Jump to content

ஆட்சியாளர்களுடன் இணைந்து செல்வதும் சாத்தியமாகாதென உணர்ந்தோம்


Recommended Posts

அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்கக் கூடாது என்ற கோசங்கள் தென்பகுதியில் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
 
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ கூறியதை அடுத்து தென்பகுதிப் பேரினவாதசக்திகள் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு எதிராக கோசம் எழுப்பத் தொடங்கியுள்ளன.
இதில் பெளத்த பீடங்களும் இணைந்து கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளும் விடப்பட்டுள்ளன.
 
மிகப்பெரியதொரு யுத்தத்தை நடத்தி தமிழ் மக்களைக் கொன்றொழித்த பின்பும் சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி அடங்கவில்லை என்பது தெரிகிறது.
 
ஆக, சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து சென்று தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியுமென்று யார் நினைத்தாலும் அந்தச் சிந்தனை ஒருபோதும் சரிவரமாட்டாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் இப்போதாவது ஏற்றுக் கொள்வர் என நம்பலாம்.
 
அதாவது இலங்கையின் ஆட்சி அதிகாரம் என்பது நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றிடையே மாறி மாறி வருவதான இயல்பைக் கொண்டுள்ளது.
 
ஆட்சிப் பீடத்தில் அமர்வதற்காக கூட்டணிகளை அமைத்துக் கொண்டாலும் இரு பிரதான கட்சிகள் அடங்கிய எதிரும் புதிருமான ஆட்சியில் ஒன்றின் தீர்மானத்தை மற்றையது எதிர்ப்பது இலங்கையில் தவிர்க்க முடியாத இயல்பாகிவிட்டது.
 
அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசு முற்பட்டால், அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கும்.
 
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்தால் அதனை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக மறுக்கும்.
இதுவே இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்பான நடைமுறை.
எனவேதான் இணக்க அரசியல் என்ற கோட்பாடு நடைமுறைச் சாத்தியமற்றதெனக் கூறவேண்டும்.
 
இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டுமாக இருந்தால், தேசிய அரசு அமையும் பட்சத்திலேயே அது சாத்தியமாகும் என அரசியல் நோக்கர்கள் கருத்துரைத்தனர்.
 
அவர்களின் கருத்துக் கணிப்பு சரியாகுமா? என்பதைப் பரீட்சிப்பதுபோல தேசிய அரசு உருவாகியது. ஜனாதிபதியாக மைத்திரிபாலசிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து கொண்டனர்.
 
இணைந்து செல்வதென கூட்டணி அமைத்துக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கியதேசியக்கட்சியும் தேசிய அரசை அமைத்தது.
 
தேசிய அரசு அமைத்தமை அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்க உதவும் என எதிர்பார்த்தபோது, நடந்தது என்ன? என்பதை அண்ட சராசரம் முழுவதும் அறியும்.
நிலைமை இதுவாக இருக்கையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாக வேண்டு மாயின் தமிழர்கள் எடுக்க வேண்டிய தீர்மானம் என்ன என்பதை இனிமேலாவது தமிழினம் ஒன்றுகூடி முடிவெடுக்க வேண்டும்.
 
Link to comment
Share on other sites

ஆட்சியாளர் எதோ தமிழர்களுக்கு தருவது  போல நடிப்பதும் அதனை எதிர்க்கட்சி(கள்) தடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.