Jump to content

டெல்டாவில் மீத்தேன்: "உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
டெல்டாவில் மீத்தேன்: உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம்படத்தின் காப்புரிமை Getty Images Image caption டெல்டாவில் மீத்தேன்: உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம்

டெல்டாவில் மீத்தேன்: உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம்

மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் குறித்து ஓஎன்ஜிசி உண்மையை மறைக்க முயற்சிக்கிறது என மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

"மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என காரைக்காலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஓஎன்ஜி-சியின் காரைக்கால் காவிரிப் படுகை பிரிவு மேலாளர் மிஸ்ரா பேசியுள்ளார். இது உண்மைக்கு புறம்பானது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது. இதை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், எண்ணெய் எரிவாயு எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளதும் தவறானது. ஹைட்ரோகார்பன் திட்டம் என்பது ஷேல் மீத்தேன், ஷேல் ஆயில் உட்பட அனைத்து வகை எண்ணெய் எரிவாயுவையும் எடுக்கும் திட்டமாகும். அபாயகரமான நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்திதான் ஹைட்ரோகார்பனை எடுக்க முடியும். காவிரிப் படுகையில் மட்டும் ஹைட்ரோகார்பன் எடுக்க 7,000 ச.கி.மீ பரப்பளவுக்கு மேல் ஏலத்தில் விடப்படுகிறது. இதில் ஓஎன்ஜிசி முக்கிய பங்கு வகிக்கிறது." - இவ்வாறாக கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரிக்கிறது.

https://www.bbc.com/tamil/india-47024582

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.