Jump to content

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்!

george-rumsfeld-1548734083.jpg

முன்னாள் மத்திய அமைச்சரும், சிறந்த தொழிற்சங்கவாதியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் 88 வயதில் காலமானார்.

அல்சைமர் என்ற மறதி நோயால் அவதிப்பட்டு வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலை காலமானார்.

1967 முதல் 9 முறை மக்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்ட ஜார்ஜ், 1977-ல் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையிலும், 1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையிலும், 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையிலும் முக்கிய இலாகாக்களை வகித்தவர். சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர் பெர்னாண்டஸ்.

https://tamil.thesubeditor.com/india/10359-former-defence-minister-george-fernandes-passes-away-at-age-88.html

டிஸ்கி :

ஆழ்ந்த அஞ்சலிகள். . இவரை பற்றி மேலதிகமாக  தமிழீழ சொந்தங்களுக்குத்தான் தெரியும் ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் ராணுவத்தின் ஈழப் படுகொலையை ’இந்தியாவின் மைலாய்’ என காட்டமாக விமர்சித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்!

 

george.jpeg

 

1989-ம் ஆண்டு தமிழீழத்தின் கலாசார தலைநகரமும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த இடமுமான வல்வெட்டித்துறையில் அமைதி காக்க சென்ற இந்திய அமைதிப்படை நடத்திய கோரத் தாக்குதலில் 63 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த படுகொலை சம்பவம்.

1989-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி இந்திய அமைதிப்படை நிகழ்த்திய கோரத் தாக்குதல் இப்படித்தான் இருந்தது.

- 63 தமிழர்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும், உயிருடன் கயிற்றால் கட்டி தெருத்தெருவாக இழுத்தும் கொல்லப்பட்டிருந்தனர்.

- 100 பேர் படுகாயமடைந்திருந்தனர். 123 வீடுகள் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.

- வல்வெட்டித்துறை சிவன் கோயில், வல்வை முத்துமாரி அம்மன் கோயில், கப்பலுடையவர் கோயில், ஆதி கோயில் உள்ளிட்டவை எரிக்கப்பட்டிருந்தன.

இன்றளவும் வல்வெட்டித்துறை மக்களால் மறக்க முடியாதது இந்த ‘வல்வைப் படுகொலை’.

இப்படுகொலை நிகழ்த்தப்பட்ட போது கொந்தளித்து எழுந்தவர் இன்று நம்மிடையே மறைந்த போராளி ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

இதை அமெரிக்க ராணுவமான வியட்நாமின் மை லாயில் நடத்திய இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு இந்தியாவின் மைலாய்- வல்வெட்டித்துறை என காட்டமாக விமர்சித்தார். அப்போது சர்வதேச அளவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே காலகட்டத்தில் பெர்னாண்டஸின் வரிகளுடன் ‘India's My Lai' என்கிற தலைப்பில் வல்வெட்டி கோரப்படுகொலைகளை விவரிக்கும் புகைப்பட புத்தகம் ஒன்று வெளியாகி இந்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்றளவும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட நூலாகவே இருந்து வருகிறது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட காலத்தில் இப்புத்தகத்தை வீடுகளில் வைத்திருந்த காரணத்தினாலேயே வேட்டையாடப்பட்டவர்கல் ஏராளம். ஈழத் தமிழர்களின் தனிநாடு விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தரும் நம்பிக்கைக்குரிய இந்திய தலைவர்களில் ஒருவராக ஒருகாலத்தில் பெர்னாண்டஸும் திகழ்ந்தார் என்பது சரித்திரம்.

https://tamil.thesubeditor.com/india/10361-george-fernandes-and-eelam-freedom-struggle.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®¾à®°à¯à®à¯ பà¯à®°à¯à®©à®¾à®£à¯à®à®¸à¯

ஈழ விடுதலையில்.. மிக ஆர்வம் கொண்டவர்.
அதற்காக... தனது குரலை, எப்போதும் இந்திய பாராளமன்றத்தில்  பதிவு செய்தவர்.
எமது கஷ்ட காலம்....  அவருக்கு மறதி  நோய் ஏற்பட்டு,  
தொடர்ந்து அரசியலில் இருக்க முடியாமல் போய் விட்டது
ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அஞ்சலிகள் ஐயா , இதுவரை தமிழ் மக்களுக்கு இவர் போல ஆதரவு யாரும்  வழங்கியதில்லை .
ஆத்மா சாந்தியடையட்டும் .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜார்ஜ் பெர்ணான்டஸ்: ரயில் வேலை நிறுத்தம் மூலம் இந்தியாவை அதிரவைத்தவர், ஈழ ஆதரவாளர்

 
ஜார்ஜ் பெர்ணான்டஸ்படத்தின் காப்புரிமை Getty Images Image caption ஜார்ஜ் பெர்ணான்டஸ்

சோஷியலிஸ்ட் தலைவராக வாழ்க்கையைத் தொடக்கி, உலகின் மிகப்பெரும் வேலை நிறுத்தத்தை நடத்தி, பாதுகாப்பு அமைச்சராக உயர்ந்த சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

எப்போதும் எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர். தமது துணிகளை தாமே துவைத்துக் கொண்டவர். பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போதுகூட பாதுகாவலர் வைத்துக்கொள்ளாதவர் அவர்.

பம்பாய் சிங்கம்

1967-ம் ஆண்டு பம்பாய் தெற்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.பாட்டீலைத் தோற்கடித்து எம்.பி.யானார் ஜார்ஜ் பெர்ணான்டஸ்.

பின்னால் சக்திமிக்க தொழிற்சங்கத் தலைவராகவும், செல்வாக்குமிக்க சோஷியலிஸ்ட் தலைவராகவும் அறியப்பட்ட, பிறகு அதிகாரம் மிக்க பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் ஆன ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு தேசிய அளவில் முதல் முதலில் முக்கியத்துவம் கிடைத்தது அப்போதுதான்.

அந்த தேர்தலுக்கு முன்பு மும்பை முனிசிபல் கவுன்சிலில் ஒரு கவுன்சிலராகதான் இருந்தார் பெர்ணான்டஸ்.

தேர்தலுக்கு முன்பு, புகழ்பெற்ற பத்திரிகையாளரும் பெர்ணான்டசின் நண்பருமான விக்ரம் ராவ், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.கே.பாட்டீலிடம் குறும்பாக கேட்டுள்ளார் "நீங்கள் மும்பையின் கேள்விக்கப்பாற்பட்ட மாமன்னர். ஜார்ஜ் பெர்ணான்டஸ் என்று ஏதோ ஒரு முனிசிபல் கவுன்சிலர் உங்களை எதிர்த்துப் போட்டியிடுகிறாராமே?"

"யாரது ஜார்ஜ் பெர்ணான்டஸ்" என்று திருப்பிக் கேட்டுள்ளார் பாட்டீல்.

"உங்களை ஒருவராலும் வெல்ல முடியாது. ஆனால், ஒருவேளை நீங்கள் தோற்றுவிட்டால்" என்று கேட்டுள்ளார் விக்ரம் ராவ். "கடவுளே வந்தாலும் என்னை தோற்கடிக்க முடியாது" என்றாராம் எஸ்.கே.பாட்டீல்.

அந்த தேர்தலில் அவர் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசிடம் தோற்றுப்போயிருக்கிறார்.

"ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு "பம்பாயின் சிங்கம்" என்று பெயர். அவர் முழங்கினால் பம்பாய் முழுவதும் எதிரொலிக்கும். பல வேலை நிறுத்தங்களை அவர் நடத்தினார். ஆனால், 3 நாள்களுக்கு மேல் வேலை நிறுத்தம் நீடித்தால் அவரே உணவோடு தொழிலாளர்களின் இடங்களுக்கு செல்வார்," என்று பெர்ணான்டசுக்கு நெருக்கமான மற்றொரு பத்திரிகையாளர் விஜய் சங்வி தெரிவித்தார்.

1974 ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம்

1974ல் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தபோது இந்திய அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார் ஜார்ஜ் பெர்ணான்டஸ்.

ஜார்ஜ் பெர்ணான்டஸ்படத்தின் காப்புரிமை Getty Images Image caption ஜார்ஜ் பெர்ணாண்டஸ்

இந்திய விடுதலைக்குப் பிறகு சம்பளக் கமிஷன்கள் வந்தன. ஆனால், ரயில்வே தொழிலாளர்களின் ஊதியம் குறிப்பிடத்தக்க அளவில் உயரவில்லை. 1973 நவம்பரில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பில் (ஆல் இந்தியா ரயில்வே மென்'ஸ் பெடரேஷன்) தலைவரானார் ஜார்ஜ் பெர்ணான்டஸ். இதையடுத்து, ரயில்வே தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரி வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

ஜார்ஜ் பெர்ணான்டஸ் எடுத்த முன் முயற்சியால், டாக்ஸி ஓட்டுநர்கள், மின் ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோரும் ஆதரவாக வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

மெட்ராஸ் ரயில்பெட்டித் தொழிற்சாலையின் பத்தாயிரம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக தெருவுக்கு வந்தனர்.

கயாவில் ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இருப்புப்பாதையில் அமர்ந்தனர். ஒரே நேரத்தில் மொத்த நாடும் ஸ்தம்பித்தது. இந்த வேலை நிறுத்தத்துக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டினை எடுத்தது அரசு.

பல இடங்களில் ரயில் பாதைகளைத் திறக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டது.

வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு, 30 ஆயிரம் தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்கிறது அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் அறிக்கை. இந்திரா காந்தி அரசு இரக்கமற்ற முறையில் இந்த வேலை நிறுத்தத்தை நசுக்கியது.

"தொழிற்சங்க இயக்கத்தின் வரலாற்றில் இப்படி கொடூரமான முறையில் ஒரு வேலை நிறுத்தமும் ஒடுக்கப்பட்டதில்லை. பிரிட்டீஷார்கூட இப்படி கொடூரமாக நடந்ததில்லை. ஜார்ஜ் பெர்ணான்டஸ் சிறையில் அடைக்கப்பட்டார்" என்கிறார் பத்திரிகையாளர் விக்ரம் ராவ்.

"ரயில்வே போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதுதான் இந்திரா காந்தி பொக்ரானில் அணு ஆயுதச் சோதனை நடத்தினார். உலகம் அதிர்ந்தது. ஆனால், இந்தியர்களை இது அதிகம் பாதிக்கவில்லை. தொடர்ந்து ரயில்வே தொழிற்சங்க வேலை நிறுத்தம்தான் தொடர்ந்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானது" என்கிறார் விஜய் சங்வி.

உலகின் மிகப்பெரும் தொழிற்சங்க செயற்பாடு இது என்று கூறப்படும் நிகழ்வு இது.

எமர்ஜென்சியில் தலைமறைவு

1975 ஜூன் 25-ம் தேதி இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டபோது இரவு 11 மணி வரை எதிர்க்கட்சிகள் அலுவலகத்தில் இருந்தார் ஜார்ஜ்.அந்த இரவு அங்கேயே தூங்கிவிட்டார். அடுத்த நாள் காலை அவர் புவனேஷ்வருக்கு விமானத்தில் சென்றார். அப்போதுதான் அவருக்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருப்பது தெரியும்.

அங்கிருந்து நேராக டெல்லிக்கு சாலை வழியாக வந்த ஜார்ஜ் தம் வீட்டுக்கு நேராக வந்ததாகவும், தம்முடன் சில நாள்கள் தங்குவதாக கூறிய ஜார்ஜ் பிறகு பரோடா சென்றுவிட்டதாகவும் கூறுகிறார் விஜய் சங்வி.

அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஒன்றரை மாதம் கழித்து சீக்கியர் போன்ற தோற்றத்தில் பத்திரிகையாளர் விக்ரம் ராவை சந்தித்துள்ளார். தமது சொந்த நாட்டிலேயே தாம் அகதியாகிவிட்டதாக அவர் அப்போது கூறியதாக நினைவுகூர்கிறார் விக்ரம் ராவ்.

எமர்ஜென்சி காலத்தில் அவர் மாறுவேடத்தில் பல பயணப்பட்ட அவர் தமிழகம் வந்து கருணாநிதி ஏற்பாட்டில் சென்னையில் தங்கியிருந்தார் என்று திமுக தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

கல்கத்தாவில் அவர் ஒரு தேவாலயத்தில் கைது செய்யப்பட்டவுடன், அன்று இரவு ரகசியமாக இலியுஷின் என்ற ரஷ்ய ராணுவ விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஜார்ஜ் பெர்ணான்டஸ், வாஜ்பேயி, கருணாநிதி.படத்தின் காப்புரிமை Getty Images Image caption ஜார்ஜ் பெர்ணான்டஸ், வாஜ்பேயி, கருணாநிதி.

"அந்த நேரத்தில் இந்திரா காந்தி மாஸ்கோ சுற்றுப்பயணத்தில் இருந்தார். அவரை கைது செய்ததும் தொலைபேசி மூலம் இந்திரா காந்தியின் அறிவுரையைப் பெற அதிகாரிகளுக்கு சிறிது நேரம் பிடித்தது. அதற்குள் அந்த கிறித்துவ தேவாலயத்தின் போதகர் விஜயன் பிரிட்டன் மற்றும் ஜெர்மனி துணைத் தூதர்களிடம் ஜார்ஜ் கைது செய்யப்பட்ட விவரத்தைக் கூறிவிட்டார்.

விரைவிலேயே அவர் ஒரு 'என்கவுண்டரில்' கொல்லப்படுவார் என்ற நிலை இருந்தது. ஆனால், உடனடியாக இந்த செய்தி லண்டனிலும், பான் நகரிலும் உடனடிச் செய்தியாக வெளியானது. பிரிட்டிஷ் பிரதமர் ஜேம்ஸ் கால்லகன், ஜெர்மனி சான்சலர் வில்லி பிரான்ட், ஆஸ்திரிய சான்சலர் புரூனோ க்ராஸ்கி, ஆகியோர் ஜார்ஜை என்கவுன்டரில் கொன்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அப்போது மாஸ்கோவில் இருந்த இந்திராவை தொலைபேசி மூலம் எச்சரித்தனர். சர்வதேச எதிர்வினைகளைக் கண்டு பயந்தார் இந்திரா. இதனால்தான் ஜார்ஜ் சுட்டுக் கொல்லப்படாமல் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்," என்கிறார் விக்ரம் ராவ்.

திகாரில் கொண்டாட்டம்

1977ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, சிறையில் இருந்த ஜார்ஜ் முஜாபர்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்தார்.

இது குறித்துக் கூறுகிறார் பத்திரிகையாளர் விக்ரம் ராவ் "நாங்கள் சிறையில் 17 வது வார்டில் இருந்தோம். தேர்தல் முடிவுகள் வெளியான அன்று இரவு சிறைக்கு வந்த டாக்டர் ஒருவரிடம் முஜாபர்பூரில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று கேட்டோம்.

ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக கூறினார். அதிகாலை 4 மணிக்கு, நான் ஒளித்து வைத்திருந்த சிறு ரேடியோவை எடுத்தேன். வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஸ்டேஷன் கிடைத்தது. அதில் ரேபரேலி தொகுதியில் மறு எண்ணிக்கை நடத்தவேண்டும் என்று இந்திரா காந்தியின் தேர்தல் முகவர் கேட்பதாக கூறினார்கள். தோற்றவர்கள்தானே மறுவாக்கு எண்ணிக்கை கேட்பார்கள். உடனே எனக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. படுத்திருந்த ஜார்ஜை எழுப்பி இந்திரா தோற்றதைக் கூறினேன். சிறை முழுவதும் தீபாவளியைப் போல ஒரு மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் மற்றவரை கட்டிப்பிடித்துக்கொண்டோம்.

1977 ஜனதா கட்சி அமைச்சரவையில் ஜார்ஜ் தகவல் தொழில்தொடர்புத் துறை அமைச்சரானார். பிறகு தொழில்துறை அமைச்சரானார். ஜனதா கட்சி உடையத் தொடங்கியபோது நாடாளுமன்றத்தில் மொராஜி தேசாயை உறுதியாக ஆதரித்தார் ஜார்ஜ். ஆனால், 24 மணி நேரத்தில் அவர் சரண்சிங் முகாமுக்குத் தாவினார். இந்த பல்டியால் அவருக்கு எதிரான கோபம் எழுந்தது. ஆனால், சரண்சிங் அமைச்சரவையில் அவருக்கு இடம் தரப்படவில்லை.

லைலா கபீருடன் திருமணம்

கர்நாடக மாநிலம் மங்களூரில் கத்தோலிக்க கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த ஜார்ஜ், கொங்கனியை தாய்மொழியாக கொண்டவர். பிறகு தமிழ் உட்பட பல மொழிகளைக் கற்றவர். குறிப்பாக ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் புலமை பெற்றவர்.

நேரு அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ஹுமாயூன் கபீரின் மகள் லைலா கபீரை ஒரு விமானப் பயணத்தில் மனதைப் பறிகொடுத்து, திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் இந்திரா காந்தியும் பங்கேற்றது ஓர் ஆச்சரியம்.

ஆனால், 1984ல் கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர். 1977ல் ஜனதா ஆட்சியில் தொழிற்துறை அமைச்சராக ஜார்ஜ் இருந்தபோது அவரது சிறப்பு உதவியாளராக இருந்த அஷோக் ஜெட்லியின் மனைவி ஜெயாவை முதல் முதலாக சந்தித்தார். பிற்காலத்தில் அவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார் ஜார்ஜ்.

சீப்பே பயன்படுத்தாத ஜார்ஜ்

நூல்களை நேசித்த, வீட்டிலேயே மிகப்பெரிய நூலகத்தை வைத்திருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஒரு போதும் சீப்பு பயன்படுத்தியதில்லை. தமது துணியை தாமே துவைத்துக்கொண்டவர். அந்த துணிகளை அவர் இஸ்திரி போடுவாரே தவிர, கஞ்சி போட்டுக்கொள்ளமாட்டார் என்கிறார் ஜெயா ஜெட்லி.

உணவின் மீது அதீத ஆசை கொண்ட ஜார்ஜ் கொங்கனி மீனும், நண்டும் விரும்பி சாப்பிடுவார். தமது ஓட்டுநரையும் தம்முடன் ஒரே மேசையில் அமர்ந்து உண்ண வைப்பார் என்கிறார் ஜெயா.

ஜெயா ஜெட்லி.படத்தின் காப்புரிமை Getty Images Image caption ஜெயா ஜெட்லி.

பாதுகாவலர் இல்லாத பாதுகாப்பு அமைச்சர்

இந்தியாவின் மத்திய அமைச்சர்களில் வீட்டுக்கு பாதுகாவலர் வைத்துக்கொள்ளாத ஒரே அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்தான். யார் வேண்டுமானாலும், நேராக அவர் வீட்டுக்குள் சென்றுவிட முடியும். இதற்குப் பின்னால் ஒரு கதையும் உள்ளது. அதை நினைவு கூர்கிறார் ஜெயா ஜெட்லி "எதிர்க்கட்சி எம்.பி.யாக ஜார்ஜ் பெர்ணான்டஸ் இருந்தபோது அவரது எதிர்வீட்டில் இருந்தவர் உள்துறை அமைச்சர் சங்கர்ராவ் சவான்.

அவரது வீட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். அவர் நாடாளுமன்றத்துக்கு கிளம்பும்போதெல்லாம் ஜார்ஜ் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வந்துவிடாதபடி தடுக்க, ஜார்ஜ் வீட்டின் பூட்டை அமைச்சரின் பாதுகாவலர்கள் பூட்டிவிடுவார்கள். அவர்கள் சென்ற பிறகே கதவு திறக்கப்படும். இதனால், ஆத்திரமடைந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ். நானும்தான் அவசரமாக நாடாளுமன்றம் செல்லவேண்டும்.

இதை நான் ஏற்க முடியாது என்று கூறி, தமது வீட்டின் கேட்டையே பெயர்த்து எடுத்துவிட்டார். அதன் பிறகும் அவர் வீட்டுக்கு பாதுகாவலரை வைத்துக்கொண்டதில்லை. பாதுகாப்பு அமைச்சராக ஆன பிறகு, பிரதமர் வாஜ்பேயி அவரிடம் பாதுகாவலர்களை வைத்துக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஜார்ஜ் கண்டுகொள்ளவில்லை.

ஜார்ஜ் பெர்ணான்டஸ்படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், நாடாளுமன்றத்தின் தாக்குதல் நடந்த பிறகு, "ஜார்ஜ் பெர்ணான்டஸை கொல்வது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டார் அது நாட்டுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என்று கூறினேன். அதன்பிறகே ஓரிரண்டு பாதுகாவலர்களை அரைமனதோடு வைத்துக்கொண்டார்" என்கிறார் ஜெயா ஜெட்லி.

டெஹல்கா புலனாய்வு

ஒரு பாதுகாப்பு பேரம் ஒன்றுக்காக ஜெயா ஜெட்லி பணம் பெறுவதாக காட்டும் ஒரு ரகசிய கேமிரா பதிவு ஒன்றைக் காட்டி புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டது டெஹல்கா பத்திரிகை.

இது பற்றிக் கூறிய ஜெயா "அந்த விடியோவில் இடம் பெற்றவர்களை நான் முன்பு எப்போதும் சந்தித்தது இல்லை. அந்த உரையாடல் நடந்தபோது, என்னிடம் கட்சிக்காக ஒன்று தரலாமா என்று கேட்டனர். அவர்கள் என்ன தருகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. கட்சிக்கு நன்கொடை தருவது சட்டவிரோதமல்ல. அவர்கள் எதையோ தர முன்வந்தபோது நான் மைசூரில் உள்ள அமைச்சர் மாநாடு ஒன்று நடத்துவதால் அங்கு அனுப்பும்படி சொன்னேன். நல்லது... என்று அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

பிறகு அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்தில் ஏதோ பிரச்சனை என்றார்கள். அது பாதுகாப்பு அமைச்சகம் செய்வது. எனக்குத் தெரியாது என்று கூறினேன். ஆனால், அவர்கள் திரும்பத் திரும்ப தாங்கள் கடிதம் அனுப்புவதாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து பதில் இல்லை என்றும் கூறினார்கள்.

அவர்கள் கூறியது, அவர்கள் ஏதோ அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பது போலவும், அமைச்சகத்தில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபட்டிருப்பதுபோலவும் இருந்தது. அப்படி ஏதும் தப்பு நடந்தால் அவர்கள் எல்லோரையும் சமமாக பாவிக்கும்படி பார்த்துக்கொள்கிறேன் என்றேன். உடனே, பாதுகாப்பு அமைச்சர் வீட்டில் உட்கார்ந்துகொண்டு நான் பணம் வாங்குவதாக அவர்கள் ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்" என்றார் ஜெயா.

உண்மை என்னவானாலும், அதற்கான விலையை அரசியலில் தந்தார் ஜெயா. கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக நேர்ந்தது. அதனால், அவர் மட்டுமல்ல, பெர்ணான்டசும் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது.

ஈழ ஆதரவு

தமிழகத்துக்கு வெளியே, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த இந்தியத் தலைவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். ஈழத்தை ஆதரவு மாநாடு ஒன்றையும் நடத்தியவர் அவர். பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் ஏற்றிச்சென்ற ஒரு கப்பலை இடைமறிக்கவேண்டாம் என்று அவர் கூறியதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்திய பாதுகாப்பு அமைச்சரே புலிகளின் ஆதரவாளர் என்று இலங்கை விமர்சித்தது.

https://www.bbc.com/tamil/india-47038129

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தையாவின் துரோகம் இவர் மூலம்தான் 
உறுதிசெய்யப்பட்ட்து.
1993இல் கிட்டுவின் கப்பல் ஹிந்திய கடற்படையால் 
மறிக்கப்பட்டு அனைவரையும் சரண் அடையும்படி கேட்ட போது.

கிட்டு தான் கப்பலில் இருப்பதை ஹிந்திய கடல் படைக்கு 
தெரிவித்து ... தான் ஜோர்ஜ் பெர்னாடுடன் பேசிய பின்னரே 
சரண் அடைய முடியும் என்று தெரிவித்தார். 

அதற்கு அவர்கள் இணங்கவில்லை ... எல்லாம் பின்பு பார்க்கலாம் 
என்று சொல்லி இருக்கிறார்கள். 

அதன் பின்புதான் தற்கொலை செய்வது என்ற முடிவை எடுத்துக்கொண்டார்கள் 
இரண்டு போராளிகளையும் சாதாரண பொது ஆட்களையும் கப்பலில் இருந்த சிறு படகில் 
அனுப்பி விட்டு பின்பு கப்பலை வெடிக்க வைத்தார்கள். 

இதில் தொலைதொடர்பில் இருந்தவர் மேஜர் வேலன் 
அவர்கள் தமது உரையாடலை இட்டர்ஸ்ப்ட் பண்ணுவது தெரிந்ததால் 
யார் படகில் போகிறார்கள் என்பதை கரையில் இருந்த புலிகளுக்கே மாற்றித்தான் 
சொன்னார்கள்  93-94 நினைவாஞ்சலிகளில் இருந்த ஒரு போராளி இந்திய சிறையில் இருந்தார்  ... 95இல் தான் அது திருத்தம் செய்ய பட்ட்து.
அவரும் இறந்து விட்டார் என்றுதான் தெரிந்து இருந்தது ... அப்படித்தான் தகவல் அனுப்பினார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது... 
தடுக்கப்பட்ட ஆயுத கப்பல்களை விடுவித்த பெருமையும் இவரையே சாரும்.
 - பிரசாந்தன் நவரட்ணம். -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள், ஆத்மா சாந்தியடையட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை நேசித்த மகத்தான மனிதர் ஜோர்ஜ் பெர்னானன்டஸ் இன்று காலமாகி விட்டார்.

January 29,2019

தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழகத்தை தளமாகக் கொண்டு ஆரம்பித்த நாளிலிருந்து ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தன்னைப் போராட்டத்துடன் நெருக்கப்படுத்திக் கொண்டவர். இந்திய அமைதிப்படை ஈழத்தில் நாடாத்திய படுகொலைகளை முதன் முதல் வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தவர் அவர்தான். பின்னாளில் புலிகளுக்கு இந்திய அளவில் தடை இருந்த போதும் உலகளவில் ஈழ ஆதரவு சக்திகளை ஒன்றிணைத்து டெல்லியில் மாநாடு நடத்தி ஆதரவு கோரியவர். 

இப்படியான ஒரு சூழலில்தான் ஜெயலலிதா வாஜ்பாய் அரசு ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்துவிட்டு வெறும் 13 நாட்களில் ஆதரவை மீளப் பெற்று அரசைக் கவிழ்க்கிறார். பின்னர் பெரும்பான்மையை நிரூபித்து வாஜ்பாய் பிரதமர் ஆகிறார். அதில் கூட்டணி வைத்த ஜோர்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு எடுக்கிறார். வழமை போல் டெல்லி கொள்கை வகுப்பாளர்கள் ஈழ விடயத்தில் மூக்கை நுழைப்பதற்கு இது தடையாகிறது. அதனால் அமத்தியே வாசிக்கிறார்கள். 

ஜோர்ஜ் பெர்னாண்டசின் அன்றைய இந்த வகிபாகத்தையே இன்று வாஜ்பாய் அரசின் ஈழ ஆதரவாக சிலர் தவறாக முன் வைக்கிறார்கள். ஜோர்ஜ் பெர்னாண்டசால் கூட அவர் அந்த பதவிக்கு வந்த பின்பு பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை... தன்னளவில் டெல்லிக்கு ஒரு நெருக்கடியைத்தான் கொடுக்க முடிந்தது. ஏனெனில் அவர் இந்திய கொள்கை வகுப்பாக்கத்தை தீர்மானிக்கும் தனிச் சக்தி அல்ல.. அது ஒரு கூட்டு சக்தி. அதில் அப்போது சில சலனத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறு வகிபாகத்தை கொண்டிருந்தார். 

அது தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொருத்தவரை பெரும் ஆறுதலாக இருந்தது. ஏனென்றால் புலிகளும் அதன் வரையறையைத் தெரிந்தே வைத்திருந்தார்கள். அவர் ஊழல் குற்றச்சாட்டில் பதவியை இழக்கும் வரை அந்த ஆதரவு தொடர்ந்தது.. அதன் பின் டெல்லி வழமைபோல் ஈழப் போராட்டத்தில் தங்கு தடையின்றி மூக்கை நுழைத்தது. துரதிர்ஷ்டவசமாக இன்று மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் தமிழக அரசியல்வாதிகளை - குறிப்பாக கருணாநிதியின் துரோகத்தை நினைவூட்டுகிறது. கருணாநிதியின் வரையறையையும் நாம் தெரிந்தே வைத்திருந்தோம். இறுதி இன அழிப்பு நேரத்தில் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் போன்று உள்ளக அழுத்தங்களை கொடுத்தாவது தமிழின அழிப்பை தற்காலிகமாகவேனும் நிறுத்துவார் என்றே எதிர்பார்த்தோம். 

ஆனால் நடந்ததோ வேறு. ஜோர்ஜ் பெர்ணாண்டசின் தமிழீழ ஆதரவு காரணமாகவே இந்திய உள்ளக புலனாய்வுத்துறை அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சோடித்து பதவியிழக்கச் செய்ததாக அப்போது பேசப்பட்டது. தமிழர் தலைவர்கள் என்ற போர்வையில் "ஈழத் தமிழர்களுக்காக பதவியிழந்தோம்" என்று தினமும் ஓயாது புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இருக்கும் வரை தன்னால் முடிந்ததை செய்துவிட்டு ஓய்ந்து போனார் ஜோர்ஜ் பெர்னாண்டஸ். அன்னார் தனது பணிக்காக தமிழீழ வரலாற்றில் என்றென்றும் நன்றியுடன் நினைவு கொள்ளப்படுவார்.

 -பரணி கிருஷ்ணரஜினி. -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, eyeglasses and text

எமர்ஜென்சி ஹீரோ.. ஈழ ஆதரவாளர்களுக்கு புகலிடம் தந்தவர் பெர்னாண்டஸ் ...

 # நக்கல் மன்னன் கவுண்டமணி #

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் ஈழமக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர்.
அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.