Jump to content

விதியை மதியால் வெல்லலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப் பேர் சொல்லினம் விதியை மதியால் வெல்லலாம் என்று இதை நம்புகிறீர்களா?...நான் சொல்றன் முடியாது என்று இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

அது,அது நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும்...அழுது,புலம்பி கடவுளை வேண்டினால் பாவ,புண்ணியத்தை கொஞ்சம் கூட்டி குறைக்கலாம் ...சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருத்தல் என்பதும்,இல்லாமல் தவிர்த்தல் என்பதும் விதியின் விளையாட்டு அல்லவா!

நான் கடுமையான நோயின் பிடியில் இருந்து போராடி தப்பித்து விட்டேன் என்பார்கள்...தப்பித்து வரணும் என்பது தான் விதியாக இருந்தால்? ... காதலித்து திருமணம் செய்து நன்றாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தாங்கள் எந்த வித  சாதகமும் பார்க்காமல் திருமணம் செய்தோம்.நன்றாய்த் தானே இருக்கிறோம் என்பார்கள் ..அப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பது சித்தமாக இருந்தால் மாத்த முடியுமா?

எதோ எழுத வேண்டும் என்று தோன்றிச்சு...எழுதியிடடன்🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதியை வெல்லக்கூடிய ஆயுதம் இருக்கு இணையத்தில் சுட்டது 

 

51c48fde-cb77-4b54-8983-b77d80d1577f.png

3305d246-e6fc-4cac-b56e-2cbb8dd42280.png

http://rightmantra.com/?p=20085

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா🤣 சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட கதை ...முனிவர் என்ன கடவுளா? அவருக்கு எப்படித் தெரியும் முதலாவது மன்னன் தான் போரில் ஜெயிப்பான் என்று?...ஒன்று இவர் போலி முனிவராய் இருக்க வேண்டும் அல்லது ஆனைக்கும் அடி சறுக்கி இருக்க வேண்டும்....இரண்டாவது மன்னன் ஜெயிக்க வேண்டும் என்பதே விதி.

இணைப்பிற்கு நன்றி பெருமாள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதியை மதியால் வெல்லலாம் ஆனால் அதுவே மீண்டும் விதியாகி விடும்......! கண்ணதாசன் சொல்லியது......!  😒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஹாஹா🤣 சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட கதை ...முனிவர் என்ன கடவுளா? அவருக்கு எப்படித் தெரியும் முதலாவது மன்னன் தான் போரில் ஜெயிப்பான் என்று?...ஒன்று இவர் போலி முனிவராய் இருக்க வேண்டும் அல்லது ஆனைக்கும் அடி சறுக்கி இருக்க வேண்டும்....இரண்டாவது மன்னன் ஜெயிக்க வேண்டும் என்பதே விதி.

இணைப்பிற்கு நன்றி பெருமாள்  

இதில் முனிவர் மாற்றி சொல்லி இருந்தாலும் இரண்டாவது மன்னனே வெல்வான் ஏனெனில் தன்னம்பிக்கை மிக்கவர்களை விதி ஒன்றும் செய்வது கிடையாது மாறாக அங்கு விதி ஏமாற்றத்துடன் வலுவிழந்து போகும் .

Link to comment
Share on other sites

விதியை கண்டிப்பாக மதியால் வெல்லலாம். ஆனால் மதி என்பது ஒரு சில மனிதர்களின் மதியால் மட்டுமல்ல. மக்களின்,  இனக் குழுமத்தின், சமூகத்தின், குடும்பத்தின் ஒட்டுமொத்த மனிதர்களால் அல்லது பெரும்பான்மை மனிதர்களால் சரியாக மதியை பயன்படுத்தப்படும் போது விதியை இலகுவாக வெல்லலாம்.

கட்டுக்கோப்பும், ஒற்றுமையும், சாதி பேத வேறுபாடுகளை மீறி இனமானம் கொண்ட இனம் வெல்லுது. இதில் எதுவும் இல்லாத இனம் தோற்குது.

உண்மையில் விதி என்றே ஒன்றும் இல்லை.

வீதியில் சிவனே என்று சரியாக போன ஒரு விரிவுரையாளரை வாகனம் மோதி கொல்லுது என்றால் அது விதி அல்ல. அந்த ஊரில், நாட்டில் இருக்கும் மக்கள் வீதி ஒழுங்கை சரியாக மதிக்காமையால் நிகழும் ஒன்று. இப்படி சட்டங்களை மதிக்காத எம் நாடுகளுடன் ஒப்பிடும் போது ஏனைய படித்த, சட்டங்களை ஓரளவுக்கேனும் மதிக்கும் நாடுகளில் விபத்தில் ஆட்கள் சாவது குறைவாக இருப்பது ஏன்? விபத்து என்றாலே எங்கோ ஒருவரின் தவறால் இன்னொருவருக்கு ஏற்படுவது தானே?

வண்ணாத்திப் பூச்சி தியறி (butterfly theory) தான் இங்கு. எங்கோ ஒரு சிறு துணிக்கையில் நிகழும் அசைவு,சலனம், அல்லது சலனமின்மை மெதுவாக பரவி பரவி பூமியில் எங்கோ இருக்கும் இன்னொன்றை பாதிக்கின்றது. எங்கோ ஒரு நாட்டில் போன கப்பல் விபத்துக்குள்ளாகி அதன் உடைவுகள் உலகின் எங்கோ ஒரு தீவில் கரை ஒருங்கும் போது அந்த தீவிற்கு உடைவுகளில் பயணித்த சிறு எறும்பு கூட்டம் தரையிறங்கி அவ் தீவில் இலட்சக்கணக்கான வருடம் வாழும் நண்டுகளுக்கு ஆபத்தாக அமைகின்றது. உடைவுகளின் பயணத்தை தீர்மானித்தது காற்று வீசும் திசையும், புவியமைப்பும். இதில் விதி என்பது என்ன?

நாம் வெற்றியடையும் போது. எல்லாம் விதி என்று சொல்வதில்லை. தோல்வியும் இழப்பும் நிகழும் போது மட்டுமே விதியை கூப்பிடுகின்றோம்.

விதி என்பது தோற்றவர்கள் தம் தோல்விக்கான நியாயமான காரணங்களை தம்மில் தேடாமல் சோம்பேறித் தனமாக 'எல்லாம் விதி' என்று புலம்ப சொல்லும் ஒரு தப்பித்தல் காரணம் என்று தான் நான் நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

On 2/1/2019 at 2:41 AM, நிழலி said:

விதி என்பது தோற்றவர்கள் தம் தோல்விக்கான நியாயமான காரணங்களை தம்மில் தேடாமல் சோம்பேறித் தனமாக 'எல்லாம் விதி' என்று புலம்ப சொல்லும் ஒரு தப்பித்தல் காரணம் என்று தான் நான் நம்புகின்றேன்.

விதி என்ற வார்ததைக்கு இதைவிட சிறந்த வரைவிலக்கணம் இருக்க முடியாது. ஒரு வாகன விபத்தில் ஒருவர் தப்பினால் தெய்வாதீனமாக உயிர் தப்பினார் என்று கூறுபவர்கள் அதே விபத்தில் இறந்தவரை தெய்வம்  கொன்றுவிட்டது  கூறாமல் அவன் விதி முடிந்தது என்று மூடத்தனமாக சப்பைக்கட்டு கட்டுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎1‎/‎2019 at 1:41 AM, நிழலி said:

விதியை கண்டிப்பாக மதியால் வெல்லலாம். ஆனால் மதி என்பது ஒரு சில மனிதர்களின் மதியால் மட்டுமல்ல. மக்களின்,  இனக் குழுமத்தின், சமூகத்தின், குடும்பத்தின் ஒட்டுமொத்த மனிதர்களால் அல்லது பெரும்பான்மை மனிதர்களால் சரியாக மதியை பயன்படுத்தப்படும் போது விதியை இலகுவாக வெல்லலாம்.

கட்டுக்கோப்பும், ஒற்றுமையும், சாதி பேத வேறுபாடுகளை மீறி இனமானம் கொண்ட இனம் வெல்லுது. இதில் எதுவும் இல்லாத இனம் தோற்குது.

உண்மையில் விதி என்றே ஒன்றும் இல்லை.

வீதியில் சிவனே என்று சரியாக போன ஒரு விரிவுரையாளரை வாகனம் மோதி கொல்லுது என்றால் அது விதி அல்ல. அந்த ஊரில், நாட்டில் இருக்கும் மக்கள் வீதி ஒழுங்கை சரியாக மதிக்காமையால் நிகழும் ஒன்று. இப்படி சட்டங்களை மதிக்காத எம் நாடுகளுடன் ஒப்பிடும் போது ஏனைய படித்த, சட்டங்களை ஓரளவுக்கேனும் மதிக்கும் நாடுகளில் விபத்தில் ஆட்கள் சாவது குறைவாக இருப்பது ஏன்? விபத்து என்றாலே எங்கோ ஒருவரின் தவறால் இன்னொருவருக்கு ஏற்படுவது தானே?

வண்ணாத்திப் பூச்சி தியறி (butterfly theory) தான் இங்கு. எங்கோ ஒரு சிறு துணிக்கையில் நிகழும் அசைவு,சலனம், அல்லது சலனமின்மை மெதுவாக பரவி பரவி பூமியில் எங்கோ இருக்கும் இன்னொன்றை பாதிக்கின்றது. எங்கோ ஒரு நாட்டில் போன கப்பல் விபத்துக்குள்ளாகி அதன் உடைவுகள் உலகின் எங்கோ ஒரு தீவில் கரை ஒருங்கும் போது அந்த தீவிற்கு உடைவுகளில் பயணித்த சிறு எறும்பு கூட்டம் தரையிறங்கி அவ் தீவில் இலட்சக்கணக்கான வருடம் வாழும் நண்டுகளுக்கு ஆபத்தாக அமைகின்றது. உடைவுகளின் பயணத்தை தீர்மானித்தது காற்று வீசும் திசையும், புவியமைப்பும். இதில் விதி என்பது என்ன?

நாம் வெற்றியடையும் போது. எல்லாம் விதி என்று சொல்வதில்லை. தோல்வியும் இழப்பும் நிகழும் போது மட்டுமே விதியை கூப்பிடுகின்றோம்.

விதி என்பது தோற்றவர்கள் தம் தோல்விக்கான நியாயமான காரணங்களை தம்மில் தேடாமல் சோம்பேறித் தனமாக 'எல்லாம் விதி' என்று புலம்ப சொல்லும் ஒரு தப்பித்தல் காரணம் என்று தான் நான் நம்புகின்றேன்.

வணக்கம் நிழலி, உங்கள் கருத்திற்கே வாறன் அந்த சாரதி போக்குவரத்து விதியை மீறினார்...இதை போல முன்பும் அவர் செய்திருக்கலாம் அல்லது தெரிந்தோ/தெரியாமலோ அது தான் முதல் தடவையாக இருந்திருக்கலாம்...அந்த சாரதி பிழை விட்டார் தான்...ஆனால் அந்த அப்பாவி விரிவுரையாளர் செய்த பிழை என்ன?...அவர் ஒரு நிமிடம் அல்லது ஒரு செக்கன் முந்தி அல்லது பிந்தி அந்த இடத்திற்கு வந்திருந்தால் அவர் தப்பி இருப்பாரா இல்லையா?....சரியாய் அந்த நிமிடம் அந்த இடத்திற்கு அவரைக் கொண்டு வந்தது எது?...அது தான் விதி....இலங்கையில் போக்குவரத்து சட்டங்களை மதிக்காததால் தான் விபத்துக்கள் அதிகம் என்றும்[உண்மை தான் ] சட்டங்களை மதிக்கும் மேல் நாட்டில் விபத்துக்கள் குறைவு என்றும் எழுதியுள்ளீர்கள்...உங்கள் மன சாட் சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இருக்கும் நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை விபத்துக்கள் நடக்கின்றது என்று தெரியுமா?

விதியை,மதியால் வெல்லலாம் என்று நம் முன்னோர்கள் சொல்லக் காரணம் எது தெரியுமா? அப்படி சொல்லி இருக்கா விட்டால் சாதாரணமாய்  நடக்கக் கூடிய எல்லா விசயத்தையும் மக்கள் விதி மேல் போட்டுட்டு சோம்பேறியாய் இருந்து விடுவார்கள் என்பதற்காகத் தான் சொல்லப் பட்டது...என்ட கண் முன்னே நான் எத்தனையோ பேரைப் பார்க்கிறேன்...கடுமையாய் உழைப்பவர்கள் இன்னும் கடுமையாய் உழைத்துக் கொண்டு தான் இருக்கினம்..உழைத்து ,உழைத்து மாடாய் தோய்ந்து போய் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இறந்தவர்களும்  இருக்கிறார்கள் ...அதே நேரத்தில் பெனிபிட் எடுத்துக் கொண்டு உழைப்பவர்களை விட சந்தோசமாய் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.குருட்டு அதிஸ்ட்டத்தில் பணக்காரராய் வந்தவர்களும் இருக்கிறார்கள்...இதைத் தான் ஒவ்வொருவருடைய தலையெழுத்து,விதி என்கிறோம் 

டிரம்பைத் தெரிந்தவர்கள் நினைத்திருப்பார்களா அவர் அமெரிக்க ஜனாதிபதியாய் ஒரு நாளைக்கு வருவார் என்று  ... எங்கள் மக்களை விடுங்கள் ஒற்றுமை இல்லாத கூட்டம்.சாதி,மதம் என்று ஆதி படத் தான் சரி...ஆனால் பிரபாகரனும்,புலிகளும் கடுமையாய் உழைத்தார்களே? ...இன்னாரால் தான் தமிழ் ஈழம் கிடைக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதி...அதற்காக எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும்.இனி மேல் கிடைக்காது என்று போட்டு பேசாமல் இருந்தால் ஒன்றும் கிடைக்காது..அது தான் விதிக்கும்,மதிக்கும் உள்ள வித்தியாசம்  

Link to comment
Share on other sites

அறிவுக்கு ஒவ்வாத முட்டாள்த்தனங்களை இப்போதும் உண்மை என  நம்பும் ஏமாளிகள் எந்த மக்கள்க்கூட்டத்தில் அதிகம் உள்ளார்கள் என்று ஒரு போட்டி வைத்து அதற்கு நோபல் பரிசுபோல் ஒரு விருது வழங்கப்படும் என்றால் தமிழர்கள் அந்த விருதை பலமுறை வென்ற இனமாக தமிழர்கள் இருப்பதுடன் அதை பெருமையுடன் தமக்குள் பகிர்ந்து சந்தோசப்படும் இனமாகவும் இருப்பார்கள்.

(வேறு  நாட்டு மக்களில் உள்ள ஒரு சில  பைத்தியங்கள் சில இப்படியான விடயங்களை நம்பி சில லூசுத்தனங்களைச் செய்தால் அதையும் தமக்குள் ஆர்வத்துடன்  பகிர்ந்து நாங்கள் மட்டும் இவ்வுலகில்  லூசுகள் இல்லை என்று ஆதாரங்களை காட்டுவார்கள்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இறப்பது விதி
அது வரைக்கும் நோய் நொடியில்லாமல் கடன் துன்பங்கள் இல்லாமல் வாழ உதவுவது மதி
என் மதிக்கு புத்துணர்ச்சி தருவது......

 

Link to comment
Share on other sites

40 minutes ago, குமாரசாமி said:

நான் இறப்பது விதி
அது வரைக்கும் நோய் நொடியில்லாமல் கடன் துன்பங்கள் இல்லாமல் வாழ உதவுவது மதி
என் மதிக்கு புத்துணர்ச்சி தருவது......

 

மிகவும் மடத்தனமான stupid கருத்துக்களைக்கூட ஒரு அழகான பாடலாக தமது கற்பனையில் எழுதி அதற்கு மிக ரம்மியமாக இசைவடிவம் கொடுத்து அதை மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்பான மின்சார வசதியை உபயோகப்படுத்தி உயர் ஒலித்தரத்தில்  இசைத்தட்டாக வெளியிட்டு அதை மனித கண்டு பிடிப்பான இணையத்தைப் பயன்படுத்தி ஒலி ஒளி பரப்பு செய்து பல லட்சக்கணக்கான மனிதர்களை அதைப் பாரவையிட வைத்து  அந்த இசையை ரசிக்கச் செய்யும்  ஆற்றல் மனிதனுக்கு உண்டு என்பதை இந்த பாடல் எமக்கு உணர்ததுகிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, tulpen said:

அறிவுக்கு ஒவ்வாத முட்டாள்த்தனங்களை இப்போதும் உண்மை என  நம்பும் ஏமாளிகள் எந்த மக்கள்க்கூட்டத்தில் அதிகம் உள்ளார்கள் என்று ஒரு போட்டி வைத்து அதற்கு நோபல் பரிசுபோல் ஒரு விருது வழங்கப்படும் என்றால் தமிழர்கள் அந்த விருதை பலமுறை வென்ற இனமாக தமிழர்கள் இருப்பதுடன் அதை பெருமையுடன் தமக்குள் பகிர்ந்து சந்தோசப்படும் இனமாகவும் இருப்பார்கள்.

(வேறு  நாட்டு மக்களில் உள்ள ஒரு சில  பைத்தியங்கள் சில இப்படியான விடயங்களை நம்பி சில லூசுத்தனங்களைச் செய்தால் அதையும் தமக்குள் ஆர்வத்துடன்  பகிர்ந்து நாங்கள் மட்டும் இவ்வுலகில்  லூசுகள் இல்லை என்று ஆதாரங்களை காட்டுவார்கள்.)

உங்களுக்கு ஏதாவது எழுதோணும் என்டால் திரி சம்மந்தமாய் எழுதுங்கோ...அதை விடுத்து விதண்டாவாதம் கதைக்க கூடாது 

 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

உங்களுக்கு ஏதாவது எழுதோணும் என்டால் திரி சம்மந்தமாய் எழுதுங்கோ...அதை விடுத்து விதண்டாவாதம் கதைக்க கூடாது 

 

விதிப்படிதான் எல்லாம் நடக்கும் அதை மாற்ற முடியாது என்ற பைத்தியக்காரத்தனத்தைப்பற்றி இந்த திரி இருப்பதால் அதைப்பற்றியே எழுதினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, tulpen said:

விதிப்படிதான் எல்லாம் நடக்கும் அதை மாற்ற முடியாது என்ற பைத்தியக்காரத்தனத்தைப்பற்றி இந்த திரி இருப்பதால் அதைப்பற்றியே எழுதினேன். 

விதி என்று ஒன்று இல்லை என்றால் அதை அறிவு பூர்வமாக நிரூபியுங்கள்...அதை விடுத்து சும்மா மொடடையாய் சொன்னால் எப்படி ஏற்பது?

முயற்சி செய்து கொண்டே இருங்கள். சரியான நேரம் வந்தால் எல்லாம் சரி வரும்."இது தான் விதி" .
 

Link to comment
Share on other sites

On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

வணக்கம் நிழலி, உங்கள் கருத்திற்கே வாறன் அந்த சாரதி போக்குவரத்து விதியை மீறினார்...இதை போல முன்பும் அவர் செய்திருக்கலாம் அல்லது தெரிந்தோ/தெரியாமலோ அது தான் முதல் தடவையாக இருந்திருக்கலாம்...அந்த சாரதி பிழை விட்டார் தான்...ஆனால் அந்த அப்பாவி விரிவுரையாளர் செய்த பிழை என்ன?...அவர் ஒரு நிமிடம் அல்லது ஒரு செக்கன் முந்தி அல்லது பிந்தி அந்த இடத்திற்கு வந்திருந்தால் அவர் தப்பி இருப்பாரா இல்லையா?....சரியாய் அந்த நிமிடம் அந்த இடத்திற்கு அவரைக் கொண்டு வந்தது எது?...அது தான் விதி....

 

இது ஒரு incident அல்லது coincidence; அவ்வளவு தான்.

இவ்வளவு நாளும் அவர் அதே வீதியில் போய்க் கொண்டு இருக்கும் போது எதுவும் நடக்காமல் இருந்த நிகழ்வுகள் மாதிரி இதுவும் ஒரு நிகழ்வுதான். நீங்கள் சொல்வதை பார்த்தால் இந்த நிமிடம் இந்த கருத்தை நான் எழுதுவதும், அதை நீங்கள் இன்னொரு கணத்தில் வாசிப்பதும் கூட 'விதி' என்ற நியதிக்குள் அடங்கி 'என் விதி இதுக்கு பதில் எழுதுகின்றேன். உங்களின் விதி அதை வாசிக்கின்றீர்கள்' என்ற மாதிரி ஆகிவிடும். இன்னும் சொல்லப் போனால் இன்னமும் அரதப் பழசான நம்பிக்கைகளை அந்த கால கட்டத்தினை தாண்டி வந்த பின் இன்னும் அது சரியானது என்று சொல்கின்றவர்கள் சொல்லும் 'எல்லாம் தலைவிதியில் எழுதியிருக்கு' என்ற நம்பிக்கையில் வந்து விடும். ஆனால் தலையில் எழுதப்பட்ட விதி என்று ஒன்றும் இல்லை.

On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

என்ட கண் முன்னே நான் எத்தனையோ பேரைப் பார்க்கிறேன்...கடுமையாய் உழைப்பவர்கள் இன்னும் கடுமையாய் உழைத்துக் கொண்டு தான் இருக்கினம்..உழைத்து ,உழைத்து மாடாய் தோய்ந்து போய் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இறந்தவர்களும்  இருக்கிறார்கள் ...அதே நேரத்தில் பெனிபிட் எடுத்துக் கொண்டு உழைப்பவர்களை விட சந்தோசமாய் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.குருட்டு அதிஸ்ட்டத்தில் பணக்காரராய் வந்தவர்களும் இருக்கிறார்கள்...இதைத் தான் ஒவ்வொருவருடைய தலையெழுத்து,விதி என்கிறோம் 

 

கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைத்து விடுமா ரதி? கடுமையான உழைப்புடன் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கும் அளவுக்கு அறிவும் இருத்தல் அவசியம் அல்லவா? அத்துடன் காலத்துக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு, புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்துக் கொண்டு கடுமையாக உழைப்பவர்கள் தான் வெற்றியை அடைய முடியும். வெறும் கடும் உழைப்பு மட்டுமே போதாது.

அத்துடன் பெனிவிட் எடுப்பவர் உழைப்பவரை விட சந்தோசமாக இருக்கின்றார் என்பது எல்லாம் நாம் அவரை பார்த்து மனதில் ஒப்பிட்டு நினைப்பவை தான். உழைக்காமல் கிடைக்கும் மகிழ்ச்சி கேவலமானது என நினைக்காதளவுக்கு ஒருவர் மனம் கொண்டவராயின் அந்த மகிழ்ச்சியில் கொண்டாடுவதற்கு எதுவுமே இருக்காது.வீடு வாசல், சொகுசு கார்கள் தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை. இப்படியான கற்பிதங்களால் தான் எம் சமூகம் அளவுக்கு மீறி ஆசைப்பட்டு மற்றவர் வாழும் வாழ்கையை வாழ நினைத்து மகிழ்ச்சி அற்ற சமூகமாக மாறி இருக்கு.

On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

டிரம்பைத் தெரிந்தவர்கள் நினைத்திருப்பார்களா அவர் அமெரிக்க ஜனாதிபதியாய் ஒரு நாளைக்கு வருவார் என்று  ... எங்கள் மக்களை விடுங்கள் ஒற்றுமை இல்லாத கூட்டம்.சாதி,மதம் என்று ஆதி படத் தான் சரி...ஆனால் பிரபாகரனும்,புலிகளும் கடுமையாய் உழைத்தார்களே? ...இன்னாரால் தான் தமிழ் ஈழம் கிடைக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதி...அதற்காக எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும்.இனி மேல் கிடைக்காது என்று போட்டு பேசாமல் இருந்தால் ஒன்றும் கிடைக்காது..அது தான் விதிக்கும்,மதிக்கும் உள்ள வித்தியாசம்  

தேர்தலில் ட்ரம்ப் சுயேட்சையாக நின்று வெல்லவில்லையே?!

அவர் வெல்லுவார் என நம்பியதால் தான் அவரது குடியரசுக் கட்சி அவரை சனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்தது. அவர் வெல்லுவார் என அவரது இலட்சக்கணக்கான ஆதவாளர்கள் நம்பினர். அவரது குடும்பம் நம்பியது. எல்லாவற்றையும் விட ட்ரம்ப்  தான் வெல்லுவேன் என உறுதியாக நம்பினார். (ரஷ்யா செய்த தில்லாலங்கடி வேலையால் தான் அவர் வென்றவர் என்று சொல்லப்படுவது எந்தளவுக்கு உண்மை என்று இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அதை உறுதியான காரணமாக சொல்ல முடியவில்லை)

தலைவர் / புலிகளின் தோல்வி பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். எல்லாம் எங்கள் விதி, தலையெழுத்து..அதுதான் தோற்றோம் என்று மலினப்படுத்தாமல்/ சாக்கு போக்கு சொல்லாமல் இத் தோல்விக்கான பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் மீதும் இருக்கு என்று குறிப்பிட்டுக் கொண்டு இது பற்றி இந்த திரியில் எழுதுவதை நிறுத்துகின்றேன். இல்லாவிடின் இது ஒரு அரசியல் திரியாக நீண்டு விடும்.

On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

...உங்கள் மன சாட் சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இருக்கும் நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை விபத்துக்கள் நடக்கின்றது என்று தெரியுமா?

  

நான் வசிக்கும்  டொரோண்டோ பெரும் பாகத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போதும் (6.418 million) வாகனங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போதும் (7.9 million - 2015 புள்ளி விபரம்: மக்களின் எண்ணிக்கையை விட வாக்கங்களின் எண்ணிக்கை அதிகம்)   விபத்துகள் குறைவாக நடக்கின்றன என்றே முடிவுக்கு வர முடியும். கடந்த வருடம் டிசம்பர் வரைக்கும் 59 உயிரிழப்புகள் மட்டுமே ஒன்ராறியோவில்  நிகழ்ந்துள்ளன.

ஒன்ராறியோ மாகாணம் வட அமெரிக்காவில் வாகான விபத்துகள் குறைந்த இடமாக பல காலமாக இருந்து வருகின்றது.

----

நான் முன்னர் சொன்ன மாதிரி. விதி என்பது தோற்றுப் போகும் போதும், இழப்புகள் வரும் போதும் மட்டுமே சொல்லப்படும் காரணமாகவே இருக்கு. தன் பிள்ளை படிச்சு பெரிய பதவிக்கு போகும் போது எவரும் 'எல்லாம் தலை விதி, படிச்சு பட்டம் பெற்று விட்டார்கள்' என்று சொல்வதில்லை, எவருக்கும் ஊதிய உயர்வு கிடைக்கும் போது 'என் தலைவிதி எனக்கு ஊதிய உயர்வு தந்து விட்டார்கள்" என்று தம் சாதனையை மறைத்து விதியை காரணம் காட்டுவது இல்லை. பக்கத்து சீட்டில் அழகான பெண்ணோ அல்லது வாலிபனோ வந்து அமர்ந்து விட்டால் 'என் தலைவிதி என் பக்கத்தில் ஒரு அழகான ஆள்' என்று சொல்வதும் இல்லை.

 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

விதி என்று ஒன்று இல்லை என்றால் அதை அறிவு பூர்வமாக நிரூபியுங்கள்...அதை விடுத்து சும்மா மொடடையாய் சொன்னால் எப்படி ஏற்பது?

முயற்சி செய்து கொண்டே இருங்கள். சரியான நேரம் வந்தால் எல்லாம் சரி வரும்."இது தான் விதி" .
 

ஒரு விடயம் இருக்கிறது என்போர்கள் தான் அதை நிருபிக்க வேண்டுமே தவிர இல்லை என்போர் அல்ல. கால ஓட்டத்தில் பல விடயங்கள் நடைபெறுகின்றன. அது இயற்கை.  ஒரு விடயம் நடந்து முடிந்த பின்னர் அது விதி இது முன்னரே தீரமானிக்கப்பட்டது. தலையில் எழுதப்பட்டது என்று கூறுவதைத்தான் சுத்த பைத்தியக்காரத்தனம் என்று கூறுகிறோம் 

Link to comment
Share on other sites

விதி நம்பிக்கையாளர்களுக்கு எதிரான பரவலான விமர்சனம் அவர்கள் 'சோம்போறிகள்' என்பதாகும். இக்கருத்துப் பொய்யானது எனப் பல இடங்களில் நாம் அவதானிக்கலாம். கடினமாக உழைக்கும் ஒருவர் இன்னும் வாழ்வில் முன்னேற முடியாத நிலை, அதிர்ஷ்ட லாபச்சீட்டில் கோடிகளைப் பெற்ற சாதாரண மனிதர்கள் என ஏராளமான உதாரணங்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரை விதி என்பது நாம் முன்போ, தற்போதோ செய்துள்ள பாவ புண்ணியங்களின் விளைவாகும். அதாவது நமது கர்ம வினைப்பயன் - இதனை உறுதியாக நான் நம்புகிறேன். என்றோ செய்த நன்மை ஒரே நாளில் ஏழையைப் பணக்காரனாக்லாம் (அதிர்ஷ்டச் சீட்டு).

அதன் பொருள் நான் சோம்போறித்தனத்தை ஆதரிக்கின்றேன் என்பதல்ல. நம் முயற்சிக்கு என்றோ ஒருநாள் பலன் கிடைக்க வேண்டும் என்பதும் விதியாகும். 'கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே' எனக் கீதை சொல்வதன் உட் பொருளும் ' உன் கடமைக்கான பிரதிஉபகாரத்தை உடனடியாக எதிர்பாராமல் அதனைச் செய். அதன் பலன் என்றோ ஒருநாள் வேறேதும் வடிவில் நிச்சயமாகக் கிடைக்கும்' என்றே நான் கருதுகிறேன்.

எனினும் விதியைப் பற்றி என்ன தான் விவாதித்தாலும் நம் சிற்றறிவுக்கு முழுமையான விடை கிடைக்காது என்ற எண்ணத்தையும் பதிந்தே ஆக வேண்டும். கணிணிகளால் Computer programs பற்றி உணர்வு / புத்திபூர்வமாக  யோசிக்க / உணரமுடியுமா?!

என்ன தான் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டாலும் மனிதன் விதி பற்றி அறிய முயல்வதும் இதுபோல் தான்! 😊

Link to comment
Share on other sites

விதி என்பது வெளிப்படையானது. இதில் எந்த ஒளிப்பு மறைப்பும் இல்லை. பிறந்த உயிர்கள் எல்லாம் ஒரு நாள் இறந்தே தீரும் இது விதி. தண்ணீர் சராசரியாக  0 பாகையில் உறைநிலையை அடையும் 100 பாகையில் கொதிநிலையை அடைந்து ஆவியாகும். இதுவும் விதியே. எந்த தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் உண்டு. பூமியின் ஈர்பபுசக்தி ஒரு செக்கனுக்கு 11 கி.மீ. இவை எல்லாம்அறிவு பூர்வமாக  நிரூபிக்கப்பட்ட விதிகள். இவற்றை நம்புவது வேறு. ஆனால் மனித வாழ்ககையில் நடக்கும் சாதாரண சம்பவங்கள் ஏற்கனவே எவனோ எழுதி வைத்து என்று கண்மூடித்தனமாக நம்புவது எவ்வளவு முட்டாள்த்தனமோ அதை விட முட்டாள்த்தனம் கடவுளை வேண்டினால் விதியை மீறி எம்மை காப்பாற்றுவார் என்று நம்புவது. 

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

விதி என்பது வெளிப்படையானது. இதில் எந்த ஒளிப்பு மறைப்பும் இல்லை. பிறந்த உயிர்கள் எல்லாம் ஒரு நாள் இறந்தே தீரும் இது விதி. தண்ணீர் சராசரியாக  0 பாகையில் உறைநிலையை அடையும் 100 பாகையில் கொதிநிலையை அடைந்து ஆவியாகும். இதுவும் விதியே. எந்த தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் உண்டு. பூமியின் ஈர்பபுசக்தி ஒரு செக்கனுக்கு 11 கி.மீ. இவை எல்லாம்அறிவு பூர்வமாக  நிரூபிக்கப்பட்ட விதிகள். 

Tulpen, நீங்கள் மேற் கூறிய விதிகள் எல்லாம் மனிதருக்குத் தெரிந்திருப்பதால் 'இவ்வளவு தான் விதிகள்; வேறு விதிகள் இல்லை' என்று சொல்லிப் புறந்தள்ள முடியாது. எல்லா விதிகளும் மனிதனால் நிரூபிக்கப்படும் முன்னர் அறியப்படாமலே இருந்திருக்கின்றன அல்லவா? உதாரணமாக புவியீர்ப்பு விதி பற்றி 5000 ஆண்டுகளுக்கு முன்னர் மனித குலம் அறியாமல் இருந்திருக்கலாம். அதனால் அக்காலத்தில் புவியீர்ப்பு சக்தி இல்லை என முடிவெடுக்க முடியுமா? நமது ஆராய்ச்சிக்கு எட்டாத விடயங்கள் / விதிகள் இருக்கலாம். எதிர்காலத்தில் பல அறியப்படலாம். ஆனால் எல்லா விதிகளும் அறியப்பட்டால் இப்பிரபஞ்சத்தைப் படைத்த கர்த்தா எதற்கு? இது இயற்கையின் இரகசியம். இதுவும் ஒரு விதி தான்! 

நமது சிற்றறிவு கொண்டு  அறிந்திட முடியாது. பெரிய அறிவியல் என்றேல்லாம் நாம் புளகாங்கிதம் அடைவதெல்லாம் இச் சிற்றறிவு கொண்டு தானே?! ☺️

Link to comment
Share on other sites

On 1/30/2019 at 9:57 PM, ரதி said:

கொஞ்சப் பேர் சொல்லினம் விதியை மதியால் வெல்லலாம் என்று இதை நம்புகிறீர்களா?...நான் சொல்றன் முடியாது என்று இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

அது,அது நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும்...அழுது,புலம்பி கடவுளை வேண்டினால் பாவ,புண்ணியத்தை கொஞ்சம் கூட்டி குறைக்கலாம் ...சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருத்தல் என்பதும்,இல்லாமல் தவிர்த்தல் என்பதும் விதியின் விளையாட்டு அல்லவா!

நான் கடுமையான நோயின் பிடியில் இருந்து போராடி தப்பித்து விட்டேன் என்பார்கள்...தப்பித்து வரணும் என்பது தான் விதியாக இருந்தால்? ... காதலித்து திருமணம் செய்து நன்றாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தாங்கள் எந்த வித  சாதகமும் பார்க்காமல் திருமணம் செய்தோம்.நன்றாய்த் தானே இருக்கிறோம் என்பார்கள் ..அப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பது சித்தமாக இருந்தால் மாத்த முடியுமா?

எதோ எழுத வேண்டும் என்று தோன்றிச்சு...எழுதியிடடன்🙂

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎6‎/‎2019 at 1:19 PM, மோகன் said:

😀

 

உண்மையிலேயே,சத்தியமாய் மறந்து போய்ட்டன்☺️...இதே வேலையாய் தேடி எடுத்தமைக்கு நன்றிகள் மோகன்  🤗

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.