Jump to content

முட்டை பொரிப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எத்தனை ஆயிரம் முட்டை பொரிச்சு இருப்பன்....ஆனால் இப்படி எல்லாம் மினக்கெடவில்லை. 

நான் பார்த்தவரைக்கும் ஒவ்வொரு வீட்டிலும் சில சில மாறுதல்களுடன் முட்டை பொரிப்பர். உங்கள் வீடுகளில் அல்லது நீங்கள் என்னமாதிரி முட்டை பொரிப்பீர்கள் என அறியத் தந்தால் முட்டை பொரியல் பற்றி சுவாரசியமான திரியாக அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches FotoÃhnliches Foto

 

Bildergebnis für pan  Ãhnliches Foto

Ãhnliches Foto Ãhnliches Foto

 

முட்டை   - 4
தக்காளிப் பழம்   - 1
Fetta Cheese     -  100  கிராம்.   
நான்கு மேசைக் கரண்டி பால். 
சுவைக்கு ஏற்ற உப்பு.
எண்ணை  சிறிதளவு.

உடைத்த  முட்டையை  பாத்திரத்தில்  ஊற்றி,  பால் விட்டு  நன்கு அடிக்கவும்.
சிறிதாக வெட்டிய தக்காளிப் பழத்தையும், கையால் ஓரளவு பிசைந்த,  
Fetta Cheese  ஐயும், உப்பையும்  அதற்குள் போட்டு, நன்கு கலக்கி விட்டு...
வீட்டில் உள்ள பெரிய Pan´ல் போட்டு, இரண்டு பக்கமும்  பொரித்து சாப்பிடவும்.
வாழ்க்கையில்... இந்த முட்டைப் பொரியலை.. மறக்க மாட்டீர்கள்.. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை  -----2 , பச்சைமிளகாய் ---- 1 சிறிதாக அரிந்தது , சின்ன வெங்காயம் ----2 சிறிதாக அரிந்தது , ஒரு மே .கரண்டி எண்ணை (நல்லெண்ணை நல்லது). சிறிது உப்பு, கொஞ்சம் பால்,மஞ்சள்தூள் சிறிது, மிளகுதூள் சிறிது, சீரகத்தூள் சிறிது......!

முட்டையை உடைத்து நன்றாக அடித்து பின் பாலும் சேர்த்து அடித்து வைக்கவும்.

தாச்சியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் மஞ்சள் தூள் சீரகத்தூள் உப்பும்  சேர்த்து வதக்கி பின் முட்டை  கலவையை கொட்டி கிளறவும் ஒரு பதம் வரும்போது மிளகு தூளையும்  தூவி கிளறி இறக்கவும்.......!

இதை சாப்பிட்டபின் மேலுள்ள பொரியல்களை நினைக்க மாட்டீர்கள். காரணம் அவை இரண்டும் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கானது......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

முட்டை  -----2 , பச்சைமிளகாய் ---- 1 சிறிதாக அரிந்தது , சின்ன வெங்காயம் ----2 சிறிதாக அரிந்தது , ஒரு மே .கரண்டி எண்ணை (நல்லெண்ணை நல்லது). சிறிது உப்பு, கொஞ்சம் பால்,மஞ்சள்தூள் சிறிது, மிளகுதூள் சிறிது, சீரகத்தூள் சிறிது......!

முட்டையை உடைத்து நன்றாக அடித்து பின் பாலும் சேர்த்து அடித்து வைக்கவும்.

தாச்சியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் மஞ்சள் தூள் சீரகத்தூள் உப்பும்  சேர்த்து வதக்கி பின் முட்டை  கலவையை கொட்டி கிளறவும் ஒரு பதம் வரும்போது மிளகு தூளையும்  தூவி கிளறி இறக்கவும்.......!

இதை சாப்பிட்டபின் மேலுள்ள பொரியல்களை நினைக்க மாட்டீர்கள். காரணம் அவை இரண்டும் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கானது......!   😁

சுவி...  உங்கடை முட்டைப் பொரியலில்....  மஞ்சள் தூள், சீரகத்தூள்  சேர்ப்பதை பார்க்க....
பத்திய சாப்பாடு... சாப்பிடுவர்களுக்கான பொரியல் போலுள்ளது. 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதைப் பார்த்தால்  முட்டை  சாப்பிடாதவர்களும் சாப்பிடுவார்கள்.....நானே சந்தோஷமாய் சாப்பிடுவன் போல கிடக்கு ஆனால் இன்டைக்கு சனி பிரதோஷம். அதனால் ரிஜக்ட் ....!

On 1/30/2019 at 7:14 PM, தமிழ் சிறி said:

சுவி...  உங்கடை முட்டைப் பொரியலில்....  மஞ்சள் தூள், சீரகத்தூள்  சேர்ப்பதை பார்க்க....
பத்திய சாப்பாடு... சாப்பிடுவர்களுக்கான பொரியல் போலுள்ளது. 😝

பத்திய சாப்பாட்டில் சீரகத்தூள் சேர்ந்து இருக்கும், ஆனால் சீரகம் சேர்ந்ததெல்லாம் பத்தியமல்ல. ரெம்ப எளிமையான முட்டை  பொரியல். செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லவும். எல்லோருமே  செய்யலாம்.......!  😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

 

இதைப் பார்த்தால்  முட்டை  சாப்பிடாதவர்களும் சாப்பிடுவார்கள்.....நானே சந்தோஷமாய் சாப்பிடுவன் போல கிடக்கு ஆனால் இன்டைக்கு சனி பிரதோஷம். அதனால் ரிஜக்ட் ....!

 

சார் சனி பிரதோஷம் நாள் அதுவுமாய் முட்டைப்பொரியல் பக்கம் ஏன் போனாரு? wave goodbye goodbye GIFs GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சார் சனி பிரதோஷம் நாள் அதுவுமாய் முட்டைப்பொரியல் பக்கம் ஏன் போனாரு? wave goodbye goodbye GIFs GIF

சும்மா எட்டிப்பார்த்திருப்பாரு  அடுப்படி மூலயை கருகிற வாசனை அடித்திருக்கலாம்

Link to comment
Share on other sites

Omega-3 முட்டைப் பொரியல்

- - - - - 

சிறுவயதில் சனி ஞாயிறு நாட்களில் வீட்டு வளவில் காவிளாய்ச் செடிகளுக்குக் கீழ் சருகுகளிலும் மரங்களின்கீழ் நிழலான ஒதுக்குப் புறங்களிலும் எமது கோழிகள் இட்ட முட்டைகளைத் தேடி ரோந்து போவது வழக்கம்.  ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகள் சிக்கினால் மட்டுமே வீட்டாருக்குப் போய்ச் சேரும். எப்படியும் ஒரு முட்டையாவது சிக்கும். அதனை ஊசி ஒன்றினால் ஓட்டை போட்டு அப்படியே பச்சையாக உறிஞ்சிக் குடித்த சுவை இன்னும் மறக்கவில்லை. முட்டை எந்த வடிவில் தயார் செய்தாலும் அதன் இயற்கையான சுவை மாறாமல் இருக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

IMG_0889.jpg
3 நாட்டுக்கோழி முட்டை (Bio - organic முட்டையாக இருந்தால் நல்லது )
1 காளான்
1 வெங்காயம்
உப்பு
மிளகுதூள்
மஞ்சள்
rapeseed oil - organic (colza) - இல்லாதவர்கள் ஒவிவ் எண்ணையைப் பாவிக்கலாம்

செய்முறை
வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
காளானின் தோலை உரித்து மெல்லியதாகக் குறுக்காக வெட்டிக் கொள்ளுங்கள்.

IMG_0890.jpg
உணவு ஒட்டாத தாய்ச்சியில் அல்லது மண் சட்டியில் எண்ணை விடாமல் காளான் துண்டுகளை மெல்லிய நெருப்பில் வேக விடுங்கள். வேக ஆரம்பித்ததும் அதிலிருந்து நீர் வெளியேறும். அந்த நீரிலேயே காளான் அவியும். விரும்பினால் சிறிதளவு உப்புத் தூவிக் கொள்ளலாம். 

IMG_0892.jpg
வெங்காயத் துண்டுகளைக் காளானுடன் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வேக விட்டு இறக்கித் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வாசத்துக்கு சீரகம் அல்லது ஏதாவது தூவிக் கொள்ளலாம். :rolleyes:

IMG_0893.jpg
தாச்சியில் 3 முட்டைகளையும் உடைத்து மஞ்சள்கரு உடையாமல் மெதுவாக ஊற்றுங்கள். 

IMG_0894.jpg
மெல்லிய நெருப்பில் 1 நிமிடம் வேகியதும் மஞ்சள் கருவை மெதுவாக உடைத்துவிட்டு காளைனையும் வெங்காயத்தையும் அதன்மேல் போட்டு தேவையான அளவு உப்பைத் தூவிக் கொள்ளுங்கள்.

IMG_0896.jpg
அதிகம் வேக விடாமல் அரை அவியல் பதமாக ஒரு கோப்பையில் இறக்கி சில வினாடிகள் ஆற விடுங்கள்.

IMG_0897.jpg
இப்போது மிளகு தூளையும் மஞ்சளையும் தூவி, 1 அல்லது 2 மேசைக் கரண்டி rapeseed எண்ணையை அதன்மேல் தெளித்து உண்ணவும்.

IMG_0898.jpg

ஒன்றுவிட்டு ஒரு நாளைக்கு எனக்குக் காலை உணவு இதுதான். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஒன்றுவிட்டு ஒரு நாளைக்கு எனக்குக் காலை உணவு இதுதான். :grin:

டக்குத்தர்மார் முட்டை கனக்க சாப்பிடக்கூடாது எண்டு சொல்லீனம்......நீங்கள் என்னடாவெண்டால் ஒன்றுவிட்ட ஒரு நாளைக்கு முட்டைதான் காலைச்சாப்பாடு எண்டு சொல்லுறியள்.......பிரச்சனை இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

Omega-3 முட்டைப் பொரியல்

- - - - - 

சிறுவயதில் சனி ஞாயிறு நாட்களில் வீட்டு வளவில் காவிளாய்ச் செடிகளுக்குக் கீழ் சருகுகளிலும் மரங்களின்கீழ் நிழலான ஒதுக்குப் புறங்களிலும் எமது கோழிகள் இட்ட முட்டைகளைத் தேடி ரோந்து போவது வழக்கம்.  ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகள் சிக்கினால் மட்டுமே வீட்டாருக்குப் போய்ச் சேரும். எப்படியும் ஒரு முட்டையாவது சிக்கும். அதனை ஊசி ஒன்றினால் ஓட்டை போட்டு அப்படியே பச்சையாக உறிஞ்சிக் குடித்த சுவை இன்னும் மறக்கவில்லை. முட்டை எந்த வடிவில் தயார் செய்தாலும் அதன் இயற்கையான சுவை மாறாமல் இருக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

IMG_0889.jpg
3 நாட்டுக்கோழி முட்டை (Bio - organic முட்டையாக இருந்தால் நல்லது )
1 காளான்
1 வெங்காயம்
உப்பு
மிளகுதூள்
மஞ்சள்
rapeseed oil - organic (colza) - இல்லாதவர்கள் ஒவிவ் எண்ணையைப் பாவிக்கலாம்

செய்முறை
வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
காளானின் தோலை உரித்து மெல்லியதாகக் குறுக்காக வெட்டிக் கொள்ளுங்கள்.

IMG_0890.jpg
உணவு ஒட்டாத தாய்ச்சியில் அல்லது மண் சட்டியில் எண்ணை விடாமல் காளான் துண்டுகளை மெல்லிய நெருப்பில் வேக விடுங்கள். வேக ஆரம்பித்ததும் அதிலிருந்து நீர் வெளியேறும். அந்த நீரிலேயே காளான் அவியும். விரும்பினால் சிறிதளவு உப்புத் தூவிக் கொள்ளலாம். 

IMG_0892.jpg
வெங்காயத் துண்டுகளைக் காளானுடன் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வேக விட்டு இறக்கித் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வாசத்துக்கு சீரகம் அல்லது ஏதாவது தூவிக் கொள்ளலாம். :rolleyes:

IMG_0893.jpg
தாச்சியில் 3 முட்டைகளையும் உடைத்து மஞ்சள்கரு உடையாமல் மெதுவாக ஊற்றுங்கள். 

IMG_0894.jpg
மெல்லிய நெருப்பில் 1 நிமிடம் வேகியதும் மஞ்சள் கருவை மெதுவாக உடைத்துவிட்டு காளைனையும் வெங்காயத்தையும் அதன்மேல் போட்டு தேவையான அளவு உப்பைத் தூவிக் கொள்ளுங்கள்.

IMG_0896.jpg
அதிகம் வேக விடாமல் அரை அவியல் பதமாக ஒரு கோப்பையில் இறக்கி சில வினாடிகள் ஆற விடுங்கள்.

IMG_0897.jpg
இப்போது மிளகு தூளையும் மஞ்சளையும் தூவி, 1 அல்லது 2 மேசைக் கரண்டி rapeseed எண்ணையை அதன்மேல் தெளித்து உண்ணவும்.

IMG_0898.jpg

ஒன்றுவிட்டு ஒரு நாளைக்கு எனக்குக் காலை உணவு இதுதான். :grin:

ஒலிவ் எண்ணெயில் பொரித்தால் உடம்பு வைக்காதோ ?
 

ஒன்ட விட்ட ஒரு நாளைக்கு 3 முட்டை சாப்பிடுற நீங்களோ😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்காளி ஒம்லேட் .. 😋

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.