Jump to content

சென்னை புத்தகக் கண்காட்சி 2019: என்ன மாற்றங்கள் வேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்
2019 சென்னை புத்தகக் கண்காட்சி: எப்படி இருந்தது?

2019ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சி சமீபத்தில் நிறைவடைந்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் கடைகள், விற்பனை போன்றவை இருந்தாலும் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் ஏற்பாடு இன்னும் மேம்பட வேண்டும் என்கிறார்கள்.

சென்னையின் மிகப் பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக சென்னை புத்தகக் கண்காட்சி பார்க்கப்படுகிறது. கடந்த 42 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 810 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஜனவரி 4 முதல் 20ஆம் தேதிவரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் கடைசி இரு நாட்களில் வாசகர்களின் வருகையும் புத்தக விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

"கொல்கத்தாவில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு, சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்குத்தான் அதிக அளவில் வாசகர்கள் வருகிறார்கள். முன்பும் நல்ல கூட்டம் வரும் என்றாலும் 2006ஆம் ஆண்டிலிருந்துதான் பெரிய அளவில் இந்தக் கண்காட்சிக்கு ஊடக கவனம் கிடைக்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு சென்னை புத்தககக் கண்காட்சி பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக, வெற்றிகரமாக புத்தகக் கண்காட்சியை நடந்த முடிந்ததில்லை. சென்னையில் அது சாத்தியமாகியிருக்கிறது" என்கிறார் காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணன் சுந்தரம்.

ஆனால், ஒட்டுமொத்தமாக புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் விதம் குறித்த பல பதிப்பாளர்கள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். "புத்தகக் கண்காட்சி பெரிதாக, கடைகளும் விற்பனையும் பெரிதாக அதிகரித்திருக்கிறது. ஆனால், வாசகர்களுக்கு கூடுதல் வசதிகள் தேவை. குறிப்பாக எந்தப் புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்பது குறித்து ஒரு கேட்லாகை பபாசியே தயாரித்து அளிக்க வேண்டும். பதிப்பகங்களிடமிருந்து முன்கூட்டியே புத்தகம் குறித்த விவரங்களைப் பெற்று இந்தப் பட்டியலைத் தயாரிக்கலாம். தவிர, கழிப்பறை வசதி நிச்சயம் மேம்படுத்தப்பட வேண்டும்" என்கிறார் பாரதி புத்தகாலயத்தில் நாகராஜ்.

2019 சென்னை புத்தகக் கண்காட்சி: எப்படி இருந்தது?

இந்த முறை எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றவர்கள் தங்கள் பதிப்பகங்களின் சார்பில் தனித்தனி அரங்குகளை அமைத்திருந்தார்கள். இருவரும் தினமும் புத்தகக் கண்காட்சி அரங்கிற்கு வந்து வாசகர்களைச் சந்திப்பது, புத்தகங்களில் கையெழுத்திட்டுத் தருவதிலும் உற்சாகமாக ஈடுபட்டனர்.

"இடம், அரங்க அமைப்பு ஆகியவை நன்றாக இருந்தது என்றுதான் நான் சொல்லுவேன். ஆனால், வாசகர்களுக்கு கூடுதல் வசதிகளை பாபாசி செய்து தர வேண்டும். முதலில், எந்தக் கடையில் எந்த மாதிரி புத்தகம் கிடைக்கிறது என்ற தகவலை பபாசி வாசகர்கள் அறியும்படி செய்ய வேண்டும். மேலும் நிறைய புத்தகங்களை வாங்குபவர்கள் தூக்கிச் செல்ல சிரமப்படுகிறார்கள். சூப்பர் மார்க்கெட்களில் இருப்பதைப் போன்ற ட்ராலிகளை அளிப்பது பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார் எழுத்தாளரும் தேசாந்திரி பதிப்பகத்தைச் சேர்ந்தவருமான எஸ். ராமகிருஷ்ணன்.

மேலும் ஒரு விஷயத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். "புத்தகக் கண்காட்சி என்பது வெறும் புத்தகங்களை விற்கும் இடமல்ல. எழுத்தாளர்கள் வாசகர்களைச் சந்திக்கும் இடமும்கூட. ஆனால், அப்படி சந்திப்புகள் நிகழ எந்த இடமும் ஒதுக்கப்படுவதில்லை. எழுத்தாளர்கள் அமர்வதற்கென 'ரைட்டர்ஸ் கார்னர்' என ஒரு இடத்தை ஏற்பாடு செய்யலாம். அதை புத்தகக் கண்காட்சிக்கு வெளியில் உள்ள மைதானத்தில்கூட அமைக்கலாம்" என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

புத்தகக் கண்காட்சியில் தொடர்ந்து வரும் பல முக்கியமான பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டுகிறார் காலச்சுவடு கண்ணன். "புத்தகக் கண்காட்சி வளர்ந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் அமைப்பும் சட்டதிட்டங்களும் மாறாமல் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக புத்தகங்களை பதிப்பிக்காதவர்கள் இந்த சங்கத்தில் இன்னும் உறுப்பினர்களாகத் தொடர்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு கண்காட்சியிலும் கடைகளை வாடகைக்கு எடுத்து, பிறரிடமிருந்து புத்தகங்களை வாங்கி விற்றுவிட்டு சென்றுவிடுகிறார்கள். மீண்டும் அடுத்த வருட கண்காட்சியில்தான் அவர்களைப் பார்க்க முடிகிறது. இது போல ஒரு ஐம்பது கடைகளையாவது பார்க்க முடியும். மேலும் வாசிப்பிற்கும் பதிப்புத் துறைக்கும் சம்பந்தமில்லாத பல கடைகளுக்கு கண்காட்சிக்கு உள்ளே இடம் கொடுக்கப்படுகிறது" என்று சுட்டிக்காட்டுகிறார் கண்ணன்.

புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு 820 கடைகள் இருப்பது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். "கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் பிரச்சனையில்லை. ஆனால், அவற்றை தமிழ், ஆங்கிலம், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்றெல்லாம் வகைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனால், ஒருவர் தனக்குத் தேவையான வரிசைக்குச் சென்று புத்தகங்களை வாங்கிக்கொள்ள முடியும். மேலும் வியாபார ரீதியிலான சந்திப்புகளுக்கு இடம் ஏற்படுத்தித் தர வேண்டும். புத்தகங்களை ஆன்லைனிலேயே வாங்கிக்கொள்ள முடியும். அல்லது போன் செய்து வாங்க முடியும். ஆனால், ஏன் வாசகர்கள் கண்காட்சிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இணையத்தில் இல்லாத வசதிகள், வாய்ப்புகள் இங்கே கிடைக்க வேண்டும். ஆனால் புதுமையான கருத்துகளை பபாசி ஏற்பதில்லை" என்கிறார் கண்ணன்.

2019 சென்னை புத்தகக் கண்காட்சி: எப்படி இருந்தது?

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு புத்தக விற்பனை அதிகரித்திருப்பதாக பபாசி தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு சுமார் 15 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு 18 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் விற்றிருப்பதாக அமைப்பு கூறுகிறது. "எனக்கு இதில் சந்தேகமிருக்கிறது. புத்தகக் கண்காட்சி முடிந்த இரவிலேயே இதை எப்படி தெரிவிக்கிறார்கள் எனப் புரியவில்லை. டிக்கெட் விற்பனை, வழங்கப்பட்ட பாஸ்களை வைத்து எவ்வளவு பேர் வந்தார்கள் என்பதை கணிக்க முடியும். விற்பனையை கணிக்க சில நாட்களாவது ஆகும்" என்கிறார் கண்ணன்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களின் கூட்டம் புத்தக் கண்காட்சியில் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு குடும்பத் தலைவிகளின் வருகை அதிகமாக இருந்தது.

"புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் புத்தகங்களை வாங்க மட்டும் வருவதில்லை. அவர்கள் பல கருத்துகளையும் உள்வாங்கிச் செல்கிறார்கள். குறிப்பாக பூவுலகின் நண்பர்கள் அரங்கிற்கு வருபவர்கள் சூழல் குறித்து எங்களோடு பேச விரும்புகிறார்கள். ஆனால், அப்படி இடம் ஏதும் இல்லை. அம்மாதிரி இடவசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். தவிர, குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தகங்களை விற்கும் கடைகள் முக்கியத்துவம்பெற வேண்டும்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

இந்த விஷயங்களுக்கு மத்தியில், சமையல், ஆன்மீகம், ஜோதிடம், சுய முன்னேற்றம் போன்ற புத்தகங்களின் மீதான ஈர்ப்பு குறைந்து, நல்ல இலக்கியம், கதைகள் அல்லாத புத்தகங்கள், வரலாறு, சுற்றுச்சூழல் ஆகிய நூல்கள் அதிகம் விற்க ஆரம்பித்துள்ளன. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் குறித்த புத்தகங்களின் வருகையும் விற்பனையும் அதிகரித்திருக்கிறது.

இந்த ஆண்டு,பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?" புத்தகத்தை ஒரு பதிப்பகம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனை செய்திருக்கிறது. இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருதைப் பெற்ற சஞ்சாரம் நாவல் 8 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது. " கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலின் ஆங்கிலப் பதிப்பு வழக்கமாக ஒன்று விற்றால் அதிகம். ஆனால், இந்த ஆண்டு சுமார் 20 தொகுப்புகள் விற்பனையாகியுள்ளது" என்கிறார் பாரதி புத்தகாலயத்தின் நாகராஜன்.

2017ஆம் ஆண்டில் பெரியார் அன்றும் இன்றும் நூலையும் 2018ஆம் ஆண்டில் அம்பேத்கர் அன்றும் இன்றும் நூலையும் மிகக் குறைவான விலையில் பதிப்பித்த விடியல் பதிப்பகம் இந்த ஆண்டு மார்க்சியம் அன்றும் இன்றும் என்ற 3 தொகுதி அடங்கிய தொகுப்பை பெரும் எண்ணிக்கையில் விற்பனை செய்திருக்கிறது.

2019 சென்னை புத்தகக் கண்காட்சி: எப்படி இருந்தது?

புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் இளைப்பாறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில் விற்கப்பட்ட உணவுகளின் விலை பலரையும் திகைக்க வைத்தது. "கடந்த ஆண்டுகளில் விற்பனையான உணவு தரமாக இல்லையென வாசகர்கள் கூறினார். அதனால், இந்த ஆண்டு ஒரு பெரிய நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை அளிக்கலாம் என முடிவுசெய்தோம். பெரிய பெயர் பெற்ற நிறுவனமென்றால் கூடுதலாகத்தான் விலை இருக்கும்" என்கிறார் இந்தக் கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் மயிலை வேலன். உணவகத்திடம் வாடகை அதிகம் வாங்குவதால்தான் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருந்தது என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, "வாடகை அதிகம்தான். ஆனால், இதே உணவகம் வெளியில் விற்பதைவிட உள்ளே அதிக விலைக்கு விற்கவில்லை" என்கிறார் அவர்.

மேலும் பதிப்பாளர்களின் வியாபார சந்திப்பிற்காக இடம் தேவை என்ற கோரிக்கை குறித்து கேட்டபோது, 4 ஸ்டால்களை எடுக்கும் பெரிய பதிப்பாளர்கள் தங்கள் ஸ்டால்களுக்குள்ளேயே அதற்கென ஓர் இடத்தை ஒதுக்கிக்கொள்ளலாமே என்கிறார் மயிலை வேலன்.

தமிழில் புத்தகங்களை வெளியிடுபவர்கள், இலக்கியம், சமூகம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், ஜோதிட நூல்கள் என கலந்தே வெளியிடுவதால் பதிப்பகங்களை வகைப்படுத்துவதில் பிரச்சனை இருக்கிறது; அதனால்தான் வகைப்படுத்தி இடங்களைக் கொடுக்க முடிவதில்லை என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-46962823

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.