Jump to content

கஞ்சாக் கடத்தலும் வடக்கின் மனநிலையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாக் கடத்தலும் வடக்கின் மனநிலையும்

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, மு.ப. 01:43 Comments - 0

image_0e94ee7bf3.jpg

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம்- கொழும்புக்கிடையில் அடிக்கடி பயணப்படும் நண்பரோடு, பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் போது, பேசிக் கொண்டிருந்தேன்.   

அவரின் பயணப்பை முழுக்க, சிறிய பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது. பயணப்பையில் சில ஆடைகளைத் தவிர பெறுமதியான பொருட்கள் எதுவும் இருப்பது மாதிரித் தெரியவில்லை. அவ்வாறு இருக்க, இத்தனை பூட்டுகள் இந்த பயணப்பைக்கு ஏன் போட்டிருக்கிறார் என்று சந்தேகம்? அவரிடமே கேட்டேன்.  

“...பாக்குக்குள் பெரிசாக ஒன்றும் இல்லை. சில உடுப்புகள்தான் இருக்கு. ஆனால், இப்ப வாகனங்களில் கஞ்சா கடத்திறாங்கள். அடிக்கடி பொலிஸ் மறிச்சு, செக் பண்ணுது. இவங்கள், கடத்திற கஞ்சாவை, சனத்தின்ர லக்கேஜூக்குள்ள போட்டு, சிக்கலுக்குள்ள தள்ளினாலும் தள்ளிடுவாங்கள். அதுதான், பாக்கில் இத்தனை பூட்டு...” என்றார்.  

விமானப் பயணங்களில், இவ்வாறான அச்சுறுத்தல்கள் எழுவது இயல்பு. இலகுவாகத் திறக்கக்கூடிய பயணப்பொதிகளை கடத்தல்காரர்கள், கையாள்வதும், அதனால் பயணிகள் சிக்கலுக்குள் மாட்டுவதும் உண்டு. அப்படி, சிறைகளில் நாள்களைக் கழித்தவர்கள் பலர். 

அவ்வாறான பயத்தை யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான பஸ் பயணம் ஏற்படுத்தி இருக்கின்றது என்றால், அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.  

வடக்குக் கடற்கரையோரங்கள் பூராகவும் இலங்கைக் கடற்படையின் பெரும் கண்காணிப்பின் கீழ் இருக்கின்றது. அப்படியான கட்டத்திலும், நாளாந்தம் பெருமளவான கஞ்சா போதைப்பொருள், வடக்கு கடற்பரப்பில் வைத்துக் கைமாறி, நாட்டுக்குள் வருகின்றது.   

கிட்டத்தட்ட, வடக்கை கஞ்சாக் கடத்தலின் மத்திய நிலையமாக மாற்றுவதற்கான கட்டங்கள் பெரும் திட்டமிடலோடு மேற்கொள்ளப்படுகின்றன. போதைப்பொருள் கடத்தல் ‘மாபியா’க் குழுக்களின் அதிகார மய்யம் கொழும்பில் இருந்தாலும், இடைத்தரகர்களைக் கொண்டு, கடத்தல்காரர்களுக்கான கையாட்களைத் தயார்ப்படுத்தும் வேலைகள், வடக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.  

போர்ச் சிதைவுகளை முழுமையாகத் தாங்கி நிற்கின்ற தமிழ் மக்களை, ஊழலும் மோசடியும் அற்ற அர்ப்பணிப்பான தூரநோக்குள்ள வேலைத்திட்டங்களோடு முன்னோக்கிக் கொண்டுவர வேண்டும். போருக்குப் பிறகான கடந்த பத்து ஆண்டுகளில், அதற்கான முனைப்புகளை அரச தரப்போ, தமிழ்ச் சூழலோ பெரியளவில் முன்னெடுத்திருக்கவில்லை. ஒப்புக்காகச் சில வேலைத்திட்டங்களில் நின்று, படம் காட்டும் கட்டங்கள் மாத்திரமே நிகழ்ந்திருக்கின்றன.   

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது, என்றைக்கும் இல்லாத அளவிலானது. சமூக ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடிய காலத்துக்கு ஒப்பான ஒரு நிலையொன்று, தற்போது ஏற்பட்டிருக்கின்றது.   

பொருளாதார வசதி உள்ளவர்கள் இன்னும் இன்னும் அதனை அதிகரித்துக் கொண்டிருப்பதும், வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ளவர்களின் நிலை நாளாந்தம் படுமோசமாக மாறுவதும் கடந்த பத்து ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. இது, சமூக முரண்பாடுகளை அதிகரித்துள்ளதோடு, சமூக ஒழுக்கத்தையும் சிதைத்துவிட்டிருக்கின்றது.  

குறிப்பாக, போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களையும் போராடியவர்களையும் போருக்குப் பின்னராக காலம் புறக்கணித்து விட்டிருக்கின்றது. அவர்கள் குறித்து, தமிழ்ச் சூழலின் அதிகாரவர்க்கமோ, யாழ்ப்பாண மய்யவாத அரசியல் அரங்கோ, அக்கறையைப் பெரியளவில் வெளிப்படுத்தவில்லை. அவர்களோடு ஒத்தோடும், புலம்பெயர் தரப்புகளும் கவனத்தில் கொள்ளவில்லை.   

ஆட்கள் இல்லாத ஊர்களில் எல்லாம், கோவில்களைப் பெருப்பித்துக் கட்டுவதிலேயே புலம்பெயர் தேசத்தின் பெருமளவு நிதி, தற்போது செலவாகிக் கொண்டிருக்கின்றது. அதன், ஒருபகுதியைப் பொருளாதார நெருக்கடியோடு அல்லாடும் மக்களை நோக்கித் திருப்பி விட்டிருந்தாலே, பல குடும்பங்கள் வாழ்ந்திருக்கும். இதுவோர் உதாரணம்தான்.  

அப்படியான நிலையில், பொருளாதார ஏற்றத்தாழ்வும் சமூக முரண்பாடுகளும் அதிகரிக்கும் சமூகமான்றை, எதிர்த்தரப்புகளால் இலகுவாகக் கையாள முடியும். அதன் ஒருகட்டமே, கஞ்சா கடத்தலின் வழியில், வடக்குக் கரையோரங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன.   

கஞ்சா கடத்தலின் இடைத்தரகர்களாக இருப்பவர்களை, மக்களால் இலகுவாக அடையாளம் காண முடிகின்றது. அவர்களின் ஆசை வார்த்தைகளுக்குப் பிடிகொடுக்காமல் ஓடிக்கொண்டிருந்தாலும், வறுமை, ஒதுக்கப்பட்ட மனநிலையின் விளிப்பில், இடைத்தரகர்களின் கை ஓங்கிவிடுகின்றது. பலரும் கடத்தல் கூலிகளாக மாற்றிவிடுகின்றார்கள். அப்படி மாறிவிட்ட பலரும் வடக்கில் நாளாந்தம் பொலிஸாரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். சிறைகளில் மாதக் கணக்கில் அடைக்கப்படுகிறார்கள்.  

வடக்கின் ஏதோவொரு கரையோரத்தில், இத்தனை கிலோ கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது என்ற செய்தி ஊடகங்களில் நாளாந்தம் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அந்தச் செய்தியை, செய்தியாகவே கடக்கும் சூழலுக்கு, மக்களும் தயாராகிவிட்டார்கள்.   

இவ்வாறான அசட்டை நிலை, எங்கிருந்து தோற்றம் பெறுகின்றது? சீரிய கட்டுப்பாடும் சமூக ஒழுக்கமும் போதிக்கப்பட்டு, பேணப்பட்ட போராட்ட வடிவத்தின்பால் நின்ற சமூகமொன்று, அதிலிருந்து பிறழ்ந்திருக்கின்ற நிலையில், அதைச் சரியாக்க வேண்டிய பொறுப்பு, அனைவருக்குமாக மாறுகின்றது.  

 ஆனால், அதற்கான ஏற்பாடுகளைச் சார்ந்து, யாரும் சிந்திப்பதாக இல்லை. தேர்தல் அரசியல் நிகழ்ச்சி நிரலின் போக்கில், சமூகமொன்று தன்னுடைய அரசியலையும் அடையாளத்தையும் தொலைக்கும் கட்டத்துக்கு வந்திருக்கின்றது.  

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வடக்கில் சில இளைஞர்கள், கஞ்சாக் கடத்தல் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தத்தால், அந்த இளைஞர்களைப் பொலிஸார் விடுவித்ததாகவும் தென்இலங்கை ஊடகமொன்று இனவாத வதந்தி பரப்பியது.   

அந்த வதந்தியை எடுத்துக் கொண்டு, யாழ்ப்பாணத்து மய்யவாத அரசியல் அரங்கு, எந்தவித பொறுப்புணர்வும் இன்றி, எவ்வாறு செயற்பட்டது என்பதைக் கண்டோம். தேர்தல் அரசியலில் எதிரிகள் என்று கருதும் நபர்களை இழிவுபடுத்துவதற்காக, யாரை வேண்டுமானாலும், பலிகொடுப்பதற்குத் தமிழ் சமூகம் தயாராகிவிட்டதா என்கிற சந்தேகம் அப்போது ஏற்பட்டது.   

ஏனெனில், தென்இலங்கை ஊடகத்தின் இனவாத அடிப்படையிலான அந்த வதந்தியை, உண்மையாகத் தமிழ் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர்களில், தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் முக்கியமானவர்கள். அவர்களிடம் சமூகப் பொறுப்பு என்பது சிறிதளவேனும் இருந்திருந்தாலே, அந்தச் செய்திக்குப் பின்னால் இருக்கின்ற உண்மை நிலையை, கொஞ்சமாகவேனும் ஆராய்ந்து அறிய முற்பட்டிருப்பார்கள்.   

ஆனால், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் அரசியல் புள்ளியில் நின்று யோசித்துச் செயற்பட்டார்கள்; சிவில் உடையில் ஆயுதங்களோடு உலாவியவர்களை கேள்விக்குள்ளாக்கிய ‘அப்பாவி இளைஞர்கள்’ மீது, கஞ்சாக் கடத்தல்காரர்கள் எனும் போர்வையை, தென்இலங்கையோடு சேர்ந்து போர்த்தினார்கள்; எதிரிகளின் திட்டமிடலுக்குப் பலியானார்கள்.  

இன்னொரு பக்கம், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வடக்குக் கடற்பரப்பும், குறிப்பிட்டளவான இளைஞர்களும் போதைப்பொருள் கடத்தல் ‘மாபியா’க்களின் கூலிகளாக, வடக்கில் மாறிவிட்டார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான், ஆகவேண்டும்.   

ஆனால், அந்த நிலையை ஒரு சமூகமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டும். பொலிஸாருக்கோ, அவர்களைக் கட்டுப்படுத்தும் தலைமைக்கோ, அதாவது தென்இலங்கைக்கோ கஞ்சாக் கடத்தலை வடக்கிலிருந்து ஒழிக்கவேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதை எதிர்கொள்வதற்கும் சமூகத்தின் மீதான பிறழ்வுகளைச் சரிசெய்வதற்குமான பொறுப்பு தமிழ்ச் சூழலுக்கு நிச்சயமாக உண்டு.  

பாரதூரமான விடயங்களையெல்லாம் செய்திகளாக மட்டும் எடுத்துக்கொண்டு கடக்கும் கட்டத்துக்கு தமிழ் மக்கள் தயாராகிவிட்டார்களா என்கிற கேள்வி பல காலமாகவே உண்டு. அதைச் சமூகப்பொறுப்பற்ற தன்மையை ஊக்குவிக்கும் தரப்புகள், மகிழ்வோடு செய்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.   

அவ்வாறான நிலையில், பாரிய குற்றச் செயல்களை நோக்கி மக்கள் திரும்புவதை இலகுவான ஒன்றாக, வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொள்ளும் மனநிலை வீச்சம் பெறுகின்றது. அவ்வாறான நிலையொன்று, கஞ்சாக் கட்டத்தல் கூலிகளாக மாறிவிட்டவர்களிடமும் அவர்களைச் சார்ந்தோரிடமும் ஏற்பட்டிருக்கின்றதோ என்கிற அச்சம் எழுகின்றது.   

சமூக ஒழுக்கத்துக்கு அப்பாலான ஒரு விடயத்தை அதாவது, குற்றமொன்றைச் செய்வதால் சமூகத்தால் பாரியளவில் ஒதுக்கப்படும் சூழல் ஏற்படுகின்றது என்கிற பயம், மக்களை நேர்வழிப்படுத்துவதற்கு உதவும். ஆனால், ஏற்கெனவே, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, கைவிடப்பட்டவர்களுக்கு அவ்வாறான பயமொன்று ஏற்படுமா என்கிற கேள்வியும் உண்டு. அவ்வாறான கட்டத்தில்தான், தமிழ்ச் சமூகம் தன்னுடைய பொறுப்பைக் கடைப்பிடிக்கும் கடப்பாட்டை, வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது.   

குறிப்பிட்டளவானர்களைக் குற்றங்களை நோக்கித் தள்ளியமைக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், கஞ்சாக் கடத்தல்கள் போன்ற குற்றச்செயல்களுக்குக் கூலிகளாக மாறிவிட்டவர்களையும் கஞ்சாப் போதைக்குள் தத்தளிக்கும் இளம் தலைமுறையையும் சரியான வழிகளைக் கையாண்டு, காப்பாற்றிக் கரை சேர்க்க முடியும்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கஞ்சாக்-கடத்தலும்-வடக்கின்-மனநிலையும்/91-228739

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.