Jump to content

பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுமா?


Recommended Posts

பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுமா?

சர்வதேசம் தமிழ்த் தரப்புடன் பேச வேண்டும் என்ற கட்டாயச் சூழலை ஏற்படுத்தும் கொள்கை எது?

 

main photo
 
வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிய விக்னேஸ்வரன் தற்போது அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் அவருடைய புதிய கட்சியுடன் கூட்டுச் சேரவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கிய அனந்தி சசிதரன் இதுவரை ஆதரவு வழங்கவில்லை. 
 
விக்னேஸ்வரனுடன் நெருக்கமாகச் செயற்பட்ட முன்னாள் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் கூட இதுவரை ஆதரவு வழங்குவதாக அறிவிக்கவில்லை.

 

 

இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் அரசியல் யாப்பு ரீதியான அநீதிகளை வெளிப்படுத்த வேண்டுமானால், தமிழ்த்தேசிய அரசியல் கோட்பாடுகளுக்கு எதிரான தமிழரசுக் கட்சியின் போக்குகளை அம்பலப்படுத்த வேண்டுமானால் விக்னேஸ்வரன் உருவாக்கிய புதிய கூட்டணி, பூகோள அரசியலின் சாதக பாதக விளைவுகளுக்கு ஏற்ப கொள்கைகளை வகுக்க வேண்டும்.

 

இந்த நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியில் பதினொரு பேர் பதவி நிலையிலும் மத்திய குழு உறுப்பினர்களாக பதினொருபேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டணியின் தலைவராகவும் செயலாளர் நாயகமாகவும் விக்னேஸ்வரன் செயற்படுவார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவது தமது நோக்கம் அல்ல என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், தமது கொள்கையை ஏற்கும் எவரும் தமது கூட்டணியில் இணைந்துகொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலில் ஆனந்தி சசிதரன் தலைமையிலான சுயாட்சிக் கழகம் விரைவில் இணைந்து செயற்படும் எனவும் ஐங்கரநேசன் உள்ளிட்ட பல தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் இணைந்து செயற்படவுள்ளதாகவும் கூட்டணியின் தகவல்கள் கூறுகின்றன.

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடத்தியபோதும் இதுவரை இணக்கம் ஏற்படவில்லையெனவும் ஆனாலும் இணைந்து செயற்படுதில் தமக்கு பிரச்சினை இல்லையென்றும் விக்னேஸ்வரன் அழைப்பும் விடுத்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைகள் உருவாக்கப்படவில்லையென அவதானிகள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு, திருகோணமலை உள்ளிட்ட ஈழத் தமிழர்களின் கடற் பிரதேசங்களில் எண்ணெய்வள ஆய்வு நடவடிக்கைகளில் அமெரிக்கா கடந்த செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல் ஈடுபட்டுள்ளது.

அத்துடன் இந்தியா, ஜப்பான், ஆகிய நாடுகளும் ஒத்துழைத்துச் செயற்படுகின்றன. சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் இணைந்து செயற்படுகின்றன.

 

இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடனும் பேசினால் மாத்திரமே தமது பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஆரோக்கியமாக அமையும் என்ற சிந்தனையை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு உணர்த்த முடியும்-

 

ஆனால் இந்த விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியை மையமாகக் கொண்ட தமிழரசுக் கட்சி எதுவுமே பேசவில்லை. திருகோணமலைத்துறை முகம் மீதான அமெரிக்கச் செயற்பாடுகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்குவதால் தமிழரசுக் கட்சி மௌனமாக இருப்பதாக அவதானிகள் கூறியிருமிருந்தனர்.

அத்துடன் வடக்கு - கிழக்கு தமிழா் தாயகப் பிரதேசங்களில் கூடுதல் ஆசனங்களைப் பெற்று இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப செயற்படவில்லையென ஏலவே குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள விக்னேஸ்வரன், பூகோள அரசியல் குறித்து எந்த விடயங்களையும் முன்வைக்கவில்லை.

ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், சர்வதேச அணுகுமுறைகளை தமிழ்த் தரப்பு எவ்வாறு கையாள வேண்டும் என்ற புதிய வியூகங்கள் எதுவும் விக்னேஸ்வரன் உருவாக்கிய கட்சியின் கொள்கையில் உள்வாங்கப்பட்டதாகத் தெரியவுமில்லை.

ஆகவே, தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக விக்னேஸ்வரனின் புதிய கூட்டணி செயற்பட வேண்டுமானால், பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழ்த்தரப்பு கூறுகின்ற விடயங்களை சர்வதேச சமூகம் ஏற்கக் கூடியவாறான கொள்கைகளை முன்வைக்க வேண்டும்.

அப்போதுதான் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான நிலையில் மாற்றுக் கட்சி என்ற அந்தஸ்த்தையும் அங்கீகாரத்தையும் பெற முடியும்.

அத்துடன் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசினால் மாத்திரமே தமது பூகோள அரசியல் நகர்வுகளை ஆரோக்கியமாக முன்னெடுக்க முடியும் என்ற சிந்தனையை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு உணர்த்தவும் முடியும்.

ஆகவே இவற்றைக் கருத்தில் எடுத்து புதிய கொள்கைகளை வகுக்காமல் வெறுமனே தமிழ் மக்கள் கூட்டணியை விக்னேஸ்வரன் அமைத்துள்ளார் என்பதே இங்கு வெளிப்படையாகின்றது.

இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் அநீதிகளை வெளிப்படுத்த வேண்டுமானால், தமிழ்த் தேசிய அரசியல் கோட்பாடுகளுக்கு எதிரான தமிழரசுக் கட்சியின் போக்குகளை அம்பலப்படுத்த வேண்டுமானால் விக்னேஸ்வரன் உருவாக்கிய புதிய கூட்டணி நிச்சயமாக பூகோள அரசியலின் சாதக பாதக விளைவுகளுக்கு ஏற்ப கொள்கைகளை வகுக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியல் அணுகுமுறைகளிலும் மாற்றங்களைச் செய்தே ஆக வேண்டும். இல்லையேல் தமிழரசுக் கட்சியே போதும் என்ற நிலை சிலருக்கு ஏற்படும். கஜேந்திரகுமார்தான் சரியான இலக்கு என வேறு சிலரும் உணரக் கூடும்.

அல்லது ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்தால் குறைந்த பட்சம் வேலை வாய்ப்புகள், நிவாரணங்கள் கிடைக்கும் என பாதிக்கப்பட்ட மக்கள் சிந்திக்க நேரிடும்.

எனவே இவ்வாறன நிலை என்பது இலங்கை, இந்திய அரசுகளுக்கு தமிழர் தரப்பை பிரித்தாளவும் வசதியாக அமைந்துவிடும். அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தமிழ்தரப்பு சார்ந்த விடயங்களில் இலங்கை, இந்திய அரசுகள் சொல்லும் கதையை கேட்கும் நிலையும் ஏற்படும்.

இதன் பின்னணி சீன அரசுக்கு இன்னமும் வசதியாகவே அமைந்துவிடும். இவ்வாறனதொரு நிலையில் தமிழரசுக் கட்சி பூகோள அரசியல் சூழலோடு ஒப்பிட்ட தமிழ் அரசியல் செயற்பாட்டுக்குள் வரும் என்று நம்பமுடியாது. வா என்று கேட்கவும் முடியாது.

ஆனால் விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஏனைய தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முரண்பாட்டில் ஓர் உடன்பாடாக கூட்டுச் சேர்ந்து செயற்படுவது காலத்தின் அவசியம்.

அதற்கேற்ற முறையில் பூகோள அரசியல் சார்ந்த தமிழர் கொள்கைகளை வகுக்க வேண்டியது தமிழ் மக்கள் கூட்டணியின் பொறுப்பு- அது தமிழர் தரப்பின் புதிய அரசியல் மாற்றத்துக்கான கால்கோளாகவும் அமையும்.

https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=709&fbclid=IwAR01IEHmvXTUb9DGAEu3X_m31aF0Wa6jc4RoO8Zc7LQJ0ImMegdyTh6l2Ic

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியமான விமர்சனம். ஆனால், இந்தப் பூகோள அரசியல் நிலைமை பற்றிய கரிசனைகள் எதுவும் புதிய கட்சியின் ஆவணங்களில் மட்டுமல்ல, சிந்தனை வடிவில் கூட இல்லை என்பது உறுதி! இது விக்கி ஐயாவை பப்பாவில் ஏற்றி விட்ட த.தே. கூட்டமைப்பு எதிரணியின் விளைவாக உருவான கட்சி என்றே நான் நினைக்கிறேன். ஆனால், இப்படி நடக்க வேண்டும். பல்லினத் தன்மை சமூகத்திற்கு நல்லதே செய்யும்! யார் யாரை விட நன்றாகச் செய்வார்கள் என்று மக்கள் பார்த்துத் தேர்வு செய்ய இப்படிப் பல கட்சிகள் வருவதே நல்லது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்தப் பூகோள அரசியல் நிலைமை பற்றிய கரிசனைகள் எதுவும் புதிய கட்சியின் ஆவணங்களில் மட்டுமல்ல, சிந்தனை வடிவில் கூட இல்லை என்பது உறுதி!

எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் அண்ணா!

ஆவண வடிவில் இல்லாமலிருக்கலாம், சிந்தனை வடிவில் இருக்கிறது என்பது முன்னர் ஒரு பேச்சில் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்களின் அரசியல் ஆய்வுக் குழுக்கள் நிறுவனமயப்படுத்தப்பட்டு ஆய்வுகளை ஆவணப்படுத்த வேண்டுமென்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/24/2019 at 5:42 PM, Justin said:

ஆனால், இந்தப் பூகோள அரசியல் நிலைமை பற்றிய கரிசனைகள் எதுவும் புதிய கட்சியின் ஆவணங்களில் மட்டுமல்ல, சிந்தனை வடிவில் கூட இல்லை என்பது உறுதி!

 

நீங்கள் சொன்னதில்  இருந்து  ஒன்று மட்டும் புரிகிறது.

geopolitics ஐ எவ்வாறு கையாள வேண்டும் என்ற புரிதல் இல்லை, அல்லது தெரிந்தும் தெரியாதது போல் வெளிக்காட்டிக்கொள்கிறீர்கள்.

geopolitics  பற்றி எமது (யாராயினும், சாம்சும் கூட்டணியோ அல்லது விக்கியோ) சிந்தனை வெளியில் தெரியவேண்டும் என்று எதிர்பார்ப்பவரிடம்,  geopolitics பற்றி கதைப்பதத்திற்கு வேறு என்ன இருக்கிறது.

geopolitics  பற்றி எமது (யாராயினும், சாம்சும் கூட்டணியோ அல்லது விக்கியோ) சிந்தனை வெளியில் தெரியவேண்டும் என்று எதிர்பார்ப்பவரிடம்,  geopolitics பற்றி கதைப்பதத்திற்கு வேறு என்ன இருக்கிறது.

ஆனாலும், விக்கி அவர்கள் ஓர் இடத்தில மிகவும் சூட்சுமமாக geopolitics பற்றி வெளிக்காட்டியிருந்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.