Jump to content

நீங்கள் என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாக இருக்க இதுதான் காரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்மிதா முண்டாசாட் பிபிசி
 
  •  
நீங்கள் என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாக இருக்க இதுதான் காரணம்படத்தின் காப்புரிமை Getty Images

என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லை என்று அடிக்கடி புலம்புபவரா நீங்கள்? அதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

நீங்கள் ஒல்லியாக இருப்பதற்கு, உங்களது மரபணுக்களின் குறிப்பிட்ட பகுதிகளே காரணமென்று தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம், சிறந்த உணவு பழக்கம் அல்லது வாழ்க்கைமுறையை உடையவர்களைவிட, குறிப்பிட்ட சில மரபணுக்களை உடையவர்கள் ஒல்லியாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் பிஎல்ஓஎஸ் ஜெனிடிக்ஸ் என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

ஒருவர் குண்டாக இருப்பதற்கான காரணங்களை விளக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மரபணுரீதியிலான மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கான காரணத்தை விளக்கும் வகையிலான ஆராய்ச்சிகள் பெரியளவில் மேற்கொள்ளப்பட்டதில்லை.

இந்நிலையில், உடல் பருமன் குறியீட்டு எண் (BMI) 18ஐ விட குறைவான அளவுடைய பிரிட்டனை சேர்ந்த 1600 பேரிடமிருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, மிகவும் குண்டான 2,000 பேர், சராசரியான உடல் எடையை கொண்ட 10,000 பேருடன் அது ஒப்பிடப்பட்டது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

உடல் பருமன் உடையவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பு மரபணுக்களை கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஒல்லியாக இருப்பவர்கள் உடல் பருமனோடு தொடர்புடைய மரபணுக்களின் தொகுப்பை குறைவாக கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான முறையில் ஒல்லியாக இருப்பதற்கு உதவும் மரபணு அமைப்பில் மாற்றங்களும் இருந்தன.

"உணவுப்பழக்கமும், வாழ்க்கைமுறையும்..."

நீங்கள் என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாக இருக்க இதுதான் காரணம்படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆராய்ச்சியின் தலைமை ஆராய்ச்சியாளரான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சடாஃப் பாரூக்கி, "இந்த ஆராய்ச்சியின் மூலம் ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு சிலர் கூறுவதுபோல் உணவுப்பழக்கமும், வாழ்க்கைமுறையும் காரணமில்லை என்பதும், அந்த குறிப்பிட்ட நபரின் உடலிலுள்ள மரபணுக்களில் உடல்பருமனை நிர்ணயிக்கும் தொகுப்பு குறைவான எண்ணிக்கையில் இருப்பதே காரணமென்பது முதல் முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று கூறுகிறார்.

"எடையை மையமாக கொண்டு ஒருவரை விமர்சிப்பது எளிதானதாக தோன்றலாம். ஆனால், அதற்கான காரணத்தை அறிவியல் ரீதியாக பார்க்கும்போது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது."

"நமது உடல் எடையை கட்டுப்படுத்துவதில் நாம் நினைப்பதைவிட மிகவும் குறைவான அளவே நம்மிடம் கட்டுப்பாடு உள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஒருவர் ஒல்லியாக இருப்பதற்குரிய காரணியாக விளங்கும் குறிப்பிட்ட மரபணுக்களை கண்டறிவதே தங்களது அடுத்த இலக்கு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கண்டிடுபிடிக்கப்பட்டுள்ள காரணங்களை மையாக கொண்டு, நீண்டகால அடிப்படையில் எடை குறைப்பிற்கான திட்டங்களை தீட்டுவது சாத்தியமாகுமா என்ற கோணத்தில் செயல்படுவதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

'மரபார்ந்த வித்தியாசம்'

நீங்கள் என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாக இருக்க இதுதான் காரணம்படத்தின் காப்புரிமை Jeff J Mitchell

இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் டாம் சாண்டர்ஸ், "இது மிகவும் முக்கியமான, சரியான முறையில் நடத்தப்பட்ட ஆய்வு. ஏனெனில், அபரிதமான உடல் பருமனை கொண்டிருப்பவரும், சராசரியை விட குறைந்த உடல் எடையை கொண்டிருப்பவரும், வேறுபட்ட மரபணு தொகுப்பு எண்ணிக்கையை கொண்டிருப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாக உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

"பெரும்பாலும் ஒருவர் வயதுக்கு வந்த பின்பு ஏற்படும் உடல் பருமனுடன், சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை, கலோரி மிகுந்த உணவுகள் போன்றவற்றிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், ஒருவரது உடல் பருமனுக்கு காரணமாக எது கூறப்பட்டாலும், காலங்காலமாக கூறப்படும் உடற்பயிற்சியும், நல்ல உணவும் ஒருவர் உடல் எடையை பராமரிப்பதற்கு உதவுமென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/science-47015329

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.