Jump to content

பிரியங்காவின் அரசியல் நுழைவு: ராகுலை பிரதமராக்க காங்கிரஸ் இறக்கிய துருப்புச்சீட்டு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
 
rahulpriyankajpg
Published : 23 Jan 2019 18:08 IST
Updated : 23 Jan 2019 18:20 IST

பிரியங்கா வத்ராவின் அரசியல் நுழைவு, அவரது சகோதரர் ராகுலை பிரதமராக்க காங்கிரஸ் இறக்கிய துருப்புச்சீட்டாகப் பார்க்கப்படுகிறது. வரும் மக்களவை தேர்தலில் பிரியங்கா உ.பி. தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது.

‘புலி வருது,…’ கதையாக பிரியங்காவை முன்வைத்து,  ‘அரசியலில் நுழைகிறார்’, ‘வரும் தேர்தலில் போட்டியிடுகிறார்’ என அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இதை உண்மை என நிரூபிக்கும் வகையில் இன்று பிரியங்காவிற்கு, கட்சியில் பதவி அளித்து அதிகாரபூர்வமாக அரங்கேற்றப்பட்டு விட்டது.

1999-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சோனியா, பெல்லாரி மற்றும் அமேதி என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த பிரச்சாரத்தில் முதன் முதலாக களம் இறங்கியவர் பிரியங்கா.

இவர், தன் தாய்க்காக பெல்லாரி தொகுதியில் அதிகமாக பிரச்சாரம் செய்திருந்தார். இதனால், தன்னை எதிர்த்து பாஜகவின் சார்பில் போட்டியிட்ட சுஷ்மா ஸ்வராஜை வென்றார் சோனியா.

அதன் பிறகு தேர்தல் பொறுப்பாளராக இருந்து தம் தாய்காக அமேதியில் பிரச்சாரம் செய்து வந்தார் பிரியங்கா. எனினும், அதையடுத்து வந்த மக்களவை தேர்தல்களில் அவர் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அவருக்கு முன்பாக யாரும் எதிர்பாரா வகையில் ராகுல் காந்தி 2004-ல் போட்டியிட்டாரே தவிர, பிரியங்கா வரவில்லை.

ராகுலுக்கும் சேர்த்து தேர்தல் பொறுப்பாளராக பிரச்சாரம் மட்டும் செய்தார்.

2009-ன் மக்களவை தேர்தலில் 21 பெற்ற காங்கிரஸுக்கு 2014-ல் இரண்டு தொகுதிகளே மிஞ்சின. அவை இரண்டும் அமேதியில் ராகுல் மற்றும் ராய்பரேலியில் சோனியாவின் தொகுதிகளாக இருந்தன.

இந்நிலையில், பிரியங்காவால் மட்டுமே உ.பி.யில் மூழ்கத் துவங்கி விட்ட காங்கிரஸை காக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அக்கட்சியின் தலைமையும் பிரியங்காவை கட்சிக்கு மிகவும் சிக்கலான சமயத்தில் ஒரு துருப்புச்சீட்டாகக் களம் இறக்கத் தருணம் பார்த்தது.

எனினும், தொடர்ந்து உ.பி. காங்கிரஸார் பிரியங்காவை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தி வந்தனர். குறிப்பாக அலகாபாத் காங்கிரஸினர் பிரியங்கா அரசியலுக்கு வருவதாகக் குறிப்பிட்டு தம் தொகுதியில் சுவரொட்டிகளை அவ்வப்போது ஒட்டி சர்ச்சையை கிளப்பினர்.

இதில், ‘இந்திரா கி கூன் பிரியங்கா கமிங் சூன்(இந்திராவின் இரத்தம் பிரியங்கா விரைவில் வருகிறார்)’ எனக் குறிப்பிடப்பட்டு, அதில் இந்திரா காந்தி மற்றும் அவரது பேத்தியான பிரியங்காவின் படங்கள் பிரதானமாக இடம் பெற்றன.

இதுபோல், ஒவ்வொரு முறையும் அலகாபாத்தின் காங்கிரஸார் பிரியங்காவிற்கு ஆதரவாக சுவரொட்டிகளையும், பதாகைகளையும் பலவிதமாக வெளியிட்டனர். இதற்கு துவக்கத்தில் மறுப்பு வெளியிட்டு வந்த பிரியங்கா கடந்த வருடம் அமைதி காத்தார்.

ராய்பரேலியில் சோனியா விலகலா?

இதனிடையே, தன் உடல்நிலை கருதி சோனியா தம் தலைமை பொறுப்பில் இருந்து விலகி மகன் ராகுலை அமர்த்தி விட்டார். அடுத்து மாநிலங்களவை உறுப்பினராகி தம் ராய்பரேலி தொகுதியில் ராகுலை நிறுத்துவதாகவும் பேசப்படுகிறது.

அமேதியில் பிரியங்காவா?

இதன் தொடர்சியாக சோனியா வரும் மக்களவையில் போட்டியிட மாட்டார் எனவும், அவரது ராய்பரேலி தொகுதிக்கு ராகுல் மாறி விடுவார் என்றும் கூறப்படுகிறது. எனவே, அமேதியில் பிரியங்கா போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாக காங்கிரஸார் நம்புகின்றனர்.

காங்கிரஸின் கடைசி ஆயுதம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதமர் வேட்பாளராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட உள்ளார். இவரை சமாளிக்க காங்கிரசிடம் இருக்கும் கடைசி ‘ஆயுதம்’ என பிரியங்கா என கட்சியினர் கூறி வந்தனர்.

ராகுலின் கோபம்

பிரம்மச்சாரியான ராகுல் காந்தி அரசியலில் வெளிக்காட்டக் கூடாத தன் கோபத்தை காட்டி விடுகிறார். அவர் பிரதமராக எடுபடுவது சந்தேகம் என கூறப்பட்டு வந்தது. இதனால், பிரியங்கா வாத்ரா களம் இறக்கப்படுவார் என்ற பேச்சு அடிக்கடி கிளம்பியபடி இருந்தது.

மாயாவதி-அகிலேஷ் அமைத்த கூட்டணி

இத்துடன், பாஜகவை எதிர்த்து தம் தலைமையில் எதிர்கட்சிகளின் ஒரே அணியாக அமைக்க காங்கிரஸ் முயன்றது. இதற்கு, மாயாவதியும், அகிலேஷ்சிங் யாதவும் கடந்த வாரம் உபியில் இணைந்து முற்றுப்புள்ளி வைத்தனர். காங்கிரஸ் ஒதுக்கியதுடன், அக்கூட்டணியின் பிரதமராக மாயாவதி முன்னிறுத்த முயற்சிக்கப்படுகிறார்.

பிரதமர் வேட்பாளராக மம்தா

சிலதினங்களுக்கு முன் திரிணமூல் காங்கிரஸ் கொல்கத்தாவில் எதிர்கட்சிகள் கூட்டத்தை கூட்டியது. இதன் பிறகு, எதிர்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக மேற்குவங்க முதல்வர் மம்தா பேசப்படுகிறார்.

பிரியங்காவின் தேவை

இந்தநிலை, தொடர்ந்தால் எதிர்கட்சி தலைவர்களில் மேலும் பலர் தம்மை பிரதமராக முன்னிறுத்தத் துவங்கும்

சூழல் உள்ளது. இதற்கு ராகுல் தான் எதிர்கட்சிகள் பிரதமர் என்பதை வலியுறுத்த காங்கிரஸுக்கு பிரியங்காவின் தேவை இருந்தது.

காங்கிரஸின் பிரதமர்

உபி உள்ளிட்ட சில மாநிலங்களில் தனித்தும் பலதில் கூட்டணி அமைத்தும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில், அதிக தொகுதிகளை பெற்றால் தம் கட்சி சார்பில் பிரதமர் என வலியுறுத்தும். இதற்கு பாஜகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் இருப்பது முக்கியம்.

இந்திரா காந்தியின் முக அம்சம், உடல்மொழி

பிரியங்கா தனது பாட்டியான இந்திரா காந்தியின் முகஜாடை மற்றும் உடல்மொழியை கொண்டுள்ளார். இதற்கு, உபிவாசிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பு உள்ளது. எனவே, அதை பயன்படுத்தி அரசியல் லாபம் எடுக்க காங்கிரஸ் சரியான தருணம் பார்த்து கொண்டிருந்தது.

நேரு குடும்பத்தின் சொந்த ஊரான அலகாபாத்தில் அவர் வாழ்ந்த ஆனந்த பவன் இல்லம் உள்ளது. இங்கிருந்து தன் தேர்தல் பிரச்சாரத்தை பிரியங்கா துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸின் உத்வேகம்

இதன்மூலம், தான் உபியை சேர்ந்தவர் என்பதை உணர்த்தி பிரியங்கா வாக்கு சேகரிக்க உள்ளார். கடந்த மாதம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில ஆட்சியை பாஜகவிடம் இருந்து பறித்தமையால், காங்கிரஸிடம் உத்வேகம் கிளம்பியுள்ளது.

இதை மக்களவை தேர்தல் வரை நிலைக்க வைக்க பிரியங்காவின் நுழைவு நல்ல பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.thehindu.com/india/article26070418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பக்கம் முலாயம் இந்த பக்கம் மாயாவதி .. துருப்பு சீட்டு இறக்கிய போது .. 😍

hqdefault.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.