Jump to content

Recommended Posts

 

 

நீர்


              இந்த உலகத்துல உசுரோட இருக்கனும்னா அதுக்கு இந்த நீர்தான்  ரொம்பத் தேவை.. அணுக்களின் சேர்மம் நீர்னு அறிவியல் சொல்லுது. H2Oதான் இந்த  நீரோட மூலக்கூறு. நீர் திட,திரவ ,வாயு வடிவத்துல இருக்கு .
   
      மனுசனுக்கு மட்டுமில்ல இந்த உலகத்துல இருக்குற அத்தன ஜீவராசிக்கும் தண்ணீர் ரொம்பத் தேவை. நீரின்று அமையாது உலகுனு   வள்ளுவர் சொல்லிருக்காரு. மனுசனோட உடம்புல நீர்  70% இருக்கு. இயற்கை நமக்கு குடுத்த கொடைதான் இந்த நீர். ஒரு மனுசன் எவ்ளோ கோவத்துல இருந்தாலும், முகத்துல நல்லா  சள் சள்னு தண்ணிய அடிச்சா இல்ல  ஒரு சின்ன குளியல் போட்டாலோ நம்ம கவலைகளோ இல்ல, உடல் அயர்ச்சியோ இருந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும். மந்திரம் போட்டது மாரி நம்ம உடம்பு  நல்லா என்ர்ஜடிகா ஆகிரும். மனசும்  லேசாகிரும். நம்ம மனசு சுறுசுறுப்பா இருக்குறப்ப நம்மளால பெரிய பெரிய விசயங்களையெல்லாம் அசால்டா சாதிக்க முடியும். சோ  எப்பலாம் டய்ர்டா  ஃபீல் பண்றோமோ அப்பலாம்  தண்ணிக்குள்ள நம்ம முகத்தையோ இல்ல உடலையோ கொஞ்சம்  காட்டுனா  போதும். சூரியனைக் கண்ட பனித்துளி போல களைப்பு ஓடியே போயிரும்.

                        உலகமே நீராலதான் இயங்கிக்கிட்டு இருக்குன்னு சொல்லலாம். உலகத்துல இருக்குற நிலப்பரப்புல பெரும்பகுதி நீரால சூழப்பட்டு இருந்தாலும்.  மூன்றாவது உலகப்போர்னு ஒண்ணு வந்தா , அதுக்கு முக்கிய காரணியா இந்த தண்ணிதான் இருக்கும்னு ஒரு கணிப்பு இருக்கு இன்னைக்கு.

                      தாகம் தீர்க்குற இந்த நீருக்கு, உணர்வுகளை தன்னுள் எளிதில் ஈர்த்துக் கொள்ளும் தன்மை இருக்கு. எல்லா மதவழிபாடுகள்லயும்  நீருக்கு முக்கிய இடமுண்டு. இந்து சமயத்தில, கோயில்களுக்கு  சக்தியூட்ட கும்பாபிஷேகம் பண்ணுவாங்க. பன்னிரண்டு வருசத்துக்கு ஒரு தடவ  நடக்குற இந்த விழாவில, கலசங்களில் நீர் வைத்து அதுக்கு பக்கத்துல  உக்காந்த்துகிட்டு , நாப்பத்தெட்டு நாள்கள் மந்திரங்கள் ஓதுவாங்க. அந்த மந்திரங்களைச் சொல்லச் சொல்ல ஏற்படுகிற சக்தி அதிர்வுகளை இந்த நீர் , தனக்குள் ஈர்த்துக் கொள்ளும். அதுனால மந்திரங்களின் சக்தி அந்த நீருக்குள் இறங்கிரும்,  அந்தப் புனித நீரைத்  கோயிலுக்குள்ளயும்  அங்கருக்குற மக்கள் மேலயும் தெளிப்பாங்க. இப்பிடி பண்ணுறதுனால கோயிலின் சக்தி பெருகும்னு ஐதீகம்.

                பொறந்த குழந்தைகளுக்கு பேரு வைக்குறப்ப இந்தப் புனித நீர தெளிக்குற வழக்கம் இருக்கு சில மதங்கள்ல. இதுனால அந்தக் குழந்தைகள் புனிதமடைவதா ஒரு நம்பிக்கை இருக்கு நோயாளிகள்  இந்த தண்ணிர குடிச்சா எந்த வித நோய்களிலிருந்தும் விடுபடமுடியும்னு தீவிரமா நம்புறவங்களும் உண்டு இங்க.

                     வீடுகள்ல தீபாவளி,பொங்கல், நவராத்திரி போன்ற சமயத்துலய நடத்துற பூஜைகள்ல கூட நிறைந்த தம்ளரயோ இல்ல நிறைந்த ஒரு செம்பையோ வைச்சு  சாமி கும்பிடுற பழக்கம்  நிறைய குடும்பங்கள்ல இன்னும் இருக்கு.

                        அந்தக்  காலத்துல ரிஷிக்களும் முனிவர்களும் கைல வச்சிருக்குற கமண்டலத்துல  உள்ள நீரை தெளிச்சு மக்கள வாழ்த்துவாங்க.அவங்க சொன்னது சொன்ன மாரியே பலிக்கும். கமண்டலத்துல இருக்குற நீருல ரிஷியோட தவத்தின் சக்தி இறங்கிருக்கும். அதுனால ரிஷிக்களும் முனிவர்களும் சொல்லும் வாக்கு அப்பிடியே பலிச்சது. இத நம்ம புராணங்கள்ல பாத்துருப்போம்.
          
                  உணர்வுகள  உள் வாங்குற தன்மையுள்ள நீருக்கு அது நல்ல உணர்வு கெட்ட உணர்வுனு பிரிச்சு பாக்கத் தெரியாது. அதுனாலதான்  அந்தக் கால பெரியவங்க, சில இடங்கள்ல, சிலர் வீடுகள்ல தண்ணி வாங்கி குடிக்க மாட்டாங்க.  தண்ணி குடுக்குறவங்களோட மனநிலையை தண்ணீர் அப்பிடியே கிரகிச்சிக்கும். அவங்க கோவமான மனநிலைலயோ.. இல்ல எதிர்மறை சிந்தனை உடையவங்களாகவோ  இருந்தா, அந்த உணர்வுகள் இலவசமா நமக்குள்ள டவுன்லோட் ஆகிரும்னு தண்ணிய வெளில வாங்கிக் குடிக்கமாட்டாங்க.  அதே மாரி கெட்ட சூழ்நிலைகள்ளயும் தண்ணி  வாங்கி குடிக்கமாட்டாங்க. அந்த இடத்துல இருக்குற எதிர்மறை சக்தி நமக்குள்ள வந்து நம்ம எண்ண ஓட்டத்தயும் மாத்திரும்னு  குடிக்க மாட்டாங்க.

            எடுப்பார் கைபுள்ள மாரி இருக்குற இந்த  சக்தி வாய்ந்த தண்ணிய நாம எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்ளோ கெடுக்குறோம். ஜீவ நதிகள புனித நதிகளா வணங்குற பழக்கம் நம்மகிட்ட இருக்கு. அந்த நதிகள்ல   முங்கிக் குளிச்சா மக்களோட பாவங்கள்லாம்  கரைஞ்சிரும்னு தீவிர நம்பிக்கை மக்களிடையே இருக்கு. புனித நதியா நாம வணங்குற கங்கை நதிக் கரைல இருக்குற, காசில போய் ஒருத்தர் செத்தா அவரோட உடலை அப்பிடியே எரியூட்டாம நதில மிதக்க விட்டுருவாங்க சில பேரு. சில பேரு செத்தவங்களோட அஸ்தியக் கொண்டுவந்து காசில கரைப்பாங்க.. செத்துப் போன உடலு சொர்க்கத்துக்குப் போகனும்னு ,உயிரோட இருக்குற புனிதமான நதியையே சாகடிக்குற எல்லா வேலையையும் நாம செய்யுறோம்.

               நீர்நிலைகளத் தொலச்சிட்டு மழைநீர சேமிக்க முடியாம நமக்கு நாமே குழி தோண்டிக்கிட்டு இருக்கிறோம். நதிகளை கால்வாயா மாத்துன பெருமை இந்த தலைமுறைக்கு தான் கிடைச்சிருக்கு.
நீர்நிலைகளை தூர்வாருனா .. இல்ல ஆழப்படுத்துனா நம்மளோட நீர் ஆதாரங்களை நம்மளால பல மடங்கு பெருக்க முடியும்.  இதுனால விவசாயம் அதிகரிக்கும் .விலைவாசி  குறையும். இந்த வேலையை  அரசாங்கம் தான் செய்யனும்னு இல்ல. நம்ம கடமையை உணர்ந்து, அந்தந்த பகுதி மக்கள் இணைந்து செய்யலாம். இப்பிடி செஞ்சா,தண்ணீர் பற்றாக்குறை இருக்காது .வீட்டுத் தேவைகளுக்கு,விலங்குகளுக்கு, கால்நடைகளுக்கு தொழிற்சாலைகளுக்குனு எல்லாத் தேவைகளுக்கும் தண்ணீர் போதுமான அளவு கிடைக்கும். நீர் மேலாண்மையை சரிவர செஞ்சோம்னா நீர் வளத்த பெருக்க முடியும். நிலத்தடி நீரும் பெருகும்.

                 உலகத்துலயே நீர் இல்லா நகரமாக தென்னாப்பிரிக்கால இருக்குற கேப்டவுண் நகரம் இருக்குறத நாம  நினைவில்  வச்சிருக்கனும் .தமிழ்நாடுக்கு இந்த நிலை வருவதற்கு முன்னாடியே கொஞ்சம் விழிப்புண்ர்வோடு செயல்பட்டா நம்ம சந்ததி நம்மள வாழ்த்தும்.. சந்ததிகளுக்கு வெறும் சொத்து மட்டும் சேத்துவச்சா ஒரு பிரயோஜனமும் இல்ல அடுத்து வர்ற சந்ததி நல்லா வாழ்றதுக்கு ஏத்த சூழ்நிலைய தர்றோமாங்குறதுதான் முக்கியம். நல்ல வளமிக்க நாட்டை விட்டுட்டு போகணும்..அப்பத்தான் மனித சமுதாயமும் செழிக்கும்...நாடும் வளமிக்கதா மாறும்...

https://seeikara.blogspot.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.