Jump to content

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ததா பாஜக? -


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ததா பாஜக? - என்ன சொல்கிறார் சையத் சுஜா? Image caption லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு

அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய நாட்டின் மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து முன்வைத்த பரபரப்பான ஆனால், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த சைபர் நிபுணர் சையத் சுஜா, செய்தியாளர்கள்கள் மற்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபில் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் ஸ்கைப் மூலம் உரையாற்றினார்.

அப்போது, இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த குழுவில் தான் இருந்ததாகவும், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிபிசி தெற்காசிய செய்தியாளர் ககன் சபர்வால் அங்கு நடைபெற்ற நிகழ்வையும், அவர் சையத் சுஜாவிடம் அவர் முன்வைத்த கேள்விகளையும் குறித்து விரிவாக அலசுகிறார்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது யார்?

ஐரோப்பாவுக்கான இந்திய செய்தியாளர்கள் சங்கம் மற்றும் லண்டன் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் கூட்டாக ஒருங்கிணைந்து நடத்திய சந்திப்பில் செய்தியாளர்கள், மாணவர்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபில் உள்பட பிரிட்டன் மற்றும் இந்தியாவை சேர்ந்த பொது உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ததா பாஜக? - என்ன சொல்கிறார் சையத் சுஜா?படத்தின் காப்புரிமை SAM PANTHAKY

திட்டமிட்ட நிகழ்வின்படி, அமெரிக்காவை சேர்ந்த சைபர் நிபுணர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வாறு ஹேக் செய்யப்படுகின்றன என்பதை காட்ட வேண்டும். ஆனால், கடந்த வார இறுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சையத் தாக்கப்பட்டதால் தனது லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாக சையத் தெரிவித்தார்.

இசிஐஎல் எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் சையத். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வடிவமைக்கும் குழுவில் தானும் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்தார்.

சையத் உயிருக்கு அச்சுறுத்தல்

ஸ்கைப் வழியாக சையத் தனது உரையாடலை நிகழ்த்தினார். அவர் அமர்ந்திருந்த அறை இருட்டாக இருந்தது தனது அடையாளத்தை அவர் வெளியிட விரும்பவில்லை என்பதை எடுத்து காட்டியது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சையத். தன்னால் ஆங்கிலம் தவிர பிற இந்திய மொழிகளிலும் பேச முடியும் என்றும், ஆனால் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால் தான் ஆங்கிலத்தில் பேசுவதாகவும் சையத் கூறினார்.

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ததா பாஜக? - என்ன சொல்கிறார் சையத் சுஜா? Image caption லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு

கடந்த ஐந்தாண்டுகளாக சையத் அமெரிக்காவில் வசித்து வருவதால் அவரது ஆங்கில மொழி நடை அமெரிக்க பாணியில் இருந்தது. தான் ஹைதராபாத்திலிருந்து வந்திருப்பதாகவும், 2014 ஆம் ஆண்டு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கணினி வழியாக ஊடுறுவ முடியும் என்பதைப் பற்றி பல தகவல்களை அறிந்திருந்ததால் தனது நண்பர்களைப் போல தனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன்னுடன் பணியாற்றியவர்களில் குறைந்தது ஐந்து ஊழியர்கள் இதன் காரணமாகவே கொல்லப்பட்டார்கள் என்றும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சையத் சுஜாவிடம் சில கேள்விகளை பிபிசி முன்வைத்தது.

சையத், அமெரிக்கா மற்றும் காங்கோ போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வித பிரச்சனைகளுமின்றி பயன்படுத்தப்படுவது எப்படி?

அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து நான் ஆய்வு செய்ததில்லை. அதற்கான வாய்ப்புகளும் எனக்கு கிடைக்கவில்லை. அதனால், அமெரிக்கா மற்றும் காங்கோ குறித்து கருத்து கூற முடியாது.

கடந்தாண்டு, இந்திய தேர்தல் ஆணையம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்வது பற்றி பொதுவெளியில் சவால் விடுத்திருந்தனர். அதில் நீங்கள் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தீர்களா?

நான் அமெரிக்காவில் தஞ்சம் கோரி வந்துள்ளேன். நான் மீண்டும் இந்தியாவுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் அங்கு என்னுடைய பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அதனால், அந்த சவாலில் பங்கேற்கத் தயாராக இருந்தவர்களுக்கு என்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தேன். ஆனால், கடைசி நேரத்தில் அவர்கள் அந்த சவாலில் கலந்து கொள்ளவில்லை.

நீங்கள் இப்போது இதுபற்றிய பேச வேண்டிய நிலை என்ன? இந்த செய்தியாளர் சந்திப்பின் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?

"நேர்மையாக சொல்லப்போனால் நான் நிச்சயம் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. இங்கு எதுவும் மாறிவிடாது என எனக்குத் தெரியும். காரணம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நிரந்தரமாக இருக்கும். என்ன நடந்து கொண்டு இருக்கிறதோ அது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும். நாட்டு மக்கள் ஒன்றிணைந்து எங்களுக்கு வாக்குச்சீட்டு முறைதான் வேண்டும் என்றாலும் எதுவும் மாறப்போவதில்லை. காரணம், வாக்குகளை வாங்கும் அளவுக்கு பாஜக வசம் அவ்வளவு பணம் இருக்கிறது. தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை மக்கள் இந்த தருணத்தில் சிந்திக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் அரசாங்கம் இங்கு தேவையா, ஓர் அரசாங்கம் இந்தியாவில் அனைத்தையும் மிகைப்படுத்தி கொண்டே செல்கிறதே அது தேவையா என்று மக்கள் சிந்திக்க வேண்டும். இங்கு யாரும் இதைப்பற்றி எதுவும் செய்ய மாட்டார்கள்."

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் மாற்றாக எதை பயன்படுத்த நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?

யாரும் ஊடுறுவ முடியாத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தியா வசம் உள்ளன. ஆனால், அதை அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். நாங்கள் இந்திய அரசாங்கத்திடம் அதன் வடிவமைப்பை கொடுத்துள்ளோம். அதனை யாராலும் ஹேக் செய்ய முடியாது. அதன் வடிவமைப்பு அவ்வளவு சிக்கலானது.

சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபிலின் கருத்துகளை அறிய முயன்றார் ககன். ஆனால், சையத் தெரிவித்துள்ள கருத்துகளை சரிபார்த்து அதன்பிறகு ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளதாக கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்களை அந்த சந்திப்பில் சையத் சுஜா சமர்பிக்கவில்லை. ஆனால், இதுகுறித்த தரவுகளை செய்தியாளர்களிடம் பகிரத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யவே முடியாது என்ற தங்களது கருத்திலிருந்து எப்போதும் பின்வாங்கப்போவதில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று நிரூபிப்பதற்காக லண்டனில் நடத்தப்பட்டது நிகழ்ச்சி பற்றி எங்களது கவனத்துக்கு வந்தது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய இந்திய அரசின் நிறுவனங்களில் கடும் கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளோம்.

மேலும், லண்டனில் நடந்த இந்த நிகழ்வு குறித்து தனியே ஆராய்ந்து, அதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கு இயந்திர உருவாக்கத்தில் அவர் இல்லை

மின்னணு வாக்கு இயந்திர உருவாக்கத்தில் சையத் சுஜா இல்லை என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது தேர்தல் ஆணையம்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சையத் சுஜா மின்னணு வாக்கு இயந்திர உருவாக்க அணியில் தாம் இருந்ததாகவும், அதனை ஹேக் செய்ய முடியுமென்றும் அவர் கூறியதாக சில ஊடக தகவல்கள் மூலம் நாங்கள் அறிகிறோம். உண்மையில் அவர் இதன் உருவாக்கத்தில் இல்லை. இதனை உருவாக்கிய நிறுவனத்திலும் பணியாற்றவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சையத்தின் இந்த செயலானது இந்திய தண்டனை சட்டத்தை மீறும் செயலாகும் குறிப்பாக ஐ.பி.சி 505(1)(b)ஐ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-46957466

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பா.ஜ.க.  வாக்கு இயந்திரத்தில்... முறைகேடு செய்வதாக, நீண்ட நாட்களாகவே பலரும் சந்தேகம் எழுப்பி வந்த நிலையில்....
இப்போது... உண்மை அம்பலமாகி உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.