Jump to content

காதலனை தேட பெண்களுக்கு “டேட்டிங் விடுமுறை”: சீன நிறுவனங்களின் கவர்ச்சித் திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
உதட்டில் வண்ணச்சாயம் பூசும் சீன பெண்படத்தின் காப்புரிமை Getty Images Image caption இளம் பெண்கள் திருமணமாகி, குழந்தைகளை பெற்று குடும்பமாக வாழ வேண்டுமென சீன அரசு விரும்புகிறது.

வேலை செய்வதில் சிறு இடைவெளி எடுத்துவிட்டு, சீனாவின் சந்திர நாள்காட்டியின்படி, புத்தாண்டில் தங்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்ல மில்லியன்கணக்கான மக்கள் தயாராகி வருகின்றனர்.

ஆனால், சில தொழிலாளர்களுக்கு வழக்கமாக இந்த புத்தாண்டில் கிடைக்கின்ற 7 விடுமுறை நாட்களோடு மேலும் 8 நாட்கள் அதிகமாக கிடைக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர்.

திருமணம் ஆகாமல், 30 வயதுகளில் இருக்கின்ற பெண்களுக்கு இந்த `அதிர்ஷ்டம்ட கிடைத்துள்ளது. காதலரை கண்டறிவதற்காக இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

கைகோர்த்த சீன ஜோடிகள்படத்தின் காப்புரிமை Getty Images

ஹாங்செளவில் வரலாற்று பின்னணியிலான சுற்றுலா பூங்காவில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு "டேட்டிங் விடுமுறை" வழங்குவதாக "சௌத் சைனா போஸ்ட்" தெரிவித்துள்ளது.

"எஞ்சிய பெண்கள்"

சீனாவில் 30 வயதை நெருங்குகின்ற பெண்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களை இழிவாக "ஷெங் நு" அல்லது "எஞ்சிய பெண்கள்" என்று அழைக்கிறார்கள்.

தங்களுடைய தொழில்முறை வாழ்க்கையில் கவனம் செலுத்தவும், திருமணம் செய்து கொள்ளாமலும் இருக்க பல பெண்கள் முடிவு செய்வதால் இந்நிலை பொதுவாக அதிகரித்து வருகிறது.

ஆனால், திருமணம் செய்துகொள்ள வேண்டுமென பெண்கள் அழுத்தங்களை சந்தித்து வருகிறார்கள். சீனாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்பது, வேலை திறன் குறைவது பற்றி அரசு கவலை அடைந்துள்ளது.

வேலை பற்றி உரையாடும் இரண்டு சீன பெண்கள்படத்தின் காப்புரிமை Getty Images Image caption தொழில்முறை வாழ்க்கையில் கவனம் செலுத்துகின்ற அல்லது திருமணம் செய்யாமல் தனியாக வாழும் பெண்கள் சீனாவில் அதிகரித்து வருகின்றனர்,

"Leftover Women" and "Betraying Big Brother: The Feminist Awakening in China" என்ற புத்தகத்தை எழுதியவர் ஆசிரியர் லெடா ஹொங் ஃபின்ச்சர்.

லெடா ஹொங்கை பொறுத்தவரை "25 முதல் 30 வயதில் திருமணம் ஆகாமல் இருக்கின்ற பெண்களை முத்திரை குத்துவதற்கு சீன அரசின் திட்டமிட்ட பரப்புரை பிரசாரம்" எனக் கருதுகிறார்.

இவை எல்லாம், கல்வி கற்ற பெண்கள் திருமணம் செய்து, பின்னர் குழந்தைகளை பெற்றெடுத்து வாழ்வதற்கு அரசு எடுக்கின்ற முயற்சிகளின் ஒரு பகுதி" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்,

பிறப்பு விகிதம் குறைவு

2015ம் ஆண்டு "ஒரு குழந்தை கொள்கை"யை சீனா முடிவுக்கு கொண்டு வந்தாலும், குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. 2013ம் ஆண்டு தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் திருமணம் செய்வோரின் விகிதமும் குறைந்துள்ளது.

2018ம் ஆண்டு 15 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட 2 மில்லியன் குறைவாகும்.

ஆண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள குடும்பங்களை ஊக்கமூட்டிய கொள்கையால், மிக மோசமான பாலின சமமின்மையை சீனா சந்திப்பதாக லெடா ஹொங் கூறுகிறார்.

"சீனாவில் பெண்கள் குறைவாக உள்ளனர். அரசு புள்ளிவிவரங்களின்படி, தற்போது குறைந்தது 30 மில்லியன் ஆண்கள், பெண்களை விட அதிகமாக உள்ளனர்" என்று அவர் கூறுகிறார்.

இன்றைய சுமார் 1.4 பில்லியன் மக்கள்தொகையில் இருந்து, அடுத்த 50 ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகை 1.2 பில்லியனாக குறையும் என்று சீன சமூக அறிவியல் கழகம் கணித்துள்ளது.

தள்ளுவண்டியில் இருந்தவாறு சிரிக்கும் குழந்தைபடத்தின் காப்புரிமை Getty Images Image caption "ஒரு குழந்தை கொள்கை"யை முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும், சீனாவில் குழந்தைகள் பிறப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

சீன மக்கள்தொகையில் அதிகமானோர் முதுமை அடைவதோடு, குழந்தை பிறப்பு குறைவது பொது நிதி மற்றும் சமூக நலவாழ்வு அமைப்பில் பெரிய அழுத்தங்களை ஏற்படுத்தலாம்.

காதலனை கண்டறிதல்

ஆனால், டேட்டிங் செய்வதற்கு விடுமுறை வழங்குவது என்பது பெண்கள் ஒரு காதலரை சந்திக்க உதவுவதிலும், பின்னர் அவர்கள் குழந்தைகளை பெற்றெடுப்பர் என்பதிலும் எந்த தெளிவையும் வழங்கவில்லை.

ஹாங்செள சொங்செங் பெர்ஃபாமன்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஹூவாங் லெய் என்பவர் ட்சஜியாங் ஆன்லைனில், "சில பெண் ஊழியர்கள் வெளியுலகோடு குறைவான தொடர்பையே கொண்டுள்ளனர்.

எனவே, தங்களின் எதிர்பாலினத்தவரோடு தொடர்பு கொண்டு, நேரம் செலவிடுவதற்கு ஏற்றவாறு, அதிக நேரத்தையும், வாய்ப்புகளையும் வழங்குவதற்கு பெண் ஊழியர்களுக்கு அதிக விடுமுறை அளிக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

"இந்த டேட்டிங் விடுமுறை தொழிலாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த முயற்சி பெரிய அளவில் செயல்திறன் மிக்கதாக இருக்காது என்று ஹொங் ஃபின்ச்சர் தெரிவிக்கிறார்.

வித்தியாசமான பரிசோதனைகள் மற்றும் கொள்கைகளில் இதுவும் ஒன்று என்று அவர் குறிப்பிடுகிறார்.

"ஆனால், திருணம் செய்வதற்கும், குழந்தைகளை பெற்றெடுப்பதற்கும் அவசரப்படாத பெண்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றனர்" என்கிறார் ஹொங் ஃபின்ச்சர்.

https://www.bbc.com/tamil/global-46988039

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.