Jump to content

விதியை மதியால் வெல்லலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப் பேர் சொல்லினம் விதியை மதியால் வெல்லலாம் என்று இதை நம்புகிறீர்களா?...நான் சொல்றன் முடியாது என்று இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

அது,அது நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும்...அழுது,புலம்பி கடவுளை வேண்டினால் பாவ,புண்ணியத்தை கொஞ்சம் கூட்டி குறைக்கலாம் ...சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருத்தல் என்பதும்,இல்லாமல் தவிர்த்தல் என்பதும் விதியின் விளையாட்டு அல்லவா!

நான் கடுமையான நோயின் பிடியில் இருந்து போராடி தப்பித்து விட்டேன் என்பார்கள்...தப்பித்து வரணும் என்பது தான் விதியாக இருந்தால்? ... காதலித்து திருமணம் செய்து நன்றாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தாங்கள் எந்த வித  சாதகமும் பார்க்காமல் திருமணம் செய்தோம்.நன்றாய்த் தானே இருக்கிறோம் என்பார்கள் ..அப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பது சித்தமாக இருந்தால் மாத்த முடியுமா?

எதோ எழுத வேண்டும் என்று தோன்றிச்சு...எழுதியிடடன்🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதியை வெல்லக்கூடிய ஆயுதம் இருக்கு இணையத்தில் சுட்டது 

 

51c48fde-cb77-4b54-8983-b77d80d1577f.png

3305d246-e6fc-4cac-b56e-2cbb8dd42280.png

http://rightmantra.com/?p=20085

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா🤣 சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட கதை ...முனிவர் என்ன கடவுளா? அவருக்கு எப்படித் தெரியும் முதலாவது மன்னன் தான் போரில் ஜெயிப்பான் என்று?...ஒன்று இவர் போலி முனிவராய் இருக்க வேண்டும் அல்லது ஆனைக்கும் அடி சறுக்கி இருக்க வேண்டும்....இரண்டாவது மன்னன் ஜெயிக்க வேண்டும் என்பதே விதி.

இணைப்பிற்கு நன்றி பெருமாள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதியை மதியால் வெல்லலாம் ஆனால் அதுவே மீண்டும் விதியாகி விடும்......! கண்ணதாசன் சொல்லியது......!  😒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஹாஹா🤣 சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட கதை ...முனிவர் என்ன கடவுளா? அவருக்கு எப்படித் தெரியும் முதலாவது மன்னன் தான் போரில் ஜெயிப்பான் என்று?...ஒன்று இவர் போலி முனிவராய் இருக்க வேண்டும் அல்லது ஆனைக்கும் அடி சறுக்கி இருக்க வேண்டும்....இரண்டாவது மன்னன் ஜெயிக்க வேண்டும் என்பதே விதி.

இணைப்பிற்கு நன்றி பெருமாள்  

இதில் முனிவர் மாற்றி சொல்லி இருந்தாலும் இரண்டாவது மன்னனே வெல்வான் ஏனெனில் தன்னம்பிக்கை மிக்கவர்களை விதி ஒன்றும் செய்வது கிடையாது மாறாக அங்கு விதி ஏமாற்றத்துடன் வலுவிழந்து போகும் .

Link to comment
Share on other sites

விதியை கண்டிப்பாக மதியால் வெல்லலாம். ஆனால் மதி என்பது ஒரு சில மனிதர்களின் மதியால் மட்டுமல்ல. மக்களின்,  இனக் குழுமத்தின், சமூகத்தின், குடும்பத்தின் ஒட்டுமொத்த மனிதர்களால் அல்லது பெரும்பான்மை மனிதர்களால் சரியாக மதியை பயன்படுத்தப்படும் போது விதியை இலகுவாக வெல்லலாம்.

கட்டுக்கோப்பும், ஒற்றுமையும், சாதி பேத வேறுபாடுகளை மீறி இனமானம் கொண்ட இனம் வெல்லுது. இதில் எதுவும் இல்லாத இனம் தோற்குது.

உண்மையில் விதி என்றே ஒன்றும் இல்லை.

வீதியில் சிவனே என்று சரியாக போன ஒரு விரிவுரையாளரை வாகனம் மோதி கொல்லுது என்றால் அது விதி அல்ல. அந்த ஊரில், நாட்டில் இருக்கும் மக்கள் வீதி ஒழுங்கை சரியாக மதிக்காமையால் நிகழும் ஒன்று. இப்படி சட்டங்களை மதிக்காத எம் நாடுகளுடன் ஒப்பிடும் போது ஏனைய படித்த, சட்டங்களை ஓரளவுக்கேனும் மதிக்கும் நாடுகளில் விபத்தில் ஆட்கள் சாவது குறைவாக இருப்பது ஏன்? விபத்து என்றாலே எங்கோ ஒருவரின் தவறால் இன்னொருவருக்கு ஏற்படுவது தானே?

வண்ணாத்திப் பூச்சி தியறி (butterfly theory) தான் இங்கு. எங்கோ ஒரு சிறு துணிக்கையில் நிகழும் அசைவு,சலனம், அல்லது சலனமின்மை மெதுவாக பரவி பரவி பூமியில் எங்கோ இருக்கும் இன்னொன்றை பாதிக்கின்றது. எங்கோ ஒரு நாட்டில் போன கப்பல் விபத்துக்குள்ளாகி அதன் உடைவுகள் உலகின் எங்கோ ஒரு தீவில் கரை ஒருங்கும் போது அந்த தீவிற்கு உடைவுகளில் பயணித்த சிறு எறும்பு கூட்டம் தரையிறங்கி அவ் தீவில் இலட்சக்கணக்கான வருடம் வாழும் நண்டுகளுக்கு ஆபத்தாக அமைகின்றது. உடைவுகளின் பயணத்தை தீர்மானித்தது காற்று வீசும் திசையும், புவியமைப்பும். இதில் விதி என்பது என்ன?

நாம் வெற்றியடையும் போது. எல்லாம் விதி என்று சொல்வதில்லை. தோல்வியும் இழப்பும் நிகழும் போது மட்டுமே விதியை கூப்பிடுகின்றோம்.

விதி என்பது தோற்றவர்கள் தம் தோல்விக்கான நியாயமான காரணங்களை தம்மில் தேடாமல் சோம்பேறித் தனமாக 'எல்லாம் விதி' என்று புலம்ப சொல்லும் ஒரு தப்பித்தல் காரணம் என்று தான் நான் நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

On 2/1/2019 at 2:41 AM, நிழலி said:

விதி என்பது தோற்றவர்கள் தம் தோல்விக்கான நியாயமான காரணங்களை தம்மில் தேடாமல் சோம்பேறித் தனமாக 'எல்லாம் விதி' என்று புலம்ப சொல்லும் ஒரு தப்பித்தல் காரணம் என்று தான் நான் நம்புகின்றேன்.

விதி என்ற வார்ததைக்கு இதைவிட சிறந்த வரைவிலக்கணம் இருக்க முடியாது. ஒரு வாகன விபத்தில் ஒருவர் தப்பினால் தெய்வாதீனமாக உயிர் தப்பினார் என்று கூறுபவர்கள் அதே விபத்தில் இறந்தவரை தெய்வம்  கொன்றுவிட்டது  கூறாமல் அவன் விதி முடிந்தது என்று மூடத்தனமாக சப்பைக்கட்டு கட்டுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎1‎/‎2019 at 1:41 AM, நிழலி said:

விதியை கண்டிப்பாக மதியால் வெல்லலாம். ஆனால் மதி என்பது ஒரு சில மனிதர்களின் மதியால் மட்டுமல்ல. மக்களின்,  இனக் குழுமத்தின், சமூகத்தின், குடும்பத்தின் ஒட்டுமொத்த மனிதர்களால் அல்லது பெரும்பான்மை மனிதர்களால் சரியாக மதியை பயன்படுத்தப்படும் போது விதியை இலகுவாக வெல்லலாம்.

கட்டுக்கோப்பும், ஒற்றுமையும், சாதி பேத வேறுபாடுகளை மீறி இனமானம் கொண்ட இனம் வெல்லுது. இதில் எதுவும் இல்லாத இனம் தோற்குது.

உண்மையில் விதி என்றே ஒன்றும் இல்லை.

வீதியில் சிவனே என்று சரியாக போன ஒரு விரிவுரையாளரை வாகனம் மோதி கொல்லுது என்றால் அது விதி அல்ல. அந்த ஊரில், நாட்டில் இருக்கும் மக்கள் வீதி ஒழுங்கை சரியாக மதிக்காமையால் நிகழும் ஒன்று. இப்படி சட்டங்களை மதிக்காத எம் நாடுகளுடன் ஒப்பிடும் போது ஏனைய படித்த, சட்டங்களை ஓரளவுக்கேனும் மதிக்கும் நாடுகளில் விபத்தில் ஆட்கள் சாவது குறைவாக இருப்பது ஏன்? விபத்து என்றாலே எங்கோ ஒருவரின் தவறால் இன்னொருவருக்கு ஏற்படுவது தானே?

வண்ணாத்திப் பூச்சி தியறி (butterfly theory) தான் இங்கு. எங்கோ ஒரு சிறு துணிக்கையில் நிகழும் அசைவு,சலனம், அல்லது சலனமின்மை மெதுவாக பரவி பரவி பூமியில் எங்கோ இருக்கும் இன்னொன்றை பாதிக்கின்றது. எங்கோ ஒரு நாட்டில் போன கப்பல் விபத்துக்குள்ளாகி அதன் உடைவுகள் உலகின் எங்கோ ஒரு தீவில் கரை ஒருங்கும் போது அந்த தீவிற்கு உடைவுகளில் பயணித்த சிறு எறும்பு கூட்டம் தரையிறங்கி அவ் தீவில் இலட்சக்கணக்கான வருடம் வாழும் நண்டுகளுக்கு ஆபத்தாக அமைகின்றது. உடைவுகளின் பயணத்தை தீர்மானித்தது காற்று வீசும் திசையும், புவியமைப்பும். இதில் விதி என்பது என்ன?

நாம் வெற்றியடையும் போது. எல்லாம் விதி என்று சொல்வதில்லை. தோல்வியும் இழப்பும் நிகழும் போது மட்டுமே விதியை கூப்பிடுகின்றோம்.

விதி என்பது தோற்றவர்கள் தம் தோல்விக்கான நியாயமான காரணங்களை தம்மில் தேடாமல் சோம்பேறித் தனமாக 'எல்லாம் விதி' என்று புலம்ப சொல்லும் ஒரு தப்பித்தல் காரணம் என்று தான் நான் நம்புகின்றேன்.

வணக்கம் நிழலி, உங்கள் கருத்திற்கே வாறன் அந்த சாரதி போக்குவரத்து விதியை மீறினார்...இதை போல முன்பும் அவர் செய்திருக்கலாம் அல்லது தெரிந்தோ/தெரியாமலோ அது தான் முதல் தடவையாக இருந்திருக்கலாம்...அந்த சாரதி பிழை விட்டார் தான்...ஆனால் அந்த அப்பாவி விரிவுரையாளர் செய்த பிழை என்ன?...அவர் ஒரு நிமிடம் அல்லது ஒரு செக்கன் முந்தி அல்லது பிந்தி அந்த இடத்திற்கு வந்திருந்தால் அவர் தப்பி இருப்பாரா இல்லையா?....சரியாய் அந்த நிமிடம் அந்த இடத்திற்கு அவரைக் கொண்டு வந்தது எது?...அது தான் விதி....இலங்கையில் போக்குவரத்து சட்டங்களை மதிக்காததால் தான் விபத்துக்கள் அதிகம் என்றும்[உண்மை தான் ] சட்டங்களை மதிக்கும் மேல் நாட்டில் விபத்துக்கள் குறைவு என்றும் எழுதியுள்ளீர்கள்...உங்கள் மன சாட் சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இருக்கும் நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை விபத்துக்கள் நடக்கின்றது என்று தெரியுமா?

விதியை,மதியால் வெல்லலாம் என்று நம் முன்னோர்கள் சொல்லக் காரணம் எது தெரியுமா? அப்படி சொல்லி இருக்கா விட்டால் சாதாரணமாய்  நடக்கக் கூடிய எல்லா விசயத்தையும் மக்கள் விதி மேல் போட்டுட்டு சோம்பேறியாய் இருந்து விடுவார்கள் என்பதற்காகத் தான் சொல்லப் பட்டது...என்ட கண் முன்னே நான் எத்தனையோ பேரைப் பார்க்கிறேன்...கடுமையாய் உழைப்பவர்கள் இன்னும் கடுமையாய் உழைத்துக் கொண்டு தான் இருக்கினம்..உழைத்து ,உழைத்து மாடாய் தோய்ந்து போய் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இறந்தவர்களும்  இருக்கிறார்கள் ...அதே நேரத்தில் பெனிபிட் எடுத்துக் கொண்டு உழைப்பவர்களை விட சந்தோசமாய் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.குருட்டு அதிஸ்ட்டத்தில் பணக்காரராய் வந்தவர்களும் இருக்கிறார்கள்...இதைத் தான் ஒவ்வொருவருடைய தலையெழுத்து,விதி என்கிறோம் 

டிரம்பைத் தெரிந்தவர்கள் நினைத்திருப்பார்களா அவர் அமெரிக்க ஜனாதிபதியாய் ஒரு நாளைக்கு வருவார் என்று  ... எங்கள் மக்களை விடுங்கள் ஒற்றுமை இல்லாத கூட்டம்.சாதி,மதம் என்று ஆதி படத் தான் சரி...ஆனால் பிரபாகரனும்,புலிகளும் கடுமையாய் உழைத்தார்களே? ...இன்னாரால் தான் தமிழ் ஈழம் கிடைக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதி...அதற்காக எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும்.இனி மேல் கிடைக்காது என்று போட்டு பேசாமல் இருந்தால் ஒன்றும் கிடைக்காது..அது தான் விதிக்கும்,மதிக்கும் உள்ள வித்தியாசம்  

Link to comment
Share on other sites

அறிவுக்கு ஒவ்வாத முட்டாள்த்தனங்களை இப்போதும் உண்மை என  நம்பும் ஏமாளிகள் எந்த மக்கள்க்கூட்டத்தில் அதிகம் உள்ளார்கள் என்று ஒரு போட்டி வைத்து அதற்கு நோபல் பரிசுபோல் ஒரு விருது வழங்கப்படும் என்றால் தமிழர்கள் அந்த விருதை பலமுறை வென்ற இனமாக தமிழர்கள் இருப்பதுடன் அதை பெருமையுடன் தமக்குள் பகிர்ந்து சந்தோசப்படும் இனமாகவும் இருப்பார்கள்.

(வேறு  நாட்டு மக்களில் உள்ள ஒரு சில  பைத்தியங்கள் சில இப்படியான விடயங்களை நம்பி சில லூசுத்தனங்களைச் செய்தால் அதையும் தமக்குள் ஆர்வத்துடன்  பகிர்ந்து நாங்கள் மட்டும் இவ்வுலகில்  லூசுகள் இல்லை என்று ஆதாரங்களை காட்டுவார்கள்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இறப்பது விதி
அது வரைக்கும் நோய் நொடியில்லாமல் கடன் துன்பங்கள் இல்லாமல் வாழ உதவுவது மதி
என் மதிக்கு புத்துணர்ச்சி தருவது......

 

Link to comment
Share on other sites

40 minutes ago, குமாரசாமி said:

நான் இறப்பது விதி
அது வரைக்கும் நோய் நொடியில்லாமல் கடன் துன்பங்கள் இல்லாமல் வாழ உதவுவது மதி
என் மதிக்கு புத்துணர்ச்சி தருவது......

 

மிகவும் மடத்தனமான stupid கருத்துக்களைக்கூட ஒரு அழகான பாடலாக தமது கற்பனையில் எழுதி அதற்கு மிக ரம்மியமாக இசைவடிவம் கொடுத்து அதை மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்பான மின்சார வசதியை உபயோகப்படுத்தி உயர் ஒலித்தரத்தில்  இசைத்தட்டாக வெளியிட்டு அதை மனித கண்டு பிடிப்பான இணையத்தைப் பயன்படுத்தி ஒலி ஒளி பரப்பு செய்து பல லட்சக்கணக்கான மனிதர்களை அதைப் பாரவையிட வைத்து  அந்த இசையை ரசிக்கச் செய்யும்  ஆற்றல் மனிதனுக்கு உண்டு என்பதை இந்த பாடல் எமக்கு உணர்ததுகிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, tulpen said:

அறிவுக்கு ஒவ்வாத முட்டாள்த்தனங்களை இப்போதும் உண்மை என  நம்பும் ஏமாளிகள் எந்த மக்கள்க்கூட்டத்தில் அதிகம் உள்ளார்கள் என்று ஒரு போட்டி வைத்து அதற்கு நோபல் பரிசுபோல் ஒரு விருது வழங்கப்படும் என்றால் தமிழர்கள் அந்த விருதை பலமுறை வென்ற இனமாக தமிழர்கள் இருப்பதுடன் அதை பெருமையுடன் தமக்குள் பகிர்ந்து சந்தோசப்படும் இனமாகவும் இருப்பார்கள்.

(வேறு  நாட்டு மக்களில் உள்ள ஒரு சில  பைத்தியங்கள் சில இப்படியான விடயங்களை நம்பி சில லூசுத்தனங்களைச் செய்தால் அதையும் தமக்குள் ஆர்வத்துடன்  பகிர்ந்து நாங்கள் மட்டும் இவ்வுலகில்  லூசுகள் இல்லை என்று ஆதாரங்களை காட்டுவார்கள்.)

உங்களுக்கு ஏதாவது எழுதோணும் என்டால் திரி சம்மந்தமாய் எழுதுங்கோ...அதை விடுத்து விதண்டாவாதம் கதைக்க கூடாது 

 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

உங்களுக்கு ஏதாவது எழுதோணும் என்டால் திரி சம்மந்தமாய் எழுதுங்கோ...அதை விடுத்து விதண்டாவாதம் கதைக்க கூடாது 

 

விதிப்படிதான் எல்லாம் நடக்கும் அதை மாற்ற முடியாது என்ற பைத்தியக்காரத்தனத்தைப்பற்றி இந்த திரி இருப்பதால் அதைப்பற்றியே எழுதினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, tulpen said:

விதிப்படிதான் எல்லாம் நடக்கும் அதை மாற்ற முடியாது என்ற பைத்தியக்காரத்தனத்தைப்பற்றி இந்த திரி இருப்பதால் அதைப்பற்றியே எழுதினேன். 

விதி என்று ஒன்று இல்லை என்றால் அதை அறிவு பூர்வமாக நிரூபியுங்கள்...அதை விடுத்து சும்மா மொடடையாய் சொன்னால் எப்படி ஏற்பது?

முயற்சி செய்து கொண்டே இருங்கள். சரியான நேரம் வந்தால் எல்லாம் சரி வரும்."இது தான் விதி" .
 

Link to comment
Share on other sites

On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

வணக்கம் நிழலி, உங்கள் கருத்திற்கே வாறன் அந்த சாரதி போக்குவரத்து விதியை மீறினார்...இதை போல முன்பும் அவர் செய்திருக்கலாம் அல்லது தெரிந்தோ/தெரியாமலோ அது தான் முதல் தடவையாக இருந்திருக்கலாம்...அந்த சாரதி பிழை விட்டார் தான்...ஆனால் அந்த அப்பாவி விரிவுரையாளர் செய்த பிழை என்ன?...அவர் ஒரு நிமிடம் அல்லது ஒரு செக்கன் முந்தி அல்லது பிந்தி அந்த இடத்திற்கு வந்திருந்தால் அவர் தப்பி இருப்பாரா இல்லையா?....சரியாய் அந்த நிமிடம் அந்த இடத்திற்கு அவரைக் கொண்டு வந்தது எது?...அது தான் விதி....

 

இது ஒரு incident அல்லது coincidence; அவ்வளவு தான்.

இவ்வளவு நாளும் அவர் அதே வீதியில் போய்க் கொண்டு இருக்கும் போது எதுவும் நடக்காமல் இருந்த நிகழ்வுகள் மாதிரி இதுவும் ஒரு நிகழ்வுதான். நீங்கள் சொல்வதை பார்த்தால் இந்த நிமிடம் இந்த கருத்தை நான் எழுதுவதும், அதை நீங்கள் இன்னொரு கணத்தில் வாசிப்பதும் கூட 'விதி' என்ற நியதிக்குள் அடங்கி 'என் விதி இதுக்கு பதில் எழுதுகின்றேன். உங்களின் விதி அதை வாசிக்கின்றீர்கள்' என்ற மாதிரி ஆகிவிடும். இன்னும் சொல்லப் போனால் இன்னமும் அரதப் பழசான நம்பிக்கைகளை அந்த கால கட்டத்தினை தாண்டி வந்த பின் இன்னும் அது சரியானது என்று சொல்கின்றவர்கள் சொல்லும் 'எல்லாம் தலைவிதியில் எழுதியிருக்கு' என்ற நம்பிக்கையில் வந்து விடும். ஆனால் தலையில் எழுதப்பட்ட விதி என்று ஒன்றும் இல்லை.

On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

என்ட கண் முன்னே நான் எத்தனையோ பேரைப் பார்க்கிறேன்...கடுமையாய் உழைப்பவர்கள் இன்னும் கடுமையாய் உழைத்துக் கொண்டு தான் இருக்கினம்..உழைத்து ,உழைத்து மாடாய் தோய்ந்து போய் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இறந்தவர்களும்  இருக்கிறார்கள் ...அதே நேரத்தில் பெனிபிட் எடுத்துக் கொண்டு உழைப்பவர்களை விட சந்தோசமாய் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.குருட்டு அதிஸ்ட்டத்தில் பணக்காரராய் வந்தவர்களும் இருக்கிறார்கள்...இதைத் தான் ஒவ்வொருவருடைய தலையெழுத்து,விதி என்கிறோம் 

 

கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைத்து விடுமா ரதி? கடுமையான உழைப்புடன் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கும் அளவுக்கு அறிவும் இருத்தல் அவசியம் அல்லவா? அத்துடன் காலத்துக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு, புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்துக் கொண்டு கடுமையாக உழைப்பவர்கள் தான் வெற்றியை அடைய முடியும். வெறும் கடும் உழைப்பு மட்டுமே போதாது.

அத்துடன் பெனிவிட் எடுப்பவர் உழைப்பவரை விட சந்தோசமாக இருக்கின்றார் என்பது எல்லாம் நாம் அவரை பார்த்து மனதில் ஒப்பிட்டு நினைப்பவை தான். உழைக்காமல் கிடைக்கும் மகிழ்ச்சி கேவலமானது என நினைக்காதளவுக்கு ஒருவர் மனம் கொண்டவராயின் அந்த மகிழ்ச்சியில் கொண்டாடுவதற்கு எதுவுமே இருக்காது.வீடு வாசல், சொகுசு கார்கள் தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை. இப்படியான கற்பிதங்களால் தான் எம் சமூகம் அளவுக்கு மீறி ஆசைப்பட்டு மற்றவர் வாழும் வாழ்கையை வாழ நினைத்து மகிழ்ச்சி அற்ற சமூகமாக மாறி இருக்கு.

On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

டிரம்பைத் தெரிந்தவர்கள் நினைத்திருப்பார்களா அவர் அமெரிக்க ஜனாதிபதியாய் ஒரு நாளைக்கு வருவார் என்று  ... எங்கள் மக்களை விடுங்கள் ஒற்றுமை இல்லாத கூட்டம்.சாதி,மதம் என்று ஆதி படத் தான் சரி...ஆனால் பிரபாகரனும்,புலிகளும் கடுமையாய் உழைத்தார்களே? ...இன்னாரால் தான் தமிழ் ஈழம் கிடைக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதி...அதற்காக எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும்.இனி மேல் கிடைக்காது என்று போட்டு பேசாமல் இருந்தால் ஒன்றும் கிடைக்காது..அது தான் விதிக்கும்,மதிக்கும் உள்ள வித்தியாசம்  

தேர்தலில் ட்ரம்ப் சுயேட்சையாக நின்று வெல்லவில்லையே?!

அவர் வெல்லுவார் என நம்பியதால் தான் அவரது குடியரசுக் கட்சி அவரை சனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்தது. அவர் வெல்லுவார் என அவரது இலட்சக்கணக்கான ஆதவாளர்கள் நம்பினர். அவரது குடும்பம் நம்பியது. எல்லாவற்றையும் விட ட்ரம்ப்  தான் வெல்லுவேன் என உறுதியாக நம்பினார். (ரஷ்யா செய்த தில்லாலங்கடி வேலையால் தான் அவர் வென்றவர் என்று சொல்லப்படுவது எந்தளவுக்கு உண்மை என்று இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அதை உறுதியான காரணமாக சொல்ல முடியவில்லை)

தலைவர் / புலிகளின் தோல்வி பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். எல்லாம் எங்கள் விதி, தலையெழுத்து..அதுதான் தோற்றோம் என்று மலினப்படுத்தாமல்/ சாக்கு போக்கு சொல்லாமல் இத் தோல்விக்கான பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் மீதும் இருக்கு என்று குறிப்பிட்டுக் கொண்டு இது பற்றி இந்த திரியில் எழுதுவதை நிறுத்துகின்றேன். இல்லாவிடின் இது ஒரு அரசியல் திரியாக நீண்டு விடும்.

On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

...உங்கள் மன சாட் சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இருக்கும் நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை விபத்துக்கள் நடக்கின்றது என்று தெரியுமா?

  

நான் வசிக்கும்  டொரோண்டோ பெரும் பாகத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போதும் (6.418 million) வாகனங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போதும் (7.9 million - 2015 புள்ளி விபரம்: மக்களின் எண்ணிக்கையை விட வாக்கங்களின் எண்ணிக்கை அதிகம்)   விபத்துகள் குறைவாக நடக்கின்றன என்றே முடிவுக்கு வர முடியும். கடந்த வருடம் டிசம்பர் வரைக்கும் 59 உயிரிழப்புகள் மட்டுமே ஒன்ராறியோவில்  நிகழ்ந்துள்ளன.

ஒன்ராறியோ மாகாணம் வட அமெரிக்காவில் வாகான விபத்துகள் குறைந்த இடமாக பல காலமாக இருந்து வருகின்றது.

----

நான் முன்னர் சொன்ன மாதிரி. விதி என்பது தோற்றுப் போகும் போதும், இழப்புகள் வரும் போதும் மட்டுமே சொல்லப்படும் காரணமாகவே இருக்கு. தன் பிள்ளை படிச்சு பெரிய பதவிக்கு போகும் போது எவரும் 'எல்லாம் தலை விதி, படிச்சு பட்டம் பெற்று விட்டார்கள்' என்று சொல்வதில்லை, எவருக்கும் ஊதிய உயர்வு கிடைக்கும் போது 'என் தலைவிதி எனக்கு ஊதிய உயர்வு தந்து விட்டார்கள்" என்று தம் சாதனையை மறைத்து விதியை காரணம் காட்டுவது இல்லை. பக்கத்து சீட்டில் அழகான பெண்ணோ அல்லது வாலிபனோ வந்து அமர்ந்து விட்டால் 'என் தலைவிதி என் பக்கத்தில் ஒரு அழகான ஆள்' என்று சொல்வதும் இல்லை.

 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

விதி என்று ஒன்று இல்லை என்றால் அதை அறிவு பூர்வமாக நிரூபியுங்கள்...அதை விடுத்து சும்மா மொடடையாய் சொன்னால் எப்படி ஏற்பது?

முயற்சி செய்து கொண்டே இருங்கள். சரியான நேரம் வந்தால் எல்லாம் சரி வரும்."இது தான் விதி" .
 

ஒரு விடயம் இருக்கிறது என்போர்கள் தான் அதை நிருபிக்க வேண்டுமே தவிர இல்லை என்போர் அல்ல. கால ஓட்டத்தில் பல விடயங்கள் நடைபெறுகின்றன. அது இயற்கை.  ஒரு விடயம் நடந்து முடிந்த பின்னர் அது விதி இது முன்னரே தீரமானிக்கப்பட்டது. தலையில் எழுதப்பட்டது என்று கூறுவதைத்தான் சுத்த பைத்தியக்காரத்தனம் என்று கூறுகிறோம் 

Link to comment
Share on other sites

விதி நம்பிக்கையாளர்களுக்கு எதிரான பரவலான விமர்சனம் அவர்கள் 'சோம்போறிகள்' என்பதாகும். இக்கருத்துப் பொய்யானது எனப் பல இடங்களில் நாம் அவதானிக்கலாம். கடினமாக உழைக்கும் ஒருவர் இன்னும் வாழ்வில் முன்னேற முடியாத நிலை, அதிர்ஷ்ட லாபச்சீட்டில் கோடிகளைப் பெற்ற சாதாரண மனிதர்கள் என ஏராளமான உதாரணங்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரை விதி என்பது நாம் முன்போ, தற்போதோ செய்துள்ள பாவ புண்ணியங்களின் விளைவாகும். அதாவது நமது கர்ம வினைப்பயன் - இதனை உறுதியாக நான் நம்புகிறேன். என்றோ செய்த நன்மை ஒரே நாளில் ஏழையைப் பணக்காரனாக்லாம் (அதிர்ஷ்டச் சீட்டு).

அதன் பொருள் நான் சோம்போறித்தனத்தை ஆதரிக்கின்றேன் என்பதல்ல. நம் முயற்சிக்கு என்றோ ஒருநாள் பலன் கிடைக்க வேண்டும் என்பதும் விதியாகும். 'கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே' எனக் கீதை சொல்வதன் உட் பொருளும் ' உன் கடமைக்கான பிரதிஉபகாரத்தை உடனடியாக எதிர்பாராமல் அதனைச் செய். அதன் பலன் என்றோ ஒருநாள் வேறேதும் வடிவில் நிச்சயமாகக் கிடைக்கும்' என்றே நான் கருதுகிறேன்.

எனினும் விதியைப் பற்றி என்ன தான் விவாதித்தாலும் நம் சிற்றறிவுக்கு முழுமையான விடை கிடைக்காது என்ற எண்ணத்தையும் பதிந்தே ஆக வேண்டும். கணிணிகளால் Computer programs பற்றி உணர்வு / புத்திபூர்வமாக  யோசிக்க / உணரமுடியுமா?!

என்ன தான் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டாலும் மனிதன் விதி பற்றி அறிய முயல்வதும் இதுபோல் தான்! 😊

Link to comment
Share on other sites

விதி என்பது வெளிப்படையானது. இதில் எந்த ஒளிப்பு மறைப்பும் இல்லை. பிறந்த உயிர்கள் எல்லாம் ஒரு நாள் இறந்தே தீரும் இது விதி. தண்ணீர் சராசரியாக  0 பாகையில் உறைநிலையை அடையும் 100 பாகையில் கொதிநிலையை அடைந்து ஆவியாகும். இதுவும் விதியே. எந்த தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் உண்டு. பூமியின் ஈர்பபுசக்தி ஒரு செக்கனுக்கு 11 கி.மீ. இவை எல்லாம்அறிவு பூர்வமாக  நிரூபிக்கப்பட்ட விதிகள். இவற்றை நம்புவது வேறு. ஆனால் மனித வாழ்ககையில் நடக்கும் சாதாரண சம்பவங்கள் ஏற்கனவே எவனோ எழுதி வைத்து என்று கண்மூடித்தனமாக நம்புவது எவ்வளவு முட்டாள்த்தனமோ அதை விட முட்டாள்த்தனம் கடவுளை வேண்டினால் விதியை மீறி எம்மை காப்பாற்றுவார் என்று நம்புவது. 

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

விதி என்பது வெளிப்படையானது. இதில் எந்த ஒளிப்பு மறைப்பும் இல்லை. பிறந்த உயிர்கள் எல்லாம் ஒரு நாள் இறந்தே தீரும் இது விதி. தண்ணீர் சராசரியாக  0 பாகையில் உறைநிலையை அடையும் 100 பாகையில் கொதிநிலையை அடைந்து ஆவியாகும். இதுவும் விதியே. எந்த தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் உண்டு. பூமியின் ஈர்பபுசக்தி ஒரு செக்கனுக்கு 11 கி.மீ. இவை எல்லாம்அறிவு பூர்வமாக  நிரூபிக்கப்பட்ட விதிகள். 

Tulpen, நீங்கள் மேற் கூறிய விதிகள் எல்லாம் மனிதருக்குத் தெரிந்திருப்பதால் 'இவ்வளவு தான் விதிகள்; வேறு விதிகள் இல்லை' என்று சொல்லிப் புறந்தள்ள முடியாது. எல்லா விதிகளும் மனிதனால் நிரூபிக்கப்படும் முன்னர் அறியப்படாமலே இருந்திருக்கின்றன அல்லவா? உதாரணமாக புவியீர்ப்பு விதி பற்றி 5000 ஆண்டுகளுக்கு முன்னர் மனித குலம் அறியாமல் இருந்திருக்கலாம். அதனால் அக்காலத்தில் புவியீர்ப்பு சக்தி இல்லை என முடிவெடுக்க முடியுமா? நமது ஆராய்ச்சிக்கு எட்டாத விடயங்கள் / விதிகள் இருக்கலாம். எதிர்காலத்தில் பல அறியப்படலாம். ஆனால் எல்லா விதிகளும் அறியப்பட்டால் இப்பிரபஞ்சத்தைப் படைத்த கர்த்தா எதற்கு? இது இயற்கையின் இரகசியம். இதுவும் ஒரு விதி தான்! 

நமது சிற்றறிவு கொண்டு  அறிந்திட முடியாது. பெரிய அறிவியல் என்றேல்லாம் நாம் புளகாங்கிதம் அடைவதெல்லாம் இச் சிற்றறிவு கொண்டு தானே?! ☺️

Link to comment
Share on other sites

On 1/30/2019 at 9:57 PM, ரதி said:

கொஞ்சப் பேர் சொல்லினம் விதியை மதியால் வெல்லலாம் என்று இதை நம்புகிறீர்களா?...நான் சொல்றன் முடியாது என்று இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

அது,அது நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும்...அழுது,புலம்பி கடவுளை வேண்டினால் பாவ,புண்ணியத்தை கொஞ்சம் கூட்டி குறைக்கலாம் ...சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருத்தல் என்பதும்,இல்லாமல் தவிர்த்தல் என்பதும் விதியின் விளையாட்டு அல்லவா!

நான் கடுமையான நோயின் பிடியில் இருந்து போராடி தப்பித்து விட்டேன் என்பார்கள்...தப்பித்து வரணும் என்பது தான் விதியாக இருந்தால்? ... காதலித்து திருமணம் செய்து நன்றாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தாங்கள் எந்த வித  சாதகமும் பார்க்காமல் திருமணம் செய்தோம்.நன்றாய்த் தானே இருக்கிறோம் என்பார்கள் ..அப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பது சித்தமாக இருந்தால் மாத்த முடியுமா?

எதோ எழுத வேண்டும் என்று தோன்றிச்சு...எழுதியிடடன்🙂

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎6‎/‎2019 at 1:19 PM, மோகன் said:

😀

 

உண்மையிலேயே,சத்தியமாய் மறந்து போய்ட்டன்☺️...இதே வேலையாய் தேடி எடுத்தமைக்கு நன்றிகள் மோகன்  🤗

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.