Jump to content

அழிவின் விளிம்பில் இருக்கிறதா காபி ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஹெலன் பிரிக்ஸ் பிபிசி
 
  •  
அழிவின் விளிம்பில் இருக்கிறதா காபி?படத்தின் காப்புரிமை Getty Images

அழிவின் விளிம்பில் காபி பயிர் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்ப கடினமாகதானே இருக்கிறது. ஆனால், நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நமக்கு தெரிந்த 124 காபி வகைகளில் 60 சதவீதம் அழிவின் விளிம்பில் இருக்கிறது.

இயற்கையாக காடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விதமான காபி மரங்கள் வளர்கின்றன. இப்போது நாம் உணவாகப் பயன்படுத்தும் இரண்டு விதமான காபி பயிரும் அதில் அடங்கும்.

இந்த ஆய்வு முடிவு கவலை அளிப்பதாக கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். நாம் பயன்படுத்தும் காபி பயிர் அழியாமல் இருக்க வேண்டுமானால், வன காபி ரகமும் காப்பாற்றப்படவேண்டும் என்கிறார்கள்.

உலகளவில் ஐந்தில் ஒரு செடி வகை அழிவின் விளிம்பில் இருக்கிறது என்றாலும் 60 சதவீதம் என்பது உண்மையில் அச்சம் தரும் ஒன்றுதான்.

ஏன் வன காபி ரகம்?

நாம் அருந்தும் காபி ரகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாத போது, ஏன் காட்டில் உள்ள காபி ரகம் அழிவது குறித்து அச்சப்பட வேண்டும் என்கிறீர்களா?

அழிவின் விளிம்பில் இருக்கிறதா காபி?படத்தின் காப்புரிமை Getty Images

காரணம் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ராயல் பொடானிக் கார்டனை சேர்ந்த ஆரொன் டாவிஸ், "காட்டு காபி ரகம் காப்பாற்றப்படவில்லை என்றால், நாம் அருந்தும் காபி ரகமும் ஒரு நாள் இல்லாமல் போகும்" என்கிறார்.

இதற்கான காரணத்தையும் சொல்கிறார்.

காபி பயிரிடல் தொடர்பான வரலாற்றை பார்த்தோமானால், காட்டு காபி ரகம், நாம் அருந்தும் காபி ரகத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவிற்கு உதவி இருக்கிறது என்பது புரியும் என்கிறார்.

காட்டு காபி ரகத்தை காப்பாற்ற பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சைன்ஸ் அட்வான்சஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டுகிறது. இது சர்வதேச அளவில் காபி உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் என்றும் கூறுகிறது.

75 சதவீத காபி ரகம் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், 35 சதவீத ரகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், மீதமுள்ள 14 ரகம் குறித்து குறைவாகத்தான் தெரியும் என்பதால் அதுகுறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியேதான் 28 சதவீத வன காபி ரகங்கள் வளர்கின்றன என்றும், அதில் பாதிதான் விதை வங்கிகளில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றமும் காபியும்

அழிவில் இருக்கும் பயிர்களை பட்டியலிடும் ஐயூசிஎன் பட்டியலின்படி,பருவநிலை மாற்றத்தையும் கணக்கில் எடுத்து கொண்டால், அரபிகா காபி ரகமும் அழிவின் விளிம்பில் இருப்பதாக பட்டியலிடப்படுகிறது.

காபிபடத்தின் காப்புரிமை Getty Images

பருவநிலை மாற்றத்தினால், 50 சதவீத அரபிகா காபி பயிர் வகைகள் குறையும் என்றும், 2088ஆம் ஆண்டுக்குள் இந்தப் போக்கு மேலும் அதிகரிக்குமென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அரபிகா காபி ரகத்திற்கு தாய்நிலம் எத்தியோப்பியாதான். அது இயற்கையாக அந்நாட்டின் மழைகாடுகளில் வளர்கிறது.

வன காபி என்றால் என்ன?

பல காபி பிரியர்கள் இரண்டு வகை காபி பயிர்களைத்தான் அன்றாடம் பயன்படுத்துகிறோம் என்பதே தெரியாது. நாம் பயன்படுத்துவது காபி அரபிகா மற்றும் காபி ரோபஸ்டா வகை தான்.

அழிவின் விளிம்பில் இருக்கிறதா காபி?படத்தின் காப்புரிமை Getty Images

நாம் பயன்படுத்துவதை தவிர மீதமுள்ள 122 காபி ரகங்கள் இயற்கையாக காடுகளில் வளர்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை அருந்துவதற்கு நன்றாக இருக்காது. ஆனால், அந்த காபி ரகத்தின் ஜீன்கள்தான், இந்த பருவநிலை மாற்றத்திற்கு மத்தியில், நாம் அருந்தும் காபி ரகங்கள் எதிர்காலத்தில் உயிர்ப்புடன் இருக்க உதவி புரியும்.

காபியின் அழிவும், பிற பயிர்களின் அழிவும்

பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது, காட்டுத் தேனீர் மற்றம் மா-வின் சில ரகங்களும் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

எங்கு வன காபி வகை கண்டறியப்பட்டது?

காபிபடத்தின் காப்புரிமை Getty Images

ஆப்ரிக்கா உள்ளே உள்ள அடர்க் காடுகள், மடகாஸ்கர் தீவுகள் வெப்பமண்டல பருவநிலை நிலவும் இந்தியப் பகுதிகள், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளில் காட்டுக் காபி ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

அறிவியலாளர்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான், இப்போது காபி பயிரிடுதலில் உள்ள பிரச்சனையையும், இந்த ஆபத்தையும் புரிந்து கொண்டு அதனை காப்பது குறித்தும் திட்டமிட வேண்டும் என்கிறார்கள்.

ஆய்வாளர் எலிமியர் நிக், "இந்த ஆய்வின் மூலம் பெறப்பட்டுள்ள தரவுகளானது, எந்த வகை காபி ரகத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. அதன்படி நாம் திட்டமிட்டாலே நாம் பல ரகங்களை காப்பாற்றிவிட முடியும்." என்கிறார்.

https://www.bbc.com/tamil/global-46948742

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.