Jump to content

சமூகவலை தளங்களின் சாபங்கள்


Recommended Posts

 

சமூகவலை தளங்களின் சாபங்கள்


இணையம்

international network  என்பதன் சுருக்கமே internet.  அதாவது பல கணினிகளை ஒரு மையக் கணினியோடு இணைத்து செயல்படுத்துதல். தமிழில் சொல்வதென்றால் இணையம். 1990களில் பரவலாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இணையம், முதலில அமெரிக்க இராணுவத்துறையில் தகவல் பரிமாற்றத்திற்க்காகப்  பயன்படுத்தப்பட்டது.  அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில்  செயல்பட்டு வந்த கணினிப் பிணையங்களை  இணைத்து ஆர்ப்பா நெட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  இப்போது செயல்பாட்டில் உள்ள இணையத்தின் முன்னோடி  இந்த அமைப்பே ஆகும். ஆர்ப்பாநெட்டில் சேமித்து  வைத்துள்ள தகவல்களை அமெரிக்காவின் எந்த மூலையிலிருந்தும்  கணினித் தொடர்பு மூலம் பெறமுடியும் என்று நிருபிக்கப்பட்டது. பிறகு மெல்ல மெல்ல  அரசின் மற்ற துறைகள், பல்கலைகழகங்கள், ஆராய்ச்சிக்கூடங்கள் இந்த ஆர்ப்பாநெட்டோடு இணைக்கப்பட்டது.  1990ல் ஆர்ப்பாநெட் மறைந்து என் எஸ் எஃப்நெட்டுடன் எல்லாக் கணினி பிணையங்களூம் இணைக்கப்பட்டன . அரசும் அரசுத்துறை நிறுவனங்களும் ஆராய்ச்சிக்கூடங்களும் தம் சொந்த பயன்பாட்டிற்க்காகப் பயன்படுத்தி வந்த பிணையத்தை வருங்காலங்களில் பொதுமக்களும் பயன்படுத்திட இந்த என் எஸ் எஃப் வழிவகுத்தது.

இணைய வளர்ச்சியின் வீழ்ச்சி
இதற்க்குப்  பிறகு இணையத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் நிகழ்ந்தது. பட்டி தொட்டிகளிளெல்லாம் பரவ ஆரம்பித்தது.  படிக்காதவர்கள் கூட இன்று மிக எளிதாக இணையத்தை பயன்படுத்தமுடிகிறது.  அதற்க்கு முக்கியமான காரணம்  அலைபேசிக் கருவித் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சியே.
ஒருபக்கம் இணைய வளர்ச்சி அபரிதமாக இருந்தாலும் மறுபக்கம் நாம் இழந்து கொண்டிருப்பவைகளும் அதிகமாகிக் கொண்டே இருப்பது வருத்தத்திற்க்குரியதே. சுயகட்டுப்பாடு, சுய ஒழுக்கம், உடனிருப்பவர்களோடு சுக துக்கங்கள் பகிர்தல்,  ஊர் சுற்றுதல், மகிழ்ச்சியாக இருத்தல் , உலகை உணர்தல், குடும்பத்தோடு கூடி இருத்தல், ஓடியாடி விளையாடுதல், நூல் வாசித்தல், ஒருவர்க்கொருவர்  கலந்தாலோசித்தல் , உதவி செய்தல் என்ற இழப்புகளின் பட்டியல் சொல்லிக்கொண்டே போகலாம்.

                   உடனிருக்கும்  மனிதர்களின் உணர்வுகள் கண்டுகொள்ளப்படாமலேயே போவதால்  மனிதர்களுக்கிடையே விலகி இருக்கும் மனப்பான்மை பெருகிக்கொண்டே போகிறது. பொறுமையற்ற நிலை, தான் தனது என்ற மனநிலை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.  அலைபேசியும் இணையமும் இருந்தால் போதும்..உலகமே நம் கையில் என்று பெருமிதம்  கொள்ளும் நாம்,  நம்மோடு இருக்கும் சகமனிதர்களைப்  பொருட்படுத்துவதேயில்லை. மனிதர்களிடமிருந்து விலகி, கருவிகளுக்கு அடிமையாகிக் கொண்டே இருக்கிறோம். குறிப்பாக,
சமூக வலைதளங்களின் அபார வளர்ச்சி நம்மை முழுதும் அடிமைப்படுத்திவிட்டது என்றே சொல்லவேண்டும். ட்விட்டர், வாட்ஸப், ஃபேஸ்புக்  ,ஸ்கைப் ,டின்டர் போன்று நூற்றுக்கணக்கான சமூகவலைதளங்கள் ஒரு மனிதனை எவ்வளவு கெடுக்கமுடியுமோ அவ்வளவு  கெடுத்துக் கொண்டிருக்கின்றன. மனிதனின் சிந்திக்கும் தன்மையை முற்றிலும் செயலிழக்கச் செய்கின்றன  இந்த சமூக வலைதளங்கள்.
         தகவல் பரிமாற்றம் எளிதாக இருப்பதால், எதைப் பகிரலாம், எதைப் பகிரக்கூடாது என்ற உணர்வின்றி ,செய்திகளையும் வீடியோக்களையும் முதலில் பரிமாறிட வேண்டும் என்ற உந்துதலில், சற்றும் சிந்திக்காது செயல்படும் அளவிற்கு  மனிதனின் மூளை மழுங்கடிக்கப்பட்டுவிட்டது ..
அறிவை இழந்து கொண்டிருக்கிறோம்  என்ற விழிப்புணர்வு கூட  நம்மிடம் இல்லை. தகவல்கள்  பரிமாறுவதில் முதலில் இருக்கவே விரும்பும் நாம் , வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க மறந்துவிட்டோம். எதையும் முதலில் நாமே பகிரவேண்டும் என்ற உந்துதலில்  தகவலறிவு கொண்டே  எல்லாவற்றையும் பார்க்கிறோம். நம் கண் முன்னே  இருக்கும் இயல்பு வாழ்க்கையைவிட  சமூகவலைதளங்களில் இருக்கும் மாய வாழ்க்கையை நோக்கி ஈர்க்கப்படுகிறோம்.அதன் விளைவு யதார்த்த வாழ்க்கை நம்மை ஒதுக்கி வைக்கும் போதே உணர்கிறோம்.அதற்க்குப்பின் அழுது புலம்பி என்ன பயன்?
         குறுஞ்செய்திகளையும்,   அவசர செய்திகளையும், ஆரோக்கிய செய்திகளையும் உடனுக்குடன்  மற்றவர்களூக்கு அனுப்பி எதிலும் நாமே முதலில்  உலகிற்கு காட்டிக்கொள்ள விரும்பும் நாம் , அந்த செய்திகள் பற்றிய நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை .நம்மை பொறுத்தவரை வந்த செய்திகளை உடனே பரப்பிவிட வேண்டும். அவ்வளவே. அதனால் ஏற்படப்போகும் நல்லது கெட்டது குறித்து நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை. அதற்க்கு நமக்கு நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை..படித்தவர்கள் தான் இப்படி என்று எண்ணிவிட வேண்டாம்.
        
              படித்த,நகர்ப்புற மக்களுக்கு  எந்தவிதத்திலும்  தாங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்களில்லை என்று கிராமப்புறங்களிலும் மக்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாக இருக்கின்றனர்.   ஆபாச வலைதளங்களுக்கு இளைஞர்கள் மட்டுமன்றி, சிறார்களும் பெரியவர்களும்  அடிமை சாசனமே எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்வு அதலபாதாளத்திற்குப்  போவதை உணராமலேயே  வாழ்கிறார்கள்.
           சமூக வலைதளங்கள் நம்  சமூக அக்கறையை முற்றிலும்  சிதைத்து,எல்லாவற்றையும் விளம்பர நோக்கோடு பார்க்க வைத்துவிட்டது. நமது தற்பெருமையை வளர்த்துவிடுகிறது.. நான் என்ற உணர்வை அதிகரிக்கச் செய்கிறது.. சுய விளம்பரம் தேடியலையச் செய்கிறது.. பெருமை பீற்றீக் கொள்ளச் செய்கிறது.. இது எதையும் அறியாது நாமும் அதன் பின்னால் கண் மூடித்தனமாகப்  போய்கொண்டிருக்கிறோம்.
          டெக்னாலஜி வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியாது... அதற்காகக்  கண் மூடித்தனமாக பின் தொடரவும் கூடாது.. நமக்கு எது தேவை , எது தேவையில்லை என்று  பிரித்தறியும் அறிவோடு, தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நன்மையே விளையும் ..

          நமக்குப் பின் வரும் சந்ததிக்கு  நாம் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். எனவே தேவைக்கு மட்டும் இணையத்தை பயன்படுத்தி பழகுவோம்.. நல்ல சந்ததி உருவாக்குவோம்..

https://seeikara.blogspot.com/search/label/அடிமைப்படுத்தும் சமூகவலைதளங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரை இணையத்தின் நெகட்டீவ், எதிரிடையான பக்கத்தினையே பார்க்கிறது.

இணையத்தின் விபரிக்க முடியாத பொசிட்டிவ் பக்கத்தினை சொல்லவில்லையே.

கல்வித்துறையிலும், வங்கியியல், வியாபாரத்துறையிலும் இணையம் செய்து வரும் புரட்சி பிரமிக்கத்தக்கது.

பாடசாலைக்கு சென்று படிக்காமல் தெருவுக்கு வருபவர்களும், படித்து, பல்கலைக்கழகம், சிறப்பான தொழில் என செல்வோருக்குமான வித்தியாசமே இந்த பொசிட்டிவ், நெகடிவ் வேறுபாடு.

அதாவது ஒருவர், நோக்கம், பயன்பாடு போனறவகைகளில்  தான் நன்மையையும், தீமையும் தங்கி உள்ளது. 

முன்னர் பிளேபாய் சஞ்சிகை ஒரு பணம் படைத்தவரால் நடாத்தப்  பட்டது . இப்போது, இணையம், இணையத்தளம் குறித்த அறிவுள்ள எவருமே ஒரு நீல தளத்தினை திறந்து காசு பார்க்கிறார். இதன் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள்.

மதுக்கடை திறந்து வியாபாரம் செய்ய அரசு அனுமதிக்கின்றது. அளவாக குடிப்பதுவும், அளவுக்கு அதிகமாக குடித்து, ஈரலை நாசமாக்கி தொலைந்து போவதற்கு அரசோ, கடைக்காரரோ பொறுப்பு ஏற்க முடியாதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Industry 4.0 இன் புரட்சிகரமான மாற்றத்தின் நிதர்சனத்தின் விளிம்பில் இருக்கிறோம்.

உதாரணம், machine and deep learning, neural networks  ஒரு தனி நபரிட்ற்கு புற்றுநோய் சாத்தியக்கூறை 90% துல்லியத்துடன், அந்நபருடைய மருத்துவ வரலாற்றை வைத்து  எதிர்வு கூறும் நிலையை அடைந்து விட்டது. அந்த மருத்துவ வரலாற்றை வைத்து, வைத்தியர்கள் கூட அவ்வளவ்வு துல்லியயாமனா முடிவிற்கு வருவது மிகவும் கடினம்.   

 இதே வாதம் நெருப்பிற்கும் பொருந்தும்.  

இதற்காக கணை மூடிக்கொண்டு தொழிநுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்த கட்டுரை இணையத்தின் நெகட்டீவ், எதிரிடையான பக்கத்தினையே பார்க்கிறது.

இணையத்தின் விபரிக்க முடியாத பொசிட்டிவ் பக்கத்தினை சொல்லவில்லையே.

கல்வித்துறையிலும், வங்கியியல், வியாபாரத்துறையிலும் இணையம் செய்து வரும் புரட்சி பிரமிக்கத்தக்கது.

பாடசாலைக்கு சென்று படிக்காமல் தெருவுக்கு வருபவர்களும், படித்து, பல்கலைக்கழகம், சிறப்பான தொழில் என செல்வோருக்குமான வித்தியாசமே இந்த பொசிட்டிவ், நெகடிவ் வேறுபாடு.

அதாவது ஒருவர், நோக்கம், பயன்பாடு போனறவகைகளில்  தான் நன்மையையும், தீமையும் தங்கி உள்ளது. 

முன்னர் பிளேபாய் சஞ்சிகை ஒரு பணம் படைத்தவரால் நடாத்தப்  பட்டது . இப்போது, இணையம், இணையத்தளம் குறித்த அறிவுள்ள எவருமே ஒரு நீல தளத்தினை திறந்து காசு பார்க்கிறார். இதன் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள்.

மதுக்கடை திறந்து வியாபாரம் செய்ய அரசு அனுமதிக்கின்றது. அளவாக குடிப்பதுவும், அளவுக்கு அதிகமாக குடித்து, ஈரலை நாசமாக்கி தொலைந்து போவதற்கு அரசோ, கடைக்காரரோ பொறுப்பு ஏற்க முடியாதே.

உங்களுக்கு விளங்குது நாதமுனி ஆனால் யதார்த்தம் எங்கள் ஆட்களை பார்த்தால் இந்த சமூக ஊடகங்களால் மேலும் மேலும் முட்டாள் ஆகின்றனர் இன்னும் பத்து செக்கனில் பகிரவும் , உண்மையான தமிழனாய் இருந்தால் பகிரவும் இப்படி வலசு தனமாய் படித்தவர்கள் கூட பகிரும் கொடுமை எம்மவரிடையே கூட . இன்னும் இணையத்தை உபயோகிக்கும் கூட்டமாய் நாங்கள் மாறவில்லை மாறாக இணையம் நம்மை உபயோகிக்கிறது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.