Jump to content

90 ஓட்டத்தால் பணிந்தது நியூஸிலாந்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

90 ஓட்டத்தால் பணிந்தது நியூஸிலாந்து!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

india.jpg

இன்று காலை 7.30 மணிக்கு நியூஸிலாந்தின், மவுண்ட் மன்கன்யில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 324 ஓட்டங்களை பெற்றது.

325 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணியின் முதல் விக்கெட் 23 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. அதன்படி மார்டீன் குப்டீல் 15 ஓட்டத்துடன் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக அதை் தலைவர் களமிறங்கி முன்றோவுடன் ஜோடி சேர்ந்தாட நியூஸிலாந்து அணி 8 ஆவது ஓவருக்காக மெஹாமட் ஷமி பந்துப் பறிமாற்றம் மேற்கொள்ள வில்லியம்சன் அந்த ஓவரில் 2 ஆறு ஓட்டங்களையும் ஒரு நான்கு ஓட்டத்தையும் விளாசித் தள்ளினார். 

எனினும் அவர் அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் நியூஸிலாந்து அணி 7.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து ரொஸ் டெய்லர் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க முன்ரோ 14.1 ஆவது ஓவரில் 31 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, டொம் லெதம் ஆடுகளம் நுழைந்தாட நியூஸிலாந்து அணி 17 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து நிலையில் 100 ஓட்டங்களை பெற்றது.

இதன் பின்னர் நியூஸிலாந்து அணியின் விக்கெட்டுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரிய ஆரம்பிக்க நியூஸிலாந்து அணி 166 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது.

டெய்லர் 22 ஓட்டத்துடனும், டொம் லெதம் 34 ஓட்டத்துடனும், கொலின் டி கிராண்ட்ஹாம் 3 ஓட்டத்தையும், ஹென்றி நிக்கோலஷ் 28 ஓட்டத்தையும், ஈஷ் சோதி எதுவித ஓட்டமுமின்றி ஆட்டமிழந்தர்.

இந் நிலையில் 8 ஆவது விக்கெட்டுக்காக பிரிக்வெல் மற்றும் லொக்கி பெர்கசன் ஜோடி சேர்ந்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கை விடாது போராட நியூஸிலாந்து அணி 39 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 224 ஓட்டங்களை குவித்தது.

nz.jpg

எனினும் 39.2 ஆவது ஒவரில் பிரிக்வெல் 57 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க 40.2 ஆவது ஓவரில் லொக்கி பெர்கசனும் 12 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக நியூஸிலாந்து அணி 40.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 90 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் இந்திய  அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கேதர் யாதவ் மற்றும் மெஹாம் ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

http://www.virakesari.lk/article/48776

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் ஒவ்வொரு தொடர்களையும் ஒரே திரியில் பகிரலாமே? IND VS NEW, AUS VS SRI, ENG VS WI.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

கிரிக்கெட் ஒவ்வொரு தொடர்களையும் ஒரே திரியில் பகிரலாமே? IND VS NEW, AUS VS SRI, ENG VS WI.

நான் இதை ஆமோதிக்கிறேன் , ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னார் ஏராளன்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கிரிக்கெட் ஒவ்வொரு தொடர்களையும் ஒரே திரியில் பகிரலாமே? IND VS NEW, AUS VS SRI, ENG VS WI.

அப்படியும் செய்யலாம். ஆனால் விளையாட்டுச் செய்திகள் முகப்பில்  வரவேண்டுமென்றால் புதிய தலைப்பு தொடங்கவேண்டும். முகப்பில் வந்தும் இப்போது விளையாட்டுச் செய்திகளை வாசிப்பவர்கள் குறைவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபண்ணா கருத்துகளத்தில பின்னூட்டம் போட போட முன்னுக்கு வருதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/29/2019 at 6:10 AM, ஏராளன் said:

கிருபண்ணா கருத்துகளத்தில பின்னூட்டம் போட போட முன்னுக்கு வருதே?

 விளையாட்டுச் செய்திகளுக்கு கருத்து வைப்பவர்கள் குறைவு.  செய்திகளைத்தான் பின்னூட்டமாக வைக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மொத்தமாக 90 ஓட்டங்கள் எடுத்து பெரும் தோல்வியை சந்தித்துள்ளதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.