Jump to content

மகிந்தவுக்காய் புரோக்கர் வேலை செய்யும் சிறீரங்கா! கூட்டமைப்பை உடைக்க கோடிகளில் பேரம் பேசிய விடயம் அம்பலம்


Recommended Posts

 
 
Image may contain: 3 people, people standing
Image may contain: 3 people, people standing
 
 

மகிந்தவுக்காய் புரோக்கர் வேலை செய்யும் சிறீரங்கா! கூட்டமைப்பை உடைக்க கோடிகளில் பேரம் பேசிய விடயம் அம்பலம்.

கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கையில் மகிந்த+மைத்திரி கூட்டணியினர் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்றி சுமார் 50 நாட்கள் பாராளுமன்றம் செல்லாமலே சட்டவிரோத ஆட்சி நடத்தியமை நாம் அனைவரும் அறிந்ததே.

அக்காலகட்டத்தில் தம் அணிக்கு ஆதரவுவளிக்கும் அனைத்து தரப்பினருக்கும் பலகோடிகளில் பணமும் அமைச்சுப்பதவியும் கொடுத்து தம்மோடு இணைத்துக்கொண்டார் மகிந்த ராஜபக்ச.

இந்த பேரம் பேசலில் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் சிலரும் சோரம் போனது நாம் அறிந்ததே அதில் பிரதானமானவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற Viyalanderan MP Sathasivam அவர்களாவார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக லண்டன் கனடா போன்ற நாடுகளுக்கு துரைரத்தினம் எம்.பி யோடு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வியாழேந்திரன் எம்.பி கனடாவில் இருந்து இலங்கை திரும்பியதும் வீட்டிற்கு கூட செல்லாமல் மைத்திரியை சந்தித்து மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் இணைந்து பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். திடீரென்று இவ்வாறு வியாழேந்திரன் கட்சி மாற காரணம் யாரென ஆராய்ந்ததில் அதன் பின்னணியில் சக்தி ரீ.வியின் மின்னல் ரங்கா இருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

கனடாவில் இருந்து வியாழேந்திரனுடன் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினமும் நாடு திரும்பியிருந்தார் இவர்கள் இருவரையும் மட்டக்களப்புக்கு அழைத்துசெல்ல பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்களின் வாகனச்சாரதி விமானநிலையத்திக்கு வெளியே காத்திருந்தவேளை

அங்கு வந்த "மின்னல் றங்கா" வியாழேந்திரன் எம்.பிக்கு கை கொடுத்து தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஹில்டன் விடுதிக்கு சென்றிருக்கிறார் அங்கு வைத்து பேரம் பேசி முடித்து நேரடியாக ஜனாதிபதி மைத்திரியிடம் அழைத்துச் சென்று அமைச்சுபதவி ஏற்றுக்கொள்ள வைத்தார்.

அதேபோன்றே சிவசக்தி ஆனந்தன் மகிந்த அணிக்கு சார்பாக நடந்துகொள்ள தொடங்கியமைக்கு பின்னாலும் #மின்னல் ரங்காவே இருக்கிறார்.

தொடர்ச்சியாக சக்தி ரீ.வி ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பொய்ச்செய்திகளையும் புனைவுகளையும் கட்டவிழ்த்து விட்டு தமிழர் ஒற்றுமையை சிதைத்து தமிழர்களை தெற்கின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக தொடரவிடாமல் செய்யும் கைங்கரியத்தை கச்சிதமாக நிறைவேற்றும் பொறுப்பு மகிந்த ராஜபக்சவினால் #ரங்காவிற்கேவழங்கப்பட்டிருக்கிறது.

சக்தி ரீ.வியின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கி நடக்கும் அரசியல்வாதிகளையும் சக்தி ரீ.வியினையும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து தமிழர்கள் தம் ஒற்றுமையினை காட்டவேண்டும்.

சக்தி #கறுப்பு ஊடகம் மட்டுமல்ல #கயமை ஊடகமும் கூட. தமிழர்களின் ஒற்றுமையினை சிதைப்பதும் அவர்களின் அரசியல் பலத்தினை உடைப்பதுமே அவர்களின் பிரதான நோக்கமாகும்.

விழிப்போடிருப்போம் விரட்டியடிப்போம். #சிறீரங்காவையும்#சக்தியையும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது தேறிச்சுதா, அரசனை நம்பி, புருசனை விட்டோடின வியாழனுக்கு?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.