Jump to content

அண்மையில் சிட்னியிலிருந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சிட்னியிலிருந்து தாயகம் சென்று கர்நாடக இசை நிகழ்ச்சி(பாட்டுக்கு ஒரு புலவன்) ஒன்றை துர்க்கா மணிம்ண்டபத்தில் எமது குழந்தைகள் நடத்தினார்கள்.இதில் பங்கு பற்றிய அனைவரும் அவுஸ்ரெலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்க விடயமாகும் ...யாழ்நகரில் சிவபூமி முதியோர் இல்லம்,நாவற்குழி திருவாகச அரண்மனை,துர்க்கா மணிமண்டபம் ஆகிய் இடங்க‌ளிலும்,கொழும்பில் சைவ மங்கையர்கழகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

எனது புதல்விகள் இருவர் இதில் பங்கு பற்றினார்கள் .....
பாடல்களுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கும் இருவரும் எனது மகள்மார்.....

நன்றி சிவன் தொலைகாட்சி நிறுவனத்தினருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோருக்கும் மகள்களுக்கும் ...பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள். . அறியத்தந்தமைக்கு  சிறப்பு நன்றி

 தே மதுரத்ததமிழோசை  உலகெங்கும் பரவட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளை நிலத்தில் தானே ........விளைச்சல் தங்கியிருக்கின்றது!

மேலும்...மேலும்...வளர்ந்திட வாழ்த்துக்களும்....நல்லாசிகளும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த, இரண்டு... பிள்ளைகளும், அருமையாக பேசியதை பார்க்க, அழகாக இருந்தது.
அவுஸ்திரேரேலியாவில்... பிறந்த தமிழ் செல்வங்களே....
உங்கள்...  தமிழ், மிக இனிமை.
அப்பா.. அம்மாவுக்கு,  எமது, வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புத்தன் & குடும்பத்தாருக்கு .. 💐

Link to comment
Share on other sites

நமக்குப் பாரம்பரியமாகக் கிடைத்த அற்புதக் கலை வடிவம்.  அடுத்த தலைமுறையும், அதுவும் அவுசில் இருந்து தாயகம் சென்று சிறப்பாக அளிக்கை செய்துள்ளமை மகிழ்ச்சியாக உள்ளது. 👍

கர்நாடக சங்கீதத்தை  பழைய சங்கீதம் தானே என்று  கூறி ஒதுக்கும் நிலை தாயகத்திலும் இன்றுள்ளது. இந்நிலையை மாற்ற இதுபோன்ற நிகழ்வுகள் முன்னுதாரணமாக அமையட்டும். 👏

உங்கள் பிள்ளைச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், புத்தன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இவர்களது இசைப்பயணம் உலகெங்கும் தொடர்ந்திட வாழ்த்துகின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகளும் வாழ்த்துக்களும் இசைநிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைவருக்கும் அவற்றை அன்புடன் இணைத்த செம்மலுக்கும்.....!  🌻

தங்களின் சேவை மென்மேலும் தொடரட்டும்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு . ஆறுதிருமுருகனின் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

திரு . ஆறுதிருமுருகனின் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது.....!

இவர்களினால் தான் தற்பொழுது தாய‌கத்தில் நிலமும்,மொழியும் ,முக்கியமாக சைவம் தொடர்ந்து நிலைத்து நிற்கின்ற‌து என்றால் மிகையாகாது..... அதுமட்டுமன்றி பல தொண்டு நிறுவனங்களை நிறுவி உன்னத சேவைகளை செய்து வருகின்றார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பங்கு பற்றிய அனைவருக்கும்...நான் இன்னும்  இந்த காணொளியை பார்க்கவில்லை...பார்த்ததும் என் கருத்தை  கூறுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை நிகழ்ச்சியில் பல பாடல்கள் பாடப்பட்டாலும்

சிந்து நதியின் இசை நிலவினிலே

என்ற பாட்டு மிகவும் அருமையாக இருந்தது.

மீண்டும் ஒரு தடவை குழுவினருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகள் இட்ட‌வர்களுக்கும் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்....

சிவபூமி முதியோர் இல்லத்தில் எமது மாணவர்கள் முதலாவது இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள்....

 

50732319_284084368942527_592659264409960448_n.jpg?_nc_cat=107&_nc_ht=scontent-syd2-1.xx&oh=f4c93dd5b4fbe7b81d1f57ffb68b196f&oe=5CFDBDBE

அங்கு வசிக்கும் எனது ஆசிரியர் ரஜேஸ்வரி(மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நூலக ஆசிரியராக கடமையாற்றியவர்) அவர்களுடன் எனது குடும்பத்தினர் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் குடும்பத்தினருக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதிலும் சிறப்பாக முதியவர்களை சிறப்பித்து நிகழ்ச்சியை வழங்கியமை பாராட்டிற்குரியது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் புத்தன். உங்கள் பிள்ளைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். பிள்ளைகளையும் தாயகம் நோக்கி அழைத்து சென்றதும் அல்லாமல் அவர்களும் அங்குள்ளவர்களோடு இயல்பாக இணைய வழிவகுத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் குடும்பத்தினர்க்கும் அவர்களுடன் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளர்க தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வார்த்தைகள் இல்லை 'புத்தன் குடும்பத்திற்க்கும் மற்றும் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிட்னியில் வசிக்கும் மற்றுமொரு குடும்பமும் இந்த மாதமளவில் வடக்கிலுள்ள ஒரு பிரபல்யமான ஊர் கோவிலில் நடக்கவுள்ள பூங்காவனத்திருவிழாவில் ( இந்திர விழா எனவும் அவ்வூரில் அழைப்பார்கள் என்று நினைகின்றேன், சரியாகத்தெரியாது) அவர்களது மகள் பாட உள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறினார்கள்(சிறு வயதிலிருந்து முறைப்படி சங்கீதம் கற்பவர்), எனக்கு சில கேள்விகள் மனதில் தோன்றியது கேட்டுவிட்டேன்

கேள்வி1
அப்படியானால் வளமையாகப்பாடுபவர்களுடன் சேர்ந்தா பாடுவார்

பதில்
இல்லை தனித்து பாடுவார் , வளமையாகப்பாடுவர்கள் இந்த்த முறை பாட மாட்டார்கள்


கேள்வி2
வளமையாக பாடுபவர்கள் இதை அனுமதிப்பார்களா?

பதில்
கோவில் பொருளாருடன் பேசவுள்ளோம், அதனால் பிரச்சனையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலுள்ளவர்களுக்கு உதவி செய்த அனுபவமில்லை ஆனால் இங்கு பலர் தமது சக்திக்கு மீறி உதவி செய்துள்ளார்கள் அதனால் என் மனதிலுள்ள சில கேள்விகளை உங்களிடம் கேட்டிறேன்.

கேள்வி

உஙகளிடம் உதவி பெற்ற மக்களை உங்களுக்கு இணையாக  பார்ப்பீர்களா?


கேள்வி2

உஙகளிடம் உதவி பெற்ற மக்களை உங்களை விட இளப்பமாகப்பார்ப்பீர்களா?


பின் குறிப்பு: இந்த காணொளியை பார்க்க முயற்சிக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

தாயகத்திலுள்ளவர்களுக்கு உதவி செய்த அனுபவமில்லை ஆனால் இங்கு பலர் தமது சக்திக்கு மீறி உதவி செய்துள்ளார்கள் அதனால் என் மனதிலுள்ள சில கேள்விகளை உங்களிடம் கேட்டிறேன்.

கேள்வி

உஙகளிடம் உதவி பெற்ற மக்களை உங்களுக்கு இணையாக  பார்ப்பீர்களா?


கேள்வி2

உஙகளிடம் உதவி பெற்ற மக்களை உங்களை விட இளப்பமாகப்பார்ப்பீர்களா?


பின் குறிப்பு: இந்த காணொளியை பார்க்க முயற்சிக்கின்றேன்

இணையாக பார்த்தால் அவன் நல்ல மனிதன்
இளப்பமாக பார்த்தால் கெட்ட மனிதன்.....


அது சரி இந்த கேள்வியை இந்த திரியில் கேட்டமைக்கான காரணத்தை அறியலாமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.