Jump to content

16 கால்கள்; 300 முட்டைகள் இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ்
 
  •  
16 கால்கள்; 300 முட்டை இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்படத்தின் காப்புரிமை Getty Images

விதைத்து சில வாரங்களே ஆன தனது சோள பயிர்களை மாலைவரை பார்த்துவிட்டு, இந்த பருவத்திலாவது நல்ல மகசூலை தரவேண்டுமென்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு செல்லும் விவசாயிகள், மறுநாள் காலை வரப்பிற்கு வந்து பார்க்கும்போது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலும், தமிழகத்தின் பெரும்பாலான வேளாண் பகுதிகளிலும், இலங்கையின் குறிப்பிட்ட பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இந்த அதிர்ச்சிக்குக் காரணம் மனிதர்களின் பழிவாங்கலோ, விலங்குகளின் அட்டகாசமோ அல்ல. அமெரிக்காவிலிருந்து கிளம்பி, ஆப்பிரிக்காவிற்கு சென்று, அங்கு விவசாயத்துறையில் மிகப் பெரிய பாதிப்பதை ஏற்படுத்திவிட்டு பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து வந்து பயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் படைப்புழுக்களே காரணம்.

ஆம், விவசாயிகளின் பல்லாண்டுகால அனுபவத்திற்கும், அவர்கள் அடிக்கும் விதவிதமான பூச்சிக்கொல்லி மருந்துக்கும் சளைக்காத படைப்புழுக்கள் தற்போது தமிழகத்திலும், இலங்கையிலும் விவசாயத் துறையில் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளன.

படைப்புழுக்கள் என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன? அது விளைவிக்கும் பேராபத்திலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன?

16 கால்கள்; 300 முட்டை இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்படத்தின் காப்புரிமை Getty Images

இத்தனை நாள் கேள்விப்படாத படைப்புழு எங்கிருந்து வந்தது?

புழுக்கள் அல்லது பூச்சிகளை எடுத்துக்கொண்டால் நன்மை செய்யக்கூடியது மற்றும் தீமை செய்யக்கூடியது என இரண்டு வகைகள் உள்ளன. அதில், தீமை செய்யக்கூடிய வகையை சேர்ந்த புழுக்களிலேயே மோசமானது ஸ்போடாப்டிரா ஃப்ரூஜ்பெர்டாடா என்னும் உயிரியல் பெயர் கொண்ட படைப்புழு.

படைப்புழுக்களின் வரலாற்றை தெரிந்துகொள்வதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையின் தலைவர் முத்துகிருஷ்ணனை தொடர்பு கொண்டோது அவர் தெரிவித்த கருத்துகள்.

"வெறும் 30 நாட்கள் வாழும் படைப்புழுக்கள் மற்ற புழுக்களை போலன்றி, பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பறக்கக்கூடியது. முதன் முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த படைப்புழுக்கள் அங்கிருந்து ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்று சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூண்டோடு அழித்து விவசாய துறையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மக்களை ஆளாக்கியது.

முத்துகிருஷ்ணன்படத்தின் காப்புரிமை Muthukrishnan Image caption முத்துகிருஷ்ணன்

இந்தியாவில் இதுபோன்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற விழிப்போடு கடந்த சில ஆண்டுகளாக வேளாண் விஞ்ஞானிகள் செயல்பட்டு வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் முதன் முதலாக கர்நாடக மாநிலத்தில் படைப்புழுக்களின் அட்டகாசம் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து சென்னை நீங்கலாக விவசாயம் மேற்கொள்ளப்படும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட வேளாண் அதிகாரிகள், விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையிலும், முதன் முதலாக கோயம்புத்தூர், ஈரோடு பகுதிகளில் இரவோடு இரவாக படைப்புழுக்கள் சோளப் பயிர்களை நாசம் செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

மற்ற புழு வகைகளோடு முற்றிலும் வேறுபட்ட பயிர் தாக்குதலை தொடுக்கும் படைப்புழுக்களே அது என்பது ஆய்விற்கு பின் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து படைப்புழுக்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்கும் இயற்கை மற்றும் செயற்கையான வழிமுறைகளை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்."

"16 கால்கள், ஒரே சமயத்தில் 300 முட்டைகள்"

"தனது வாழ்நாளில் புழுவிலிருந்து அந்துப்பூச்சியாக உருமாறியவுடன் உடனடியாக இனச்சேர்கையில் ஈடுபடும் இவை ஒரேசமயத்தில் 200 முதல் 300 முட்டைகளை இடும் தன்மையை கொண்டது. சில நாட்களில் முட்டையிலிருந்து வெளிவரும் படைப்புழுக்களுக்கு 16 கால்கள் இருப்பதுடன் அடுத்த இரு வாரங்களில் 3 மிமீ என்ற அளவிலிருந்து 2 ½ செ.மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது.

அதற்கு இடைப்பட்ட காலத்தில் தன்னாலான அளவுக்கு அதிகப்படிப்பான சோளம் உள்ளிட்ட தனக்கு விருப்பமான பயிர்களை உட்கொண்டு பிறகு மண்ணுக்குள் செல்கிறது. மண்ணுக்குள் அடுத்த 10 நாட்களுக்கு இருக்கும் அவற்றின் கால்களின் எண்ணிக்கை ஆறாக குறைந்து, புதிதாக இரண்டு இறக்கைகளும், கண்களும் பெற்றுக்கொண்டு ஆண், பெண் அந்துப்பூச்சிகளாக உருவெடுக்கும்.

16 கால்கள்; 300 முட்டை இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்படத்தின் காப்புரிமை Getty Images

மண்ணுக்குள்ளிருந்து வெளியே பறந்து வரும் பெண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கையை மேற்கொள்ளும் எண்ணத்துடன் சுரக்கும் ஒருவித வாசனை திரவத்தால் கவர்ந்தெழுக்கப்படும் ஆண் அந்துப்பூச்சிகள் அதைத்தேடி சென்று இனச்சேர்க்கையில் ஈடுபட்டு முன்னர் கூறியதை போன்று ஒரே சமயத்தில் 200 முதல் 300 முட்டைகளை இலைகளில் இட்டு அதை ஒருவித திரவத்தை கொண்டு மூடி பாதுகாக்கின்றன.

பின்பு அங்கிருந்து அடுத்த இடத்தை நோக்கி பறந்துசென்று தனது பணியை தொடருகின்றன. ஒருவேளை பெண் அந்துப்பூச்சியால் இனச்சேர்க்கையில் ஈடுபட முடியவில்லை என்றால் அடுத்த சில நாட்களில் அது உயிரிழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது" என்று படைப்புழுக்களின் வித்தியாசமான வாழ்க்கைமுறையை விளக்குகிறார் பேராசிரியர் முத்துகிருஷ்ணன்.

"இயற்கை விவசாயமே தீர்வு"

இயல்பான முதலீட்டில், அதிகளவு மகசூலை பெற்று குறுகிய காலத்தில் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் மண்ணின் வளத்தையும், விவசாயத்தின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாரி தெளித்தவர்களின் செயல்பாடே படைப்பூச்சிகளின் படையெடுப்பிற்கு காரணம் என்று கூறுகிறார் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம்.

சமீபகாலமாக இயற்கை விவசாய முறைகளை கடைபிடித்து செய்யப்படும் பல்வேறு உணவுப்பொருட்களுக்கு தமிழகம் முழுவதும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அரச்சலூர் செல்வம்படத்தின் காப்புரிமை Facebook Image caption அரச்சலூர் செல்வம்

பூச்சிக்கொல்லிகளையும், மற்ற வேதிப்பொருட்களையும் தெளிக்காது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயன்படுத்தாது உற்பத்திசெய்யப்படும் மக்கா சோளம், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவை படைப்புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, "உண்மையான இயற்கை விவசாய முறைகளை கடைபிடிக்கும் எவருக்கும் இந்த படைப்புழுக்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் அனைத்துவித சத்துக்களுடன் பிறப்பதை போன்று, ஒவ்வொரு தாவரத்துக்கும் அதற்கு ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறன் உள்ளது.

ஆனால், விளைச்சலை பெருக்கி காட்டுகிறேன் என்று கூறிவிட்டு தெளிக்கப்படும் வேதிப்பொருட்களால் சில ஆண்டுகளுக்கு அதிக மகசூலை பெறும் விவசாயிகள் சீக்கிரத்தில் தங்களது மண்ணின் சத்துகளையும், பல்லாண்டுகாலமாக சேர்த்து வைத்த வளத்தையும் இழக்கின்றனர். அதுமட்டுமன்றி, விவசாயிகளின் நண்பனாக திகழும் நன்மை செய்யும் புழுக்களை கொல்வதுடன், தரம் குறைந்த உணவு உற்பத்திக்கும் வழிவகுக்கின்றனர்.

மேலும், காலப்போக்கில் அனைத்துவித பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் ஏற்றதாக தங்களது உடலமைப்பை தகவமைத்து கொள்ளும் படைப்புழுக்கள் உள்ளிட்ட இன்னும்பிற தீமை செய்யும் பூச்சிகள் எதற்கும் கட்டுப்படாத நிலைக்கு உயர்ந்து விவசாய துறைக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன" என்று அவர் கூறுகிறார்.

அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விதைகள் நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், தனியார் விதை நிறுவனங்கள் சரிவர பரிசோதனை செய்யாமல் ஆரோக்கியமற்ற விதைகளை சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் பெற்றுக்கொண்டு விவசாயிகளின் வற்றில் அடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

16 கால்கள்; 300 முட்டை இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்படத்தின் காப்புரிமை Getty Images

படைப்புழுக்களை கட்டுப்படுத்தவே முடியாதா?

அபரிமிதமான அளவில் பல்கி பெருகி, நாடு நாடாக பயணித்து விவசாயத்தை நசுக்கி வரும் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான இயற்கை மற்றும் செயற்கை வழிமுறைகள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு தமிழ்நாடு வேளாண்மை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் முத்துகிருஷ்ணன் கூறுகிறார்.

"விவசாயிகள் ஒவ்வொரு பருவத்துக்கும் வேறுபட்ட பயிர் வகைகளை முயற்சி செய்வதும், உழவு செய்தவுடன் வேப்பம் புண்ணாக்குகளை நிலத்தில் போடுவதும் படைப்புழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தீமை செய்யும் புழுக்கள், பூச்சிகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்கும். அது மட்டுமின்றி, வரப்பு பயிர்களையும், வேலி செடிகளையும் வளர்ப்பதன் மூலம் பிரச்சனையிலிருந்து எளிதாக தப்பிக்க முடியும்.

செயற்கையான வழிகளை பார்க்கும்போது, இரவில் மட்டுமே அட்டகாசத்தில் ஈடுபடும் படைப்புழுக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் மின் விளக்குகளை அமைத்து அவற்றை திசைதிருப்பி மொத்தமாக பிடித்துவிடமுடியும். மேலும், பெண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கைக்கு தயாராகும்போது வெளியிடும் பெரோமோன் என்னும் திரவத்தை செயற்கையாக வெளிப்படுத்தி ஆண் அந்துப்பூச்சிகளை ஏமாற்றி மொத்தமாக பிடிக்க முடியும்" என்று படைப்புழுக்களை அதன் வாழ்க்கை போக்கின் பல்வேறு நிலைகளில் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அவர் பட்டியலிடுகிறார்.

https://www.bbc.com/tamil/science-47034519

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக் குறிகள் இட்ட சுவி அண்ணாவுக்கும் சுவைப்பிரியனுக்கும்  நன்றிகள். பொதுவாக தமிழ் சமூகத்தில் சுற்று சூழல், இயற்கை வளம், ஏனைய உயிரினங்கள் பற்றி அறிய விரும்பும் ஆவல் என்பன குறைவு. அதனால் வாசிப்பவர்களும் மிகக் குறைவு, சில நேரங்களில் இப்படியான கட்டுரைகளை வாசித்து விட்டு பகிராமல் இருப்பமா என யோசிப்பதும் உண்டு. ஆனால் உங்களின் ஊக்கம் என்னை தொடர்ந்து இப்படியான பதிவுகளை கொண்டு வந்து ஒட்ட ஊக்குவிக்கின்றது.

(விருப்புக் குறி இட்ட இருவரின் பெயர்களும் 'சு' னாவில் தொடங்குவது அதிசயம் தான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wp0_13556-720x450.jpg

படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம்

படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட  குழுவின் விசேட கூட்டம்  இடம்பெறவுள்ளது.

அதன்படி குறித்தக் குழுவின் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) விவசாய திணைக்களத்தில் முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான யோசனைகள் முற்வைக்கப்படவுள்ளன.

பயிர்ச்செய்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள படைப்புழுவின் தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து விளக்கமளிக்கும் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு படைப்புழுவை ஒழிப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே  மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தலைமையில் கலந்துரையாடல்களும்  இடம்பெற்றன.

மேலும் மறு அறிவித்தல் வரும்வரை பெரும்போக சோளம் பயிற்செய்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/படைப்புழுக்களை-கட்டுப்ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/30/2019 at 3:37 AM, பிழம்பு said:

பச்சைக் குறிகள் இட்ட சுவி அண்ணாவுக்கும் சுவைப்பிரியனுக்கும்  நன்றிகள். பொதுவாக தமிழ் சமூகத்தில் சுற்று சூழல், இயற்கை வளம், ஏனைய உயிரினங்கள் பற்றி அறிய விரும்பும் ஆவல் என்பன குறைவு. அதனால் வாசிப்பவர்களும் மிகக் குறைவு, சில நேரங்களில் இப்படியான கட்டுரைகளை வாசித்து விட்டு பகிராமல் இருப்பமா என யோசிப்பதும் உண்டு. ஆனால் உங்களின் ஊக்கம் என்னை தொடர்ந்து இப்படியான பதிவுகளை கொண்டு வந்து ஒட்ட ஊக்குவிக்கின்றது.

(விருப்புக் குறி இட்ட இருவரின் பெயர்களும் 'சு' னாவில் தொடங்குவது அதிசயம் தான்)

இந்த அதிசயத்தைத்தான் பலரும் விதி என்கிறார்கள்.....!  😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/29/2019 at 9:23 AM, பிழம்பு said:
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ்
 
  •  
16 கால்கள்; 300 முட்டை இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்படத்தின் காப்புரிமை Getty Images

விதைத்து சில வாரங்களே ஆன தனது சோள பயிர்களை மாலைவரை பார்த்துவிட்டு, இந்த பருவத்திலாவது நல்ல மகசூலை தரவேண்டுமென்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு செல்லும் விவசாயிகள், மறுநாள் காலை வரப்பிற்கு வந்து பார்க்கும்போது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

 

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலும், தமிழகத்தின் பெரும்பாலான வேளாண் பகுதிகளிலும், இலங்கையின் குறிப்பிட்ட பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இந்த அதிர்ச்சிக்குக் காரணம் மனிதர்களின் பழிவாங்கலோ, விலங்குகளின் அட்டகாசமோ அல்ல. அமெரிக்காவிலிருந்து கிளம்பி, ஆப்பிரிக்காவிற்கு சென்று, அங்கு விவசாயத்துறையில் மிகப் பெரிய பாதிப்பதை ஏற்படுத்திவிட்டு பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து வந்து பயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் படைப்புழுக்களே காரணம்.

ஆம், விவசாயிகளின் பல்லாண்டுகால அனுபவத்திற்கும், அவர்கள் அடிக்கும் விதவிதமான பூச்சிக்கொல்லி மருந்துக்கும் சளைக்காத படைப்புழுக்கள் தற்போது தமிழகத்திலும், இலங்கையிலும் விவசாயத் துறையில் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளன.

 

படைப்புழுக்கள் என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன? அது விளைவிக்கும் பேராபத்திலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன?

16 கால்கள்; 300 முட்டை இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்படத்தின் காப்புரிமை Getty Images

இத்தனை நாள் கேள்விப்படாத படைப்புழு எங்கிருந்து வந்தது?

புழுக்கள் அல்லது பூச்சிகளை எடுத்துக்கொண்டால் நன்மை செய்யக்கூடியது மற்றும் தீமை செய்யக்கூடியது என இரண்டு வகைகள் உள்ளன. அதில், தீமை செய்யக்கூடிய வகையை சேர்ந்த புழுக்களிலேயே மோசமானது ஸ்போடாப்டிரா ஃப்ரூஜ்பெர்டாடா என்னும் உயிரியல் பெயர் கொண்ட படைப்புழு.

படைப்புழுக்களின் வரலாற்றை தெரிந்துகொள்வதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையின் தலைவர் முத்துகிருஷ்ணனை தொடர்பு கொண்டோது அவர் தெரிவித்த கருத்துகள்.

"வெறும் 30 நாட்கள் வாழும் படைப்புழுக்கள் மற்ற புழுக்களை போலன்றி, பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பறக்கக்கூடியது. முதன் முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த படைப்புழுக்கள் அங்கிருந்து ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்று சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூண்டோடு அழித்து விவசாய துறையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மக்களை ஆளாக்கியது.

முத்துகிருஷ்ணன்படத்தின் காப்புரிமை Muthukrishnan Image caption முத்துகிருஷ்ணன்

இந்தியாவில் இதுபோன்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற விழிப்போடு கடந்த சில ஆண்டுகளாக வேளாண் விஞ்ஞானிகள் செயல்பட்டு வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் முதன் முதலாக கர்நாடக மாநிலத்தில் படைப்புழுக்களின் அட்டகாசம் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து சென்னை நீங்கலாக விவசாயம் மேற்கொள்ளப்படும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட வேளாண் அதிகாரிகள், விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையிலும், முதன் முதலாக கோயம்புத்தூர், ஈரோடு பகுதிகளில் இரவோடு இரவாக படைப்புழுக்கள் சோளப் பயிர்களை நாசம் செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

மற்ற புழு வகைகளோடு முற்றிலும் வேறுபட்ட பயிர் தாக்குதலை தொடுக்கும் படைப்புழுக்களே அது என்பது ஆய்விற்கு பின் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து படைப்புழுக்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்கும் இயற்கை மற்றும் செயற்கையான வழிமுறைகளை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்."

"16 கால்கள், ஒரே சமயத்தில் 300 முட்டைகள்"

"தனது வாழ்நாளில் புழுவிலிருந்து அந்துப்பூச்சியாக உருமாறியவுடன் உடனடியாக இனச்சேர்கையில் ஈடுபடும் இவை ஒரேசமயத்தில் 200 முதல் 300 முட்டைகளை இடும் தன்மையை கொண்டது. சில நாட்களில் முட்டையிலிருந்து வெளிவரும் படைப்புழுக்களுக்கு 16 கால்கள் இருப்பதுடன் அடுத்த இரு வாரங்களில் 3 மிமீ என்ற அளவிலிருந்து 2 ½ செ.மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது.

அதற்கு இடைப்பட்ட காலத்தில் தன்னாலான அளவுக்கு அதிகப்படிப்பான சோளம் உள்ளிட்ட தனக்கு விருப்பமான பயிர்களை உட்கொண்டு பிறகு மண்ணுக்குள் செல்கிறது. மண்ணுக்குள் அடுத்த 10 நாட்களுக்கு இருக்கும் அவற்றின் கால்களின் எண்ணிக்கை ஆறாக குறைந்து, புதிதாக இரண்டு இறக்கைகளும், கண்களும் பெற்றுக்கொண்டு ஆண், பெண் அந்துப்பூச்சிகளாக உருவெடுக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

மண்ணுக்குள்ளிருந்து வெளியே பறந்து வரும் பெண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கையை மேற்கொள்ளும் எண்ணத்துடன் சுரக்கும் ஒருவித வாசனை திரவத்தால் கவர்ந்தெழுக்கப்படும் ஆண் அந்துப்பூச்சிகள் அதைத்தேடி சென்று இனச்சேர்க்கையில் ஈடுபட்டு முன்னர் கூறியதை போன்று ஒரே சமயத்தில் 200 முதல் 300 முட்டைகளை இலைகளில் இட்டு அதை ஒருவித திரவத்தை கொண்டு மூடி பாதுகாக்கின்றன.

பின்பு அங்கிருந்து அடுத்த இடத்தை நோக்கி பறந்துசென்று தனது பணியை தொடருகின்றன. ஒருவேளை பெண் அந்துப்பூச்சியால் இனச்சேர்க்கையில் ஈடுபட முடியவில்லை என்றால் அடுத்த சில நாட்களில் அது உயிரிழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது" என்று படைப்புழுக்களின் வித்தியாசமான வாழ்க்கைமுறையை விளக்குகிறார் பேராசிரியர் முத்துகிருஷ்ணன்.

"இயற்கை விவசாயமே தீர்வு"

இயல்பான முதலீட்டில், அதிகளவு மகசூலை பெற்று குறுகிய காலத்தில் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் மண்ணின் வளத்தையும், விவசாயத்தின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாரி தெளித்தவர்களின் செயல்பாடே படைப்பூச்சிகளின் படையெடுப்பிற்கு காரணம் என்று கூறுகிறார் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம்.

சமீபகாலமாக இயற்கை விவசாய முறைகளை கடைபிடித்து செய்யப்படும் பல்வேறு உணவுப்பொருட்களுக்கு தமிழகம் முழுவதும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Facebook Image caption அரச்சலூர் செல்வம்

பூச்சிக்கொல்லிகளையும், மற்ற வேதிப்பொருட்களையும் தெளிக்காது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயன்படுத்தாது உற்பத்திசெய்யப்படும் மக்கா சோளம், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவை படைப்புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, "உண்மையான இயற்கை விவசாய முறைகளை கடைபிடிக்கும் எவருக்கும் இந்த படைப்புழுக்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் அனைத்துவித சத்துக்களுடன் பிறப்பதை போன்று, ஒவ்வொரு தாவரத்துக்கும் அதற்கு ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறன் உள்ளது.

ஆனால், விளைச்சலை பெருக்கி காட்டுகிறேன் என்று கூறிவிட்டு தெளிக்கப்படும் வேதிப்பொருட்களால் சில ஆண்டுகளுக்கு அதிக மகசூலை பெறும் விவசாயிகள் சீக்கிரத்தில் தங்களது மண்ணின் சத்துகளையும், பல்லாண்டுகாலமாக சேர்த்து வைத்த வளத்தையும் இழக்கின்றனர். அதுமட்டுமன்றி, விவசாயிகளின் நண்பனாக திகழும் நன்மை செய்யும் புழுக்களை கொல்வதுடன், தரம் குறைந்த உணவு உற்பத்திக்கும் வழிவகுக்கின்றனர்.

மேலும், காலப்போக்கில் அனைத்துவித பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் ஏற்றதாக தங்களது உடலமைப்பை தகவமைத்து கொள்ளும் படைப்புழுக்கள் உள்ளிட்ட இன்னும்பிற தீமை செய்யும் பூச்சிகள் எதற்கும் கட்டுப்படாத நிலைக்கு உயர்ந்து விவசாய துறைக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன" என்று அவர் கூறுகிறார்.

அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விதைகள் நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், தனியார் விதை நிறுவனங்கள் சரிவர பரிசோதனை செய்யாமல் ஆரோக்கியமற்ற விதைகளை சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் பெற்றுக்கொண்டு விவசாயிகளின் வற்றில் அடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

படைப்புழுக்களை கட்டுப்படுத்தவே முடியாதா?

அபரிமிதமான அளவில் பல்கி பெருகி, நாடு நாடாக பயணித்து விவசாயத்தை நசுக்கி வரும் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான இயற்கை மற்றும் செயற்கை வழிமுறைகள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு தமிழ்நாடு வேளாண்மை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் முத்துகிருஷ்ணன் கூறுகிறார்.

"விவசாயிகள் ஒவ்வொரு பருவத்துக்கும் வேறுபட்ட பயிர் வகைகளை முயற்சி செய்வதும், உழவு செய்தவுடன் வேப்பம் புண்ணாக்குகளை நிலத்தில் போடுவதும் படைப்புழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தீமை செய்யும் புழுக்கள், பூச்சிகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்கும். அது மட்டுமின்றி, வரப்பு பயிர்களையும், வேலி செடிகளையும் வளர்ப்பதன் மூலம் பிரச்சனையிலிருந்து எளிதாக தப்பிக்க முடியும்.

செயற்கையான வழிகளை பார்க்கும்போது, இரவில் மட்டுமே அட்டகாசத்தில் ஈடுபடும் படைப்புழுக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் மின் விளக்குகளை அமைத்து அவற்றை திசைதிருப்பி மொத்தமாக பிடித்துவிடமுடியும். மேலும், பெண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கைக்கு தயாராகும்போது வெளியிடும் பெரோமோன் என்னும் திரவத்தை செயற்கையாக வெளிப்படுத்தி ஆண் அந்துப்பூச்சிகளை ஏமாற்றி மொத்தமாக பிடிக்க முடியும்" என்று படைப்புழுக்களை அதன் வாழ்க்கை போக்கின் பல்வேறு நிலைகளில் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அவர் பட்டியலிடுகிறார்.

https://www.bbc.com/tamil/science-47034519

இயற்கை விவசாயத்திற்கு நான் எதிரியல்ல, ஆனால் இது உண்மையா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். படைப் புழுக்கள் பூச்சி கொல்லிகளுக்கு இசைவாக்கம் அடைந்ததால் இப்படி பெருவாரியான பரவல் வந்திருக்கலாம். ஆனால் அப்படி நடந்திருந்தால் கண்டறிய வழிகள் உண்டு. மற்றபடி இயற்கையானது எல்லாம் உயர்வானது என்ற கோசம் வெறும் கோசம் மட்டுமே! மரபணு மாற்றமும், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளும் வந்ததே இருக்கிற நிலப்பரப்பில் இயற்கையான பயிர்களை வளர்த்து உலகத்திற்குச் சோறு போடக் காணாது என்ற காரணம் தான். இதைக் கம்பனிகள் செய்யும் போது இலாபம் பார்க்காமல் செய்ய மாட்டார்கள். ஆனால், இலாபம் அல்ல இந்த விளைச்சலைக் கூட்டும் பயிர்ச்செய்கை முறைகளை முதலில் ஆரம்பித்தது!

Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

இயற்கை விவசாயத்திற்கு நான் எதிரியல்ல, ஆனால் இது உண்மையா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். படைப் புழுக்கள் பூச்சி கொல்லிகளுக்கு இசைவாக்கம் அடைந்ததால் இப்படி பெருவாரியான பரவல் வந்திருக்கலாம். ஆனால் அப்படி நடந்திருந்தால் கண்டறிய வழிகள் உண்டு. மற்றபடி இயற்கையானது எல்லாம் உயர்வானது என்ற கோசம் வெறும் கோசம் மட்டுமே! மரபணு மாற்றமும், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளும் வந்ததே இருக்கிற நிலப்பரப்பில் இயற்கையான பயிர்களை வளர்த்து உலகத்திற்குச் சோறு போடக் காணாது என்ற காரணம் தான். இதைக் கம்பனிகள் செய்யும் போது இலாபம் பார்க்காமல் செய்ய மாட்டார்கள். ஆனால், இலாபம் அல்ல இந்த விளைச்சலைக் கூட்டும் பயிர்ச்செய்கை முறைகளை முதலில் ஆரம்பித்தது!

உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை.

ஒன்று, இரசாயன மருந்துகளால் பூச்சி புழுக்கள் இசைவாக்கம் அடைந்து இரசாயனங்களை எதிர்க்கும் ஆற்றல் பெற அவற்றை வெல்ல மெம்மேலும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டி வரும். பூச்சி புழுக்களை விடக் கிருமிகளால் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதே கடினம். இயற்கையில் கிடைக்கும் சாதாரணமான ஒரு பொருள் அல்லது வேறு பூச்சிகள் இந்தப் புழுக்களுக்கு எதிராக அமையலாம். முதலில் அவற்றைக் கண்டறிய முற்பட வேண்டும்.

அடுத்து, இரசாயனம் இல்லாமல் இயற்கை விவசாயத்தால் உலகிற்குச் சோறுபோட முடியாது என்பது தவறான கருத்து. இது பற்றி விளக்குவது கடினமானது. உண்மை என்னவென்றால் இரசாயனத்தால் இயற்கைத் தன்மையை (ecosystem) அழித்து விட்டோம். அதனை மீளப் பெற பல ஆண்டுகள் ஆகும். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஐரோப்பாவில் இரசாயனங்கங்களை அதிகம் பாவிக்கும் நாடுகளில் பிரான்சும் முன்னணியில் உள்ளது. சென்ற வருடமும் மருந்துகள் மூலம் பயிர்களின் நேய்களையும் பூச்சிகளையும் வென்றார்கள். ஆனால் அறுவடை குறைய ஆரம்பித்தது இருந்தது. இதற்கான காரணம் பூச்சிகளோடு தேனீக்களும் பெருமளவில் அழிந்ததுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இயற்கை விவசாயத்திற்கு நான் எதிரியல்ல, ஆனால் இது உண்மையா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். படைப் புழுக்கள் பூச்சி கொல்லிகளுக்கு இசைவாக்கம் அடைந்ததால் இப்படி பெருவாரியான பரவல் வந்திருக்கலாம். ஆனால் அப்படி நடந்திருந்தால் கண்டறிய வழிகள் உண்டு. மற்றபடி இயற்கையானது எல்லாம் உயர்வானது என்ற கோசம் வெறும் கோசம் மட்டுமே! மரபணு மாற்றமும், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளும் வந்ததே இருக்கிற நிலப்பரப்பில் இயற்கையான பயிர்களை வளர்த்து உலகத்திற்குச் சோறு போடக் காணாது என்ற காரணம் தான். இதைக் கம்பனிகள் செய்யும் போது இலாபம் பார்க்காமல் செய்ய மாட்டார்கள். ஆனால், இலாபம் அல்ல இந்த விளைச்சலைக் கூட்டும் பயிர்ச்செய்கை முறைகளை முதலில் ஆரம்பித்தது!

இயற்கையான உணவு வகைகள்/விவசாய உற்பத்திகள் வெறும் பூச்சாண்டி வேலை என்று சொல்ல வருகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை.

ஒன்று, இரசாயன மருந்துகளால் பூச்சி புழுக்கள் இசைவாக்கம் அடைந்து இரசாயனங்களை எதிர்க்கும் ஆற்றல் பெற அவற்றை வெல்ல மெம்மேலும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டி வரும். பூச்சி புழுக்களை விடக் கிருமிகளால் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதே கடினம். இயற்கையில் கிடைக்கும் சாதாரணமான ஒரு பொருள் அல்லது வேறு பூச்சிகள் இந்தப் புழுக்களுக்கு எதிராக அமையலாம். முதலில் அவற்றைக் கண்டறிய முற்பட வேண்டும்.

அடுத்து, இரசாயனம் இல்லாமல் இயற்கை விவசாயத்தால் உலகிற்குச் சோறுபோட முடியாது என்பது தவறான கருத்து. இது பற்றி விளக்குவது கடினமானது. உண்மை என்னவென்றால் இரசாயனத்தால் இயற்கைத் தன்மையை (ecosystem) அழித்து விட்டோம். அதனை மீளப் பெற பல ஆண்டுகள் ஆகும். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஐரோப்பாவில் இரசாயனங்கங்களை அதிகம் பாவிக்கும் நாடுகளில் பிரான்சும் முன்னணியில் உள்ளது. சென்ற வருடமும் மருந்துகள் மூலம் பயிர்களின் நேய்களையும் பூச்சிகளையும் வென்றார்கள். ஆனால் அறுவடை குறைய ஆரம்பித்தது இருந்தது. இதற்கான காரணம் பூச்சிகளோடு தேனீக்களும் பெருமளவில் அழிந்ததுதான்.

ஏற்றுக் கொள்கிறேன்! உண்மையில் 7 பில்லியன் மக்களுக்கு தேவையான உணவு தற்போது உலகில் உற்பத்தியாகிறது. இதனை சில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பெற்றுக் கொள்வதில் தான் பிரச்சினை இருக்கிறது. உலகின் சில பகுதிகளில் இருக்கும் உற்பத்திக் குறைபாட்டை அல்லது உணவின் போசணைக் குறைபாட்டை நிவர்த்திக்க மட்டுமே இரசாயன/மரபுரிமை மாற்ற முறைகள் தேவைப் படுகின்றன.

1 hour ago, குமாரசாமி said:

இயற்கையான உணவு வகைகள்/விவசாய உற்பத்திகள் வெறும் பூச்சாண்டி வேலை என்று சொல்ல வருகின்றீர்கள்?


அப்படியில்லை. இயற்கை "எல்லாமே" உயர்வு என்பது தான் நான் ஏற்றுக் கொள்வதில்லை! மற்றபடி இயற்கையாகக் கிடைக்கும் உணவுகள் மீது வெறுப்பில்லை. இலகுவாக உருவாக்கல், போசணை கூட்டல் என்பதற்காக செய்றகை முறைகளை ஏற்றுக் கொள்வதை இந்த இயற்கை மீதான ஈர்ப்பு தடுக்கக் கூடாது எனக் கருதுகிறேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.