Jump to content

தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி ' 1000 ரூபா இயக்கம்" இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது. 

DSC_0220.jpg

இந்த இயக்கத்தின் கோரிக்கைக்கு இணங்க நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பில் பல்வேறு சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்,

up1.jpg

up4.jpg

up3.jpg

up2.jpg

தொழிலாளர்களின் நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும். கம்பனிகள் அதிகரிப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதோடு, அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். 

கொழும்பு ஐந்துகாமம் சந்தியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, மல்வத்து வீதிக்கூடாகச் சென்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியை சென்றடைந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும், அதில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும், கம்பனிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பட்டன. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொளத்த மற்றும் கத்தோலிக்க மதகுருமார்களும் ஆதரவளித்திருந்தனர். ஒவ்வொரு முறையும் தொழிற்சங்கங்கள் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன. 

எனினும் இம்முறை 625 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு கையெழுத்திடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதற்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், அவ்வாறு கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் சந்தர்ப்பத்தில் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டக்கார்கள் எச்சரித்தனர்.

http://www.virakesari.lk/article/48580

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.