Jump to content

பாகிஸ்தான்: தெய்வ நிந்தனை வழக்கில் கிறிஸ்தவ பெண் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
மரண தண்டனை ரத்தாகி விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீபி Image caption மரண தண்டனை ரத்தாகி விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீபி

தெய்வ நிந்தனை வழக்கில் கிறிஸ்தவ பெண் ஒருவரின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சச்சரவொன்றில் ஆசியா பீபி எனும் பெண் முகமது நபியை அவமனாப்படுத்திய வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால், தான் அவ்வாறாக அவமானப்படுத்தவில்லை என்று கூறிவந்தார். எட்டு ஆண்டுகள் தனிமை சிறையிலும் கழித்தார்.

ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவரது கணவர் வெளிநாடுகளில் தஞ்ச கோரிக்கை விடுத்தார்.படத்தின் காப்புரிமை AFP Image caption ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவரது கணவர் வெளிநாடுகளில் தஞ்ச கோரிக்கை விடுத்தார்.

தெய்வ நிந்தனை சட்டங்கள் வலுவாக உள்ள பாகிஸ்தானில் இவரது வழக்கு பலத்த சச்சரவையும் பிரிவினையையும் ஏற்படுத்தியது.

அவரது வழக்கு இதற்கு முன்னால் மேல் முறையீட்டுற்கு வந்ததை தொடர்ந்து, கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தில் இஸ்லாமாபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தீவிர மதசார்பாளர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

மேல்முறையீடு

8 ஆண்டுகள் தனிமை சிறையில் கழித்த பின்னர், மேல்முறையீட்டு மனு பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாகிர் நிசாருக்கு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, ஆசியா பீபியை விடுதலை செய்தார்.

பழிவாங்கல்

தெய்வநிந்தனை குற்றத்திற்காக கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பெரும் ஆதரவு பாகிஸ்தானில் நிலவுகிறது.படத்தின் காப்புரிமை EPA Image caption தெய்வநிந்தனை குற்றத்திற்காக கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பெரும் அளவில் ஆதரவு பாகிஸ்தானில் நிலவுகிறது.

தெய்வ நிந்தனை சட்டம் பாகிஸ்தானில் பெரும்பாலும் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆசியா பீபிக்கு ஆதரவாக முறையீடு செய்த அந்த மாகாண ஆளுநர் சல்மான் தசீர், அவரது பாதுகாவலராலேயே கொல்லப்பட்டதால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது. .

அவரை கொன்ற பாதுகாவலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும், அவர் பலரால் கதாநாயகனாக கொண்டாடப்படுகிறார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

நான்கு குழந்தைகளுக்கு தாயான ஆசியா பீபி 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அண்டை வீட்டாருடன் விவாதத்தில் ஈடுப்பட்டார்.

அந்த வாக்குவாதமும் சாதாரணமான ஒரு விஷயத்திற்காகதான் தொடங்கியது. அவர்கள் லாகூர் அருகே பழம் பறித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பக்கெட் தண்ணீர் பகிர்ந்து கொள்வதில்தான் பிரச்சனை தொடங்கியது.

ஆசியா பீபிவியின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்த பின்னர், நாட்டை முடக்கும் அளவில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.படத்தின் காப்புரிமை EPA Image caption ஆசியா பீபிவியின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்த பின்னர், நாட்டை முடக்கும் அளவில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

தாங்கள் பயன்பாட்டுக்காக வைத்திருந்த தண்ணீரை எடுத்து ஆசியா அருந்திவிட்டார். இதனால், எங்கள் நம்பிக்கையின்படி அந்த தண்ணீரின் புனிதம் கெட்டுவிட்டது. இனி அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாது என்று கூறி சச்சரவிட்டனர்.

ஆசியா பீபி மதம் மாற வேண்டும் என்று அவர்கள் வாதிட்டதாகவும், அதற்கு மறுப்பாக முகமது நபியை ஆசியா தெய்வந்தனை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

சச்சரவிட்டதை ஒப்புக் கொண்ட ஆசியா பீபி, தொடக்கத்திலிருந்தே தெய்வநிந்தனை குற்றத்தை மறுத்து வந்தார்.

அவரது வழக்கறிஞர் அரசு தரப்பில் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக கூறி வந்தார்.

அவருக்கு ஆதரவாக

இஸ்லாம்தான் பாகிஸ்தானின் அரச மதம். இது அவர்களின் சட்டத்திலும் பலமாக எதிரொலிக்கும்.

மக்களும் தெய்வநிந்தனை சட்டத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், ஆசியாவை ஆதரித்தவர் பஞ்சாப் மாகாண ஆளுநரான சல்மான். ஆசியா பீபியை மன்னிக்க வேண்டும், தெய்வநிந்தனை சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கோரி வந்தார்.

இதன்காரணமாக. 2011 ஆம் ஆண்டு, அவரது பாதுகாவலராலேயே கொல்லப்பட்டார்.

https://www.bbc.com/tamil/global-47042571

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.