Jump to content

அறிவியல்: உடலுக்குள் சென்று சிகிச்சை செய்யும் நுண் ரோபோக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல்: உடலுக்குள் சென்று சிகிச்சை செய்யும் நுண் ரோபோக்கள்!

12.jpg

சைபர் சிம்மன்

சுவிஸ் விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு!

ரோபோ என்றதும், ஹோண்டோவின் அசிமோ மனித ரோபோ அல்லது சோனி நிறுவனத்தின் ஐபோ நாய்க்குட்டி நினைவுக்கு வரலாம். ரோபோ செய்திகளைத் தொடர்ந்து கவனித்துவருபவர் எனில், சவுதி அரேபியக் குடியுரிமை பெற்ற செயற்கை நுண்ணறிவுத் திறன் பெற்ற சோபியா அல்லது, போஸ்டன் டைனமிக்ஸ் உருவாக்கிய இயந்திர விலங்கான ஸ்பாட் நினைவுக்கு வரலாம். ஆனால், இவற்றிலிருந்து எல்லாம் முற்றிலும் மாறுபட்ட வேறு வகை மைக்ரோ ரோபோக்களும் இருக்கின்றன.

மைக்ரோபாட் எனப்படும் இந்த வகை நுண் ரோபோக்களில்தான் அண்மையில் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் முக்கியப் பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியுள்ளனர். இந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள மைக்ரோபாட்கள் மனித உடலுக்குள் லாகவமாக நீச்சலடித்துச் சென்று தங்களுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்து முடிக்கக்கூடியவை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்த நுண் ரோபோக்களை எதிர்காலத்தில் அப்படியே வாயில் போட்டு மாத்திரையாக விழுங்கிக்கொள்ளலாம் என்கின்றனர். ரோபோ வடிவிலான மருந்தும் உடலில் ரத்தக் குழாய்களுக்குள் நீச்சலடித்துச் சென்று எந்தப் பகுதியில் நோய் பாதிப்போ, சரியாக அந்தப் பகுதியில் மருந்தை அளிக்கக்கூடியதாக இருக்கும். இந்த வகை மருத்துவத்தை இலக்கு நோக்கிய சிகிச்சை என்கின்றனர்.

கத்தியின்றி ரத்தமின்றி…

கத்தியின்றி ரத்தமின்றி என்று சொல்லப்படும் லேசர் சிகிச்சைகளுக்கு எல்லாம் அடுத்த கட்டமாக நவீன மருத்துவம் இந்தத் திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது பெரும்பாலும் மருந்துகள், மாத்திரை வடிவில் அல்லது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதற்கு மாறாக நோயால் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக மருந்தைச் செலுத்த முடிந்தால் இன்னும் சிறப்பாகச் சிகிச்சை அளிக்க முடியும் எனக் கருதுகின்றனர்.

இந்த வகை சிகிச்சையை சாத்தியமாக்கத்தான், உடலுக்குள் சென்று தேவைப்படும் இடத்தில் மருந்தை அளிக்கக்கூடிய நுண் ரோபோக்களை உருவாக்கும் ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கின்றனர். இத்தகைய ஆய்வுக் குழுக்களில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச்சின், இபிஎஃப்எல் மற்றும் இடிஹெச் ஆய்வுக்குழு, மனித உடலுக்குள் எளிதாக நீந்திச் செல்லும் திறன் படைத்துள்ள நுண் ரோபோவை உருவாக்கியுள்ளது. செல்மான் சாகர், பிராட்லி நெல்சன் ஆகிய விஞ்ஞானிகள் தலைமையிலான குழு உருவாக்கியுள்ள இந்த நுண் ரோபோ செயல்படும் அற்புதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் எனில், கொஞ்சம் உயிரியல், கொஞ்சம் ஜப்பானிய ஆரிகாமி கலை, நுண் பொருள் சார்ந்த நுட்பங்கள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், இவை அனைத்தின் கலவையாகத்தான், இந்த நுண் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் இல்லாத ரோபோக்கள்

பொதுவாக ரோபோக்கள் கம்ப்யூட்டர் சார்ந்தவை. அவற்றுக்கு சிப்களும், சென்சார்களும், பேட்டரிகளும் தேவை. அவற்றை இயக்கச் சிக்கலான மின்னணுவியலும், மென்பொருள் நிரல்களும் வேண்டும். ஆனால், நுண் ரோபோக்களின் உலகம் வேறு விதமானது. கடுகினும் சிறிதாக இருக்கக்கூடிய இந்த நுண் ரோபோக்களில் சென்சார்களுக்கு எல்லாம் இடமில்லை. உயிரி வகைப் பொருட்கள் அல்லது நேனோ பார்ட்டிகல்ஸ் எனப்படும் நுண் துகள்களைக் கொண்டு உருவாக்கப்படும். இவை வடிவமைக்கும் விதத்திலேயே மிக நுணுக்கமாக புரோகிராம் செய்யப்பட்டு விடுகின்றன.

இதற்கான காரணத்தையும், தேவையையும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். முதல் காரணம் மனித உடலுக்கு மாத்திரையை ரோபோவாக அனுப்ப வேண்டும் எனில், சென்சார்களையோ, பேட்டரிகளையோ அத்தனை சின்னதாக்கி இணைக்க முடியாது. அது மட்டுமல்ல, உடலுக்குள் செல்வதால் ரோபோவுக்கான மூலப்பொருள், தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும். வேலை முடிந்ததும் அவை ஜீரணமாகிவிடக்கூடியதாக இருந்தால் இன்னும் நல்லது.

சாமானிய மனது இதெல்லாம் சாத்தியமா என்று சந்தேகிக்கலாம். ஆனால், விஞ்ஞானிகள் இந்த அற்புதத்தைச் சாத்தியமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த முயற்சியில் முக்கிய முன்னேற்றமாக சுவிட்சர்லாந்து குழுவின் நுண் ரோபோ அமைந்துள்ளது. உடலமைப்பைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொண்டு இவற்றால் உடலுக்குள் வேகம் குறையாமல் முன்னேறிச் செல்ல முடியும். என்ன செய்ய வேண்டும் என இவற்றுக்கு முதலிலேயே கட்டளையிட்டு விடலாம் (புரோகிராமிங்) என்பதோடு, தேவை எனில் இயக்கி வழிநடத்தவும் செய்யலாம்.

இயற்கைச் செயல்பாட்டை, இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் எனில் நுண்கிருமிகள் செயல்பாட்டை அடிப்படையாக வைத்துக்கொண்டு இதை விஞ்ஞானிகள் செய்துள்ளனர். பாக்டீரியா எனக் குறிப்பிடப்படும் நுண்கிருமிகளில் பல வகைகள் இருக்கின்றன. நோய் விளைவிக்கும் நுண்கிருமிகள் தவிர நல்ல நுண்கிருமிகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

இவை ஒருபக்கம் இருக்க, இந்த நுண்கிருமிகளின் செயல்பாட்டைக் கூர்ந்து கவனித்தால், இயற்கையின் ஆற்றலை நினைத்து வியக்க வேண்டியிருக்கும். ஏனெனில், நுண்கிருமிகள் சூழலுக்கு ஏற்பத் தங்கள் உடல் வடிவமைப்பை மாற்றிக்கொள்ளக் கூடியவையாக இருக்கின்றன. தாங்கள் உலாவும் இடத்தில் உள்ள அடர்த்தி அல்லது ரசாயனத் தன்மைக்கேற்ப, உடல் அமைப்பைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொண்டு இவை இயங்குகின்றன.

இந்த ஆற்றலையே ஊக்கமாக எடுத்துக்கொண்டு, மனித உடலுக்குள் உள்ள நிலைக்கு ஏற்ப தங்கள் உடல் அமைப்பை மாற்றிக்கொண்டு முன்னேறிச் செல்லக்கூடிய நுண் ரோபோவை வடிவமைத்துள்ளதாக சுவிஸ் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. ரத்தத்தின் அடர்த்திக்கு ஏற்ப இவை தங்கள் உடலை இஷ்டம்போல வளைத்து அல்லது சுருக்கி நெளித்துக்கொள்ளுமாம். இதன் காரணமாக, இவற்றால் உள்ளே புக முடியாத சிக்கலான இடம் அல்லது மூளைகளில்கூட லாகவமாகப் புகுந்து சென்றுவிடுமாம். உதாரணமாக, இதன் உடல் சுற்றளைவைவிடவும் குறைந்த இடம் கொண்ட வழி என்றால், அதற்கேற்ப உடல் அமைப்பைச் சுருக்கி வளைந்து நெளிந்தபடி தொடர்ந்து நீந்திச் சென்றுவிடும் என்கின்றனர்.

இந்த நுண் ரோபோக்கள் ஹைட்ரோஜெல் நேனோகாம்போசிட் எனப்படும் நுண் துகள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நுண் துகள்களை, ஜப்பானிய ஆரிமாகி கலையின் ஒரு பிரிவைக் கொண்டு, உடல் அமைப்பை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டதாக வடிவமைத்துள்ளனர். எனவே, ரத்தத்தின் அடர்த்தி அல்லது விஸ்காசிட்டி எனும் பண்புக்கு ஏற்ப இவை உடல் அமைப்பை மாற்றிக்கொள்ளும்.

இவற்றுக்குள் காந்த நுண் துகள்களையும் இடம்பெற வைக்கலாம் என்பதால், தேவை எனில் வெளியே இருந்து காந்த மண்டலத்தைக் கொண்டும் இவற்றை இயக்கிக்கொள்ளலாமாம். மற்றபடி இந்த ரோபோ நுண்கிருமி போலவே தனது உடல் அமைப்பைச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு நீந்திச் செல்லும்.

இதன் பின்னே உள்ள சிக்கலான நுட்பங்கள் குறித்து ஆய்வுக் குழுவினர் சயன்ஸ் அட்வான்ஸ்டு இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளனர். இதே முறையில் செயல்பட்டால், மருந்துகளைக் கொண்டுசெல்லும் நுண் ரோபோக்களை எளிதாக உருவாக்கலாம் என்பதுதான் அவர்கள் சொல்லும் சேதி.

அதைவிட முக்கியமான செய்தி, மருந்துகளை தாங்கிச்செல்லக்கூடிய நுண் ரோபோக்களை அதிக செலவில்லாமல் பெரிய அளவிலும் உற்பத்தி செய்யலாம் என்று சொல்லியிருப்பதுதான்!

நுண் ரோபோக்கள் பற்றி மேலும் அறிய :

https://www.sciencedaily.com/releases/2019/01/190118145536.htm

http://advances.sciencemag.org/content/5/1/eaau1532

 

https://minnambalam.com/k/2019/01/28/12

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் உங்களின் காலம் ...
எங்களுக்கு வயது வந்து நோய்வரும் காலங்களில் 
நார்ஸ் மாரே உள்ளே சென்று மருத்துவம் செய்யும் அளவுக்கு வளர்ந்துவிடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.