லை. ஆங்கிலத்தில் உரையாட அனுமதிப்பதற்காக "The Pleading in English Act 1362 (36 Edw. III c. 15)" எனப்படும் சட்டத்திருத்தம் நீண்ட விவாதத்திற்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது; இருந்தும், நடைமுறைக்கு வருவதற்கு ஐம்பது ஆண்டுகள் ஆச்சு! சரியாகச் சொன்னால், ஆங்கிலம் இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தின் மொழியாக ஏற்கப்பட்டது பதினைந்தாம் நூற்றாண்டில்தான்.", என்றேன் பதிலுக்கு.

"ஐயோ! வேற்றுமொழி அடிமைப்புத்தி வெள்ளைக்காரனையும் விடல போல இருக்கே!", என்று வியப்பில் மூக்கின்மேல் விரலை வைத்தார் நண்பர்.

வேற்றுமொழிகளால் மாசுபட்ட ஆங்கில மொழிநடை!

"வெள்ளைக்காரனும் Greek-Latin-German-Frenchன்னு வேற்றுமொழிக் கிறுக்குப் புடிச்சி அலைந்து நீண்ட காலங்களுக்குப் பிறகுதான் விழிப்புணர்வு பெற்றான். தற்காலத்தில் Anglo-Norman, Anglo-French மொழிகளை நவீன ஆங்கிலம் முற்றிலுமாக தவிர்த்துவிட்டது என்றாலும், இம்மொழிகளின் சொற்கள் பலவும் ஆங்கிலமொழியில் ஊடுருவி நிலைத்துவிட்டன; மேலும், ஆங்கிலமொழி நடையான - adjective then noun -ங்கறது பல இடங்களிலும் மாறிபோச்சு! இம்மொழிகள்-ல வர்ற  'பெயர்ச்சொல்லுக்குப் பின் உரிச்சொல் (noun then adjective)'-ங்கற நடை, ஆங்கிலத்திலும் பரவியது. காட்டாக, 'attorney general', 'heir apparent', 'court martial' போன்ற பயன்பாடுகளைச் சொல்லமுடியும்!.", என்றேன் நான்.

வேற்றுமொழி அவமானச்சின்னத்தை இன்றும் சுமக்கும் ஆங்கிலேயர்கள்!

270px-Royal_Coat_of_Arms_of_the_United_K

"கடந்த காலம் எப்படியிருந்தாலும், வெள்ளக்காரன் இப்ப நிமிந்து நிக்கறான்ல!", என்றார் நண்பர்.

"எங்கே? வேற்றுமொழி அவமானச்சின்னத்தை இன்னமும் சுமக்கிறது இங்கிலாந்து! இங்கிலாந்து பேரரசி Queen Elizabeth II அணியும் அதிகாரபூர்வ மேலங்கியில் காணப்படும் "Dieu et mon droit" ("God and my right") and the motto of the British chivalric Order of the Garter, "Honi soit qui mal y pense" ("Shamed be he who thinks evil of it") என்னும் வாசகங்கள் Anglo-Norman, Anglo French மொழிகளின் தொடர் ஆதிக்கத்தை உரக்கக் கூவுகின்றன", என்றேன் நான்.

"ஓ! சூத்திராளுக்கு வேதக்கல்வி ஏன் மறுத்தா-ன்றதும், வேதங்கேட்ட சூத்திரா காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்தணும்-னு ஏன் சட்டம் போட்டான்னுட்டு இப்போ நன்னா புரியரதுண்ணா!", என்ற நண்பர்,

"வெள்ளக்காரன் முழிச்சுக்கிட்டதாலத்தான் உலகத்தையே கட்டி ஆண்டான். தமிழ்நாட்டுல நாம கொஞ்சம் முழிச்சிக்கிட்டதாலே இந்தியையும் சமற்கிருதத்தையும் எதிர்த்தோம்! மத்த மாநிலத்துல இன்னும் சமற்கிருத மயக்கம் தெளியலன்னு உறுதியாச் சொல்லலாம். ஒண்ணு மட்டும் எனக்கு இன்னும் சுத்தமாப் புரியல!", என்று சற்று இழுத்தார் நண்பர்.

"பரவாயில்ல. என்னன்னுதான் சொல்லேன்", என்றேன் நான்.

"மொழிகளில் இயற்கை புரிந்துவிடு-ன்னு அப்பப்ப சொல்லுறயே! சொல்லாமப் புரியறதுக்கு இதென்ன . . . கலையா? எப்ப சொல்லுவ?", என்று ஒரு ஆப்பு அடித்தார் நண்பர்.

"கட்டாயம் நாளை பேசலாம்!", என்று விடை பெற்றேன்.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார் 

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

மொழிகளின் இயற்கை அறிவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுடன் எக்காரணம் கொண்டும் ஆங்கில மொழியினை ஒப்பிட முடியாது.

ஸ்காட்டிஷ், வேல்ஸ் நாட்டு மக்களை போலல்லாது ஆங்கிலேயர்கள் தூய இனம் கிடையாது. 2000 ஆண்டுகள் முன்னர், ரோமர்கள் வந்தனர். அவர்கள் 400 ஆண்டுகள் பிரிட்டனை ஆண்டனர். அவர்களது எழுத்துக்  குறியீடுகள், லத்தீன் மொழி, இங்கே இருந்த, சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தென் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த  இருந்து வந்திருந்த வேடுவர்கள் பேசிய கெல்டிக் மொழியுடன் கலந்தது.

ரோமர்கள் வெளியேற, பின்னர் வந்தவர்கள், வட ஐரோப்பியாவில் இருந்து வந்த, ஜூட், ஆங்கிலோ, சாக்சன் இனக்குழுக்கள். இவர்கள் தனித்தனி மொழிகளை பேசினார்கள்.

கடைசியாக, இவை ஒருங்கிணைத்து ஆங்கிலோ சாக்சன்  மொழியாகியது. 

பின்னர், நோர்வே, டென்மார்க்கில் இருந்து வைக்கிங்குகள் வந்தார்கள்... இவர்கள் கொள்ளையர்கள். ஆங்கிலோ சாக்சன் அரசர்களை தாக்கி பிரிட்டனைக் கைப்பட்ட முயன்றாலும் வெல்ல முடியவில்லை. ஆகவே, சாதாரண குடிகளாக தங்கி விட்டனர். ஆங்கிலோ சாக்சன் மொழியுடன், இவர்களின் மொழியும் கலந்து கொண்டது.

பின்னர் 1066 ம் ஆண்டு பிரான்ஸின் நோர்மன் பகுதியில் இருந்து வில்லியம் என்பவரது படை எடுப்பு நிகழ்ந்தது. அவரது ஆடசியின் போது, அரசரும், அதிகாரிகளும் நோர்மன்  பிரெஞ்ச்யும், மக்கள் ஆங்கிலோ சாக்சன் ,மொழியையும் பேசினர்.

மத்தியகாலப் பகுதியில் (1066 - 1485) இரு மொழிகளின் கலவையாக நவீன ஆங்கில மொழி உருவாக தொடங்கியது. 

ஆயினும், 16ம் நூறாண்டில், முதலாம் எலிசபெத் மகாராணியார் காலத்தின் போதே, ஷேக்பியர் முயல்வினால், ஆங்கிலம் முழுமையான மொழியானது.

மக்களிலும் பார்க்க அரச குடும்பமே, மிகவும் அதிகமான வெளிநாட்டுக் கலப்புகள் கொண்டது. காரணம், சார்லஸ் - டயானா திருமணத்துக்கு முன்னர், அரச குடும்பம், மக்களிடையே அல்ல, இன்னோரு அரச குடுப்பத்துடனே தான் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியும் என்ற சம்பிரதாயம் இருந்தது.

அதன் காரணமாகவே, அரசி ஆன், 18ம் நூறாண்டில், 16 தடவைகள் கருச்சிதைவு உண்டாக்கி   குழந்தை இல்லாமல் இறந்தபோது, ஜெர்மனிய அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரை 1ம் ஜார்ஜ் என்னும் பேரில் சிம்மாதனம் ஏற  வைத்தார்கள். 

அவருக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால், Walpole என்பவரை உதவிக்கு வைத்திருந்தார். அவரே பிரிட்டனின் முதல் பிரதமராக 20 ஆண்டுகள் இருந்தார்.( Sir Robert Walpole)

அதற்கு முன்னர் வில்லியம் ஒரேன்ஜ் என்னும் டச்சு நாட்டு இளவரசர், அரசி ஆனின்  மூத்த சகோதரி மேரியினை மணந்து (glorious  revulotion) அரசராக இருந்தார். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லாத படியால் தான் , மேரியின்  சகோதரி ஆன் ராணியாயிருந்தார்.

ஆகவே சொல்ல வருவது என்னெவென்றால், ஆங்கிலம், (ஆங்கில அரச குடும்பமோ) தமிழ் மொழி போல் செம்மொழி அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.